30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது
கடந்த ஒரு நாளில் தைஸ் நகரில் 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது.
தைஸ் நகரின் மேற்கே உள்ள அல்-வஜியா மாவட்டத்தில், 24 மணி நேரத்திற்குள் 30 ஹூத்தி போராளிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் யேமன் ராணுவம் கூறியுள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள ஹூத்தி வாகனங்கள் மற்றும் அவர்கள் கூடும் இடங்கள் மீது யேமன் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக, ஒரு ராணுவ
வட்டாரம் கூறியதாக ஆயுதப் படைகளின் ஊடக மையம் மேற்கோள் காட்டியுள்ளது.







