ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
ரஷ்யா இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு
,உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .
இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
தொடராக ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 அப்பாவி பொது மக்கள் காயமடைந்துள்ளனர் .
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில்
காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
இரண்டு வருடங்களை அண்மித்து பயணிக்கும்
உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் உள்கட்டமைப்பு
பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா தாக்குதல்களினால்
பலத்த ஆயுத,.ஆளணி ,சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு
இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு
இஸ்ரேல் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் கட்டளை தலைமையகம் அழிப்பு , இஸ்ரேல் விமான தளத்தை நொறுக்கிய ஹிஸ்புல்லா ,
இஸ்ரேல் விமான தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல் ,
இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் விமான கட்டளை தலைமையக கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் சேதமாகியுள்ளது .
இந்த இஸ்ரேல் விமான தளத்தை இலக்கு வைத்து 15 ஏவுகணைகள் வீச பட்டன,அதிலேயே பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் போராளிகள் அதிரடி தாக்குதல்,
இஸ்ரேல் இராணுவத்தின் 21 தளபதிகள் பலி உள்ளே விட்டு கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில்களில் பெரும் தொகையில் இஸ்ரேல் தனது தளபதிகளை ஒரே நாளில் பறிகொடுத்துள்ளது .
சற்றும் எதிர்பாராத தாக்குதல் ,காத்திருந்து பழிதீர்த்துள்ள ஹமாஸ் விடுதலை போராளிகள் .
இஸ்ரேல் தமது மிக பெரும் இராணுவ தளபதிகளை இழந்து சோகத்தில் உறைந்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய இராணுவ தாக்குதலில் 200 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தி வரும் தாக்குதலில் 25500 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
105 க்கு மேற்பட்ட நாள் கடந்து பயணிக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,இதுவரையான கால பகுதியில் இந்த பெரும் தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர் .
அப்பவி மக்களை கொன்றுவிட்டு ,அவர்கள் யாவரும் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் என, இஸ்ரேல் இராணுவம் அதன் அரசு அறிவித்து வருகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலில் 200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளனர் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் திறந்த வெளி இன அழிப்பை ,உலகம் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது கவலை தருகிறது .
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் வடக்கு பகுதி நோக்கி கடும் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளனர் ,இதில் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் பாதிக்க பட்டுள்ளன .
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தின் இராணுவ தளங்கள் ,மற்றும் ஆக்கிரமிக்க பட்ட குடியேற்ற திட்டங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்திய வண்ணம் உள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் நடத்தி கொண்டிருக்கும் இந்த ஏவுகணை தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிரிகள் கோட்டைகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் காணொளி பிடித்து வெளியிட்டு ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட இழப்பு விகிதத்தை காண்பித்துள்ளது .
எனினும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட ஆள் மற்றும் ஆயுத இழப்பு தொடர்பாக தெரியவரவில்லை .
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
ஆளும் அரசில் சுற்றாடல் துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்கெல்ல விளங்கி வருகிறார் ,இவர் மக்கள் நலனை மறந்து சமூக அநீதியிலே ஈடுபட்டுள்ளார் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
ராஜபக்ச அரசின் அங்கமாக விளங்கும் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் கதாநாயகனாக அன்றில் இருந்து இன்றுவரை விளங்கி வருவதாக மக்கள் குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர் .
அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல பொலிசாரை ஏவி விட்டு போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார் .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுளைந்தனர் ,அவ்வாறான 21 இஸ்ரேல் இராணுவத்தினர் கொத்தாக போட்டு தள்ளியுள்ளது ஹமாஸ் படைகள் .
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் கமாண்டோ படைகளைஇலக்கு வைத்து, அல்கஸாம் படை பிரிவு ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேல் கமாண்டோ படைகள் 21 பேர் கொத்தாக பலியாகியுள்ளனர் .
உடைந்த கட்டடம் ஒன்றுக்குள் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை, உள்ளே நுழைய விட்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி அப்படியே அழித்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இவர்கள் முன்பாக நின்ற டாங்கிகள் மீதும், ஊந்துகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் அந்த டாங்கிகள் பலதும் அழிக்க பட்டுள்ளது .
காசா பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் வெற்றி கொடி கட்டி தமது வீர தீரத்தை நிலை நாட்டியுள்ளது .
105 நாட்கள் கழிந்து நடக்கும் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன காசா போரில் ஹமாஸ் போரளிகள் சாதனை படைத்தது வருகிறதை இந்த இழப்பின் ஊடக இஸ்ரேல் இராணுவமே ஒப்பு கொண்டுள்ளது .
சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு
சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு
சிறிதரனுக்கு ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை தமிழரசு கட்சி புதிய தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருக்கு இடம்பெற்ற தெரிவில் சிவஞானாம் சிறிதரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் .
அவ்வாறு வெற்றி பெற்ற சிவஞானாம் சிறிதரனுக்கே வெளிநாட்டு பயணம் முடித்து இலங்கை ,வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடும்பெற்ற யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,தொடரும் பொலிஸ் வேட்டையால் குற்றவாளிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
போதைவஸ்து குழுவினர் மற்றும் நீதிமன்றினால் தேட படும் குற்றவாளிகளை கைது செய்து வருவதாக யுக்திய நடவடிக்கை தலமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
பொலிசாரால் கைது செய்ய பட்ட குற்றவாளிகள் யாவரும் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் பெருகி வரும் போதைவஸ்து வர்த்தகத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து என்பன நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின ,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் நபர் ஒருவரை ஏற்றுவதற்கு நின்ற பேரூந்து மீது வேகமாக பயணித்த அரச பேரூந்து திடீரென மோதி விபத்து சம்பவத்தை ஏற்படுத்தியது .
இதன் பொழுதே நான்கு பேர் காயமடைந்தனர் ,இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் தொடர்ச்சியாக இவ்விதமான பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது வெளிநாட்டடது பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் .
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னிலை படுத்த வெளிநாடுகளிடன் கடன் உதவிகள் கோரியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அவ்விதமான கடன் உதவிகள் இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமான பயணத்துடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .
இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .
இந்தியா வழங்கிய பாலம்
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படலாம் எச்சரிக்கை
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் 4 பேர் பலி
மூன்று மருத்துவமனைகள் பெருமளவில் சேதம்
மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினம்
சுவிஸ் விமானம் 2.6 மெட்ரிக் டன் உணவுடன் தரையிறக்கம்
ஹவுதிகள் எச்சரிக்கை வந்தால் தாக்குவோம்|ஹவுதி வசமான செங்கடல்
ஹவுதிகள் எச்சரிக்கை வந்தால் தாக்குவோம்|ஹவுதி வசமான செங்கடல்
ஹவுதிகள் கடும் எச்சரிக்கை செங்கடலில் ,போர் கப்பல்கள் பாதுகாப்பிற்கு
வந்தால் அவற்றை தாக்குவோம் என ஹவுதி தெரிவித்துள்ளது ,தற்போது ஹவுதிய படை வசமானது செங்கடல் .
செங்கடல் கப்பல் போக்குவரத்து இஸ்ரேல் பாலஸ்தீன போர் காரணமாக பலமாக பாதிக்க பட்டுள்ளது .
ஏமன் நாட்டுக்குள் நுழைந்து ஹவுதிய படைகள் மீது அமெரிக்கா பிரிட்டன் என்பன கூட்டாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இதனால் அதற்கு பதிலடியாக அமெரிக்கா ,இஸ்ரேல் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
மிக பெரும் பொறியில் அமெரிக்கா நேச படைகள் சிக்கியுள்ளன .கரணம் தப்பினால் மரணம் என்கின்ற நிலையே செங்கடலில் காணப்படுகிறது .
ஆயுத ,பொருள் இழப்பை மூடி மறைத்து அடி வாங்கியும் வலிக்கவில்லை என்ற கதையாக அமெரிக்கா கூட்டு படைகள் நிலை காணப்படுகின்றன .
ஏமன் ஹவுதிகள் மீது ஐந்து நாடுகள் கடும் வான்வழி தாக்குதல்
ஏமன் ஹவுதிகள் மீது ஐந்து நாடுகள் கடும் வான்வழி தாக்குதல்
ஏமன் ஹவுதிகள் போராளிகள் நாட்டுக்குள் நுழைந்து ,ஹவுதிகள் ஏவுகணை தளங்களை ஐந்து நாடுகள் கடுமையாக வான்வழி ஊடாக தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்கா கப்பல்கள் மீது ஏமன் ஹவுதிகள் படைகள் தாக்குதலை நடத்திய சில மணித்தியாலங்களில் ஐந்து நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஹவுதிகள் படைத்தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படுவதாகவும் ,இந்த தாக்குதலில் கனடா ,பிரிட்டன் ,அமெரிக்கா நெதர்லாந்து ,பகைரன் ,நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த ஐந்து நாடுகள் இணைந்து தாக்குதலை நடத்துவதால் எதிர் வரும் மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் ,ஐந்து நாட்டு சரக்கு கப்பல்கள் மீதும் ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுவைத்தால் பதட்டம் நிலவுகிறது .
சினைப்பர் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
சினைப்பர் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் மீது சினைப்பர் தாக்குதல் நடத்தி அலறவிட்ட அல்குட்ஸ் படையணிகள் ,சினைப்பர் தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை சினைப்பர் படையணிகள் வீரமிகு தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தை பீதியில் உறைய வைத்துள்ளது .
இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
கரந்தடி கெரில்லா போர்முறை தாக்குதலை நடத்தி ,மரபு வழிப்படையணியாக நுழையும் இஸ்ரேல் படைகளுக்கு சூரன் போர் தாக்குதலை நடத்தி இழப்பை வழங்கிய வண்ணம் அல்குட்ஸ் படையணிகள் உள்ளனர் .
உடைந்த கட்டடங்களுக்கு காப்பு எடுத்து ,அதற்குள் இருந்து தமது வேட்டை திருவிழாவை கணக்கு போட்டு கட்சிதமாக ஈராஸ் இராணுவத்திற்கு எதிராக நடத்திய வண்ணம் உள்ளது காசா போர் படைகள் .
அவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தை ஓட வீழ்த்திய காட்சிகள் இவை வெளியிட்டுள்ளன
அதில் நான்கு கொமாண்டோ படைகள் சூடு கொலை செய்ய படும் காட்சிகள் அதில் காண படுகிறது .
அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
உலக செய்திகள்| அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் ,செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்கா சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன ,கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
செங்கடல் அருகே பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான OCEAN JAZZ,என்கின்ற சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .
ஹவுதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா சரக்கு கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் போர் அரங்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செங்கடலில் தமது படைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில் ,இந்த தாக்குதலை ஹவுதிகள் நடத்திய வண்ணம் உள்ளனர் .
செங்கடல் தற்போது ஹவுதிகள் கட்டு பாட்டு பகுதியாகா மற்றம் பெற்று வல்லாதிக்க அரசுகளை ஓட விட்டுள்ளது .செங்கடலில் ஹவுதியா கொக்கா என்ற நிலையே காண பாடுகிறது .
சொன்னதை போன்று சொல்லி அடிக்கும் வீர படைகளாக ஹவுதிகள் விளங்குகின்ற .
பல நாடுகள் தப்பி ஓடும் வண்ணம் அடி செம அடி ,செங்கடலில் இப்போ தலைவன் ஹவுதி தான் போங்க .
சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .
சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .
இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .
நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .
இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியா வழங்கிய பாலம்
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படலாம் எச்சரிக்கை
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் 4 பேர் பலி
மூன்று மருத்துவமனைகள் பெருமளவில் சேதம்
மன்னாரில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினம்
சுவிஸ் விமானம் 2.6 மெட்ரிக் டன் உணவுடன் தரையிறக்கம்
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர் ஜோ பைடன் ரிஷி சுனெக் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் தொடர்பாக முக்கியமாக பேசியதாக தெரிவிக்க படுகிறது .
சமகால உலக அரசியல் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் அந்த களத்தில் தாம் எடுக்க வேண்டிய நிலைகள் தொடர்பாக பேச பட்டுள்ளனவாம் .
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இவர்களிடம் உள்ளதாக நம்ப படுகிறது ,இந்த பேச்சில் அது தொடர்பாக பேச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
உலக செய்திகள் | ஹவுதிகள் தாக்குதல் அச்சம் காரணமாக அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்,ஹவுதிகளினால் முடங்கிய செங்கடல் சரக்கு கப்பல் சேவைகள் .இஸ்ரேல் பாலஸ்தீன போர் 3 இஸ்ரேல் தளபதிகள் பலி .
செங்கடல் வழியாக இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் செங்கடல் வழி சரக்கு கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப் படைந்துள்ளதுடன் ,பல மில்லியன் இழப்பும் ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட கப்பல்கள் ஆதரவு தருவித்து ,சப்போர்ட் சூட்டு தாக்குதலை நடத்தி வருவதால் ,அமெரிக்கா கப்பல்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
ஹவுதிகள் தாக்குதல் அச்சம் அவுஸ்ரேலிய போர் கப்பல் தப்பி ஓட்டம்|3 இஸ்ரேல் தளபதிகள் பலி
பொல்லு கொடுத்து அடி வாங்கிய நிலையில் அமெரிக்கா பிரிட்டன் செங்கடலில் ஹவுதிகள் வசம் சிக்கி அடி வாங்கி நொந்த வண்ணம் உள்ளனர் .
மறு முனையில் பாலஸ்தீனம் காசா பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு கல்லறையை கட்டிய வண்ணம் உள்ளனர் ,விளங்க சொல்வது என்றால் புதைகுழி வெட்டி புதைத்து வருகின்றனர் .
காசா உள்ளே நுழைந்த காலாட் படைகள் போர் வண்டிகள் மீது நடத்த பட்ட தாக்குதலில் மூன்று தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இறந்தவர்களில் இரண்டு மேயர் மற்றும் கப்டன் தர அதிகாரிகள் பலியாகியுள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு
மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு
இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .
29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .
ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது













































