Posted in இலங்கை செய்திகள்

இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை பயணம் செய்யும் பயணிகளுக்கான தமது பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.

இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள்

குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுமாறும், முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

COVID-19 , எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக

இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமது

பிரஜைகளுக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை

    கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை

    இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும்

    நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே மகிந்தா ,கோட்டா பதவி விலக வேண்டும் என


    பவுத்த பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    பதவி விலக மறுத்து மகிந்த கோட்டா அடம் பிடித்து வரும் நிலையில்


    வரும் நாட்களில் மக்களின் போராட்டம் அதிகமாக இடம் பெறுமென


    ஏதிர்பார்க்க படுவதுடன் ,மகிந்த குடும்பத்தினர் வீடுகள் சுற்றிவளைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in உலக செய்திகள்

      ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த கொள்ளையன்

      ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த கொள்ளையன்

      கோவிலின் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன், பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு துளை வழியே வெளியே வர முயற்சித்தபோது அவரது உடல் சுவர் துளையில் சிக்கிக்கொண்டது.

      கோவிலில் புகுந்து திருட்டு- ஜன்னல் துளையில் சிக்கி இரவு முழுவதும் தவித்த
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், அஞ்சிலி ஜாடுபுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்

      ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

      இந்த ஆண்டு திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோலாகலமாக நடந்தது.

      பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

      இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்த கொள்ளையன் கோவிலில் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு கோவிலுக்குள் புகுந்தான்.

      கோவிலுக்குள் சென்ற கொள்ளையன் கருவறையில் இருந்த அம்மன் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை

      மூட்டை கட்டிக்கொண்டு ஜன்னல் துளை வழியாக வெளியே வர முயற்சித்தான். ஆனால் அவனால் துளை வழியாக வெளியே வரமுடியவில்லை.

      உடல் பாதி சுவர் துளையில் சிக்கி கொண்டது. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே தூங்கி விட்டார்.

      நேற்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னல் கம்பிகள் நீக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

      அங்கு மர்ம நபர் ஒருவர் சிக்கிகொண்டு இருந்ததை கண்டு கத்தி கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மர்ம நபரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை.

      இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில்

      கஞ்சிலி பகுதியை சேர்ந்த பாப்பா ராவ் (வயது 40) என தெரியவந்தது.
      இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

        Posted in உலக செய்திகள்

        போதையில் உளறிய கொலை – மடக்கிய பொலிஸ்

        போதையில் உளறிய கொலை – மடக்கிய பொலிஸ்

        கல்லூரி மாணவன் கொலையில் 4 ஆண்டுக்கு பின் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

        மாணவனை கொன்று 2 இடங்களில் பிணத்தை மாற்றி வைத்த நண்பர்கள்- 4 ஆண்டுக்கு பின் போதையில் உளறியதால் சிக்கினர்
        கைது
        திருப்பதி:

        ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஷாகல்லு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷா (வயது17). இவர் வெளியூரில் தங்கி தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

        கடந்த 2018 -ம் ஆண்டு தீபாவளி விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேக் ரஷீத், ஆதித்யா, முனேந்திரா மற்றும் நண்பர்களுடன் ஸ்ரீ வர்ஷா அங்குள்ள கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினர்.

        அப்போது ஸ்ரீவர்ஷாவுக்கும் அவரது எதிர்த்தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

        அன்று இரவு ஷேக் ரஷீத், ஆதித்யா, முனேந்திரா ஆகியோர் ஸ்ரீ வர்ஷாவை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீ வர்ஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

        பிணத்தை அங்குள்ள செப்டிக் டேங்கில் வீசிவிட்டு 3 பேரும் ஒன்றும் தெரியாததுபோல் இருந்தனர்.

        வெளியே சென்ற மகன் வராததால் அவரது தந்தை ரத்தினகுமார் போலீசில் புகார் செய்தார்.

        போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீ வர்ஷாவை தேடி வந்தனர். ஸ்ரீ வர்ஷா கிடைக்காததால் மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

        இந்த நிலையில் 1 ஆண்டு கழித்து ஸ்ரீவர்ஷாவின் உடலை வீசி சென்ற இடத்திற்கு வந்த ஷேக் ரஷீத் உள்பட 3 பேரும் செப்டிக் டேங்கில் கிடந்த ஸ்ரீவார்ஷாவின் எலும்புகளை எடுத்துச்சென்று ரெயில்வே கேட் அருகே உள்ள கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

        இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷேக் ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது போதை தலைக்கேறியதால் ஸ்ரீவர்ஷாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததை போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை எனஷேக் ரஷீத் தனது நண்பர்களிடம் உளறியுள்ளார்.

        இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

        இதையடுத்து போலீசார் ஷேக் ரஷீத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யா, முனேந்திரா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா

        இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா

        இந்திய கடந்த 24 மணித்தியாலத்தில் 2,70,000 மர்டிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோலை
        வழங்கியுள்ளது

        சீனாவுடன் ஒட்டி உறவாடி இந்தியாவை பகைத்து கொண்டு ஆணவத்தில்

        ஆடிய இலங்கை தற்போது இந்தியாவுக்கு நல்ல பிள்ளையாக தன்னை காட்டி கொள்கிறது

        முதுகில் குத்திய கோட்டா ,மகிந்த அரசுகளை மீளவும் மோடி அரசு

        நம்புகின்றமை கோமாளித்தனம் என்பது குறிப்பிட தக்கது

          Posted in சினிமா

          விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை

          விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை

          பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் இணைந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

          விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை
          தளபதி 66 பூஜை


          விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன்

          திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து

          வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

          இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’

          என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு

          தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.

          இந்நிலையில் விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர்

          தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இதில் விஜய்க்கு ராஷ்மிகா சுற்றிப்போடும் போன்ற புகைப்படங்கள்
          மற்றும் பூஜை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

            Posted in சினிமா

            கணவன் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா

            கணவன் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா


            நாக சைதன்யா – சமந்தா திருமண பிரிவுக்கு பிறகு நாக சைதன்யாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

            நாக சைதன்யா புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா
            மந்தா


            மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்

            பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

            இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள்

            நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம்

            செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

            சமீபத்தில் நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை ’ஓ பேபி’ படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி

            இயக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகின. இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அவருடைய சமூக

            வலைத்தளப் பக்கத்தில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தா இருவரும் இணைந்து நடித்து

            வெளியான மஜிலி என்ற படத்தின் 3 ஆண்டு நிறைவு செய்ததை


            வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

              கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

              இலங்கையில் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்


              அந்த போராட்டங்களுக்கு மூளையாக செயல் பட்டவர்களை கொலை செய்யும்

              திட்டத்தில் கோட்டபாய உள்ளதாக ஜேவிபியின் பிரமுகர் அனுராச திசாநாயக்க தெரிவித்துள்ளார்

              தமது பாதுகாப்பை தனக்கே உறுதி செய்வதாகவும் ,நிகழ்வு இடத்திற்கு

              செல்லும் முன்னரும் பின்னரும் நமது சகாக்கள் தமக்கு பாதுகாப்பு பணியில்

              ஈடுபடுகின்றனர் என அவர் தெரிவித்தார்

              கோட்டாபாயவின் மறுமுகம் எமக்கு நன்கு தெரியும் என அவர் கூறியுள்ள

              விடயம் சர்வதே தேச அளவில்
              கவனத்தை ஈர்த்துள்ளது .

                Posted in இலங்கை செய்திகள்

                லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

                லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

                இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாபாயாவுக்கு எதிராக


                இன்று -06-04-2022 மதியம் 12 மணியளவில் லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன பேரணி இடம்பெற்றது

                இலங்கையில் மக்கள் படும் அவலம் ,மற்றும் பொருளாதார நெருக்கடி ,பட்டினி ,மற்றும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கோஷமிட பட்டன

                இங்கு கலந்து கொண்ட மக்களை சிங்கள உளவுத்துறையினர் மறைந்திருந்து காணொளி மற்றும் படங்கள் பிடித்துள்ளனர்

                எனினும் அதனை மீறி மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்தனர் ,இலங்கையில் தொடர்ந்து ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் இணைந்து

                போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளதும் ,இவர்கள புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு வழங்க படவேண்டும் எனவும் மக்கள் கோரி வருகின்றனர்

                தமிழர்களை அழித்த அதே மே மாதம், மற்றும் அந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது உயிர் நீத்த இதே சித்திரையில் அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக

                சிங்கள மக்கள்
                உள்ளிட்டவர்கள் எதிராக பொங்கி எழுந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                  Posted in சினிமா

                  நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

                  நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

                  தமிழ், இந்தி என பல மொழிகளில் முன்னணியாக இருக்கும் நடிகை யாமி கவுதமின் வலைத்தள கணக்கை மர்மநபர்கள் முடக்கி உள்ளனர்.

                  பிரபல நடிகையின் வலைத்தள கணக்கு முடக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
                  யாமி கவுதம்


                  நடிகர், நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி தங்களின் புகைப்படங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இதில் மர்ம நபர்கள் ஊடுருவி

                  முடக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் நடிகை யாமி கவுதமின் வலைத்தள கணக்கும் தற்போது மர்ம நபர்களால் ஊடுருவி

                  முடக்கப்பட்டுள்ளது. யாமி கவுதம் தமிழில் கவுரவம், தமிழ் செல்வியும் தனியார்

                  அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

                  யாமி கவுதமை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம்

                  பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யாமி கவுதம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது

                  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளிவந்தால் அதனை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

                  விடுத்துள்ளார். யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

                    Posted in உலக செய்திகள்

                    உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

                    உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

                    உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட்

                    உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.

                    உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்



                    ரஷியா- உக்ரைன் இடையே போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

                    இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன்

                    டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.

                    ரஷிய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரினர்.

                    இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன்


                    ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்

                      மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்

                      இலங்கையில் ஆளும் சகோத ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

                      இந்த போராட்டம் காரணமாக நாடு பதட்டத்தில் உள்ளது

                      சீற்றமடைந்துள்ள ஆட்சியாளர்களும் படை தரப்பும் மக்கள் மீது

                      கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                      இவ்வாறானவர்கள் மீது தாக்குதல் நடத்திட கூடாது எனவும் ,ஆத்திரமுற்றுள்ள


                      மக்களை மேலும் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளதுடன் ,


                      பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ஐநா எடுத்துரைத்துள்ளது

                        Posted in உலக செய்திகள்

                        இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

                        இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

                        இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

                        இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்

                        பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி கொண்டது.

                        இதையடுத்து அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் ரத்து செய்யப் பட்டது. இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று

                        பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.

                        இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்குமாறு இம்ரான்கானை அவர் கேட்டுக்கொண்டார்.

                        இதனால் புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

                        பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளதால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

                        இம்ரான்கானின் 3-வது மனைவி புஷ்ராபீவியின் நெருங்கிய தோழியாக விளங்கி வருபவர் பரக்கான். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி

                        அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் உயர் பதவிகளில் பணி நியமனம்

                        தொடர்பாக பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது.

                        பாகிஸ்தான் முஸ்லீம் லீக் துணைதலைவர் மரியம் நவாஸ் இம்ரான்கான்

                        மற்றும் அவரது 3-வது மனைவி உதவியுடன் பரக்கான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார்.

                        இந்த நிலையில் இம்ரான் கான் தற்போது நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என

                        பரக்கான் அச்சம் அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

                        இவரது கணவர் அஸ்கான் ஜமுல்குசார் ஏற்கனவே அமெரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

                        இந்தநிலையில் இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து
                        இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

                          Posted in Uncategorized

                          நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

                          நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

                          இலங்கை ஆளும் சகோதர்கள், சகோதரியான நிருபமா கடந்த இரவு பத்து

                          முப்பது மணியளவில் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்,இவர் டுபாய்

                          நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                          இது போலவே நாமல் மனைவி ,மற்றும் அவர் குடும்பமும் தப்பித்து சென்றது

                          இவர் ஊழல் சர்ச்சையில் சிக்கியவர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

                            யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

                            யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போலீஸ்

                            அதிகாரி ஒருவர் அதே பகுதியில் வீடுடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட

                            திருடனிடம் இருந்து முப்பது ஆயிரம் ரூபாய் லஞ்ச பெற முற்பட்ட பொழுது


                            லஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                            இப்படியும் இலங்கை பொலிஸ்

                              Posted in இலங்கை செய்திகள்

                              பாரளுமன்றில் அமர்க்களம் – கோட்டாவுக்கு நெருக்கடி

                              பாரளுமன்றில் அமர்க்களம் – கோட்டாவுக்கு நெருக்கடி

                              இலங்கை பாராளுமன்றில் ஆளும் கோட்டாவுக்கு எதிராக எம்பிக்கள்

                              ,அமர்க்களம் ,கோசம் இட்ட வண்ணம் உள்ளனர்


                              இவர்களின் இந்த எதிர் கூச்சலினால் பாராளுமன்றம் நடத்திட முடியாத நிலை

                              ஏற்பட்டுள்ளதுடன் ,கோட்டாவே வீட்டுக்கு போ என் முழக்கமிடுகின்றனர்

                              இதனால் சபை சில நிமிடங்கள் ஓதி வைக்க பட்டன .


                              காகம் போல எதிர்க்கட்சிகள் கத்திய வண்ணம், உள்ளன

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் விரைவில் தேர்தல் – பாரளுமன்றம் கலையும்

                                இலங்கையில் விரைவில் தேர்தல் – பாரளுமன்றம் கலையும்

                                இலங்கையில் ஆளும் அடச்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்


                                இவ்வேளை பெரும்பாண்மை அரசுக்கு இல்லையென நிரூபித்தால் தாம்

                                தேர்தலை நடத்த தயராக உள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்

                                விரைவில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .


                                இதில் அரசு தோற்கடிக்க பட்டதால் மட்டுமே தேர்தல் நடத்திட இயலும் என்பது குறிப்பிட தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்

                                  இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்

                                  அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த தினம் இருவர் சுட்டுக் கொலை செய்ய பட்டுள்ளனர்

                                  மாட்டு உரிமையாளருக்கும் ,அந்த மாடுகளை எடுத்து செல்ல

                                  வந்தவர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது

                                  வாகன விபத்தில் இறந்தனர் என தெரிவிக்க பட்ட பொழுதும் போலீசார்

                                  நடத்திய விசாரணைகளில் இவர்கள் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது

                                  இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

                                    ஆர்ப்பாட்ட காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

                                    இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகிறது

                                    மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அதிகாரத்தை இழக்க மறுக்கும் சகோதர ஆட்சியார்கள்


                                    போராட்டத்தில் ஈடுபாடும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

                                    போராட்டத்தின் பொழுது சொத்துக்கு தீ வைப்பவர்கள் கைது செய்ய படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

                                    இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு

                                      இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு

                                      இலங்கையில் பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி முச்சு முடிவு செய்துள்ளது


                                      இதன் அடிப்படையில் ஒரு மணித்தியாலம் நீடிக்கவும் ,சனிக்கிழமைகளில்

                                      பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்க பட்டுள்ளது

                                      மேற்படி செயல் ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                      இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்