மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த அறகல2
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த அறகல2

மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த அறகல2

மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த அறகல2 ,GMOA இன்று நாடு தழுவிய அடையாளப் போராட்டத்தைத் தொடங்குகிறது

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), நேற்று நடைபெற்ற

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), நேற்று நடைபெற்ற அதன் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, இன்று (05) காலை 08.00 மணிக்கு நாடு தழுவிய அடையாளப் போராட்டம் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டம் 24 மணி நேரத்திற்குத் தொடரும் என்றும், திங்கட்கிழமை காலை 08.00 மணிக்கு முடிவடையும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டக் காலத்தில்

இந்தப் போராட்டக் காலத்தில், தீவு முழுவதும் பொது மற்றும் வழக்கமான சிகிச்சை சேவைகள் முற்றிலும் தடைபடும். இருப்பினும், அவசர சிகிச்சை சேவைகள் தடையின்றி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை அதன் செயற்குழு தொடர்ந்து கண்காணித்து, அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையில் மேலதிக முடிவுகளை எடுக்கும் என்று GMOA தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ,யாழ்ப்பாணம் அறியாலை பகுதியில் குப்பைமேடு அமைக்கும் பிரச சபையின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரியாலை வாழ் மக்கள் தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

குப்பைமேடு அமைக்கப்படுவதால்

இந்த குப்பைமேடு அமைக்கப்படுவதால் அங்கு துர்நாற்றங்கள் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்புக்கு அது விளைவை ஏற்படுத்தும் என்பதால்

பிரதேச சபையில் என்ன நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

எனவே அந்தப் பகுதி பிரசபை தவிசாளர் வருகை தர வேண்டும் என தெரிவித்ததை எடுத்து மயூரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார் .

அவருக்கு மக்கள் மகயர் கையெழுத்ததாக தெரிவிக்கப்படுகிறது .குறித்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய பிரதேச சபை மக்கள்

மக்கள் உரிய வாழ்வியலுக்கு அழிவை ஏற்படுத்துகிற நடவடிக்கை

வாழ்விடங்கள் அன்பிற்கு பகுதியில் குப்பைகளை கொட்டி நோய்களை ஏற்படுத்தி அதனால் அந்த மக்கள் உரிய வாழ்வியலுக்கு அழிவை ஏற்படுத்துகிற நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே அரசியல்வாதிகள் ஊடகங்கள் முன்னாக வாழ்ந்து பதிலளிக்க மறுத்து தப்பி ஓடி வருகின்றனர் .

இவ்வாறான மக்களுக்கு குந்தகமான விடயங்களை செய்து வருகிறது எனவே இந்த தவிசாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தொடர்பாக மக்கள் தெரிவிக்கவில்லை.

மாம்பழம் விற்ற பட்டதாரி ஆளுநர் செயலகம் பரபரப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு

மாம்பழம் விற்றபட்டதாரி ஆளுநர்செயலகம் பரபரப்பு பட்டதாரி ஒருவர் ஆளுநர் செயலகம் முன்பாக மாம்பழ விற்பனையில் ஈடுபட்டதால் அங்கு அசெளகரிய சூழ்நிலை ஏற்பட்டு வளாகம் பரபரப்பாகியுள்ளது.

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக நேற்று (26)

தனது பட்டத்தை மாம்பழக் கூடையில் வைத்துக்கொண்டு மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பட்டத்தை முடித்துக்கொண்ட அவர், தனக்கு இதுவரையில் எந்தத் தொழிலும் கிடைக்கவில்லை என்றும்,

க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு இலங்கை அரசு தொழில் வழங்கி வருகின்றன. ஆனால் பல்கலைக்கழகம் சென்று பட்டம்பெற்ற எங்களுக்கு

எந்தத் தொழிலையும் வழங்க முன்வரவில்லை. இது எந்த விதத்தில் நியாயம் என்று நான் கேட்கிறேன்.

க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தர படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு அரச தொழில் மிக சுலபமாக கிடைக்கின்றன. அவ்வாறனவர்களுக்கு தொழில் வழங்கும் செயற்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை அரசு கொடுப்பதாக சொல்லியிருந்தால்,

நாங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ஏன் பட்டம்பெறவேண்டும்? எங்களின் பணத்தையும், ஐந்து வருடங்களையும் அநியாயமாக செலவு செய்திருக்கமாட்டோம்.

பட்டம் வைத்திருக்கும் நாங்கள் மாம்பழம் மற்றும் மீன் வியாபாரிகளாக தொழில் செய்யவேண்டிய நிலைமைக்கு இன்று ஆளாகியுள்ளோம்.

ஆனால் க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்றவர்களுக்கு அரச தொழில் மிக சுலபமாகக் கிடைத்து தொழிலை செய்பவர்களாக இருக்கின்ற நிலைமையே எமது நாட்டில் உள்ளது.

இதை பார்க்கும் போது பெரும் மன உளைச்சலை எங்களுக்கு ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசே எங்களின் பட்டத்திற்கு தொழில் தரவேண்டும். அல்லது எங்களின் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என்றே நான் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று அந்த பட்டதாரி தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ,நோர்வூட் பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா, பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவுக்கு (320 N) புதிய கிராம அலுவலரை நியமிக்க கோரி, பிரவுன்லோ தேயிலைத்

தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் , செவ்வாய்க்கிழமை (25) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது, ​​பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவின் பதில் கிராம அலுவலராக பணிப்புரிவது மஸ்கெலியா பிரிவின் கிராம அலுவலர் என தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கெலியா கிராம அலுவலர் பிரிவில் சுமார் 5000 மக்கள் தொகையும், பிரவுன்லோ பிரிவில் சுமார் 7000 மக்கள் தொகையும் உள்ளதாகவும்,

இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள சுமார் 3400 குடும்பங்களுக்கு ஒரு கிராம அலுவலர் பணியமர்த்தப்படுவது நியாயமானதல்ல என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பதில் கிராம அலுவலர் , அலுவலகத்தில் பணிபுரிவதாக சுட்டிக்காட்டும் ஆர்பாட்டகாரர்கள் , சுமார் 3 வருடங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினை குறித்து நோர்வூட் பிரதேச செயலக

அதிகாரிகளுக்கு வாய்மொழியாக மற்றும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும், இதுவரை பிரவுன்லோ பிரிவுக்கு நிரந்தர கிராம

அலுவலர் ஒருவரை வழங்காததால், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ,ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகாவித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபர் பாலியல் சேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின்

கல்வி நடவடிக்கை மற்றும் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இந்த அதிபர் குறித்து பலமுறை ஹட்டன் கல்வி வலையத்திற்கு பெற்றோர்கள் பல முறைப்பாடுகளை முன்வைத்த போதும், ஹட்டன் வலைய கல்வி பணிமனை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்றைய

தினம் பெற்றோர்கள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஹட்டன் வலைய கல்வி பணிமனையின் பணிப்பாளர் மற்றும் உதவி கல்வி

பணிப்பாளர் ஆகிய குழுவொன்று சம்பவம் இடம் பெற்ற பாடசாலைக்கு விரைந்தனர்.

பெற்றோர்களின் முறைப்பாற்றிற்கு அமைய இன்றைய தினம் டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்திற்கு வருகை தந்த ஹட்டன் வலைய கல்வி பணிப்பாளர் ஆர்.விஜேந்திரன் தெரிவிக்கையில்,

பெற்றோர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த பாடசாலையின் அதிபர் இராதகிருஷணன் என்பவரை ஹட்டன் வலைய கல்வி பணிமனை அழைத்து விசாரனைகளை மேற்கொள்வதோடு இந்த சம்பவம் தொடர்பாக மத்திய

மாகாண கல்வி தினைக்களத்தின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலைய கல்வி பணிமனை பணிப்பாளர் ஆர். விஜேந்திரன் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் தமக்கு முறைபாடு கிடைத்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக தாம் விசாரனைகளை

மேற்கொள்வதாக ஹட்டன் பொலிஸார் அறிவித்த பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு

சாராயக்கடையை மூடு மக்கள் ஆர்ப்பாட்டம்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு ,தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் திறக்கப்பட்ட புதிய மதுபான கடையை மூட கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் .

மக்கள் முன்னெடுக்கும் இந்த பபோராட்டம் காரணமாக அந்த சாராய கடையை திறந்து வியாபாரம் நடத்தி வரும் ,வெள்ளை வெட்டி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அனுரகுமார திசாநாயக்க ஆட்சியில் மிக பெரும் மக்கள் புரட்சி அதர்மத்திற்கு எதிராக இடம்பெற்று வருவதால் ,இந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

ஐ.ம.சவால் தொடரும் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஐ.ம.சவால் தொடரும் ஆர்ப்பாட்டம்

ஐ.ம.சவால் தொடரும் ஆர்ப்பாட்டம்

நாட்டில் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான தொடர் ஆர்ப்பாட்டங்களில் இன்றும் (26) வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில்,

01.கொழும்பு மேற்கு-பம்பலப்பிடி சந்தி-இரவு 06.30 மணி

02.குளியாப்பிட்டி-குளியாப்பிட்டி நகரம் -6.30

03.கம்பளை-கம்பளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னாள்-இரவு 07.00 மணி

04.உடுநுவர-கெலிஓய நகர்-மாலை 06.00 மணி

05.ரஜ்கம சீனிகம தேவாலய முன்னாள்-இரவு 07.00 மணி

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024 வரவு – செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்க கோரி முந்தல் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (16) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இதன்போது, “அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை 20 ஆயிரத்தால் அதிகரியுங்கள்”, ” எரிபொருள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறையுங்கள்” , “பொருட்களுக்கு விலைகளை

அதிகரிக்கும் போது இரச ஊழியர்களை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று இதுபோன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார்.

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

இச் சம்பவத்தில், வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே உயிரிழந்தவராவார். இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நேற்று (22.08) பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது, சடலத்தை எடுத்து வந்த அக் கிராம மக்களும், கிராம பொது அமைப்புக்களும் சடலத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தாவருக்கு நீதி கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஐஸ் – கஞ்சா- மாபா- ஹெரோயின் – போதை மாத்திரை என்பவற்றை தடை செய், தொடர்ச்சியாக அடாவடித்தனம் செய்வோரை கைது செய், மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடை செய்’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது - நீதிமன்ற உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு

ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் உட்பட பல முக்கிய

இடங்களுக்குள் பிரவேசித்து அந்த இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், கோட்டை நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த

ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு

ஜயசிங்க, இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மயூர சேனாநாயக்க, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யல்வல பன்னசேகர தேரர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

அதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோட்டை பொலிஸ் பிரிவில் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து செராமிக் சந்தி, லோட்டஸ் வீதி, யோர்க் வீதி, வங்கி மாவத்தை, பரோன் ஜயதிலக மாவத்தை,

சைத்திய வீதி, ஜனாதிபதி மாவத்தை, காலி மவுத் சுற்றுவட்டம் மற்றும் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி

முகத்திடல் ஆகிய இடங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No posts found.
உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்

உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைனுக்கு ஜெர்மன் அரசு ஆயுதங்களை வழங்க கூடாது என தெரிவித்து , பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ,தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் .

கிழக்கு ஜெர்மன் மக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளனர் .
அந்த மக்களின் முக்கிய அரசியல் காட்சிகள்
ரஷ்ய உளவுத்துறைகளுடன் நெருங்கிய செயல் பட்டவர்கள் .

அவ்வாறானவர்கள் ஊடக இந்த போராட்டங்கள் முன்னெடுக்க படுவதாக .உக்கிரைன் சார்பு ஊடகங்கள் கொளுத்தி போட்டுள்ளன .

ஜெர்மன் எல்லையில் போலந்து உள்ளது .
உக்கிரைன் ரஷ்யாவிடம் வீழ்ந்தால் ,
அடுத்து போலந்து ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் .

உக்கிரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாததுக்கே ந ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம்| உலக செய்திகள்

அப்படி என்றால் ஜெர்மன் எல்லையில் ,
ரஷ்ய படைகள் குந்தி விடும் என்கின்ற எதிர்பார்ப்பு உள்ளது .

ரஷ்ய உக்கிரைன் அரசை களைப்புற்ற செய்திடும் ,
தாக்குதல்களை நடத்தி வருகிறது .
நாடுகள் களைத்து உக்கிரனை கைவிடும் நிலை வரும் பொழுது ,
ரஷ்ய தனது பலத்த காண்பிக்க
கூடும் எனபதே நமது கணிப்பாக உள்ளது .

போரியலில் தந்திரத்தில் இதுவும் ஒரு முறைதான் .
இதைத்தான் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு ,
எதிராக நடத்தியது .

அவ்வாறு ரஷ்ய உக்கிரைனுக்கு,
நடத்தி கொண்டுள்ளதை உற்று நோக்க முடிகிறது .

Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

இலங்கை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆளும்

கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் தமிழர்கள் உரிமையை மைய படுத்தி இந்த


போராட்டம் முன்னெடுக்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

    லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாபாயாவுக்கு எதிராக


    இன்று -06-04-2022 மதியம் 12 மணியளவில் லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன பேரணி இடம்பெற்றது

    இலங்கையில் மக்கள் படும் அவலம் ,மற்றும் பொருளாதார நெருக்கடி ,பட்டினி ,மற்றும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கோஷமிட பட்டன

    இங்கு கலந்து கொண்ட மக்களை சிங்கள உளவுத்துறையினர் மறைந்திருந்து காணொளி மற்றும் படங்கள் பிடித்துள்ளனர்

    எனினும் அதனை மீறி மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்தனர் ,இலங்கையில் தொடர்ந்து ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் இணைந்து

    போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளதும் ,இவர்கள புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு வழங்க படவேண்டும் எனவும் மக்கள் கோரி வருகின்றனர்

    தமிழர்களை அழித்த அதே மே மாதம், மற்றும் அந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது உயிர் நீத்த இதே சித்திரையில் அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக

    சிங்கள மக்கள்
    உள்ளிட்டவர்கள் எதிராக பொங்கி எழுந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

      ஆர்ப்பாட்டம்
      Posted in இலங்கை செய்திகள்

      ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

      ஆசிரியையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

      திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலையின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் நேற்று (02) கடமையேற்கச் சென்ற ஆசிரியை பாத்திமா பஹ்மிதாவுகும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட

      சர்ச்சை காரணமாக அதிபரும் ஆசிரியையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

      அபாயா அணிந்து​கொண்டு சென்றமையால் இந்த சர்ச்சை வெடித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (03) காலை 8.00 மணியலவில் பாடசாலைக்கு

      முன்பாக ஒன்று கூடிய பெற்றோர் சிலர், திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று அங்கு ஒன்றுகூடி பதாதைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பினர்.

      “அடாவடி ஆசிரியை எமக்கு வேண்டாம்”, “தமிழ் கலாசாரத்தை மிதிக்காதே”, “அதிபரை அடித்த ஆசிரியை வேண்டாம்”, “உனது கலாசாரம் உனக்கு எனது கலாசாரம் எனக்கு” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டனர்.

      குறித்த இடத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை செய்வதற்கு சிலரை வருமாறு அழைத்தார். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

      மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீதரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வினயமாக வேண்டிக் கொண்டார்.

      நீதிமன்ற நடவடிக்கை இருப்பதால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை சமுகத்தோடு பேச்சுவார்த்தைக்கு வருவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

        பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

        அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

        அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்களினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

        எமது அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.