ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி
கடந்த வாரம் ஏமனில் மீண்டும் சண்டை வெடித்ததில் இருந்து 300க்கும் மேற்பட்ட போராளிகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என இரு
தரப்பு இராணுவ மற்றும் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வார இறுதியில் தங்கள் படையைச் சேர்ந்த 84 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க அதிகாரிகள் அந்த செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த நிலையில்,
அதே காலகட்டத்தில் தங்கள் போராளிகளில் 57 பேர் கொல்லப்பட்டதாக ஹூதி இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மோதலால் பொதுமக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். தைஸ் பகுதியில் உள்ள மக்பானா மற்றும் ஜபல் ஹபாஷி பகுதிகளில் இருந்து சுமார் 1,790
குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா மனிதாபிமான அமைப்பான ஓச்சா (OCHA) மதிப்பிட்டுள்ளது.







