அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி
Posted in இலங்கை செய்திகள்

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி ,எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிராமமான

தம்புத்தேகம எனும் பகுதியில் ஒரு சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரையினாலான வீட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தாயார் டி.எம். சீலாவதி (86) தனது மகள் ஸ்ரீயலதாவுடன் (62) வசித்து வருகிறார்.

இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இளம் பருவம் பற்றி தாயார் சீலாவதி அளித்த பேட்டி ஒன்றில் கூறியது: “எனது மகனுக்கு

சிறுவயதில் காற்றில் பட்டங்களை பறக்க விட மிகவும் பிடிக்கும். தினமும் அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலடிக்கவும் பிடிக்கும். அநுரவுக்கு எப்போதும் புத்தகங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும்.

வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து சப்தமாக படித்து கொண்டிருப்பது இன்னும் நினைவில் எனக்கு இருக்கிறது. சாப்பிடும் போதும் புத்தகமோ செய்தித்தாளோ வாசித்துக் கொண்டே சாப்பிடுவது அநுரவின்

வழக்கமாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது அநுரவுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு கொலை மிரட்டலும் வந்தது.

அவர் நெருங்கிய தொடர்பிலிருந்த அவரது சிறிய தந்தையார் (தந்தையின் சகோதரர்) கொலை செய்யப்பட்டார்.

அநுர தலைமறைவாக இருந்த காலத்தில் 1992-ம் ஆண்டு அவரது அப்பா இறந்துபோது, அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.

12 வயதிருக்கும்போது புத்த விகாரை ஒன்றின் தலைமை குரு ஒருவர், அநுரவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார்.

அதனை நான் மறுத்து விட்டேன். அநுர பிறந்து ஆறாம் மாதத்தில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டியபோது, ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்று அதிர்ச்சியோடு சொன்னார்.

எனது மகன் சாதாரண குடும்பத்திலிருந்து இன்று அதிபராகி உள்ளார். அவர் பொய் சொல்பவரோ, மோசடி செய்பவரோ கிடையாது.

அனுராதபுரத்தில் உள்ள ஆலயங்களில் எனது மகனுக்காக பிரார்த்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சகோதரி ஸ்ரீயலதா கூறும்போது, “எனது தாயார் தினமும் இரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கிறார்.

செய்தியில் எனது சகோதரன் வரும்போதெல்லாம் என் மகனா என கேட்பார். மகனுடன் இருக்க அவர் விரும்புவார். என் சகோதரன் அநுரவும் இந்தப் பகுதிக்கு வரும்பொதெல்லாம் எங்களை பார்க்க வீட்டுக்கு வருவார்.

அவர் இந்த நாட்டின் இந்த பகுதிக்கு வரும்போதெல்லாம், எங்களை சந்திக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​அநுர காரில் தூங்கியதுதான் அதிகம். அவரது பதவியேற்பு ஆரவாரமின்றி நடைபெற்றது. அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

யார் இந்த திசாநாயக்க? – இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் அநுர குமார திசாநாயக்க பிறந்தார்.

தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு அதன் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2000-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.

2014-ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட

பொருளாதார நெருக்கடியின்போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார். (நன்றி: தி ஹிந்து)

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி ,பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர், பிரான்ஸ் செல்வதற்காக அமைச்சுக்கு சொந்தமான நிதியிலிருந்து 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட்டமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த சபையின் தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் நேற்று (01) கையளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் தலைவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் அவர் நாட்டின் பனை உற்பத்திகளை

பிரபலப்படுத்துவது தொடர்பாக 2021 செப்டம்பர் 4 முதல் 27 ஆம் திகதி வரை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

இந்த 23 நாள் பயணத்திற்காக, பனை அபிவிருத்திச் சபை செலவிட்ட தொகை 1,949,450 ரூபாய்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பனை தொடர்பான பொருட்களை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதை ஊக்குவித்தல், களஞ்சியசாலைகளை மேம்படுத்துதல், உள்ளுர் பனை

உற்பத்திகள் விற்பனை வலையமைப்பை முறையாகப் பேணுவதற்கு பிரதிநிதி ஒருவரை நியமித்தல் ஆகியனவே தலைவரின் பிரான்ஸ் விஜயத்தின் நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், 2021ஆம் ஆண்டு மற்றும் ஏப்ரல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைத்த வருமானம் பூஜ்ஜியமே எனத் தெரியவந்துள்ளது.

இந்த நாட்டிலுள்ள பனை உற்பத்திகளை இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி

விளம்பரப்படுத்துவதற்கு தலைவர் பிரதிநிதிகளை நியமித்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பனை உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகவர்கள் மூலம் இலங்கையில் பனை உற்பத்திகளுக்கான ஆர்டர்கள் கிடைக்காததால், ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.

பிரான்ஸ் சுற்றுப்பயணத்திற்கு செலவழித்த தொகையை அவரிடமிருந்து திரும்ப பெற விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம் ,சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அதன் கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்த விவாதம் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றதாக தெரிவிக்க படுகிறது .

இன்று நீதிமன்றில் வழக்காடு மன்றத்திற்கு எடுக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .அப்பொழுதே இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .

தற்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்க பட்டு மீளவும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல பட்டுள்ளதாக குறிப்பிட படுகிறது .

எதிர் வரும் பத்தாம் திகதி மீளவும் வழக்கு விசாரணைக்கு ,வருகிறது அப்பொழுது இவர் விடுவிக்க படலம் என எதிர் பார்க்க படுகிறது .

இன்று விடுதலையாவர் என எதிர் பார்க்க பட்ட பொழுதும் ,அது நிறைவேராதா நிலையில் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக காணப்படுகிறது .

கீழே உள்ளே காணொளியில் அழுத்தி பாருங்கள்

வீடியோ

இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதல் 95மக்கள் பலி யாகியுள்ளனர் என லெபனான் செய்திகள் தெரிவித்துள்ளன .

ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் இராணுவம் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த தாக்குதலில் 95 மக்கள் பலியாகியும் நூற்றுக்கு மேலானவர்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

பலஸ்தினம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திட ஆரம்பித்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி

அமெரிக்காவில் சூறாவளி 100பேர் பலி ,அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் ஹெலன் சூறாவளி தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவின் ஐந்து தென்கிழக்கு மாநிலங்களில் ஹெலேன் சூறாவளி பேரழிவை ஏற்படுத்திய பின்னர், சுத்தம் செய்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என தெரிவிக்க படுகிறது .

வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்துள்ள நிலையில் மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்னம் உள்ளனர் .

இந்த சூறாவளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் திக்ரிக படலம் என அஞ்ச படுகிறது .

கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்

கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்

கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம் ,ஷாங்காய் பல்பொருள் அங்காடியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி, 15 பேர் காயமடைந்தனர்
நகரின் தென்மேற்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் உள்ள புறநகர் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் நகரின் தென்மேற்கில் திங்கள்கிழமை நடைபெற்றது, இந்த ஆண்டு சீனாவின் முக்கிய நகரங்களில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் சமீபத்தியது.
லின் என்ற குடும்பப்பெயர் கொண்ட 37 வயதான சந்தேக நபர், தாக்குதலுக்கு பதிலளித்த பொலிஸாரால் சிறிது நேரத்திற்குப் பிறகு காவலில் வைக்கப்பட்டார் என்று உள்ளூர் சாங்ஜியாங் பொலிஸ் கிளை செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில் லின் தனிப்பட்ட நிதி தகராறைத் தொடர்ந்து “தனது கோபத்தை வெளிப்படுத்த” ஷாங்காய்க்குச் சென்றதாகக் கூறப்பட்டது, காவல்துறை மேலும் கூறியது.

அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தினத்தையொட்டி வரும் பாரம்பரிய “கோல்டன் வீக்” விடுமுறைக்கு சீனா தயாராகும் போது கத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் முன்னேறின
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் முன்னேறின

இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் முன்னேறின

தரைவழித் தாக்குதல் தொடங்கியவுடன் இஸ்ரேலியப் படைகள் லெபனானுக்குள் முன்னேறின,இராணுவம் தாக்குதல்களை ‘வரையறுக்கப்பட்ட, உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் இலக்கு’ என விவரிக்கிறது மற்றும் விமானப்படை மற்றும் பீரங்கிகளால் ஆதரிக்கப்படுகிறது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேக்கி வான்வழி தாக்குதலில் இருந்து புகை எழுகிறது. இருட்டாக இருக்கிறது. பல அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைய உள்ளன


பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து புகை எழுகிறது



தெற்கு லெபனானில் உள்ள கிராமங்கள் மீது “இலக்கு தரைத் தாக்குதல்களை” தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

செவ்வாய்கிழமை அதிகாலை இராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கிகளின் ஆதரவுடன்

ஊடுருவல்கள் இஸ்ரேலுடன் “எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில்” ஹெஸ்பொல்லாவை குறிவைத்து “சில மணிநேரங்களுக்கு முன்பு” தொடங்கின.

ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக “வரையறுக்கப்பட்ட, உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் இலக்கு வைக்கப்பட்ட” சோதனைகள் என்று அது மேலும் கூறியது.

இந்த ஊடுருவல் இஸ்ரேலிய அரசியல் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஈரானிய ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது. பாலஸ்தீனக்

குழுவான ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த அக்டோபரில் காசா மீது இஸ்ரேல் தனது போரைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, ஹெஸ்பொல்லா இஸ்ரேலிய இலக்குகள் மீது குறைந்த-தீவிர தாக்குதல்களைத் தொடங்கியது.

“நாங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட தரை நடவடிக்கை பற்றி பேசுகிறோம் என்று நான் நம்புகிறேன்,” என்று இஸ்ரேலின் முன்னாள் நீதி அமைச்சர் Yossi Belin டெல் அவிவில் இருந்து அல் ஜசீராவிடம் கூறினார். “டியிலிருந்து கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்பதை நாங்கள் அறிவோம்

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி
Posted in இலங்கை செய்திகள்

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ,சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது.

இதன் போதே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ,

இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விளையாடும் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

விளையாடும் சாணக்கியன்

விளையாடும் சாணக்கியன்

விளையாடும் சாணக்கியன் ,அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் போது அவர்களுடன் நின்று

தீர்வினைப்பெறுவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பத்தாவது பாராளுமன்றம் கூடுவதற்கான தேர்தல் நடைபெறுவதற்கான ஆரம்ப வேலைகளை தற்போது அனைத்து கட்சியினரும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு வவுனியாவிலே ஒன்றுகூடி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அந்தத் தீர்மானங்களுக்கமைவாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலே இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்திலே போட்டியிடுவதென்பது ஒரு தீர்மானமாக எடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பிலே போட்டியிடுவது பற்றிய தகவலை வெளியிட்ட பின்னர் பல துறைகளைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள்,

சுகாதாரம், கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள் எனப் பலர் எங்களுடன் இணைந்து போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை தந்திருக்கின்றார்கள்.

இன்னும் பல விண்ணப்பங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம். இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலே இம்முறை

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வீட்டுச் சின்னத்திலே சிறந்த வேட்பாளர் பட்டியலொன்றை முன்னிறுத்த வேண்டுமென்பதை மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் பெருஞ் செய்தியொன்றை சொல்லியிருக்கின்றார்கள். அந்த செய்தி என்னவென்றால் ஊழலற்ற,

மோசடியில்லாத, நேர்மையானதொரு எதிர்காலத்தை நோக்கி செல்லக்கூடிய அரசியல்வாதிகள் தான் தேவை என்பதாகும்.

மக்களுடைய மனநிலை அவ்வாறிருக்கும்பொழுது நாங்கள் அதனை புரிந்துகொண்டு எங்களுடைய வேட்பாளர் பட்டியலும் பொதுவான

இலங்கையில் இருக்கின்ற அந்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒரு பட்டியலாக இருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஒரு பிரதிநிதித்துவத்தினை இழந்திருந்தார்கள்.

கடந்த காலத்தில் மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களே இந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழப்பதற்கு காரணமாக அமைந்தார்கள். என்றார்.

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இரத்தினபுரி பகுதியிலிருந்து ரம்புகளை நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து ஒன்று அவிசாவளை கேகாலை பிரதான வீதியில் கொட்டப்பல தண்டவாளத்திற்கு அருகில் விபத்தில் சிக்கியத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

காயமடைந்த எட்டு பேரும் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

இலங்கையில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வீதி விபத்துக்களினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு

சாராயக்கடையை மூடு மக்கள் ஆர்ப்பாட்டம்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு ,தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் திறக்கப்பட்ட புதிய மதுபான கடையை மூட கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் .

மக்கள் முன்னெடுக்கும் இந்த பபோராட்டம் காரணமாக அந்த சாராய கடையை திறந்து வியாபாரம் நடத்தி வரும் ,வெள்ளை வெட்டி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அனுரகுமார திசாநாயக்க ஆட்சியில் மிக பெரும் மக்கள் புரட்சி அதர்மத்திற்கு எதிராக இடம்பெற்று வருவதால் ,இந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

எந்தன் வாழ்வு ஏன் சோகமானது
ஏனோ என் கண்கள் நீரானது
வலிகள் மட்டும் நெஞ்சில் தொடரானது
வாழ்வே இன்று மெல்ல இருளானது

எனக்கு மட்டும் ஏன் துயரானது
இது யார் விதித்த சாபமானது
இறந்து போகவே இன்று மனம் எண்ணுதே
இதயம் வேதனையில் இன்று கருகுதே

உந்தன் நினைவு உயிரே என்னை கொல்லுதே
உறக்கம் இன்றியே விழியும் துடிக்குதே
நினைத்த மனதை நினைவு மறக்குமோ
நீயும் மறந்தால் மனம் உன்னை ஒதுக்குமோ

காலம் இந்த காலம் பொய்யானது – உயிர்
காதல் இங்கு வீணானது
தொட முன்னரே தொடரும் முடியுமோ
தொட்டு விட்டால் தொல்லை யாகுமோ

என்ன விதியோ இதை யார் செய்ததோ
பன்மைக்குள்ளே இங்கே பல செயல்களோ
உண்மையானால் இங்கே உறவு வெறுக்குமோ
உயிரும் இங்கே வலியால் துடிக்குமோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 01-10-2024
0044 7536707793

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு ,இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது.

இதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும்.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதன் புதிய விலை 319 ரூபாவாகும். அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தங்களுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ


வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ வெள்ளை வேட்டிகளை ஓட விட்ட கலக்கல் காணொளி .

இலங்கை அரசியலில் என்ன தான் நடக்கிறது ,வாருங்கள் மக்களே கேட்டு பாருங்கள்

வீடியோ

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை (30) காலை திடீர் சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.

அதன்போது, சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்றுள்ளனர். அதனையடுதே, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். தப்பிச்​சென்ற நால்வரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில், தற்காலிகமாக பணி இடைநிறுத்தம்

செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் (41) வயதுடையவர் எனவும் இவர் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக

சிகிச்சைக்காக கண்டி- போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்
Posted in இலங்கை செய்திகள்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்

கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன கோமாளி எனவும் அவர் மன நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக மண்டையன் குழு தலைவராக விளங்கிய மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .

விடுதலை புலிகள் அமைப்பினாரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி ஒன்றுக்கு ஆரம்பிக்க படுவதற்கு முன்பதாக ,இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயலாற்றி வந்த மண்டையன் குழு சுரேஷ் அணியினர் மக்களை படுகொலை செய்தனர் .

பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்க பட்டனர் ,காணாமல் ஆக்கப்பட்டனர் .படுகொலை செய்யப்பட்டதுடன் மக்களை மிரட்டி பணப்பறி ப்பிலும் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் மண்டையன் குழு ஈடுபட்டது .

சிங்கள இராணுவத்தினருடன் இனைந்து பிடித்து செல்ல பட்டவர்கள் வதைகளிற்கு உள்ளாக்க பட்டு படுகொலை ,செய்யப்பட்டதுடன் அவர்களது குடும்பங்கள் மிரட்டப்பட்டு பணம் என்பன கப்பமாக பறித்தனர் .

அவ்வாறான தேசவிரோத செயல்களை புரிந்த இந்த மண்டையன் சுரேஷ் பிரமேமசந்திரன் ஆயுத குழுவை புலிகள் கூட்டமைப்பில் இணைந்து மன்னித்தார் .

அதன் பின்னர் மக்கள் முன் தோன்றிய இந்த மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தாங்கள் மனித புனிதர்கள் என பேசிய வண்ணம் அலைகின்றார் .

தனது தாய் மனுக்கும் ,மக்களிற்கும் எதிராக செயல்பட்ட எட்டப்ப கூட்டமான மண்டையன் குழு தலைவர் ,இன்று அர்ச்சுனா இராமநாதனை மனநோயாளி எனவும் ,கோமாளி என கூறுகிறார் .

இப்பொழுது மக்களாகிய நீங்கள் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் குழுவால் நடத்த பட்ட படுகொலைகள் ,கடத்தல் , காணமல் ஆக்கப்படுதல் ,கற்பழிப்பு ,கப்பம் போன்ற விடயங்களை மக்கள் பேசவேண்டும் .

மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் எம்மோடு பேசிட தயார் என்றால் அழையுங்கள் நாங்கள் பேசிட தயாராக இருக்கின்றோம் .

உங்களினால் பாதிக்க பட்டவர்கள் உள்ளார்கள் அவர்களும் பேசட்டும் உங்களது படுகொலை இராச்சியத்தின் மறுபக்கத்தை ,எழுந்து வாருங்கள் நேருக்கு நேர வன்னி மைந்தன் டிகே நேரலையில் பேசுவோம் .

எமது இந்த சவாலுக்கு ரெடியா நீங்கள் ..? மண்டியன் குழு தலைவரே பதில் கூறுங்கள் .

இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி

இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி

இஸ்ரேல் வெறியாட்டம் 1000 பேர்பலி யாகியுள்ளனர் என கேப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறையால் நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் லெபனான் ஹிஸ்புல்லா தளபதிகளின் தலைவர் நசரேல்ல தங்கி இருந்த பதுங்கு குழி மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அந்த தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டதுடன் ,அவருடன் கூடவே மெய் பாதுகாவலர்களும் பலியாகியுள்ளனர் .

மேலும் இந்த தொடர் தக்குதலில் இதுவரை 1000 மக்கள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் பலியாகினர் .

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் யாவரும் படுகொலை செய்யப்படுவார்கள் எனும் மிரட்டலாக இந்த தாக்குதல் ஊடக விடுக்க பட்டுள்ளது .

இந்த தாக்குதலை அடுத்து தற்போது மதகியகிழக்கில் பதட்டம் அதிகரித்துள்ளது ,

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் ,முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (30) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கலந்துரையாடல் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.

அண்மையில், முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளின் பாதுகாப்பை நீக்க அரசாங்கம் தீர்மானித்தது.

எவ்வாறாயினும், அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் தமக்கு தேவையான பாதுகாவலர்களின் எண்ணிக்கை குறித்து அறிவித்துள்ளனர்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஏனைய கடமைகளில் ஈடுபட்டு வந்த உத்தியோகத்தர்களை சேவையின்
தேவையின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்களில் இணைப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.