Tag: அரசியல்வாதிகள்
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ரணில் சந்திப்பு
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ரணில் சந்திப்பு
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ரணில் சந்திப்பு ,எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூட்டுப் படையை உருவாக்குவது குறித்து ரணிலைச் சந்தித்தனர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய கூட்டு வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.
நாட்டில் பல கட்சி அமைப்பைக் காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற மகாநாயக்கரின் ஆலோசனையைப் பின்பற்றி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை நாங்கள் ஏற்கனவே சந்தித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.
இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள்
இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள்
இந்தியாவுடன் பேச்சு இளம்அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம் அரசியல்வாதிகள் குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்துள்ளது.
இரண்டு வார நிகழ்ச்சிக்காக இந்தக் குழு இந்தியாவிற்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியின் தாக்கம் மற்றும் புதிய பிராந்திய கூட்டாண்மையை உருவாக்குவதில் இந்தியா எவ்வாறு வழிநடத்த முடியும் என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
அத்துடன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் குழு பாராட்டியது.
இதற்கிடையில், எதிர்கால பங்காளிகளாக இந்திய-இலங்கை கூட்டாண்மையில் தங்களுக்கு மதிப்புமிக்க பங்கு உண்டு என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்
கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்
கைதுகளுக்கு பயந்து அரசியல்வாதிகள் பலர் பெளத்த விகாரைகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சமீபத்திய நாட்களில் பல,
விகாரைகள் மற்றும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம கோயிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு உயர் அரசு அதிகாரி, சிறப்பு பாதுகாப்புடன் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதி தேரரை சந்தித்து, அப்பகுதியின் முன்னணி துறவிகளைச் சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறது.
இதேபோல், இந்தியாவுக்குச் சென்ற முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஒரு கோவிலில் பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.
பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசு அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு, மதுபான சாலைகள் அமைப்பதற்காக லஞ்சம் பெற்ற இரு எம்பிக்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என சுமந்திரன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்
பாராளுமன்ற தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மதுபான சாலைகள் அமைப்பதற்கு ஆளும் அரசுகளினால் சில எம்பிக்களுக்கு லஞ்சமாக இந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டு வந்த நிலையில்,
தற்பொழுது சுமந்திரன் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் .
லஞ்சம் பெற்ற எம்பிக்கள் யார் என்பதை அவர்களது பெயர் விபரங்களை அவர் குறிப்பிட விரும்பவில்லை .
மதுபான சாலைகள் அமைப்பதற்காக கடந்த கால அரசாங்கத்தினால் 361 அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாமர்த்தினார் .
ஐயா ஸ்ரீதரன் அவர்களே பார் வைத்திருப்பதாக அர்ச்சனா இராமநாதன் போன்றவர்கள் குற்றம் சுமத்தி வருகின்ற பின்புலத்தில், தற்பொழுது சுமந்திரன் ஈடுபட்டாரா என்கின்ற சந்தேகத்தை இவரது இந்த பேச்சு ஏற்படுத்தி இருக்கிறது .
சுமந்திரனுடைய கதை திரைக்கதை வசனத்திலேயே அர்ஜுனா இராமநாதன் நடித்த வருவதாக மக்கள் மத்தியில் இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அவ்வாறான காலப்பகுதியில் சுமந்திரன் இவ்விடம் தெரிவித்திருப்பதே அந்த சந்தேகத்தை மேலும் பலப்படுத்தி இருக்கிறது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்
அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்
அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள் ,அர்ச்சனாவை கண்டு அலறும் அரசியல்வாதிகள் செயல்கள் தற்பொழுது பர பரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கின்றது .
வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பாக வெளிக்கொண்டு வந்த வீரமகன் அர்ச்சுனா இராமநாதன், அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அலறி வருகின்ற தகவல்கள் உறுதிப்பட தெரிய வருகிறது.
மக்கள் இயக்க முன்னணி என்கின்ற காட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற களம் குதித்துள்ள மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது ,காழ்ப்புணர்ச்சி
கொண்டுள்ள அரசியல்வாதிகள் தமது வெள்ளை வேட்டிகள் வேலியில் காயு நிலை ஏற்பட்டுள்ளதாக கதறுகின்ற நிலவரம் தற்பொழுது தெரிய வருகிறது.
தமிழ் தேசியம் தமிழ் தேச விடுதலை அரசியல் என பொது வழியில் பேசி வந்த வெள்ளை வேட்டிகள் தமிழ் மக்களை மறந்து பெட்டிகளை வாங்கி சுகபோகமாக வாழ்ந்து வந்த வாழ்க்கை இப்பொழுது ,காணாமல் போகின்ற கட்டத்தில் காலடி எடுத்து வைக்கின்றன.
தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அனுராவை சிறையில் அடைத்து அதன் ஊடாக அவரது வாய்களுக்கு கட்டு போட்டு தாங்கள் தப்பலாம் என்ற எட்டப்ப விளையாட்டை ஆட முனைந்த அரசியல் வெள்ளை போட்டிகள் தற்போது கதி கலங்கி இருக்கின்றனர்.
அனுரா குமர திச நாயக்கா உடன் அர்ச்சனா ஆதரவு கட்சி செயல்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்ற நிலையில் ,சற்று எதிர்பாராத இந்த வெள்ளைவேட்டிகள் தற்பொழுது அலற ஆரம்பித்திருக்கின்றன.
வரும் நாட்களில் மிகப்பெரும் அதிரடி ஆட்டத்தை வடக்கு பகுதியில் கட்டவிழ்த்து விட அனுரா குமர திசநாயக்கா உடைய ஆட்சி கூட்டம் தயாராகி வருகின்ற நிலையில், வெள்ளை வேட்டிகள் தற்பொழுது அர்ச்சனாவை கண்டு அலற ஆரம்பித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்
மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்
மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
இவர்கள் தற்போது மக்கள் பார்வையிட இணையம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது .
அதன் அடிப்படையில் இந்த விடயம் முன் நகர்த்த பட்டு வருகிறது .
வெள்ளை வேட்டிகள் சொத்துக்களை பார்வையிட இந்த இணையதளம் செல்லுங்கள் .மக்களே .
இணையம் பார்வையிட இதில் அழுத்துங்கள்
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்
15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள்
15சாராயக்கடைகள் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் ,கிளிநொச்சி மாவட்டத்தில் 15 சாராயக்கடைகளை புதிதாக நிறுவி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்டவர்களின் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டம் தமிழ் மக்களுடைய பொது பண்பாட்டுக் கலையாக விளங்கி வந்த காலப்பகுதியில் அது செழிப்புற்று காணப்பட்டது .
அவ்வாறு உருவான இந்த மாவட்டத்தில் 15 சாராயக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.
மக்களது மண்ணின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினுடைய வெள்ளை வேட்டிகளும் இன்றைய தமிழ் வெள்ளைப் வேட்டிகளும் இணைந்து இந்த சாராயக்கடைகளை நிறுவியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமது பெயர்களில் சாராயக்கடைகளை நடத்தினால் அது மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு வரும் என்கிற காரணத்தினால் ,அவர்களது உறவுகளுடைய பெயர்களில் கடைகளை நிறுவி தமது வர்த்தக வியாபாரத்தை நடத்திக் கொண்டுள்ளது தெரிவிக்க படுகிறது .
சாவகச்சேரி மருத்துவமனையில் அர்ச்சனா ராமநாதன் என்கின்ற மருத்துவர் ஊழல் லஞ்சத்தை வெளியில் கொண்டு வந்த நிலையோடு தற்பொழுது இவர்களது சாராயக்கடைகள் மற்றும் கரும்பு தோட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறுபட்ட மாபியா விளையாட்டு அம்பலமாகி வருகின்றது.
இந்த தேர்தலில் இவர்களை இவ்வாறான வெள்ளைப் போட்டிகளை மக்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஓட்டு அளிக்காது.
அவளை தோற்கடிப்பதன் ஊடாகவே மக்கள் தாம் ஒன்றுபட்டுள்ள எடுத்து காண்பிக்க முடியும் ஆதலால் இவர்களை புறக்கணியுமாறு மக்கள் மண்ணில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்
சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்
சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல் ,இலங்கையின் மூத்த அரசியல்வாதியாகவும் தமிழருடைய அரசியல் கட்சிகளில் மிகவும் வயதானவராக காணப்படும் இரா சம்பந்தன் கடந்த தினம் பலியாகியிருந்தார்.
அவரது மரணத்தை அடுத்து தற்பொழுது உலகளாவிய ரீதியில் அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
91 வது வயதில் இரா சம்பந்தன் காலமடைந்திருந்தார் ,இவரது மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தமிழ் கட்சி உறுப்பினர்கள் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலை கவலைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
மிகப் பெரும் மூத்த அரசியல் தலைவராக இரா சம்மந்தன் விளங்கிய பொழுதும் ,தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் விடயத்தில் 15 ஆண்டுகாலத்தில் எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை .
2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட பொழுதும் அதன்பின்னர் இலங்கை அரசுடன் , மிக நெருக்கமாக நெருங்கி பழகி வந்த இந்த இரா சம்பந்தன்.
தமிழருடைய அரசியல் பிரச்னை தொடர்பாக ஒரு கல்லை கூட அசைக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது .
இறந்தாலும் பின்னால் வாழ வேண்டிய அரசியல்வாதியாக விளங்கி இருந்தால் மக்கள் மத்தியில் அவர் போற்றப்படும் ஒருவராக மாற்றம் பெற்று இருப்பார் .
ஆனால் அவ்வருக்கானப்படாது தமது சுக போகங்களுக்காகவே இறுதி காலங்களில் அர்ப்பணித்துக் கொண்டார் என்பது மக்கள் அறிந்த உண்மையாகும் .
அவ்வாறான மூத்த அரசியல் தலைவரான இரா சம்பந்தன் இன்று இலங்கையில் இறந்துள்ளார் .
அவர் தொடர்பாக பேசுகின்றவர்கள், புகழாரம் சூட்டுகின்றனர் .
எதிர்க்கட்சியாக இலங்கை அரசியல் விளங்கிய பொழுதும் ,உரிய முறையில் ஆன தீர்வினை எட்டிச் செல்லாததும் ,தமிழ் மக்களுக்கு உரிய பாதிப்புகளுக்கு நிவாரணத்தை தேடி கொடுக்காதும் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது .
வயது முதிர்ந்த அளவிற்கு அரசியல் முதிர்ச்சி இன்மையற்ற ஒருவராகவும் சாதுரியமாக காய்களை நகர்த்தி தமிழருக்கு தீர்வினை பெற்று கொடுக்க இயலவில்லை .
அதனை அவர் செய்யவில்லை அதனால் ,அவர் இறந்தவர் மிக மூத்த அரசியல்வாதியாக இடம் பிடித்துள்ளார் .
.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்
அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்
எமது வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது.
அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஹட்டன்- வெளிஓயா தோட்ட மக்கள் எச்சரித்துள்ளதுடன் இன்று (3) ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.
குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவன் சுகவீனமுற்றிருந்த நிலையில், உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் கிடைக்காமை காரணமாக நேற்று(2) உயிரிழந்துள்ளார்.
அத்துடன், வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இதற்கு மேலும் உயிர்கள் பலியாக இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று (3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துவோம்
சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில்
பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம் என தெரிவித்த மக்கள், இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை.
எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்
அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம் எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.
அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி
அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி
இலங்கையை பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல் ,மற்றும் லஞ்சத்தில் ஊறி திகழ்கின்றனர் என மல்வத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
புத்த சாசனத்தை வரையறுத்து ,மக்கள் மத்தியில் சாந்தியும் சமாதானமும் நிலை நிறுத்தும் என்கின்ற கோசத்தை முழங்கி ,பவுத்த மக்களை வழி நடத்தி செல்லும் மிக முக்கிய பவுத்த பீடாதிபதி தெரிவித்துள்ள இந்த கருத்து மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகள் புரிந்த லஞ்ச ஊழல் மோசடிகளே காரணமாக அமைந்தது .
அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் – அரசியல்வாதிகளை மிரளவைத்த பீடாதிபதி
வீதியில் பிச்சை எடுத்து ,டீ கடை நடத்திய அரசியல்வாதிகள், சர்வதேச அளவில் பெரும் சொத்துக்களை குவித்து ,சர்வ வல்லமை பொருந்தியவர்களாக காண படுகின்றனர் .
அவ்வாறான நிலையிலே பவுத்த பீடாதிபதி இவ்விதம் ,இலங்கை தெரிவித்து அரசியல்வாதிகளை மிரள வைத்துள்ளார் .
இவரது பேச்சு தற்போது இலங்கை மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

அரசியல்வாதிகள் குடும்பத்திற்கு களவாக கொரனோ ஊசிகள்
இலங்கையில் ஆளும் கோட்டா அடிமை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எம்பிக்கள் குடும்பங்களுக்கு கொரனோ
ஊசியானது திருட்டு தனமாக செலுத்த பட்டுள்ளதாக சஜித் கட்சி பிரமுகர் குற்றம் சுமத்தியுள்ளார்
திருட்டு
மகிந்தவின் ஆட்சியின் பொழுது பல மில்லின ரூபாய்களை அரச பணத்தில் இருந்து கொள்ளையடித்தமை வெளியாகியது போல
இந்த திருட்டுக்களும் கோட்டா ஆட்சி அகன்றதன் பின்னர் தெரிய வரும் என்பதில் சந்தேகம் இல்லை
அலிபாவாவும் நாப்பது திருடர்களும் ஆளுகின்ற பொழுது திருட்டு சாதாரணம் தானே ,நீங்க திருடுங்க அமைச்சர்களே ,திருட பிறந்த கூட்டம் திருடுகிறது





























