மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச
Posted in இலங்கை செய்திகள்

மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச

மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச

சட்டவாக்கத்துறையில் சட்டவாக்கம் மிக மேலான அறிவார்ந்த முறையில் நடக்க வேண்டும் என்றாலும், நிகழ்நிலை காப்பு தொடர்பான சட்டமூலத்தில் இவ்வாறு எதும் நடக்கவில்லை.

தனிப்பட்ட ரீதியிலான தனிநபர்களின் பெயர்களுக்கு கலங்கம் விளைவித்தல், தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல் என்பவற்றிற்காக அமைச்சர்களால் இந்த சட்டமூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக 220 இலட்சம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

220 இலட்சம் மக்களின் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரின் தனிப்பட்ட அபிலாஷைகளை அடையும் நோக்கில் சட்டம் இயற்றப்பட்டால்,

இந்நாட்டில் பாராளுமன்றத்தின் தரம் தொடர்பான பிரச்சினை ஏற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொள்ள வேண்டும் சஜித் பிரேமதாச

பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவும் இந்தச் சட்டமூலத்தில் தனது கடமையை சரியாக நிறைவேற்றவில்லை.

நவீன ஊடக பாரம்பரியத்தை உருவாக்குவதை விடுத்து இளைஞர்களின் உரிமைகளை பறிக்கும் பாரம்பரியத்தை கையாண்டு,இவ்வாறான சட்டங்களை நிறைவேற்றி, ஊடக கலாசாரத்தை குழி தோன்டி புதைத்து, நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானத்தை நிறைவேற்றிய குழுவாகவே இந்த துறைசார் மேற்பார்வை குழுவை கூறலாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ள இந்த வருடத்தில் நாட்டு மக்களின் பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையை அழிக்கும் நோக்கிலயே இந்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சமூக ஊடகங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் 03 தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை,நீதித்துறை ஆகிய 3 தூண்களோடு புதிய தூணாக நவீன உலகில் கருதப்படும் ஊடகங்கள் இந்த நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரம் என்பன கட்டுப்படுத்தப்படும்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தூண்களான சட்டமன்றம்,நிறைவேற்றுத்துறை,நீதித்துறை போன்றவற்றில் உள்ள தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டும் திறன் ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் இருந்தாலும், அதுவும் இந்தச் சட்டத்தின் மூலம்

மட்டுப்படுத்தப்படும்.எனவே ஊடக சுதந்திரம் மற்றும் சமூக ஊடக சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

வீடியோ

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி

வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி

இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரன்ன – ஹூங்கம நோக்கி பயணித்த வேன் ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் திஸ்ஸ – மாத்தறை வீதி பகுதியில் நேற்று (24) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 12 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட 7 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 75 வயதுடைய மேகத்தன்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி

விபத்தில் லொறி சாரதியும் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணமுர, களுபொத்தெனிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடதுபுறம் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

64 வயதுடைய யத்தெஹிகந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – கொக்கவில வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியை முந்திச் செல்ல முற்பட்டதில் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பல்லேகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A26 பிரதான வீதியில் அபித விளையாட்டரங்கிற்கு அருகில், திகனவில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று பாதசாரி பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய 69 வயதுடைய பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வீடியோ

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
Posted in இலங்கை செய்திகள்

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வீடியோ

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு 14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு ,14 மாவட்டங்களில் ஆபத்தான பகுதிகளின் வரைபட வரைவியல் ஒரு பதினைந்து நாட்களுக்குள் தொடங்கும் …
ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது முன்னாள் …
இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை அளிக்கிறது தித்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா …
வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி

வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி

வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி ,வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது …
தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் ,தெஹிவளையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்பு ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு …
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி ,தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள …
ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததற்காக, மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக சீல் வைக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு பெப்ரவரி 08 ஆம் திகதி வரை சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 22ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ரயிலின் சிற்றுண்டிச்சாலையை ஆய்வு செய்திருந்தனர்.

ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

இதன்போது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த உணவகம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டும், மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததாக மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்

ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்

ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .இந்த் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து சென்று தாக்கியுள்ளது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் ,அடிமேல் அடிவாங்கி நொந்து இருக்கும் இஸ்ரேலுக்கு மேலும் இடியை இறக்கிய வண்ணம் உள்ளது ஹமாஸ் ,ஹசிபுள்ள போராளிகள் அமைப்பு .

ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலின்ல இஸ்ரேல் ஆக்கிரமிப்பு, குடியேற்ற பகுதிகள் மற்றும் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் என்பன கடுமையாக பாதிக்க பட்டுள்ளன.

வீடியோ

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்

சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்

சிரியாவை விட்டு ஓட தயாராகும் அமெரிக்கா இராணுவம் ,
அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் குழுக்கள் தாக்குதல் அதிகரிப்பால் ,
இந்த முடிவிற்கு வெள்ளைமாளிகை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் களம் குதித்த நிலையில் ,தற்போது சிரியாவில் உள்ள அமெரிக்கா அஃறிணைவ தளங்கள் நாள்தோறும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

இதனால் வேறு வழியின்றி அமெரிக்கா படைகள் அங்கிருந்து அவமானத்துடன் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .

பொல்லை கொடுத்து அடிவாங்கிய நிலையில் அமெரிக்கா இராணுவம் தற்போது ஈரான் பொறியில் சிக்கி திணறி வருகிறது .

வீடியோ

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது


இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை வழக்கு தீர்ப்பு நாளை வருகிறது.

அலறும் இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியவர்கள் ,
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு நீதியின் பக்கமா ..?நீதி நிலைநாட்ட படுமா ..?
நாளை முடிவு .

வீடியோ

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு 14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு ,14 மாவட்டங்களில் ஆபத்தான பகுதிகளின் வரைபட வரைவியல் ஒரு பதினைந்து நாட்களுக்குள் தொடங்கும் …
ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது முன்னாள் …
இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை அளிக்கிறது தித்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா …
வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி

வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி

வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி ,வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது …
தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் ,தெஹிவளையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்பு ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு …
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி ,தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள …
செங்கடலில் ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்|சொல்லி அடிக்கும் ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்|சொல்லி அடிக்கும் ஹவுதி


செங்கடலில் ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்|சொல்லி அடிக்கும் ஹவுதி

செங்கடலில் ஹவுதிகள் சரக்கு கப்பல் மீது தாக்குதல்,
சொல்லி அடிக்கும் ஹவுதி தாக்குதலினால்
செங்கடல் கப்பல் போக்குவரத்து முடக்கம்

வீடியோ

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்

கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகி 8 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து சிக்கிய பேரூந்து சேதம் ,

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதியுள்ளது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்

காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வீடியோ

இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கை பாராளுமன்றுக்குள் பதற்றம் செங்கோலுக்கு கடும் பாதுகாப்பு பாராளுமன்றத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சபைக்கு நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

எதிர்கட்சியினால் இதுவரையிலும் கொண்டுவரப்பட்ட இரண்டு திருத்தங்களையும் ஏற்க ஆளும் கட்சி மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஒழுங்குப் பிர​ச்சினை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கவனத்தில் கொள்ளாது திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

இது சட்டவிரோதமானது என்றும் எதிர்க்கட்சியின் குற்றஞ்சாட்டினர். அத்துடன் சபைக்குள் நடுவை இறங்கிவிட்டனர்.

ஆளும் கட்சியினரும் சபையின் ஓரத்திலுள்ள ஆசனங்களுக்கு முன்பாக குவிந்து நிற்கின்றனர்.

இதனால் இருதரப்பினரும் காரசாரமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், படைகல சேவிதர்கள் மற்றும் உதவியாளர்கள் செங்கோலுக்கு அருகில் நின்று, செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்


இஸ்ரேல் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம் கீரோவான ஹமாஸ்

இஸ்ரேல் இராணுவத்தின் அரை பட்டாலியன் படைகள் ஒரே நாளில் முடக்கம்,
இஸ்ரேல் படைகளிற்கு ஹமாஸ் வைத்த பொறி மக்கள்
மத்தியில் கீரோவான ஹமாஸ் .

காணொளியில் முழுமையான விபரம்

video

2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்


2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்

2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் ,இதற்குள்
நுழைந்தால் தாக்குவோம் என ஈரான் அறிவிப்பு .ஈரான் இந்த எச்சரிக்கை செங்கடல்கடலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இந்த அபாய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றம்

மரக்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றம்

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வருகிறது.

அதேநேரத்தில் கரட்டுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்லப்பட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

அந்த வகையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் நுவரெலியா கரட்டுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்று (24.01.2023) காலை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் மரக்கறிகளுக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் கரட கிலோ கிராம் ஒன்றின் மொத்த விற்பணை விலை 1250/=ரூபா என அறிவித்துள்ளது.

அதேபோல கோவா 470 ரூபாய்,
லீக்ஸ் 480 ரூபாய்,
ராபு 170 ரூபாய்,
இலை பீட்ரூட் 420 ரூபாய்,
இலை இல்லா பீட்ரூட் 520 ரூபாய்
கறி உருளை கிழங்கு 320 ரூபாய்
நோக்கோல் 340 ரூபாய் எனவும் மோத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை
Posted in இலங்கை செய்திகள்

7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை

7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு

14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு 14 மாவட்டம் ஆபத்தான பகுதியாக அறிவிப்பு ,14 மாவட்டங்களில் ஆபத்தான பகுதிகளின் வரைபட வரைவியல் ஒரு பதினைந்து நாட்களுக்குள் தொடங்கும் …
ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது முன்னாள் …
இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை அளிக்கிறது தித்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரண முயற்சிகளை ஆதரிக்க அமெரிக்கா …
வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி

வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி

வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலி ,வெள்ளம் புயலில் சிக்கி இதுவரை 611பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது …
தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் ,தெஹிவளையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்பு ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு …
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11பேர் பலி ,தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள …
சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்

வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்

வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (23) பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது:

“அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தேன். பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்., அப்போது எனது மகள் முற்றத்தில் இருந்தார்.

வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்

திடீரென மகள் இருக்கும் இடத்திற்கு வந்த நான்கு குரங்குகள் அவரின் மீது பாய்ந்தன. மகள் ஓட முற்பட்ட போது அங்கு விழுந்து விட்டார். அப்போது அவர் காலின் தொடை பகுதியை குரங்குகள் கடித்தன.

பின்னர் மகன்தான் குரங்குகளை விரட்டியடித்தார். சம்பவத்தின் பின்னர் மகளை உடனடியாக மாவனெல்லை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். குரங்குகளுக்கு இரத்த ருசி பட்டால் குழந்தைகள் போன்று பெரியவர்களையும் குரங்குகள் கடிக்கக்கூடும் என்று வைத்தியர் தெரிவித்தார்.”

தற்போது குரங்குகள் அதிகமாக பெருகியுள்ள கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் குரங்குகள் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் எத்தனை முறை தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் குரங்குகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக மாவட்ட செயலகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு
Posted in இலங்கை செய்திகள்

புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு

புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு

எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23) நீதவான் உத்தரவு விட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில் த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள்

கொண்ட குழுவினர் திங்கட்கிழமை (22) இரவு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணிக்க இருந்த பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலை சோதனையிட்ட போது அங்கு

பாதுகாப்பற்ற முறையில் உணவு வியாபாரம் செய்தமை மற்றும் சிற்றுண்டிச்சாலையில் துப்பரவு இல்லாமை போன்றவற்றை கண்டறிந்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான்

நீதிமன்றில் நேற்று (23) வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதவான் குறித்த புகையிரத வண்டி சிறுண்டிச்சாலையை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்களுக்கு மூடுமாறு கட்டளை பிறப்பித்தார்.

விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்
Posted in இலங்கை செய்திகள்

விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்

விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்

விஸ்வ புத்தர்” என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட துறவியை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை வழங்கினார்.

சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்

சந்தேக நபரான துறவி கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்

5 500 ஆசிரியர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

5 500 ஆசிரியர் நியமனம்

5 500 ஆசிரியர் நியமனம்
தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கு இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 9 மாதங்களாக விசாரணைக்கு உட்படுத்தி நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், அந்த நபர்கள் தற்போது பாடசாலைகளில் இருப்பதால், 40,000 ஆசிரியர் வெற்றிடங்களில் இருந்து அவர்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், அனைத்து மாகாண சபைகளும் 13,500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள போதும், இது தொடர்பில் நிலவும் நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக அது தாமதமாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இன்றைய தினத்திற்குள் அது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கக்கூடும் என தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு


இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு

இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் எனஇரான் மத தலைவர் அழைப்பு விடுத்துள்ளார் .

இஸ்ரேல் 25.000 மக்களை கொன்று விட்டது அதற்கு தகுந்த தண்டனையை வேண்டும் என ஈரான் வேண்டுதல் .

இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் தண்டனை வழங்குவதன் ஊடாகவே எமது நாடுகளின் பாதுகாப்பை உறுதி படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்

வீடியோ

ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு

ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு

ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து ,
வான்வழி ஊடாக தாக்குதல் நடத்த பட்டதில், இவர்களது 25 ஏவுகணை தளங்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா கூட்டு படைகள் அறிவித்துள்ளன .

செய்மதி ஊடாக வானில் இருந்து தகவலை திரட்டிய அமெரிக்கா உளவுத்துறை ,
அடையாளம் காணப்பட்ட ஹவுதி முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது

ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு

இந்த தாக்குதல்கள் யாவும் துல்லியமாக இடம்பெற்றது எனவும்,
இதன் பொழுது ஹவுதி ஏவு தளங்கள் அழிக்க பட்டதால் ,
ஏவுகணை ஏவும் திறன் மாட்டு படுத்த பட்டுள்ளது அல்லது
முடக்க பட்டுள்ளது எகிறது அமெரிக்கா .

செங்கடல் வழியாக பயணித்த கப்பல்கள் மீது ஹவுதிகள் இடைவிடாத
தாக்குதலை நடத்தி ,அந்த கப்பல் வழி போக்குவரத்தை சீர்குலைத்து .


மிக பெரும் பொருளதார இழப்பை ஏற்படுத்திய ஏமன் ஹவுதி படைகள்,
மீதே தாக்குதல் நடத்தி அவர்களது இராணுவ தளங்கள் அழிக்க பட்டுள்ளது என்கிறது .

எமது நாட்டுக்குள் தாக்குதல் நடத்த பட்டால்,
அமெரிக்கா அதன் கூட்டு படைகள் மிக பெரும் இடரை சந்திக்க நேரிடும் என,
ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்த.

இவ்வாறான நிலையில் ,இந்த தாக்குதல் ஹவுதி நிலைகள் மீது இடம்பெற்றுள்ளது ,போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது

வீடியோ