அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா

ஜனாதிபதி தமிழருக்கு தீர்வு தருவாரா

அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா , இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்ற ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள அனுரா குமர திசநாயக்கா அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கண்டு

இன பிரச்சனைக்கு புற்றுப்புள்ளி வைத்து அதனூடாக ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றித்து வாழக்கூடிய வாழ்வியலை ஏற்படுத்துவாரா என்கின்ற சந்தேகம் மக்களை இப்பொழுது துளைத்துக் கொண்டு இருக்கிறது .

தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது ஒருங்கிணைந்த நாட்டுக்குள் எல்லோருக்கும் சமமான சட்டம் அந்தஸ்துடன் மக்கள் வாழவைக்கப்படுவார்கள் என்றார் .

வீடியோ

லஞ்ச ஊழல்களை ஒழித்து நேர்மையான அரசு ஆட்சியை நிலை நாட்டுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார் .

அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒன்றுபட்டு இரு மொழி பேசுகின்ற இரு இனங்களும் வாழக்கூடிய வாலிபர்களை அனுரா குமர திசநாயக்கா ஆட்சி பீடம் ஏற்படுத்திக் கொடுக்குமா..?

ஒன்பதாவது ஜனாதிபதி ஓர்மம் வாய்ந்த ஜனாதிபதியாகவும் சமம் சமத்துவத்தை மதித்து மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்டு இலங்கையூர் நாடாக வரையறை செய்து அனைத்து மக்களும்

இலங்கையர்கள் என்ற வாழ்வியலுக்குள் வாழ வழி வகுப்பாரா என்பதை கேள்வியாக இருக்கிறது.

அவ்வாறு ஒரு நிலை உருவாக்கப்படுமாக இருந்தால் இலங்கை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள்ளாக பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை பெற்று சிங்கப்பூராகவும் அதை மாற்றப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது .

புலம்பெயர்ந்து சென்ற கூடிய தமிழ் மக்கள் இலங்கை நோக்கி வந்து முதலீடுகளை செய்து இலங்கை ஒரு தேசம் என்ற வகையில் அதைக் கட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது .

ஆனால் அதனை ஆளுகின்ற ஜனாதிபதி அனுரா குமரதிச நாயக்க செய்து தருவாரா என்பதை மக்களுடைய கேள்வியாக இருக்கிறது .

ஆகவே வந்திருக்கிறார் அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா இதுதான் இன்றைய கேள்வி ஆகிறது .

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
Posted in இலங்கை செய்திகள்

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு ,இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அனுரா திசாநாயக்க வெற்றி பெற்றால் தமிழருக்கு தீர்வு தருவாரா ..?

இலங்கையில் மீளவும் ஒரு இனவாத அரசியலை மையப்படுத்தும் ஒருவராக அனுரா திசாநாயக்க மாறியுள்ளார் .

அடிப்படை சிங்கள இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வெற்றி பெற போகிறார் அனுரா திஸாநாயக்க என்கிறது சிங்கள மக்கள் கருத்து .

தனி பெரும் பான்மை சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அனுராதிசாநாயகக் வெற்றி பெறுவாரா என்கின்ற விடயம் கேள்வியாக எழுந்துள்ளது .

எனினும் இந்த தேர்தலில் சிறுபாண்மை தமிழர் வாக்குகளே இந்த தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலை காணப்படுகிறது .

ஆனால் இதில் தமிழர் தரப்பு சங்கு கட்சி பேரம் பேசும் காட்சியாகி மாற்றம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறான சந்தர்ப்பம் தமிழர் தரப்புக்கு கிடைக்க பெற்றால் தமிழர் அடிப்படை விடயம் தீர்வு காணப்படுமா என்கின்ற கேள்வியே மக்கள் மத்தியில் பற்றி எரிகிறது .

கேள்வியோடே வேகம் பிடிக்கும் இந்த தேர்தல் களம் ,இலங்கை வரலாற்றில் புதிய மாற்றத்தையும் எதிர்மறை தலை கேள் அரசியல் சுழற்சியையும் ஏற்படுத்தும் எனலாம்

எதிர் வரும் ஆறு நாட்களில் இந்த விடயத்திற்கான பதில் முற்றாக கிடைக்க பெறும் ,அதுவரை காத்திருப்போம் எம் தமிழ் உறவுகளே

Posted in இலங்கை செய்திகள்

மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்

மக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது – இலங்கைக்கு ஐநா கண்டணம்

இலங்கையில் ஆளும் சகோத ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த போராட்டம் காரணமாக நாடு பதட்டத்தில் உள்ளது

சீற்றமடைந்துள்ள ஆட்சியாளர்களும் படை தரப்பும் மக்கள் மீது

கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

இவ்வாறானவர்கள் மீது தாக்குதல் நடத்திட கூடாது எனவும் ,ஆத்திரமுற்றுள்ள


மக்களை மேலும் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் கூடாது எனவும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளதுடன் ,


பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ஐநா எடுத்துரைத்துள்ளது

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இணைந்து வாழ்வோம் இன்றே வா

    இணைந்து வாழ்வோம் இன்றே வா

    வென்றதாய் உலகில் ஏறியே நன்று
    வெடி குண்டாய் முழங்கிறாய்
    வென்றே தமிழர் ஆள்வார் நன்று
    வெட்கியே தலை குனிவாய்

    தீர்வு வழங்கிட தீர்வு இருந்தும்
    தீர்த்திட மறுக்கிறாய்
    தீயாய் கலவரம் நாட்டில் வெடிக்க
    தீயிடை நீ மடிவாய்

    ஆண்டைய நாட்டில் அன்றைய வாதி
    ஆள்கிறார் இன்று மறவாய்
    முன்னைய வாதி தீவிரவாதி
    முளைவிட்டான் இன்று பாராய்

    வெள்ளையன் கொள்கை அறியா உலகில்
    வெறியுடன் அலைகிறாய் -நாளை
    வெடிகுண்டு தந்தே உயிர்களை தின்பான்
    வெட்கியே தலை குனிவாய்

    ஒற்றை ஆட்சியில் மிதக்கிறாய் நன்றோ
    ஒருகணம் திரும்பி பாராய்
    கடாபி நிலை காலடி சுற்றும்
    கதறியே நன்று மடிவாய்

    இதுவரை சொன்னேன் இனவெறி என்றால்
    இன்றே உயிரை குடிப்பாய்
    பூகோள அரசியல் புதிரை அறிந்தால்
    புன்னகை வீசி தீர்வு கொடுப்பாய் …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 25-09-2021
    வன்னி மைந்தன் கவிதைகள்