வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள்
Posted in இலங்கை செய்திகள்

வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள்

வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள்

வருமான வரி செலுத்த இன்றே இறுதி நாள் ,2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) வருமான வரியை செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், அவர் சட்டத்தின்படி அபராதம் மற்றும் வட்டிக்கு உட்படுத்தப்படுவார் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு நபரும் எந்த வகையான செலுத்த வேண்டிய வரிகள் நிலுவையில் இருந்தால், அவை அனைத்தும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன் செலுத்தப்பட வேண்டும்.

அன்றைய திகதிக்குப் பிறகு நிலுவையில் உள்ள வரிகள் இருந்தால், அவற்றை மீட்பதற்கு உள்நாட்டு வருமானச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1944 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான மேலதிக
தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

லெபனான் மக்கள் இடப்பெயர்வு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனான் மக்கள் இடப்பெயர்வு

ஒருமில்லியன் லெபனான் மக்கள் இடப்பெயர்வு

லெபனான் மக்கள் இடப்பெயர்வு காரணமாக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .இசுரேல் இராணுவம் தொடர்ட்டாக தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் இடம்பெயர்ந்த்து செல்கின்றனர் .

லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் பரவலான தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .

அதனை அடுத்து தற்போது இவர்களின் பாதுகாப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ,மக்கள் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

இடைவிடாது இஸ்ரேல் தொடரும் மனித குலத்திற்கான படுகொலையை தடுக்க முடியாது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உணவின் விலைகள் திடீரென குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவின் விலைகள் திடீரென குறைப்பு

உணவின் விலைகள் திடீரென குறைப்பு

உணவின் விலைகள் திடீரென குறைப்பு ,நள்ளிரவு முதல் முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொத்து மற்றும் பிரைட் ரைஸ் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன் முட்டை ரோல்ஸ் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், முட்டை சப்பாடு 40 ரூபாவாலும், முட்டை ரொட்டி 30 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், முட்டையின் விலை வீழ்ச்சியின் அடிப்படையில் பேக்கரி பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 27 அல்லது 28 ரூபாவாக குறைந்துள்ளமையினால் தாங்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நேற்று (28) செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து புதிய ஜனாதிபதிக்கு ஆதரவாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் விவசாயிகளுக்கான உர மானியத்தை 25,000 ரூபாவாக அதிகரிப்பது அரசியல் வாக்குறுதியுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது என அனுராதபுரம் மாவட்ட மகா நீர்ப்பாசன கூட்டு விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என உருளைக்கிழங்கு விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

51 பேர் நிலக்கரிச் சுரங்கத்தில் பலி
Posted in உலக செய்திகள்

51 பேர் நிலக்கரிச் சுரங்கத்தில் பலி

51 பேர் நிலக்கரிச் சுரங்கத்தில் பலி

51 பேர் நிலக்கரிச் சுரங்கத்தில் பலி ,கிழக்கு ஈரானில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.

தெற்கு கொராசன் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 540 கிமீ (335 மைல்) தொலைவில் உள்ள தபாஸில் உள்ள சுரங்கத்தின் இரண்டு தொகுதிகளில் மீத்தேன் வாயு வெடித்ததால் இது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 21:00 மணிக்கு (17:30 GMT) வெடிப்பு நிகழ்ந்ததாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன.

வெடிவிபத்து நடந்தபோது அந்தத் தொகுதிகளில் 69 தொழிலாளர்கள் இருந்ததாக தெற்கு கொராசானின் ஆளுநர் ஜாவத் கெனாட்சாதே தெரிவித்தார்.

AP செய்தி நிறுவனம் கூறியது: “ஒரு வெடிப்பு ஏற்பட்டது, துரதிர்ஷ்டவசமாக 69 பேர் மதன்ஜூ சுரங்கத்தின் பி மற்றும் சி பிளாக்குகளில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

“சி தொகுதியில் 22 பேரும், பி பிளாக்கில் 47 பேரும் இருந்தனர்.”

இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் மற்றும் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அரசு ஊடகம் தற்போது 30 பேர் இறந்ததாக அதன் முந்தைய எண்ணிக்கையை திருத்தியுள்ளது.

“இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 51 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகவும் அதிகரித்துள்ளது” என்று அதிகாரப்பூர்வ IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்

கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான்

கடும் மிரட்டல் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ளது ,லெபனான் மீட்டான் இஸ்ரயேலின் தாக்குதலை அடுத்தே ஈரான் இந்த மிரட்டலை விடுத்துள்ளது .

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மத்திய கிழக்கில் அமைதி இன்மையை ஏற்படுத்தும் என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்துள்ளது .

ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் தலைவர் இஸ்மாயில் கானியா படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே மிரட்டலை ஈரான் விடுத்தது .

அதே போன்று தற்போது லெபனானில் முக்கிய தலைவர் படுகொலை செய்ய பட்டுள்ள பொழுதும் இதே விடயத்தை தெரிவித்துள்ளது .

இப்பொழுது மூன்றாவது பிரதான குறியாக ஈரான் மத தலைவர் காணப்படுகின்றார் .

இவரும் இஸ்ரேலின் தாக்குதல் எல்லைக்குள் வரவழைக்க பட்டுள்ளார் என்பதும் ,மிக விரைவில் இஸ்ரேல் இவரை நெருங்கி தாக்கும் என்பது ,இந்த தாக்குதல்கள் மூலம் நேரடி அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .

ஆதலால் தான் இஸ்ரேல் மத்திய கிழக்கில் மிகப்பெரும் போரை விரிவு படுத்த முனைகிறது என்கின்ற விடயத்தை ஈரான் தெரிவித்து வருகின்றதாக நோக்க முடிகிறது .

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள் ,லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் நீண்ட நெடிய போரினை அடுத்து அந்த களமுனையில் பாரிய தடுப்பு தாக்குதலை லெபனான் ஹிஸ்புல்லா நடத்தியது .

இஸ்ரேல் , இராணுவத்தினருக்கு மிக பெரும் நெருக்கடியையும் வலிமிகுந்த தாக்குதலையும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் நடத்தினர் .

அவ்வாறான கால பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகள் பங்கு ஹமாஸ் போராளிகளை காப்பாற்றும் ,இருப்பை தக்க வைத்து கொள்ளும் ஒன்றாக காணப்பட்டது .

அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ஹிஸ்புல் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் எங்கும் ரொக்கட் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல் போர்படைகள் தீவிர படுத்தியுள்ளனர் .

இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்திக்கும் , காலமாக ,களமாக இது அமைய பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு கணிசமான இழப்பு ஏற்படுள்ளத்தாக தெரிவிக்க படுகிறது .

ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி

ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி

ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி ,தலைவர் ஹிஸ்புல்ல இருப்பிடம் மீது தாக்குதல் ஒன்று இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தியதில் அவர் பலியானதாகா இஸ்ரேல் அறிவித்துள்ளது . .

லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா தங்கி இருந்த பாதுகாப்பு பதுங்கு குழியின் மீது இஸ்ரேலிய ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

எனினும் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவருக்கு சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பில் அந்த அமைப்பினர் எதுவும் தெரிவிக்கவில்லை .

இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வரும் பலமாதங்கள் நீடிக்கும் போரில் ,பலஸ்தீன மக்களிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ,

வடக்கு இஸ்ரேலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ முகாம்களை தாக்கிய வண்ணம் உள்ளனர் .

இதுவே இஸ்ரேலுக்கு மிக பெரும் இருக்கடியையும் ,அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

ஆதலால் தான் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி ,அந்த தலைமையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது ,மீளவும் ஒருமுறை இந்த தாக்குதல் மூலம் அம்பல பட்டுள்ளது .

இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேலுக்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் வழங்கும் என எதிர் பார்க்கலாம் .

வரும் மணித்தியாலங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ரொக்கட் ,வெடிகுண்டு விமானங்கள் இஸ்ரேல் முக்கிய பகுதிகளை தாக்க கூடும் என எதிர் பார்க்கலாம் .

100 மக்கள் நிலச்சரிவில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

100 மக்கள் நிலச்சரிவில் பலி

100 மக்கள் நிலச்சரிவில் பலி

100 மக்கள் நிலச்சரிவில் பலி யாகியுள்ளனர் என நேபாள செய்திகள் தெரிவிக்கின்ற்ன .

அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு ,நிலச்சரிவில் சிக்கிய அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர் .

இந்த நிலச்சரிவில் சிக்கி டசினுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் ,மேலும் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .

பாதிக்க பட்ட பகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் களமிறக்க பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காட்மாண்டு செய்திகள் தெரிவிக்கின்றன .

இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டு உணவுகள் ,வழங்க பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம்

குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம்

குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம் உள்ளதாக தற்போது வெளியாகும் சமகால அரசியல் நிகழ்வுகள் கட்டியமிடுகின்றன .

இலங்கையில் விடுதலை புலிகளை அழித்து அதன் ஊடக இலங்கையில் சிங்கள பேரினவாத ஆட்சியை நடத்தலாம் என ,

கற்பனை கட்டி வாழ்ந்த மகிந்தா ராஜபக்ச ஆட்சி கவிழ்க்க பட்டு ஆட்சி இழந்து தவிக்கும் ,மகிந்த குடும்பம் இப்பொழுது இலங்கையில் குண்டு வெடிப்பை நடத்த தயாராகி வருகிறது .

ஆளுகின்ற அனுரகுமார திசாநாயக்க ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக மாறி வருவதாலும் ,

லஞ்ச ஊழல் வாதிகளிற்கு எதிராக பாரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாலும் அதனை உடைத்து சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ,ஒற்றுமையை விதைத்து வரும் அனுரகுமார திசாநாயக்க ஆட்சியை ,திட்டமிட்டு கவிழ்க்கும் நடவடிக்கையில் மகிந்த ,கோட்டாபய தலைமையில் திட்டங்கள் தீட்ட படுகிறது எனப்படுகிறது .

ஆகவே பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மிக பெரும் குண்டு வெடிப்புகள் இலங்கையில் இடம்பெறும் என மக்கள் கலக்கம் உற்றுள்ளனர் .

அப்பாவி மக்கள் உயிர்களை பலியெடுத்து ,மக்கள் சொத்துக்களை சேதமாக்கி ,மக்கள் நடமாடும் வாழ்தலுக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் மகிந்த ஆயுத குழு அணிகள் களமிறக்க படுகின்றன .

இந்த நாசகார சக்தியின் பின்புலத்தில் இலங்கை இராணுவத்தின் முன்னால் அதிகாரிகள் உள்ளதாக பேச படுகிறது .

தப்புமா இலங்கை ,தடுக்க படுமா குண்டு வெடிப்புகள் ,பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .

இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி

இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி

இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி ஒன்று இடம்பெற உள்ளதாக புதிய இரகசிய தகவல் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஸ்ரீலங்காவை ஆளும் புதிய அரசாட்சியை கவிழ்த்து ,அவர்களது ஆட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் ,இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தி ,

அதனை இனக் கலவரமாக மாற்றும் நடவடிக்கையில் கடந்த கால ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது .

சமூக ஊடகங்கள் ஊடாக கலந்தாய்வில் ஈடுபட்ட விடயமே இப்பொழுது வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகரிகள் ,ஆயுத குழுக்கள் என்பன கூடி இருந்து பேசப்பட்ட விடயமே தற்போது வெளியாகியுள்ள நிலையில் ,இலங்கையில் மிக பெரும் கலவரம் ஒன்றை நடத்தவும் ,குண்டு வெடிப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

இந்த தாக்குதலை மேற்கொள்ள முன்னால் புலிகள் போராளிகளை விலை பேசி வருவதாகவும் ,அவர்களை கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு ,

அதனை ஆளுகின்ற அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் இந்த நகர்வு மேற்கொள்ள படுவதாக தெரிவிக்க படுகிறது .

எனவே பாரளுமன்ற தேர்தல் இடம்பெறும் கால பகுதியில் இலங்கையில் பெரும் குண்டு வெடிப்புக்கள் ,மற்றும் படுகொலைகள் ,

அரசியல் படுகொலைகள் என்பனவற்றை நடத்த மகிந்தா குழு திட்டம் தீட்டிவருவதாக கசிவுகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .

இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டு வெடிப்பு போன்று இந்த விடயமும் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

எனவே இவ்வேளை ஆளும் அனுரகுமார திசாநாயக்க ஆட்சிபீடம் மிக எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும் என மக்கள் மன்றம் வேண்டுதல் விடுத்துள்ளது .

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு பதிவாகியுள்ளது .

வவுனியா மாரம்பைக்குளம் அரசடி நகர் பகுதியில் நாய்கள் காப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த, வாள்வெட்டு தெரு ரவுடி கும்பல் ,திடீர் கோடாரி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .

நாய்கள் காப்பகத்தின் நுழைவயில் கதவு கோடரியால் கொத்தி சேதமாக்க பட்டுள்ளதுடன் ,அவ்வேளை அங்கிருந்த நாய்கள் பராமரிப்பு கால்நடை மருத்துவர் மீதும் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதில் மருத்துவருக்கு இரண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .

நோர்வேயில் இருந்து சென்று நாய்கள் காப்பக்கத்தை நடத்தி வரும் நோர்வே ராசி என்பவரின் நாய்கள் காப்பகம் மீதே இந்த வாள்வெட்டு குழுவின் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குறித்த நுழை வாயில் கதவு ஒன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்க பட்டிருந்தது .

அவ்வாறான விலை உயர்ந்த பாதுகாப்பு கதவே தற்போது இந்த கூலி குழு ஊடாக வெட்டி சேத படுத்த பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நோர்வே ராசி அவர்கள் கண்ணீரோடு கதறி விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட உறவுகளில் முக்கியமானவர்கள் உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் .

குறித்த நாய் காப்பகத்தை முடக்கும் நடவடிக்கையில் ,வெள்ளை வேட்டி அரசியல் கட்சி பெருச்சாளி ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் ,

அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் புதிய நேர்மையான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் ,இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த சம்பவம் இடம்பெற்ற பொழுது ,ஆளுகின்ற அனுரகுமார திசநாயக்கவின் கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு நேரடியாக சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர் .

மக்கள் அரசாக விளங்கும் அனுரகுமார திசாநாயக்க கட்சியினர் மக்கள் நலன் அக்கறையுடன் செயல்பட்ட விடயம், எம்மை வியப்பில் உறைய வைத்ததுடன் ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Akd கட்சி உறுபினர்கள் சம்பவம் இடம்பெற்ற நாய்கள் காப்பகம் சென்று பார்வையிட்டு ,உரிய நடவடிக்கையை மேலதிகமாக மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .

கடந்தஆட்சி காலத்தில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படும் இவ்வாறான சமூக விரோதிகள் உள்ளவரை ,நாடும் மக்களும் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற கேள்வியை ,இந்த சம்பவம் எடுத்து காட்டியுள்ளது .

எனவே இன்றைய ஆளும் அரசு, மக்களை மிரட்டும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி,

சம்பந்த பட்ட நபர்களையும் ,அவர்களின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கட்சிக்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்பு கோரிக்கை விடுகின்றோம் .

Akd கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள விட்டால் அதுவே அனுரகுமார திஸாநாயக்கவின் நல் ஆட்சிக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் .

ஆகவே Akd கட்சியினர் விழிப்புடன் செயல் படவேண்டிய காலமாக இது காணப்படுகிறது.

வீடு உடைப்பு உரும்பிராயில் வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

வீடு உடைப்பு உரும்பிராயில் வாள்வெட்டு

உரும்பிராயில் வாள்வெட்டு வீடு உடைப்பு

வீடு உடைப்பு உரும்பிராயில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறை போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்குள் மர்ம வாள்வெட்டு கும்பல் ஒன்று நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது .

வீட்டுக்குள் நுழைந்த மர்ம ரவுடி கும்பல் வீட்டின் கதவை உடைத்து நுழைந்து அதனை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்த வெளிநாட்டு ஏவல் கூலி வாள்வெட்டு குழுவே தாக்குதலை நடத்திய பொழுது ,வீட்டார் அபய குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்துள்ளனர் .

அயலவர்கள் வருவதை கண்ணுற்ற தெரு ரவுடி வாள்வெட்டு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது .

இவர்கள் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி அயல் வீட்டுக்குள் எறிந்து விட்டு , குறித்த கும்பல் தப்பி ஓடியுள்ளதாக பாதிக்க பட்ட தரப்பில் நமக்கு தெரிவிக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வருகை தந்து பங்கேற்ற இளம் பெண் ஒருவர் தமது பெற்றவர்கள் வீட்டுக்குள் ரவுடிகள் தாக்குதல் நடத்துவதாக நேரலையில் தெரிவித்துள்ளார் .

அதனை அடுத்து சம்பவம் இடம்பெற்ற வேளை கோப்பாய் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலன் விரும்பிகள் விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டக் நேரலையில் கலந்து கொண்ட பெண் உறவுகளை மிரட்டும் நடவவடிக்கையில் மேற்படி கூலிக்குழு ஈடுபட்டுள்ளதாக நம்ப படுகிறது .

திட்டமிடப்பட்டு வெளிநாட்டில் உள்ளவர்கள் ஊடக வழங்க பட்ட கட்டளையை அடுத்து இந்த கூலி வாள்வெட்டு குழு வீடு புகுந்து தாக்குதலை நடத்தியாக சந்தேகிக்க படுகிறது .

போலீசார் மேற்படி விடயத்தை விசாரணை நடத்தினால் விடயம் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதிவேற்றதை அடுத்து ஒருவரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு குழு தாக்குதலாக இது பார்க்க முடிகிறது .

எனவே ஆளுகின்ற அனுரா குமரதிசாநாயக்க ஆட்சி பீடம் இதனை கவனத்தில் எடுத்து விசாரணைகளை நடத்தி சம்பந்த பட்டவர்களை கைது செய்யுது ,சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும் என மக்கள் மன்றாடி கேட்டுக்கொள்கின்றனர் .

மேற்படி விடயம் குறித்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

மீனவர்கள் 17பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் 17பேர் கைது

மீனவர்கள் 17பேர் கைது

மீனவர்கள் 17பேர் கைது ,தமிழக மீனவர்கள் 17பேர் இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் 17 பேரே தம்மால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இலங்கை நெடுந்தீவு கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் இவ்விதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பார படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக குறிப்பிட பட்டுள்ளது .

புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

டிரம்பின் மின்னஞ்சல்களை ஹேக் செய்த ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

டிரம்பின் மின்னஞ்சல்களை ஹேக் செய்த ஈரான்

டிரம்பின் மின்னஞ்சல்களை ஹேக் செய்த ஈரான்

டிரம்பின் மின்னஞ்சல்களை ஹேக் செய்த ஈரான் ,முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்தின் மின்னஞ்சல்களை ஹேக் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஈரானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை நீதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பேர் — மசூத் ஜலிலி, செய்யத் அலி அகாமிரி மற்றும் யாசர் பாலாகி — டிரம்ப் பிரச்சாரத்துடன் தொடர்புடைய தனிநபர்களின் கணக்குகளை குறிவைத்து, ஹேக் செய்யப்பட்ட

தகவல்களை பிடன் பிரச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று அவர்கள் நம்பியவர்களுக்கு அனுப்ப முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , அவர்களில் யாரும் அவுட்ரீச் முயற்சிகளுக்கு பதிலளிக்கவில்லை.

கம்ப்யூட்டர் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் உதவி செய்தல், அடையாள திருட்டு மற்றும் உதவி செய்தல் போன்ற தொடர் குற்றங்களில் ஆண்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மூன்று பேரும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையினால் பணியமர்த்தப்பட்டவர்கள் என்றும், தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், உறுப்பினர்களை உள்ளடக்கிய இலக்குகளை சமரசம் செய்ய

ஸ்பியர்-ஃபிஷிங் மற்றும் பிற டிஜிட்டல் ஹேக்கிங் நுட்பங்களைப் பயன்படுத்திய “பரந்த அளவிலான ஹேக்கிங் பிரச்சாரத்தில்” ஈடுபட்டதாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் “அமெரிக்க அரசியல் பிரச்சாரங்களுடன் தொடர்புடைய நபர்கள்.”

“இத்தகைய நடவடிக்கை ஈரானின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் காசிம் சுலைமானியின் மரணம்” என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.

தாக்க மறுக்கும் ஜெலென்ஸ்கி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தாக்க மறுக்கும் ஜெலென்ஸ்கி

தாக்க மறுக்கும் ஜெலென்ஸ்கி


தாக்க மறுக்கும் ஜெலென்ஸ்கி ,ரஷ்யாவிற்குள் ஆழமாக தாக்குவதற்கு ஜெலென்ஸ்கி அனுமதி பெறவில்லை,ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதலுக்கு மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கும் முடிவை அமெரிக்கா எடுக்கவில்லை என்பதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.

உக்ரேனிய ஜனாதிபதி டெலிகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அது அமெரிக்க பயணத்தின் போது தனது “வெற்றி திட்டத்தை” அமெரிக்காவிற்கு வழங்கியதாகக் கூறுகிறார்.

“ஒவ்வொரு அடியையும், ஒவ்வொரு முடிவையும் எடுக்க நாங்கள் இப்போது எங்கள் குழுக்களுக்கு பணித்துள்ளோம்,” என்று அவர் வீடியோவில் கூறினார், TASS தெரிவித்துள்ளது.

“உக்ரைனுக்கு முக்கியமான அனைத்தும், பங்குதாரர்கள் இப்போது தங்கள் மேஜையில் உள்ளனர். எல்லாம் பரிசீலிக்கப்படுகிறது:

நீண்ட தூரம், ஒரு பாதுகாப்பு தொகுப்பு, ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள், ரஷ்ய சொத்துக்கள் பற்றிய நடவடிக்கைகள்.”

முன்னதாக, பொலிட்டிகோ, ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்கா இன்னும் மேற்கத்திய ஆயுதங்கள் மூலம் ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதல்களை அனுமதிக்கும் சாத்தியக்கூறு பற்றி விவாதித்து வருவதாகவும்,

பென்டகன் இந்த நடவடிக்கை கியேவுக்கு மூலோபாய பலனைத் தராது என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் கூட. அத்தகைய

வேலைநிறுத்தங்களுக்கு ஒப்புதல் இல்லாமல் ஜெலென்ஸ்கி அமெரிக்காவிலிருந்து திரும்புவார் என்று டைம்ஸ் பரிந்துரைத்தது.

எரிகிறது விமானப் படை தளம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எரிகிறது விமானப் படை தளம்

எரிகிறது விமானப் படை தளம்


எரிகிறது விமானப் படை தளம் ஹிஸ்புல்லா இஸ்ரேலிய ரமாத் டேவிட் விமானப்படை தளத்தை ஏவுகணை மூலம் தாக்கியது.


லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லா இஸ்ரேலிய ஆட்சியின் ரமட் டேவிட் விமானப்படை தளத்தை சனிக்கிழமை தாக்கியதாக அறிவித்தது.

சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட லெபனானின் ஹிஸ்புல்லா, ஆக்கிரமிக்கப்பட்ட

பாலஸ்தீனத்தின் வடக்கே அமைந்துள்ள ஹைஃபா நகருக்கு அருகிலுள்ள ராமத் டேவிட் தளத்தையும் விமான நிலையத்தையும் குறிவைத்ததாக அறிவித்தது.

Fadi 3 ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலிய தளத்தை குறிவைத்ததாக Lebanese Islamic Resistance அறிவித்தது.

தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், காஸாவில் எதிர்ப்பாகவும் இந்த பதிலடி தாக்குதல்கள் நடந்ததாக ஹிஸ்புல்லா வலியுறுத்தியுள்ளது .

கமாஸ் தளபதி படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கமாஸ் தளபதி படுகொலை

இஸ்ரேல் தாக்குதலில் தளபதி படுகொலை

கமாஸ் தளபதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை மொஸாட் திடீரென அறிவித்துள்ளது.

சிரியாவின் ரகசிய முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்த கமாஸ் தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலுடைய உளவு விமானங்கள் தாக்குதலை நடத்தின.

இந்த ஆளில்லாத உளவு விமானங்கள் நடத்திய திடீர்தாக்குதலில் அந்த முகாம் பற்றி எரிந்து சேதமானது .

இதன் பொழுது அங்கு தரித்திருந்த கமாஸ் முக்கிய தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்திரேலிய ராணுவம் நடத்திய இந்த திடீர் தாக்குதல் தொடர்பாக சிரியாவின் ராணுவ வட்டாரங்கள் ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளதுடன், தமது ராணுவ தரப்பில் ஐந்து பேர் பலியாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ராணுவ முகாமில் இருந்த ஆயுத தளவாடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து வெடித்து சிதறிய காட்சிகள் காணப்படுகின்றன.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த மக்கள் தளபதி யார் என்பது தொடர்பாக இதுவரை உறுதியாக தெரிய வரவில்லை.

இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற இந்த இடைவிடாத யுத்தம் காரணமாக அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் பலியாகி பல ஆயிரக்கணக்கில் காயமடைந்துள்ளனர் .

ஆனால் இடைவிடாது இஸ்ரேல் தனது இன அழிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்

அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்

 அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள் ,அர்ச்சனாவை கண்டு அலறும் அரசியல்வாதிகள் செயல்கள் தற்பொழுது பர பரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கின்றது .

 வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பாக வெளிக்கொண்டு வந்த வீரமகன் அர்ச்சுனா இராமநாதன், அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அலறி வருகின்ற தகவல்கள் உறுதிப்பட தெரிய வருகிறது.

 மக்கள் இயக்க முன்னணி என்கின்ற காட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற களம் குதித்துள்ள மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது ,காழ்ப்புணர்ச்சி

கொண்டுள்ள அரசியல்வாதிகள் தமது வெள்ளை வேட்டிகள் வேலியில் காயு நிலை ஏற்பட்டுள்ளதாக கதறுகின்ற நிலவரம் தற்பொழுது தெரிய வருகிறது.

 தமிழ் தேசியம் தமிழ் தேச விடுதலை அரசியல் என பொது வழியில் பேசி வந்த வெள்ளை வேட்டிகள் தமிழ் மக்களை மறந்து பெட்டிகளை வாங்கி சுகபோகமாக வாழ்ந்து வந்த வாழ்க்கை இப்பொழுது ,காணாமல் போகின்ற கட்டத்தில் காலடி எடுத்து வைக்கின்றன.

  தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அனுராவை சிறையில் அடைத்து அதன் ஊடாக அவரது வாய்களுக்கு கட்டு போட்டு தாங்கள் தப்பலாம் என்ற எட்டப்ப விளையாட்டை ஆட முனைந்த அரசியல் வெள்ளை போட்டிகள் தற்போது கதி கலங்கி இருக்கின்றனர்.

 அனுரா குமர திச நாயக்கா உடன் அர்ச்சனா ஆதரவு கட்சி செயல்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்ற நிலையில் ,சற்று எதிர்பாராத இந்த வெள்ளைவேட்டிகள் தற்பொழுது அலற ஆரம்பித்திருக்கின்றன.

 வரும் நாட்களில் மிகப்பெரும் அதிரடி ஆட்டத்தை வடக்கு பகுதியில் கட்டவிழ்த்து விட அனுரா குமர திசநாயக்கா உடைய ஆட்சி கூட்டம் தயாராகி வருகின்ற நிலையில், வெள்ளை வேட்டிகள் தற்பொழுது அர்ச்சனாவை கண்டு அலற ஆரம்பித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிள்ளையார் கைது விரைவில் நடக்கும்
Posted in இலங்கை செய்திகள்

விரைவில் பிள்ளையான் கைது

விரைவில் பிள்ளையான் கைது

 விரைவில் பிள்ளையான் கைதுபிள்ளையான் கைது விரைவில் நடக்கும் என உள்ளக ஆளும் ஆட்சி வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றன.

 விடுதலை புலிகள் அமைப்பு உடைத்து நாசமாக்கப்பட்டு ,அந்தப் போராளிகள் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து, அந்த மக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக செயல்பட்டு, உடைவை ஏற்படுத்திய பிள்ளையான் கைது செய்த படப் போகிறார் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

 எதிர்வரும் சில தினங்களில் இந்த படுகொலைகளை புரிந்த பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட யோசப் பராயசிங்கம் உள்ளிட்டவர்கள் படுகொலை குற்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிள்ளையான் தற்பொழுது கைது செய்யப்பட உள்ளார் என்கின்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 கிழக்கு மாகாணத்தின் முதல்வராக பணியாற்றிய பிள்ளையார் தமிழ் மக்களின் தேச விரோதியாக இன்றுவரை பார்க்கப்பட்டு வருகிறார் ,என மக்கள் மன்றங்களின் பேசு பொருளாக காணப்படுகின்றது.

 இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரகுமார திசை நாயக்காவின் ஆட்சியில் ,இவர் கைது செய்யப்படுவார் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் ,அனுரா குமராவுக்கு அதன் ஊடான ஆதரவு பெருகி வருகிறது.

 தற்போது தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களினால் கொண்டாடப்படுகின்ற ஒருவராக இன்றைய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க காணப்படுகின்றார்.

மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு

மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை

 மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை ,மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு வைக்கின்ற நடவடிக்கையில் ஆளுகின்ற ஜனாதிபதிசநாயக்காவின் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 எதிர்வரும் மூன்று நாட்களில் இந்த மருத்துவ பாபியாக்கள் மீதான லஞ்ச ஊழல் மோசடி படுகொலைகள் மக்கள் துன்புறுத்தல்கள் போன்ற நடவடிக்கை விசாரணைக்கு உள்ளாக்கப்படுபவர் என அந்த வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவித்திருக்கின்றன.

 யாழ்ப்பாணம் ,வவுனியா ,மன்னார் ,சாவ,கச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் மிகப் பெரும் மோசடிகளை நடத்தி வந்தனர்.

 அதனை அடுத்து அந்த மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.

ஆனால் கடந்த ரணில் ஆட்சியில் அந்த மாபியாக்களுக்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது.

 அதனை அடுத்து தற்பொழுது ஆளுகின்ற இலங்கை ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அனுரா குமர திசநாயக்கா ,மக்களுடைய ஜனாதிபதி என்பதை காண்பிக்கும் நடவடிக்கையில் இந்த மாபியாக்களுக்கு எதிரான அதிரடி வேட்டையை ஆரம்பித்திருக்கின்றார்.

 அதனை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு உள்ளாக வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாணம், சாவகச்சேரி ,மன்னார் , வவுனியா, போன்ற மருத்துவமனைகளில் இடம்பெற்ற மருத்துவ தவறு மோசடி மக்கள் பணிகள் போன்ற விடயங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என உறுதி பட தெரிவிக்கப்படுகிறது.

 இந்த விடயங்கள் மிக முக்கியமான ராஜதந்திரிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது .

புலம்பெயர் தேசங்களில் உள்ள மிக முக்கியமான மருத்துவர்கள் இந்த நடவடிக்கை மிக தீவிரப்படுத்தி உள்ளதை அடுத்து ,அவர்களுக்கு அந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதனை அடுத்து வரும் நாட்களில் வடக்கு பகுதி அதிர போகிறது.

மக்கள் அனுராவை கொண்டாடப் போகிறார்கள் என்பது இந்த செய்தி ஊடாக தெரிய வருகின்றது.