Tag: சகோதரி
SDIG-யின் சகோதரி என்று பொய்யாகக் கூறிக்கொண்ட பெண் கைது
SDIG-யின் சகோதரி என்று பொய்யாகக் கூறிக்கொண்ட பெண் கைது
SDIG-யின் சகோதரி என்று பொய்யாகக் கூறிக்கொண்ட பெண் கைது ,கம்பாமாவில் மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ஒருவரின் சகோதரி என்று பொய்யாகக் கூறி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின்
கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பெண்
கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பெண் ஒருவரை கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நவம்பர் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளது.
கம்பஹா காவல் பிரிவின் கொட்டுகொட-உடுகம்பொல பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில்
ஈடுபடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
காரை ஓட்டி வந்த பெண், முதலில் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை புறக்கணித்து விரட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மினுவாங்கொட பொலிஸ் சந்திப்பில் கைது
பின்னர் வாக்குவாதம் நடந்த உடுகம்பொல சந்திப்பில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார், மீண்டும் காவல்துறை அறிவுறுத்தல்களை மீறிய பின்னர் மினுவாங்கொட பொலிஸ் சந்திப்பில் கைது செய்யப்பட்டார்.
உயர் பதவியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியின் சகோதரி என்ற அவரது கூற்று முற்றிலும் பொய்யானது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மீது ஆபத்தான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், காவல்துறை உத்தரவுகளை மீறுதல் மற்றும் அரசு ஊழியர் ஒருவர்
அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்வதைத் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்
4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்
4சகோதரிகளைக் கொன்ற சகோதரர், இந்தியாவில் நான்கு சகோதரிகளை படுகொலை செய்த 24 வயதுடைய மகன் மற்றும் தந்தை செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
நில தகராறு காரணமாக தமது நிலத்தை ஆக்கிரமித்த நபர்களுக்கு தமது நான்கு சகோதரிகளை விற்க முடிந்த நிலையிலையே அவர்களை படுகொலை செய்துள்ளதாக சகோதரர் தெரிவித்துள்ளார் .
9 ஆசியா 19 அக்சா 16 மற்றும் அமீன் 18 என்ற நான்கு சகோதரிகளையும் இவர் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நான்கு சகோதரிகளை படுகொலை செய்வதற்கு தந்தை உதவினார் எனவும் அவரது மூச்சு திணறிக்கப்பட்டு மணிக்கட்டு அறுக்க பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.
இவர்கள் விற்பனை செய்யப்பட்டால் அங்கு செல்ல முற்படுகின்ற நபர்களால் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்று
நிலையிலேயே இந்த படுகொலையை தான் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர் .
இதனை அடுத்து இந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த படுகொலையை தூண்டிய காரணமாக அந்த நிலத்தை அபகரித்தவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

சகோதரியின் கணவரான மச்சான் கோடரியால் வெட்டிக் கொலை
சகோதரியின் கணவரான மச்சான் கோடரியால் வெட்டிக் கொலை
சகோதரியின் கணவரான மச்சான் கோடரியால் வெட்டிக் கொலை ,குடும்ப தகராற்றில் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதலில் மச்சான் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (12)
இரவு மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்றுள்ள கணவன்-மனைவி இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான வியாழக்கிழமை (12) இரவு 11.00 மணியளவில் சம்பத்தில் உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரனுடன் மதுபோதை அருந்திவிட்டு அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
சண்டையாகமாறியது அடுத்து சகோதரியின் கணவர் மீது கோடாரி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது சம்பவ இடத்திலே
உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பாக தடயவியல் பிரிவு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியால் சிக்கினார்
தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில்
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
பெண்ணின் சகோதரி உயிரிழப்பு
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் , போதை
ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியதும் வந்துள்ளது.
ஆதரவற்றோர் இல்லத்தில்
பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் சகோதரன் தனது தங்கையை கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன் , உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , இல்ல நிர்வாகத்தினரால் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.
பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதை
அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் , முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது , பெண் பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளமையும் , பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணின் சகோதரனே , பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.
சகோதரன் கைது
அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தியவேளை , சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் கைது
அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Featured
9 வயது சிறுவனை குத்தி கொன்ற 12 வயது சகோதரி
9 வயது சிறுவனை குத்தி கொன்ற 12 வயது சகோதரி
12 வயது சிறுமி ஒருவர் தனது 9 வயது சகோதரனை கத்தியால் குத்தி கொலை
செய்ததாக கூறப்படும் நிலையில் காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ளார் .
அமெரிக்காவில் சிறுவர்கள் புரியும் ,
இவ்விதமான குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது .
நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்
நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்
இலங்கை ஆளும் சகோதர்கள், சகோதரியான நிருபமா கடந்த இரவு பத்து
முப்பது மணியளவில் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்,இவர் டுபாய்
நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இது போலவே நாமல் மனைவி ,மற்றும் அவர் குடும்பமும் தப்பித்து சென்றது
இவர் ஊழல் சர்ச்சையில் சிக்கியவர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

























