வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் நிலத்தின் மதிப்பைத் தவிர்த்து மாதாந்த வாடகை

ரூ. 4.6 மில்லியன் என்றார். முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ முடியுமென ஜனாதிபதி மேலும் கூறினார்.

“தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குடியிருப்பு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு.

அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க கொடுப்பனவாக மட்டுப்படுத்தும்.

இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்” என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு

பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

இலங்கையில் வாடகைக்கு வாகனத்தை கொள்வனவு செய்து அந்த வாகனங்களை திருப்பி கொடுக்காது கொள்ளையடித்து வந்த திருட்டு கும்பல் ஒன்று கைது செய்ய பட்டுள்ளது

இவ்வாறு வாடகைக்கு பெற படும் வானங்களை கொள்ளையடித்து அதனை பல்வேறு பகுதியில் விற்பனை புரிந்து வந்துள்ளனர்

இவர்களினால் வாடகைக்கு பெறப்பட்ட ஐந்து மகிழுந்துகள் ,இரண்டு சிற்றூர்திகள் ,ஜீப் ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து நடத்திய தேடுதலின் பொழுது வாடகை வானங்களை கொள்ளையடித்த குழு சிக்கியது

இலங்கையில் இவ்வாறு வாடகைக்கு பெறப்படும் வானங்களை கொள்ளையடித்து வந்த குழுக்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டனர்

இலங்கையில் பெருகிவரும் குற்ற செயல்களில் இந்த வகையான வாடகை வாகனங்கள் கொள்ளையடித்தல் முதன்மை பெறுகிறது

தற்காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலத்திலும் வாடகை வாகனங்கள் கொள்ளையடிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கைதான வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கைது செய்ய பட்ட நபர்கள் வாயிலாகவே மேலும் பல திடுக்கிக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

போலீசாரின் நீண்ட நாள் தேடுதல் வலைக்குள் கொண்துவரப்பட்ட பின்னர் இந்த நபர்கள் கைது இடம்பெற்றுள்ளது

தற்போது வீதியெங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவ் வ்வேளை குற்றவாளிகள் கைது வேட்டையும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக இவர்கள் பெற்று வந்துள்ளனர்

வாடகை வானங்களை கொள்ளையடித்து விற்பனை புரிந்த இவர்களோடு கூட்டு வைத்து செயல் பட்ட வாகன திருத்தும் நபர்கள் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

வாடகைக்கு ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்து அதன் ஊடக தம்மை செல்வந்தர்களாக காண்பிக்கும் சிலர் இவ்வாறான நூன த முறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

விடயம் அறியாத மக்கள் சிலரும் இவ்வாறான வடக்கை வாகனங்களை பெற்று திருட்டு குற்றத்தில் அவர்களும் சிக்கி விடுகின்ற சம்பவங்களும் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

  • வன்னி மைந்தன் –