எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்
Posted in உலக செய்திகள்

எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

உக்கிரேன் மீதான போருக்கு பின்னர் எமது பொருளாதரம் அதிகம் வளர்ந்துள்ளது
எனவும் எரிவாயு விலை என்றுமில்லாதவாறு இலாபத்தை பெற்று தந்துள்ளது என ரசியா ஜனாதிபதி புட்டீன் மகிழ்ச்சியில் பேசியுள்ளார்

இந்த எரிவாயு விலை அதிகரிக்க காரணமாக

இந்த எரிவாயு விலை அதிகரிக்க காரணமாக விளங்கிய ஐரோப்பாவுக்கு எமது நன்றி என ரசியா ஜனாதிபது புட்டீன் நக்கலாக தெரிவித்துள்ளார்

ஐரோப்பா எங்கும் எரிவாயு விலை ஐம்பது வீதம் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,இந்த விலை உயர்வினால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்

இந்த எரிவாயு விலை ஏற்றதினால் ஐரோப்பாவில் நாளாந்த வாழ்வை கொண்டு நகர்த்த முடியாது பல குடும்பங்கள் திணறிய வண்ணம் உள்ளனர்

உக்கிரேன் ரசியா போரை மையமாக வைத்து ரசியா நாட்டின் மீது ஐரோப்பா அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நேச நடுகள் பொருளாதார தடைகளை விதித்தன

எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

ஆனால் அதனை ரசியா ஜனாதிபதி புட்டீன் கண்டு கொள்ளவில்லை ,மாறாக ரசியாவிடம் இருந்து நிறுத்த பட்ட நாற்பது வீதமான எரிவாயு ஏற்றுமதி தடுக்க பட்டதால் அமெரிக்கா மகிழ்ந்தது

ரசியாவின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என அமெரிக்கா ஐரோப்பா கருதின ஆனால் போருக்கு முன்னரை விட இப்போது நாம் அதிக விலை அதிகரிப்பால் இலாபத்தை பெறுகிறோம் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார்

உண்மையில் பல நாடுகள் அமெரிக்காவின் தடைகளை மீறி ரசியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று கொள்கின்றன ,தற்போது உலக சந்தையில் ஏற்பட்ட அதிக விலை ஏற்றம் ரசியாவுக்கு அதிக இலாபம் என்பது உண்மைதான்

இப்பொழுது ரசியா ஜனாதிபதி புட்டீன் கூறிய கருத்தில் உண்மை உள்ளது எனலாம்
,இந்த போரினால் இலாபம் அடைவது யார் ..?

உலக நாடுகளுக்கே உணவு மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் அதிக பங்கு வகித்து வந்தது ரசியா என்ற உண்மை உடைந்துள்ளது

மக்களுக்கு இந்த உண்மையினை மறைத்து ரசியா மீதான கோபத்தை தூண்டி வந்த ஐரோப்ப மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரசியா அதிபர புட்டீன் கூறிய விடயம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது

திடீர் எரிவாயு விலை அதிகரிப்பை மேற்கொண்ட ஐரோப்பாவுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீன் நன்றி தெரிவித்து பாராட்டியது மகிழ்ச்சியா நக்கலா ..? நீங்களே முடிவெடுங்கள் ..

    Posted in உலக செய்திகள்

    தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

    தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

    தெற்கு தென்கொரியா Daegu பகுதியில் உள்ள அடுக்கு மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்

    மேலும் இந்த தீ விபத்தில் நாற்பத்தி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,தென்கொரியா Daegu பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Daegu நகரில் உள்ள இந்த குடியிருப்பின் ஏழாவது மடியின் ஏற்பட்ட தீ விபத்தே அந்த அடுக்கு மாடி கட்டிடம் எரிந்து அழிய காரணமாக அமைந்துள்ளது

    இந்த அடுக்கு மாடியின் ஏழாவது மாடியில் ஐம்பது வயது நபர் ஒருவரே இந்த தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கண்டறிந்துள்ளதாக தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன

    தென்கொரியாவின் தெற்கு Daegu அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படு காயமடைந்தவர்களில் சிலர் மூச்சு திணறலுக்கு உள்ளாகியுள்ளதாக தென்கொரியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

    அதே குடியிருப்பில் வசித்து வந்த ஐம்பது வயதானவரே இந்த தீ விபத்துக்கு காரணம் என தெரிவிக்கும் அதிகாரிகள் அவரை இறந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்

    தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

    இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது விபத்தா என்பது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை ,குறித்த நபரே சந்தேகிக்க படுவதாக மட்டும் தெரிவிக்க பட்டுள்ளது

    இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,குறித்த தீ விபத்து சம்பவத்தில் சிக்கி பத்துக்கு மேற்பட்ட அடுக்கு மாடிகள் சேதமாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    தடவியல் நிபுணர்கள் தீ பபற்றலுக்கான தடயங்களை சேகரித்துள்ளதாவும் அதன் ஊடாக சிறைப்பு புலன் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,

    இவர்கள் வழங்கும் ஆய்வுகளின் அடைப்படையிலேயே குறித்த தீ விபத்து தொடபிலான முழுமையான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

    புத்தம் புது அதி உயர் அடுக்கு மாடியில் ஏற்பட்ட தீ விபத்து அந்த அடுக்கு மாடியில் வசித்து வந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

    பாதிக்க பட்ட மக்களுக்கு தென்கொரியா ஆளும் அரசு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையு, முன் வைக்க பட்டுள்ளது .

      Posted in பாரியின் பார்வை

      தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்

      தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்

      தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து வருகிறது என சமூக போராளி பேச்சாளர் பாரிசாலன் அவர்கள் இடித்து உரைத்துள்ளார்

      இலுமினாட்டிகள் மேற்கொள்ளும் திட்டமிடப்பட்ட சதிகளை உடைத்தெறிய தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொள்கிறார்

      தமிழர்கள் அழியும் நிலைக்கு மிக பெரும் ஆபத்து வருகிறது என பாரிசாலன் ஆவேசமாக ஆழ்ந்து உரைத்துள்ளார்

      தமிழர் அவன் அடையாளங்களை இழந்து வாழும்இழி நிலைக்கு செல்லும் முன் தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டுமென பாரிசலான் தெரிவிப்பது ஏன்

      திக் திக் நிமிடங்களாகி கழியும் இவரது ஆழ்ந்து நோக்கும் அறிவார்ந்த பார்வை தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டும் என பாரிசாலன் அவர்கள் தெரிகிவிக்கிறார்

      இதோ தமிழர்கள் ஆகிய நாம் இதனை காதில் போட வேண்டும் ,வாருங்கள் பாருங்கள் கருத்தை பகிருங்கள்

      இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

      Posted in பாரியின் பார்வை

      புலிகளை கேவல படுத்திய உளவாளிகள் பாரி

      புலிகளை கேவல படுத்திய உளவாளிகள் பாரி

      தமிழீழ விடுதலை புலிகளின் வரலாற்றை தெளிவான முறையில் அறிந்து கொள்ளாத இருவர் தெரிவித்த விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

      புலிகளை கேவல படுத்திய சவுக்கு சங்கர் மற்றும் ஊடக நபர் மணி கருத்துக்கள் பொய் மேலே பொய் அதனை அப்படியே தெரிவித்துள்ளார்

      சமூக பார்வையாளர் மற்றும் சமூக மற்றும் தேசிய விடுதலைக்கு குரல் கொடுக்கும் இளம் புயல் பாரிசாலன் அவர்கள் மணி மற்றும் சவுக்கு சங்கர் துவைத்து எடுத்துள்ளார்

      புலிகளை கேவல படுத்திய உளவாளிகள் இவர்கள் என சமூக போராளி பாரி அவர்கள் வாரி இறைத்துள்ள நிலங்களின் பக்கங்கள்

      பாரியின் பார்வையால் பாரி பார்த்து விளக்கிய பறையடி ,ஈழத்தின் முதல் பிரச வலிகள் போல ஆள் மனதின் கோபத்தை அப்படியே உடைத்துள்ளார்

      இதில் அழுத்தி காணொளி பார்க்க

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும்

        வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும் வெளியான செய்தி

        https://news.google.com/publications/CAAqBwgKMNLimAsw4uywAw

        வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்ம் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மை தன்மை இல்லை

        என இலங்கை வங்கியில் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்தார்.

        இலங்கை வங்கியின் யாழ்.பேருந்து நிலைய கிளை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

        தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு மக்களுடைய நம்பிக்கை, எங்களுடைய பங்களிப்பு எல்லாவற்றையும் சேர்த்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

        அதற்கு வங்கியில் கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும்.

        வங்கி கட்டமைப்பு பணம் என்பது இல்லாவிட்டால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை சமன் செய்ய முடியாது.

        தற்போது மக்கள் பலருடைய எண்ணங்கள் வங்கிகயில் உள்ள காசுகளை அரசாங்கம் எடுத்துவிடக் கூடும் என்று பலவிதமாக யோசிக்கிறார்கள்.

        நாளுக்கு நாள் வங்கியில் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள்.

        உண்மையாகவே அது பொய்யான விடயமாகும். வங்கி கட்டமைப்பை சீராக பணம் பாதுகாக்க வேண்டியதும் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் வாடிக்கையாளர்கள் பொதுமக்களின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.

        ஆகவே வங்கியில் கட்டமைப்பு பற்றி நீங்கள் தவறான வதந்திகளை ஏற்படுத்த வேண்டாம்.

        இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும்

        இப்போது சமூக வலைத்தளங்களில் இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும் என்ற தவறான கருத்துக்களை நாள் தோறும் பரப்பி வருகிறார்கள்.

        அதனால் சாதாரண மக்கள் அதனை பார்த்து குழம்பி இலங்கை வங்கியில் உள்ள பணம் தொடர்பாக அச்சம் கொள்ளுகின்றனர்

        நாங்கள் ஒரு அரசாங்க வங்கி. உங்களுடைய பணத்திற்கான பாதுகாப்புகள் 100 வீதம் 200 வீதம் இருக்கும். வங்கியில் கட்டமைப்புடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் விடிவு இல்லை.

        அவ்வாறு பொதுமக்கள் வங்கியில் கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக
        இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்

          Posted in உலக செய்திகள்

          பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

          பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

          பிரிட்டனில் புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் இதனை கட்டு படுத்த புதிய தடை அறிவிக்க படவுள்ளது

          ஏழு மில்லியன் மக்கள் பிரிட்டனில் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளார்கள் ,இந்த புகைத்தலினால் புற்று நோயின் தாக்குதல் அதிகரிக்க படுகிறது

          மருத்துவ மனைகளில் புகைத்தல் புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனை தடுக்க புதிய தடை ஆப்பு அறிவிக்க படவுள்ளன

          புகைத்தலுக்கு உரிய வயது தற்போது 18 ஆக உள்ளது ,அதனை தற்போது இருபது வயது வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது

          புகைத்தலில் அதிகம் இளம் வாலிபங்கள் சிக்கியுள்ளதால் அதனை தடுக்க இந்த வயது கட்டுப்பாட்டு தடை அமுலாக்க படவுள்ளது

          மேலும் மருத்துவ மனைகளில் இவ்விதம் புற்றுநோயால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை இந்த புதிய தடை மூலம் கட்டுப்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது

          அவற்றை கருத்தில் வைத்தே பிரித்தானியாவில் புகைப்பவர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் கடுமையாக அமுலாக்க படவுள்ளன

          பொது இடங்களில் புகைப்பவர்களுக்கு புதிய தடை ஏற்படுத்த பட்டு இருந்த பொழுதும் அவர்கள் அதனை மீறி மக்கள் முன்பாக புகைப்பதை காண முடிகிறது

          பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

          இதனால் புகைத்தல் அல்லாதவர்கள் அந்த புகையை சுவாசிப்பதால் அவர்களும் புற்று நோயின் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது இதனாலேயே பொது இடங்களில் புகைக்க புதிய தடை விதிக்க பட்டது

          இளைய சமுதாயம் வழி மாறி செல்கிறது எனவும் புகைத்தல் மற்றும் போதைக்கு இவர்கள்உள்ளாகி வருவதால் அதில் இருந்து எழும் குற்ற செயல்களை தடுக்க இந்த புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு வருகிறது

          இந்த புகைத்தல் பொருட்ள் மூலம் அரசுகள் அதிக வரியை பெற்று வருகிறது ,இந்த உயிர்கொல்லி பொருட்கள் விற்க அரசு முற்றாக புதிய தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தியல் அழுத்தமாக பதிய பெற்று வருகிறது

          புதிய புதிய தடை வாயிலாக புகைப்பவர்கள் எண்ணிக்கையை தடுத்திட முடியாது அரசு இந்த பொருட்களை உற்பத்தி செய்திடவும் ,

          விற்கவும் புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்தால் அது ஒன்றே போதும் என புகைத்தலுக்கு எதிரான அமைப்புக்கள் வலுவான காரணத்தை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது

          பிரிட்டனில் எதிர் வரும் காலத்தில் புகைப்பவர்களுக்கு உரிய வயது தொடர்பான புதிய தடை உத்தரவு பாயவுள்ளது

          இவை புகைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதிய தடையாக அமைய பெற போகிறது –

          • வன்னி மைந்தன் –
            Posted in உலக செய்திகள்

            யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

            யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

            யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் களஞ்சிய சாலையில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்து செல்ல பட்டுள்ளது

            டீசல் இல்லாத காரணத்தினால் லொறியில் ஏற்ற பட்ட பொருட்கள் எடுத்து செல்ல முடியதாத நிலையில் தரித்து நின்றது

            அவ்வாறான லொறியை உடைத்து அதற்குள் ஏற்ற பட்டிருந்த பதினொரு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடர்களினால் கொள்ளையடிக்க பட்டுள்ளது

            திருடிய பொருட்கள் விற்பனை செய்த பொழுது 22, வயதுடைய திருடர்கள் சிக்கினர்
            அப்பொழுது கோண்டாவில் பகுதியில் லொறியை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது

            மேலும் இதே லொறியை உடைத்து கொள்ளை யில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மறு திருடன் தப்பி ஓடிய வண்ணம் உள்ளார்

            இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை வாசி உயர்வை அடுத்து கொள்ளை சம்பவங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்

            இவ்விதமான கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கிறது

            வேலை வாய்ப்பு இன்மை ,அதனால் பண தட்டுப்பாடு ,பொருட்கள் இல்லா கொடுமை காரணமாக இந்த கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது

            உணவு பொருட்கள் விலைவாசி உயர்வும் ,அதன் தட்டுப் பாடும் இலங்கையை ஆக்கிரமித்துள்ள நிலையில் எதிர் வரும் மூன்று மாதங்களில் இலங்கையில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற ஆபாய அறிவிப்பு வெளியாகியுள்ளது

            யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

            இதனால் மக்கள் உணவு பொருட்கள் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் ,
            இலங்கை திரு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி லொறியை உடைத்து பொருட்கள் திருடும் நிலைக்கு மக்களை இட்டு சென்றுள்ளது

            நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே ஆட்சியாளர்களினால் அப்பாவி மக்கள் உணவு பொருட்கள் இன்றி வாடும் நிலையும் ,பொருட்கள் விலை உயர்வால் அவஸ்தை படும் நிலையும் ஏற்பட்டுள்ளது

            யாழில் அதிகரித்து செல்லும் வழிப்பறி கொள்ளைகள் ,கத்திகளுடன் மக்களை மிரட்டி கொள்ளை அடிக்கும் கொள்ளையர் அட்டகாசம் மக்களை விரட்ட நடை பிணமாக உலாவும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது

            பல லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் ஏற்றிய படி நின்ற லொறி கொள்ளை வர்த்தகர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

            சட்டம் ஒழுங்கு கெட்டு விட்ட நாட்டில் இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள் நிறுத்த பட்டு மக்கள் உயிர்கள் கொள்ளையர்களிடம் இருந்து என்று காப்பாற்ற படும்

            ஒரு வேளை உணவிற்காக மக்களை மக்கள் பொருட்கள் பெற்று கொள்ள கொல்கின்ற அபாயம் தற்போது இலங்கையில் எழுந்துள்ளது .

            • வன்னி மைந்தன் –
              Posted in இலங்கை செய்திகள்

              பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்

              பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்

              இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே மனைவி புஸ்பா ராஜபக்சே
              இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்

              இன்று பசில் ராஜபக்சே தனது எம்பி பதவியை இராஜினாமா செய்திட முன்னர் அவர் அதிகாலை வேலை இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்

              இலங்கையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் பசில் மனைவி நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்

              பசில் மனைவி மீது பாரிய லஞ்ச ஊழல் மோசடி குற்ற குட சாட்டு சுமத்த பட்டுள்ளது ,இவ்வாறான குற்ற சாட்டு சுமத்த பட்ட நிலையில் பசில் மனைவி இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்

              அதிகாரம் வழங்க படும் பொழுது இலங்கையில் வசிக்கும் பசில் ராஜபக்சே குடும்பம் அதிகாரம் இல்லாத பொழுது அமெரிக்காவில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்

              அமெரிக்காவில் பசில் ராஜபக்சே ஆடம்பர வீடுகள் மற்றும் பலசரக்கு கடைகள் என்பன இயங்கி வருகின்றன

              இவர்களது உணவகங்களில் தமிழர்களும் சென்று உணவருந்தி செல்கின்றனர் ,ஆனால் தமிழர்களுக்கு இந்த உணவகங்கள் பசில் ராஜபக்சேவுக்கு சொந்தமானது என்பது தெரியாது

              இலங்கை அரசியல் வாதிகள் பலரது சொத்துக்கள் வெளி நாடுகளில் பிற நபர்கள் பெயரில் வைத்து நடத்த பட்டு வருகிறது

              பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்

              இலங்கையில் புதிய ஆளுமை கொண்ட ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமரும் போது ராஜபக்சே குடும்பத்தின் சொத்துக்களை மீட்டு இலங்கைக்கு ஒப்படைக்கலாம்

              ஆனால் அதனை திறன் கொண்ட ஆட்சியாளர்கள் இலங்கையில் உருவாக்கம் பெறுவார்களா என்பது சந்தேகமே

              பசில் ராஜபக்சே வெற்றிகரமாக பதவி விலக்க பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

              பதவி விலகுவது போல் விலகி மீளவும் புதிய பதவியைஏற்று கொள்வார் என்ற சர்ச்சை பேச்சும் மக்கள் மத்தியில் உலவுகிறது

              குளறு படி அரசியல் விளையாட்டில் பசில் கில்லாடி ,அவ்விதம் அமெரிக்காவுக்கு தப்பி ஓடுவது போன்று திசை திருப்பி மீளவும் ஆட்சி அதிகாரத்தில் இவர்கள் அமர கூடும் என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

                பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

                இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் சகோதரன் பசில் ராஜபக்சே இலங்கை பாராளும்னற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

                சிறிலங்கா பொது ஜென பெரமுன மொட்டு கட்சியில் அங்கம் வகித்த பசில் ராஜபக்சே எம்பி பதவி விலகல் ராஜினமா தொடர்பில் இன்று அறிவித்துள்ளார்

                இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே விற்கு எதிராக காலிமுக திடலில் மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

                அந்த போராட்டத்தில் பசில் ராஜபக்சே,கோத்தபாய ராஜபக்சே,மகிந்த ராஜபக்சே, பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்தனர்

                காலிமுக திடல் போராட்ட காரர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகல் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது

                இலங்கை நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு ஓட வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது

                பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

                தற்போது இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே வும் பதவி விலக வேண்டிய நிலையில் உள்ளார்
                அந்த பதவி விலகல் நெருக்கடியை ரணில் ஏற்படுத்துவார் என எதிர் பார்க்கலாம்

                பசில் பதவி விலகல் -உக்கிரம் பெற்ற குடும்ப சண்டை

                பசில் ராஜபக்சே பதவி விலகல் ,ராஜபக்சே குடும்பத்திற்குள் உள்ளே நடந்து குடும்ப சண்டையாக பார்க்க படுகிறது

                ஆட்சியில் அமர்ந்து நாட்டை கொள்ளையடிக்கும் இவர்களுக்குள் பின்னர் குத்து சண்டைகள் இடம்பெறும் ,இவ்வாறே மகிந்த ராஜபக்சே ஆட்சியிலும் இடம்பெற்று பசில் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்

                அது போன்றே கோத்தபாய ராஜபக்சே ஆட்சியிலும் பசிலுக்கு இடம்பெற்றுள்ளது

                இந்த பதவி விலகலை அடுத்து பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                ராஜபக்சே குடும்பங்களுக்குள் உள்ளே நடக்கும் குடும்ப சண்டை தற்போது உக்கிரம் பெற்றுள்ளது ,

                மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவி விலக்குவதற்கு தான் மேற்கொண்ட நடவடிக்கை தனது வாழ் நாளில் தனக்கு ஏற்பட்ட கடினமான ஒன்றாக அமைய பெற்றதாக கோத்தபாய ராஜபக்சே தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

                  இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

                  இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த பதின் ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியா அரசினால் இலங்கைக்கு மீள நாடு கடத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

                  இலங்கையில் இருந்து படகுமூலம் பயணித்த இலங்கை அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்கரையில் இயந்திரக்கோளாறால் பழுதடைந்த நிலையில் அவுஸ்ரேலியா கடல் படையினரால கைது செய்ய பட்டு நாடு கடத்த பட்டுள்ளனர்

                  இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசுடன் அவுஸ்ரேலியா அரசு மிக நெருங்கிய உறவை பேணி வருகிறது ,அதன் ஊடாக இவ்வாறான நாடு கடத்தலை துரித படுத்தியும் வருகிறது

                  அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக செல்பவர்களை கிறிஸ்ம்ஸ தீவில் அடைத்து வைத்து கொடுமை படுத்தும் அவுஸ்ரேலியா அரசின் மனித உரிமை மீறல் நிலை தொடர்கிறது

                  அவுஸ்ரேலியா அரசின் இந்த கொடுமை படுத்தல் விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இலங்கை மக்கள் தொடராக ஆபத்து நிறைந்த கடல் வழி ஊடாக பயணித்து வருகின்றமை தொடர்கிறது

                  இலங்கையில் உள் நாட்டு போர் முடிவடைந்த பின்னர் வெளி நாடுகளில்அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டு வருகிறது

                  இலங்கையில் இலங்கையர்களுக்கு பிரச்சனை இல்லை நீங்கள் நாட்டுக்கு செல்லுங்கள் என அரசுகள் கையை விரித்து விடுகின்றன ,இதனால் விசா இன்றி மக்கள் அவதி படுகினறனர்

                  வந்த நாடுகளில் விசா இன்றி வேலை செய்ய முடியாது இலங்கையர்கள் அவதியுறும் சொல்லென்னா துயரை புரிந்து கொள்ளாமல் இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் தொடந்த வண்ணம் உள்ளது

                  இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

                  இலங்கையர்கள் நாடு கடத்திய அவுஸ்ரேலியா அரசின் இந்த செயலுக்கு மனித உரிமை மையங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

                  அவுஸ்ரேலியா அரசினால் இலங்கையர்கள் கைகள் கட்ட பட்டு விமானம் மூலம் கிரிமினல் குற்றவாளிகள் போல மக்கள் நாடு கடத்த பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன

                  வெளிநாடு நோக்கி செல்லும் இலங்கையர்கள் ஏன் இங்கு செல்கிறோம் போலீசாரிடம் சிக்கிய பொழுது பணம் உழைக்க வருகை தந்தாக ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கினர்

                  இவர்கள் செயல் தம்மை தாமே கேவல படுத்தி கொண்ட செயலினால் இவர்களுக்கு நாட்டில் உயிர் ஆபத்து இல்லை அதனால் வேலை தேடியும் நல்ல வாழ்க்கை தேடியும் வந்தனர் என கூறி காட்சிகளை ஊடகங்கள் இழிநிலையோடு ஒளிபரப்பி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                  ஆள் வளர்ந்தது தான் மிச்சம் அறிவு இல்லை என்பது இதைத்தான் போலும் .

                  • வன்னி மைந்தன் –
                    Posted in இலங்கை செய்திகள்

                    வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

                    வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

                    இலங்கையில் வாடகைக்கு வாகனத்தை கொள்வனவு செய்து அந்த வாகனங்களை திருப்பி கொடுக்காது கொள்ளையடித்து வந்த திருட்டு கும்பல் ஒன்று கைது செய்ய பட்டுள்ளது

                    இவ்வாறு வாடகைக்கு பெற படும் வானங்களை கொள்ளையடித்து அதனை பல்வேறு பகுதியில் விற்பனை புரிந்து வந்துள்ளனர்

                    இவர்களினால் வாடகைக்கு பெறப்பட்ட ஐந்து மகிழுந்துகள் ,இரண்டு சிற்றூர்திகள் ,ஜீப் ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                    காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து நடத்திய தேடுதலின் பொழுது வாடகை வானங்களை கொள்ளையடித்த குழு சிக்கியது

                    இலங்கையில் இவ்வாறு வாடகைக்கு பெறப்படும் வானங்களை கொள்ளையடித்து வந்த குழுக்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டனர்

                    இலங்கையில் பெருகிவரும் குற்ற செயல்களில் இந்த வகையான வாடகை வாகனங்கள் கொள்ளையடித்தல் முதன்மை பெறுகிறது

                    தற்காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலத்திலும் வாடகை வாகனங்கள் கொள்ளையடிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                    கைதான வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                    கைது செய்ய பட்ட நபர்கள் வாயிலாகவே மேலும் பல திடுக்கிக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

                    போலீசாரின் நீண்ட நாள் தேடுதல் வலைக்குள் கொண்துவரப்பட்ட பின்னர் இந்த நபர்கள் கைது இடம்பெற்றுள்ளது

                    தற்போது வீதியெங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவ் வ்வேளை குற்றவாளிகள் கைது வேட்டையும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    வாடகை வாகனங்களை கொள்ளையடித்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக இவர்கள் பெற்று வந்துள்ளனர்

                    வாடகை வானங்களை கொள்ளையடித்து விற்பனை புரிந்த இவர்களோடு கூட்டு வைத்து செயல் பட்ட வாகன திருத்தும் நபர்கள் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    வாடகைக்கு ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்து அதன் ஊடக தம்மை செல்வந்தர்களாக காண்பிக்கும் சிலர் இவ்வாறான நூன த முறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

                    விடயம் அறியாத மக்கள் சிலரும் இவ்வாறான வடக்கை வாகனங்களை பெற்று திருட்டு குற்றத்தில் அவர்களும் சிக்கி விடுகின்ற சம்பவங்களும் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

                    • வன்னி மைந்தன் –
                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு

                      யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு

                      யாழ்ப்பாண ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது

                      இவ்வாறு ரயில் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

                      இவ்வாறான பொதுவான கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால், பயணிக்கும் ரயில் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                      மேலும், டீசல் விலை உயர்வால் ரயில் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு ரயிலை இயக்குவதற்கு அதிக செலவாகிறது

                      எரிபொருளுக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும். இந்த ரயிலில் சுமார் 500 பயணிகள் பயணித்தாலும்கூட 10 இலட்சம் ரூபாவே வருமானமாகக் கிடைக்கும்.

                      இதன்படி யாழ்ப்பாண ஒரு ரயில் பயணத்தில் 3 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

                      ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.
                      தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

                      யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு ஏற்படும்கிரது என்ற இவரது பேச்சு ரயில் கட்டணம் அதிகரிக்க பட போவதை எடுத்து காட்டுகியது

                      கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி யாழ் தேவி ரயில் பயணிக்கிறது ,இந்த சேவை தடை படும் அபாயம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது

                      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ரயில் சேவைகள் நிறுத்த பட்டால் மக்கள் போக்குவரத்து பாதிக்க படும்

                      யாழ்ப்பாண ரயில் பயணத்தை நம்பியே அதிக மக்கள் உள்ளனர் ,மக்களை தேவையின்றி வெளியில் செல்லாதீர்கள் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு இந்த ரயில் போக்குவரத்து தடைகள் வருவதற்கான முன் எச்சரிக்காயாக விளக்குகிறது

                      இலங்கையை ஆள்பவர்களின் திட்டமில்லா கொள்கையும் நாட்டை கொள்ளையடித்ததுமே வடக்கு பகுதி யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு இழப்பு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது

                      நாடளாவிய ரீதியில் ரயில் மற்றும் பேரூந்துகள் சேவைகளும் முடக்க படும் அபாயம் எழுந்துள்ளது .

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                        பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                        பிரிட்டனில் 17 வருடங்களின் பின்னர் முதன் முறையாக லீற்றர் பெற்றோல் M2 சாலை பகுதியில் 202.9பவுண்டாகவும் அத்துடன் டீசல் 204.9p ஆக விலை அதிகரிக்க பட்டுள்ளது

                        பிரிதானியாவில் இடம் பெற்றுள்ள இந்த விலையின் உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        உக்கிரேன் ரசியாவுக்கு இடையிலான போரினால் பெற்றோல் விலை அதிகரிக்க பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        பெற்றோல் விலை உயர்வு காரணமாக பொதி சேவைகள் மற்றும் டிலிவரி சேவைகள் என்பனவற்றின் விலை எகிறும் நிலை ஏற்படலாம் என முக்கிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன

                        உக்கிரேன் ரசியாவின் போரினால் உலக நாடுளில் நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரிக்க படுகிறது

                        இவ்வாறான தொடர் விலை உயர்வினால் அப்பாவி மக்களே பாதிக்க படுகினறனர் ,

                        பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                        ,உக்கிரேன் போரை முடிவுக்கு கொண்டுவர துடிக்கும் ரசியாவுக்கு எதிராக ,பிரிட்டன் அமெரிக்கா குறுக்கே நிற்பதால் இந்த விலை உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        அமெரிக்கா பிரட்டன் ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்காது விட்டால் ,உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுற்றால் இயல்பு நிலைக்கு உலகம் திரும்பிடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன ,

                        ஆனால் அதனை தடுப்பது பிரிட்டன் அமெரிக்காவாகும் ,இந்த போரை முன் தள்ளி செல்வது இவர்களேயாகும் ,

                        இதனால் தான் என்னவோ ரசியா மக்களை கொதித்தெழ வைக்கும் மறுமுனை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது

                        இலங்கையை போல பிரிட்டனிலும் பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது


                        இலங்கையை போல நெருக்கடிக்குள் பிரிட்டன் சிக்கி விடுமோ என்றோ அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

                        மின்சார விலை,எரிவாயு விலை ஐம்பது வீதம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை சொல்லென்னா துயரில் ஆழ்த்தியுள்ளது

                        45 லீட்டர் கொள்ளளவு கொண்ட தாங்கி 100 பவுண்டுக்கு நிரப்ப பட்டது ,தற்போது அதுவே 111 பவுண்டாக அதிகரித்துள்ளது .

                        • வன்னி மைந்தன் –
                          Posted in உலக செய்திகள்

                          பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

                          பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

                          இன்று பிற்பகல் பெர்லின் பகுதியில் வேகமாக பயணித்த கார் மக்களுக்குள் புகுந்தது
                          இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                          90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்திய சாரதி மக்களுக்குள் திட்டமிட்டு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்

                          சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்

                          மாணவர்களை விடுமுறைக்கு அழைத்து வந்த டீச்சரே இந்த சம்பவத்தில் பலியாகினர் ,மேலும் அவருடன் தரித்து இன்ற மாணவர்கள் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                          மக்களுக்குள் காரை வேகமாக செலுத்தியவர் அல்பேனியாவை சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காண பட்டுள்ளது

                          பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

                          இது ஒரு தீவிரவாத செயல் என எதிர்பார்க்க படுகிறது ,பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் கொலை வெறி தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          மக்களுக்குள் புகுந்த கார் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                          குறித்த சம்பவத்தை மேற்கண்ட விபரிக்கையில் வேகமாக வந்த கார் மக்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது அதன் பின்னர் அங்கிருந்த காடுகள் மேலெழ ஏற்ற பட்டு மேலேயும் தாக்குதலை நடத்த முயன்றார் என்ற தகவல் பீதியை கிளப்பியுள்ளது

                          90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தி வந்தவர் மக்களுக்குள் மோதினர் ,இதன் செயல்பாடு திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றாகபார்க்கலாம் என அவர் தெரிவித்தார்

                          விடுமுறை கழிக்க டீச்சருடன் அங்கே காத்து நின்ற அப்பாவி மாணவர்கள் மீது மோதி

                          அவர்களை பலி எடுக்க முனறற அனால் காயத்துடன் உயிர் தப்பி விட்டனர் என அவர் தெரிவித்தார்

                          மக்களுக்கு புகுந்த கார் தாக்குதல் தொடர்பான காணொளிகள் போலீசார் மீட்டு அதனை ஆய்வு செய்து வருகின்றனர்

                          விரைவில் மக்களுக்குள் புகுந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் வெளிவரலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                          • வன்னி மைந்தன் –
                            Posted in உலக செய்திகள்

                            உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

                            உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

                            உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் இராணுவ ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,ரசியாவின் தாக்குதல் நடவடிக்கையால் உக்கிரேன் உள் கட்டமைப்பு மிக மோசமாக சேதமடைந்துள்ளது

                            உக்கிரேன் மீதான ரசியா இராணுவத்தின் பழிவாங்கும் ஆக்கிரமிப்பு தாக்குதலை தடுத்து நிறுத்திட நோர்வே நாடானது M109 155mm டாங்கிகள் இருபத்தி இரண்டை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

                            நோர்வேயின் இந்த டாங்கிகள் கையளிப்பு விவகாரம் ரசியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது


                            உக்கிரேனுக்கு டாங்கிகள் இலவசமாக வழங்கிய செயலானது ஐரோப்பிய நாடுகள் நோர்வே உக்கிரேனுக்கு இனைந்து ஆதரவு வழங்கி வருகின்ற செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                            ரசியா உக்கிரேன் போரானது உலக நாடுகளில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள நிலையில் போர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

                            இந்த கொடிய போரை தடுத்து நிறுத்திட வேண்டிய முக்கிய நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பை முன் நிறுத்தி உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆயுதங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்

                            மேற்குல நாடுகள் மூலம் ஆயுதங்களை பெற்று ரசியாவுக்காண போரை தொடுத்து வரும் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் நலன் சார்ந்து தொடரும் இந்த கொடிய போர் மூன்றாம் உலக போருக்கான அடித்தளம் என்பது தெளிவாகிறது

                            உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

                            கழிந்து செல்லும் நாட்கள் ஒவ்வொன்றும் உலக மக்கள் பெரும் அழிவின் விளிம்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்கிறது உக்கிரேன் ரசியா போர்

                            எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கி ஏழ்மையான நாடாக உக்கிரேன் மாற்றம் பெற போகும் இந்த கொடூர போரின் தாக்கம் உணராது உக்கிரேன் அதிபர் செயலாற்றி வருகிறார் என்பது வாதமாக எழுந்துள்ளது

                            போராயுதங்களை டாங்கிகளை இலவசமாக நாடு ஒன்று வழங்குகிறது எனின் அந்த நாடு அந்த டாங்கிகளை அந்த போர்க்களத்தில் சோதனைக்கு விட்டுள்ளது என்பதே தந்திர அரசியல் விளையாட்டாகும்

                            நோர்வே நாட்டின் இலவசமான டாங்கிகள் கையளிப்பும் அவ்வாறே அமைய பெறும் என்பது நிகழ்வாகிறது

                            கழியும் நிமிடங்ளில் உக்கிரேன் களத்தில் பெரும் மாற்றங்கள் இடம்பெற போகிறது மேலும் மனித உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                            உக்கிரேனுக்கு டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே நாட்டின் செயல் ரசியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, தொடரும் இந்த போரை தடுத்து நிறுத்துவது யாரு ..?

                            இலவச ஆயுத அன்பளிப்புக்கள் இந்த கொடிய போரை தடுத்து நிறுத்துமா ..?

                            • வன்னி மைந்தன் –
                              Posted in இலங்கை செய்திகள்

                              அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்

                              அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்

                              இலங்கையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சே தனது பாராளுமன்ற எம்பி பதவியை இராஜினாமா செய்திட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

                              கொழும்பு மேற்கொள்ளும் இந்த முக்கிய அதிரடி நடவடிக்கை மூலம் பசில் பதவி விலகும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

                              இலங்கையை ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, மற்றும் மகிந்த ராஜபக்சே ,இவருடன் பசில் ராஜபக்சே உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் கோட்டா கோ கம போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

                              அதன் எதிரொலியாக பசில் ராஜபக்சே பதவி விலகும் நடவடிக்கை அமைய பெறுவதாக கொழும்பு எதிரி செய்திகள் கோடிட்டு காட்டுகின்றன

                              மக்கள் மனதில் தாம் நல்லவர்கள் என்பதை காண்பிக்க ராஜபக்சே குடும்பம் மேற்கொள்ளும் இந்த சதுரங்க அரசியல் ஆட்டம் அவர்களை மேலும் படு பாதாளத்திற்கு அழைத்து செல்ல போவதை காண்பிக்கிறது

                              மக்கள் உணர்வுகளிற்கு மதிப்பு அளிக்காது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிட மறுக்கும் கோத்தபாயவின் செயல் பாடு இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளுக்கு நெருக்கடியாக உள்ளது

                              அதனால் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிடும் காலம் கனிந்து வருகிறது ,எதிர் வரும் மூன்று மாத்தில் இலங்கை மிக பெரும் நெருக்கடி மற்றும் பஞ்ச நிலையில் தவிக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்

                              அவரதுஅந்த பேச்சின் முன்னோட்டம் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிட வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருந்தார்

                              அதனை கருத்தில் வைத்தே ராஜபக்சே குடும்பத்தினர்
                              முக்கிய அங்கமாக விளங்கியவரும் சர்ச்சைகளின் நாயகனாக விளங்கிய பசில் ராஜபக்சே பதவி விலகும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

                              இலங்கை அரசியலில் நடை பெறும் இந்த நேர்மறை தலைகீழ் அதிரடி நடவடிக்கை பதவி விலகும் நிலைக்கும் பசில் ராஜபக்சே மற்றும் ராஜபக்சே குடும்பத்தை அழைத்து செல்கிறது

                              ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவும் ,இலங்கை ராஜபக்சே குடும்பத்தில் மூன்றாவது ஜனாதிபதி பசில் ராஜபக்சே தான் என்ற வரலாற்று புகழையும் இழந்து தவிக்கிறது ஆளும் ராஜபக்சே குடும்பம்

                              மக்களினால் விரட்டி பதவி விலகும் நிலையில் தமது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி சென்றதே இன்றைய இந்த கண்ணீர் நிலைக்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .

                              • வன்னி மைந்தன் –
                                Posted in உலக செய்திகள்

                                ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

                                ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

                                ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

                                மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்

                                எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன

                                அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்


                                இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது

                                ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,

                                அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்


                                ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

                                அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                                இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது

                                ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த திருடர்கள்

                                  யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த திருடர்கள்

                                  யாழ்ப்பாணம் மீசாலை டச்சு வீதி ஊடாக பயணித்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்த திருடர்கள் அறுத்து கொண்டு தப்பித்து சென்றுள்ளனர்

                                  தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த பெண்ணை அவதானித்து பின் தொடர்ந்த மோட்டர் சைக்கிளில் பயணித்த திருடர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர்


                                  சங்கிலியை பறி கொடுத்த தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்ட பொலிசார் குறித்த திருடர்கள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

                                  யாழ்ப்பாணத்தில் நாள் தோறும் இவ்விதமான மக்களை அச்சுறுத்தும் வழிப்பறி தங்க சங்கிலி அறுப்பு கொள்ளைகள் அதிகரித்துள்ளன ,

                                  காவல்துறையினருக்கு இவ்வாறான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கின்ற பொழுதும் அதனை தடுத்திடாது மேலும் திருட்டுகளை ஊக்குவிக்கின்றார் என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

                                  யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த தப்பிய திருடர்கள் தொடர்பான செய்தி காட்டு தீயாகி பரவியதால் மக்கள் குழு ஒன்று திடீர் வீதி சுற்று காவல் பணிய ஈடுபட்டது ,ஆனால் அங்கு சந்தேங்கத்திற்கு இடமான முறையில் எவரும் தென்படவில்லை

                                  யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இவ்வாறான அச்சுறுத்தும் தங்க நகை கொள்ளை சம்பவங்கள் திருடர்களினால் மேற்கொள்ள பட்டு வருகிறது என்கின்ற குற்றவியல் தொடர்பு புள்ளி விபரங்கள் அதிகரித்து காணப்படுகிறது

                                  யாழ்ப்பாணத்தில் பெருகி வரும் இவ்விதமான திருட்டு சம்பவங்களை கட்டு படுத்த பொலிசார் மற்றும் மக்கள் விழிப்புற்று முன் வந்தால் மட்டுமே இந்த திருடர்கள் வசம் இருந்து தமது பொருட்களையும் ,மனித உயிரையும் பாதுகாத்து கொள்ள முடியும் என்பது பொது விதியாக உள்ளது

                                  நாள் தோறும் இடம் பெறும் இவ்வாறான வழிப்பறி கொள்ளைகளில் சிக்கி பல மக்கள் தமது உடமைகளை பறிகொடுத்து துயர் தோய்ந்த நிலையோடு வீடு சென்றமை துன்பியல் வரலாறாக தொடர்கிறது

                                  போதை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி காரணமாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,

                                  மக்கள் வெளியில் உலாவும் போது அல்லது செல்லும் பொழுது தங்க நகைகள் அணிந்து செல்லாது செல்வதே தற்கால நிலையில் சிறப்பான ஒன்று என்பது பொலிசாரின் வேண்டுதலாகும் .

                                  • வன்னி மைந்தன் –
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                                    இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                                    இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயன்ற 91 பேர் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

                                    இவர் யாவரும் புத்தளம் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மீன் பிடி படகு ஒன்றை சோதனை செய்தபொழுதே மேற்படி நபர்கள் சிக்கினார்

                                    ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையும் முகமாக கடல் வழியாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி ஆபத்தான கடல் வழியூடாக பயணிக்க முனைந்தவர்களே இவ்வாறு சிக்கினார்

                                    இவர்கள் அனைவரும் இலங்கை சிலாபம் ,மாரவில,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,திருகோணமலை ஆகிய பகுத்தியை சேர்ந்தவர்களாகும் ,இந்த படகில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 91 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என ஆசை வார்த்தையை கேட்டு பல லட்சம் பணத்தை செலவு செய்து பயணிக்கும் இவர்கள், வெளி நாடுகளில் எவ்விதம் சூழல் உள்ளது அங்கு சென்றால் போரின் பின்னரான காலப்பகுதிகியில் எமக்கு விசா கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதில்லை

                                    ஆனாலும் இலங்கையை விட்டு தப்பி சென்றால் நாங்கள் செல்வந்தராகிவிடலாம் என எண்ணுகின்ற சிந்தனை பிழைகளின் செயல்பாடுகள் ஒன்றாக இது உள்ளது

                                    ஆபத்தான கடல் வாழி பயணங்கள் மனித உயிரை கூட மாய்க்கும் நிலையில் உள்ளது ,உணவு குடிநீர் இன்றி கடலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் ,

                                    இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                                    இவ்வாறு இலங்கையை விட்டு தப்பி கடலில் பயணித்த பல நூறு இலங்கையர்கள் கடலில் காணாமல் போன நிலையில் உள்ளமை கவனிக்க தக்கது

                                    இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற அனைவரும் கடற்படையால் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்

                                    இலங்கையை விட்டு தப்பியோட பல நூறு மக்கள் தற்கால சூழலில் தயாராகி
                                    வருகினற்னர் ,

                                    அவ்விதம் இலங்கையை விட்டு தப்பிக்க முனையும் பல மக்கள் இந்தியாவுக்கு
                                    உயிர் பாதுகாப்பு தஞ்சம் தேடி செல்கின்றனர்

                                    ஆனால் இவர்கள் அது தாண்டி உயிரோடு விளையாடி பெரும் கடல்களில் சிறு படகில் பயணிக்க முயல்வது மிக பெரும் ஆபத்தான ஒன்றாகும் என்பது இங்கே சுட்டி கட்ட தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் காயம்

                                    கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் காயம்

                                    கடந்த தினம் கிளிநொச்சி பாடாசலையில் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி இருபத்தி ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,

                                    இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளான மாணவர்களில் பதினொரு பேர் கிளிநொச்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                    கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலையில் குளவி கூடு ஒன்றை குரங்குகள் கலைக்க முற்பட்ட நிலையில் சிதறி பரவிய குளவிகள் பாடசாலை மாணவர் மீது தாக்குதலை நடத்தியது

                                    இந்த குளவிகள் வகுப்பறை எங்கும் பரவிய நிலையில் ,கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது ,அவ்வேளை மாணவர்கள் சிதறி ஓடிய நிலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது

                                    சில நிமிடங்கள் அங்கு என்ன தான் இடம்பெறுகிறது என்பதை அறியாது மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர் ,மேலும் கிளிநொச்சி பாடசாலையின் பிரதான வாயிலை உரிய முறையில் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளது

                                    அனர்த்தம் ஒன்று நிகழ்கின்ற பொழுது அவ்வேளை அங்கு காவலுக்கு உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்ற உரிய கொள்கை விளக்க விதிகள் வழங்கப்படாத நிலையை இங்கு அவதானிக்க முடிந்ததாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன

                                    பிரபலமாக விளங்கும் கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் படு காயம் அடைந்த இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


                                    படுகாயமடைந்த மாணவர்கள் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பொழுது மருத்துவர்கள் உரிய முறையில் அணுகி சிகிச்சை அளித்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

                                    கிளிநொச்சி பாடசாலை வளாகத்தில் குளவிகள் நீண்ட நாளாக கூடு அமைத்திருந்த பொழுதும் மாணவர்கள் இல்லாத வேளை பார்த்து அந்த குளவி கூட்டினை அகற்றி இருந்தால்

                                    கிளிநொச்சி பாடசாலை மாணவர்கள் இவ்விதம் காயங்களுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என்ற கருத்து பெற்றோர்கள் வாயிலாக வெளியாகியுள்ளது

                                    பாடசாலைக்கு பிள்ளைகளை கற்றால் நெறிக்கு அனுப்பி வைத்தோம் ஆனால் பாடசாலையின் அசமந்த போக்கின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சில பெற்றோர்கள் குமுறியுள்ளனர் .

                                    • வன்னி மைந்தன்