இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு
இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு
இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு ,இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இந்தியாவின் தூதருக்கு இடையில் திடீர் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இலங்கையில் புதிய ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற நிலையில் தற்பொழுது இந்தியாவின் தூதரகத்தின் ஊடாக அரசியல் கட்சிகளுடன் அவசர அவசர சந்திப்புகள் மற்றும் பேச்சுகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
ஜனாதிபதி அனுரகுமார குமர திசநாயக்கா இந்தியாவில் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட கூடியவர் என்பதால் அவரை சமாளிக்க முடியாத இக்கட்டான நிலையில் இந்தியா சிக்கித் தவித்து வருகின்றது.
அதனை அடுத்து இலங்கைக்குள் மிகப்பெரும் மக்கள் போராட்டங்களை நடத்தி அதனூடாக அழுத்தம் கொடுத்து ஆளுகின்ற அனுரா குமர ஆட்சியை கவிழ்த்து விடும் நடவடிக்கையில் இந்தியா திட்டம் தீட்டுவதாக இதன் ஊடாக அறிய முடிகின்றது.
மக்கள் ஆதரவற்ற கட்சிகளை மீள அழைத்து அதற்கு உயிர் கொடுக்க நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகிறதா என்கின்ற சந்தேகத்தை மேற்படி சந்திப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் அனுரா குமார திசநாயக்க ஆள முடியாது என்கின்ற நிலைப்பாடு இறுக்கமாக காணப்படுகின்றது.
மக்கள் மத்தியில் இவ்விதமான கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றது.
அந்த கருத்துக்கள் உண்மைதான் என்பதைப் போல அவரது ஆட்சியை கவிழ்த்து அவருக்கு நெருக்கடியை கொடுக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது மேற்படி கட்சிகளுடான தூதரக சந்திப்புகள் எடுத்து காண்பிக்கின்றன.
கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு
கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு
கிழக்கு ஆளுநர் கடமை பொறுப்பேற்பு ,கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (26) அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார்.
குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க, ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்
அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்
அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள் ,வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கடந்த தினம் அர்ச்சுனா எங்கே என கேட்டு கேட்டு பெண்கள் அழுத்த காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் உள்ளது .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவு கடந்த பாசம் மேற்படி காணொளியில் பெண்கள் அழுத கண்ணீர் குமுறல் காட்சிகள் ஊடாக காணமுடிகிறது .
கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள் மக்களே
சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா
சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா
சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா குமர திசாநாயக்க ஆட்சி என மக்கள் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய அனுரா குமார திசாநாயக்க, மக்களுக்கு மிக பெரும் சேவை ஆற்றுவார் என கருதப்பட்டு வரும் நிலையில் ,பதவி ஏற்று மூன்று நாட்களுக்குள் மருத்துவர் அர்ச்சுனாவை சிறையில் அடைந்துள்ளார் .
இது திட்டமிட்ட பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயக்க பட்டு வருவதாகவே அடித்தட்டு மக்கள் மன்றம் உளவியல் காணப்படுகிறது .
வடக்கு தமிழர் பகுதியில் தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள முடியா நிலை ஏற்படலாம் என்பதால் ,மருத்துவர் அர்ச்சுனாவை மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் அனுரா குமார திசாநாயக்க ஈடுபட்டுள்ளார் என்றே அடித்தட்டு பாமர மக்கள் உளவியல் கூற்று காணப்படுகிறது .
ஆகவே மக்களின் இந்த மனோ நிலை என்பது ஆளும் அனுரா குமார திஸாநாயக்கவிற்கு எதிரான எதிர்ப்பு அலையடை உருவாக்கியுள்ளது .
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனத்த்தை அனுரா குமார திசாநாயக்க பெறவேண்டுமாகாக இருந்தால் மருத்துவர் அர்ச்சுனா மீது அடாவடி அடக்குமுறையை பிரோயோகிக்காது செல்ல வேண்டும் .
அவ்வாறு கண்டும் காணாது போன்ற செயல் ,அல்லது அவரது பயணத்திற்கு தடை விதிக்கா மென்போக்கு நிலையை அனுரகுமார திசாநாயக்க கடைபிடிக்க வேண்டும் ,
அது தவறினால் தமிழ் மக்கள் மனங்களில் நிலையான இடம்பிடித்து வெற்றி நடை போட முடியா நிலை ஏற்படலாம் .
ஆகையால் அனுரா குமார திசாநாயக்க கட்சி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைமைகள் உள்ளிட்டவர்கள் இதனை கவனத்தில் எடுத்து பயணிக்க வேண்டும் .
அர்ச்சுனாவை தொடர்ந்து சிறை படுத்தினால் அதுவே அர்ச்சுனாவிற்கு அனுதாப அலையயை மக்கள் மத்தியில் தேடி தருவதுடன் ,அதிக வாக்குகளை பெற்று மருத்துவர் அர்ச்சுனா கட்சி வெற்றி நடை போட வழி வகுக்கும் .
ஆக மொத்தம் அர்ச்சுனாவை தொட்டால் அனுரா கட்சி செத்தான் என்கின்ற நிலைதான் காணப்டுகிறது .
இந்த அரசியல் சதுரங்கம் கொஞ்சம் வித்தியமான பாடத்தை தமிழர்கள் மத்தியில் அனுரா குமரா திசாநாயக்கவிற்கு உருவாக்கலாம் .
ஆகையால் நான் இலங்கை வாழ் மக்கள் ஜனாதிபதியென அனுரா குமார திசாநாயக்க கருதினால் ,நாம் மேலே
குறிப்பிட்ட விடயங்களை அந்த கட்சி ,மற்றும் மேல் மட்டங்கள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
சுருங்க சொன்னால் கரணம் தப்பினால் மரணம் என்பது தான் ,மேலும் சொல்ல போனால் எனது கணிப்பின் அடிப்படையில்
115 ஆசனங்களை மட்டுமே அனுரா குமார திஸாநாயக்காவினால் பெற முடியும் நிலை காணப்படுகிறது .
தனி பெரும்பாண்மை பலத்த பாரளுமன்றில் நிரூபிக்க வேண்டுமானால் ,நாம் கூறும் இந்த விடயத்தை காதில் போட்டு வாயில் ஆட்டுங்கள் அனுரா குமார திசாநாயக்க கட்சியில் அங்கம் வகிக்கும் பெரும் மக்களே .
- வன்னி மைந்தன் –
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

கூட்டமைப்பில் புது முகம்கள்
கூட்டமைப்பில் புது முகம்கள்
கூட்டமைப்பில் புது முகம்கள் களம் இறங்க தயாராகி வருகின்றனர் என்கின்ற விடயம் உள்ளக ரீதியாக வெளியாகியுள்ளது .
வயது முதிந்த வயோதிபர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி புதியவர்களை இணைத்து பயணிக்கும் நடவடிக்கைக்கு, கூட்டமைப்பு கட்சி தள்ள பட்டுள்ளது இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .
பல்முனை அரசியல் போட்டி வடக்கு மாகாணத்தில் தலைவிரிக்க ஆரம்பிக்க பட்ட நிலையில் ,அதற்கு ஏற்ப தம்மை உரு மாற்றியமைத்து செல்ல வேண்டிய நெருக்கடி நிலைக்கு தமிழ் கட்சிகள் தள்ள பட்டுள்ளன .
தமிழ் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்து வந்த வெள்ளை வேட்டிகள் ,வேலியில் காயும் நிலை காணப்படுவதால் ,கோவணத்தோடு போவதற்கு முன்பாக தமது கட்சியை காப்பாற்றி கொள்ள தற்போது புது முகத்தை களம் இறக்கும் நிலைக்கு தயாராகி வருகின்றனர் .
கடந்த காலங்களில் மிக பெரும் பின்னடைவை சந்தித்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையை போல ,தற்போது வெள்ளை வேட்டிகள் நிலை மாற்றம் பெற்றுள்ளதால் வேறு வழியின்றி வாலிபர்களை தமது கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
எது எப்படியோ கூட்டமைப்பு மிக பெரும் தோல்வியை தழுவி மக்கள் மத்தியில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்பட போவதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை
உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை
உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை. எனக்கு பதவி வேண்டும் ,சட்டத்தரணி சுபாஷ் போராட்டம் திணறும் செல்வராசா கயேந்திரன் .
யாழ் மாவட்டத்தில் பிரபலம் பெற்று விளங்கிய சைக்கிள் கட்சி ,தற்போது உடைந்து வீதியில் வீசப்படும் நிலையான தோற்றம் காணப்படுகிறது .
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்க பட்ட நிலையில் தற்போது எம்பி பதவி வேண்டும் என சட்டத்தரணி சுபாஸ் அடம்பிடித்து வருவதக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
அதேவேளை சைக்கிள் கட்சி இரண்டாக உடையும் நிலை காணப்படுவதாகவும் .இதன் பின்னர் மிக பெரும் அரசியல் பின்னடைவை குறித்த சைக்கிள் கட்சி சந்திக்க வேண்டிய நிலையில் சிக்கி தவித்து வருகின்றது .
சாணக்கியன் மற்றும் கயேந்திரன் உள்ளிட்டவர்கள் புது கட்சி ஒன்றை அமைக்க போவதாகவும் தெரிவிக்க படுகிறது .
ஆக மொத்தம் தமிழ் மக்களை வைத்து ,தமிழ்த்தேசியம் பேசி வியாபாரம் நடத்தும் அ,ரசியல் வியாபாரிகளாக இவர்கள் மாற்றம் பெற்றுள்ளதை மேற்படி விடயங்கள் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .
எனவே இவ்வாறான அரசியல் வியாபாரிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா ,இலங்கையில்ஆளும் புதிய ஜனாதிபதி அனுரா திசாநாயக்க ஆட்சி பீடம் ஏறியதன் , பின்னர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராயங்க அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .
எதிர் வரும் சில தினங்களிற்குள் உடனடியாக ஆடம்பர பங்களாக்கள் ,வீடுகள் என்பனவற்றை அமைச்சர்கள் ஒப்படைத்து விட்டு ஓடி தப்புமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் காலத்தில் ஆடம்பர சொகுசு வாழ்கை வாழ்ந்து வந்தவர்களுக்கு தற்போதுஆ , ஆளும் அனுரா குமார திசாநாயக்க ஆட்சி சட்டப்படி அதிரடி வைத்தியத்தை கொடுத்து வருகிறது .
சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ,இலங்கை அரசியல்வாதிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர் .
கால மற்றம் இது தன போல் உள்ளது .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் ,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தத்
தவறிய அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நிலந்த ஜயவர்தனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது
ஹிஸ்புல்லா சிரேஷ்ட தளபதி படுகொலை
ஹிஸ்புல்லா சிரேஷ்ட தளபதி படுகொலை
ஹிஸ்புல்லா சிரேஷ்ட தளபதி படுகொலை ,ஹிஸ்புல்லா சிரேஷ்ட சிஎம்டிரின் படுகொலையை உறுதிப்படுத்தினார்.
, லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லா, மூத்த தளபதி முகமது ஹுசைன் ஸ்ரோர் (ஹஜ் அபு சலே) இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது.
“பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய துரோகப் படுகொலை நடவடிக்கையின் விளைவாக அல்-குத்ஸுக்கான பாதையில் அவர் வீரமரணம் அடைந்தார்” என்று ஹிஸ்புல்லா அறிக்கை கூறியது.
51 வயதான ஸ்ரௌர், பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் வியாழன் அன்று நடந்த ஆக்கிரமிப்பில் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
படுகொலை நாட்களில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட சமீபத்திய தளபதி சுரூர்.
இஸ்ரேலிய இராணுவம் முன்னதாக ஒரு அறிக்கையில், அதன் போர் விமானங்கள் சுரூரைக் குறிவைத்து அகற்றியதாகக் கூறியது.
தெற்கு பெய்ரூட்டின் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் ஹிஸ்புல்லா அதிகாரிகளை குறிவைத்து ஒரு வாரத்தில் நடந்த நான்காவது தாக்குதல் இதுவாகும்.
லெபனானின் சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில், தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர், “ஒரு பெண் ஆபத்தான நிலையில் உள்ளனர்.”
லெபனானின் அதிகாரப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம், “மூன்று ஏவுகணைகள்” “10 மாடி கட்டிடத்தில் உள்ள குடியிருப்பு குடியிருப்பை” குறிவைத்ததாக கூறியது.
ஸ்ரூர் கணிதம் படித்தார் என்று ஹிஸ்புல்லாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறினார்.
அவர் 1986 இல் லெபனானில் இஸ்லாமிய எதிர்ப்பின் அணியில் சேர்ந்தார் என்று ஹிஸ்புல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான இஸ்லாமிய எதிர்ப்பின் பல நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார்.
“லெபனானின் கிழக்கு எல்லைகள் மற்றும் பல்வேறு சிரிய மாகாணங்களில் தக்ஃபிரி தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பதில் அவர் முக்கிய அதிகாரிகளில் ஒருவர்” என்று அந்த அறிக்கை கூறியது.
இஸ்ரேல் இராணுவ வளாகத்தின் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது
இஸ்ரேல் இராணுவ வளாகத்தின் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது
இஸ்ரேல் இராணுவ வளாகத்தின் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது
, லெபனானின் ஹெஸ்பொல்லா இயக்கம், சியோனிச ஆட்சியின் நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்வதாக அறிவித்தது, ஹைஃபாவின் வடக்கில் உள்ள இராணுவ-தொழில்துறை வளாகம் உட்பட.
காசா பகுதியில் எதிர்க்கும் பாலஸ்தீன தேசத்திற்கு ஆதரவாகவும், லெபனான் மற்றும் அதன் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும், இஸ்லாமிய எதிர்ப்புப் படைகள் கிரியாத் மோட்ஸ்கின் நகரத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் சரமாரியாக கிரியாத் ஷ்மோனாவை தாக்கியதை காட்சிகள் காட்டுகிறது.
பலாக் 2 ஏவுகணைகள் மூலம் கிரியாத் ஷ்மோனாவின் இஸ்ரேலிய குடியேற்றத்தை குறிவைத்ததாகவும் ஹிஸ்புல்லா கூறினார்.
மற்றொரு அறிக்கையில், ஹைஃபாவின் வடக்கில் உள்ள “ரபேல்” வெடிமருந்து நிறுவனத்தின் இராணுவ தொழிற்துறை வளாகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை ஹெஸ்புல்லா இயக்கம் அறிவித்தது.
சியோனிச ஆட்சியின் ஊடகங்களும் சஃபாட்டின் தெற்கில் உள்ள ஒரு பகுதியில் ஏவுகணைத் தாக்குதலைப் பற்றி செய்தி வெளியிட்டன.
சமீப நாட்களில் லெபனானில் தெற்கு மற்றும் கிழக்கில் பல பகுதிகளில் சியோனிச ஆட்சி குண்டுவீச்சு நடத்தியது.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் விரிவான பதிலடி தாக்குதல்களை நடத்தியுள்ளது. புதன்கிழமை, லெபனான் எதிர்ப்பு டெல் அவிவில் உள்ள மொசாட் தலைமையகத்தை குறிவைத்தது.
தெற்கு லெபனானின் கல்வியியல் மற்றும் அரசியல் ஆய்வாளரான அலி ஹாமி மற்றும் பெல்ஃபாஸ்டிலிருந்து எழுத்தாளர், வர்ணனையாளர் மற்றும் மேற்கு ஆசிய நிபுணரான சேப் ஷாத் ஆகியோர் இன்றிரவு விருந்தினர்களாக உள்ளனர்.
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் வீரமரணம் அடைந்தனர்
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் வீரமரணம் அடைந்தனர்
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் வீரமரணம் அடைந்தனர்,, காசா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் வீரமரணம் அடைந்தனர்.
காசா பகுதியின் வடக்கே அமைந்துள்ள ஜபாலியா முகாமில் உள்ள அகதிகள் குடியேற்றமான அல்-ஃபலூஜா பள்ளியின் மீது சியோனிச ஆட்சி புதிய கொடூரமான ராக்கெட் தாக்குதலை நடத்தியது, மேலும் ஏராளமான பாலஸ்தீனிய அகதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர் மற்றும் காயமடைந்தனர்.
பாலஸ்தீனிய குடிமைத் தற்காப்புப் படைகள் இஸ்ரேலிய தாக்குதலின் விளைவாக தியாகிகளான பாலஸ்தீனியர்களின் ஆரம்ப எண்ணிக்கையை 15 ஆக மதிப்பிட்டுள்ளது, அவர்களில் சிலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
காசா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாகிகள், காணாமல் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டு தொடர்வதாக பாலஸ்தீன குடிமைத் தற்காப்புப் படை அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் கடந்த மாதம் முதல் காசா பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த சுமார் 21 பள்ளிகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் 267 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று யூரோ-மத்தியதரைக் கடல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, காசா நகரின் இடம்பெயர்ந்த குடிமக்கள் வசிக்கும் பள்ளி மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் சனிக்கிழமை அதிகாலை தாக்கியதில் 13 குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உட்பட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் “காசா பகுதியில் இஸ்ரேல் செய்த சாத்தியமான போர்க்குற்றங்களின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய புதிய குற்றமாகும்” என்று ஜெனீவாவை தளமாகக் கொண்ட உரிமைகள் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ஏமன் டெல் அவிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது
ஏமன் டெல் அவிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது
ஏமன் டெல் அவிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது
,ஏமனின் அன்சருல்லா இயக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதை சியோனிஸ்ட் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அறிக்கைகளின்படி, தாக்குதலின் விளைவாக வியாழக்கிழமை இரவு டெல் அவிவ் அருகே பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன.
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதாக PressTV தெரிவித்துள்ளது.
“ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை ‘அரோ’ வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்தது. குறுக்கீடு மற்றும் விழுந்த துண்டுகளைத் தொடர்ந்து சைரன்கள் மற்றும் வெடிப்புகள் கேட்டன” என்று இஸ்ரேலிய இராணுவம் டெலிகிராமில் ஒரு செய்தியில் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு மத்தியில் குறைந்தது 2 மில்லியன் குடியேறிகள் தங்குமிடங்களுக்கு ஓடியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட 20 இஸ்ரேலியர்கள் தங்குமிடத்திற்காக ஓடும்போது காயமடைந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பென்-குரியன் விமான நிலையத்தின் செயல்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. இன்னும் சில மணி நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஏமன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மூத்த யேமன் வட்டாரங்கள் அல்-மயாதீன் தொலைக்காட்சிக்கு இஸ்ரேலிய எதிரியின் கதையை நம்ப முடியாது என்றும், யேமன் ஆயுதப்படையின் அறிக்கைக்காக அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
யேமன் ஆயுதப் படைகளின் அறிக்கை துல்லியமான மற்றும் தரமான நடவடிக்கையின் விவரங்களை வெளிப்படுத்தும்.
சமீபத்திய முன்னேற்றங்கள் காரணமாக யேமன் ஆயுதப்படையின் அறிக்கை வரும் மணிநேரங்களுக்கு தாமதமானது.
இந்த நடவடிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை இலக்காகக் கொண்டது, மேலும் எதிரி யாஃபாவை பாதுகாப்பற்றதாக கருத வேண்டும் என்று ஆதாரங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொண்டு லெபனான் மற்றும் ஹிஸ்புல்லாவை ஆதரிக்க இயக்கம் தயங்காது என்று வியாழனன்று ஒரு தொலைக்காட்சி உரையில் யேமனின் தலைவர் அன்சருல்லா கூறியதை அடுத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
வியாழன் அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், அன்சருல்லா தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹூதி, லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை கண்டித்து, “காசா மற்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிப்பதில்” இருந்து ஹெஸ்பொல்லாவை தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்துவர தடை
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்துவர தடை
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்துவர தடை ,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் வினாக்கள் கசிவு தொடர்பான சர்ச்சைகள் குறித்து மதிப்பீடு செய்ய பேராசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்குமாறும் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தரவிடம் நேற்று (26) பணிப்புரை விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள கேள்விகளுடன் அந்த மதிப்பெண்களைச் சேர்ப்பதா அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பதா என்பதை நிபுணர் குழுவின் பரிந்துரைகளின்படி முடிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள வினாக்களுடன் அந்த மதிப்பெண்களைச் சேர்க்கத் துறை முன்பு முடிவு செய்தது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கை கிடைத்த பின்னர் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் வரை தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி அநுரவிற்கு ஜனாதிபதி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி அநுரவிற்கு ஜனாதிபதி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி அநுரவிற்கு ஜனாதிபதி வாழ்த்து ,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
அவர் தனது X கணக்கில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது.
“இலங்கை மக்கள் உங்களை சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.”
“அவர்கள் அதைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.”
“இந்து-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.
அநுரவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு
அநுரவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு
அநுரவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு ,இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ
புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை அறிந்துகொண்டுள்ளதோடு, பொருளாதார வளர்ச்சி,செழுமை, மற்றும்
அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஒரே அளவான முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வதை போலவே அனைத்தும் உள்ளடங்களான அபிவிருத்திக்கு
இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாகவும் அந்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளுடன் மூவர் கைது
துப்பாக்கிகளுடன் மூவர் கைது
துப்பாக்கிகளுடன் மூவர் கைது ,டி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் அந்த துப்பாக்கிகளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுகங்முவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றின் மேல் மாடியில் நேற்று இரவு T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இலக்கம் அழிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கும்பலொலுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, நாவுல, அம்பன, எரிஸ்டன் வீதி பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதானவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் மற்றுமொரு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஏத்திமலை, தோரதுபிட்டிய பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர், ஏத்திமலை பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு ,இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார்
சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார்
சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்தார் ,மக்கள் விடுதலைக்கு போராட வந்த கறுப்பு கோட்டு போட்டு உலாவும் சுபாஷ் சட்டத்தரணி மக்களை மறந்து விட்டார் என்கின்ற விடயம் மக்கள் மன்றில் பேச படுகிறது .
யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலைக்காக போராடிய அரும் பெரும் சட்டவாளர் சுபாஷ் சட்டத்தரணி அவர்கள் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை இடம்பெற்ற பல மருத்துவ மாபியா ஊழல் வாதிகளிற்கு எதிராக ஏன் ஒரு பொது நல வழக்கை நடத்தவில்லை என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
மிதி வண்டி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட சுபாஷ் சட்டத்தரணி ஏன் மருத்துவமனைகளில் நடந்த தவறான சிகிச்சை காரணமாக இறந்த மக்கள் ,மற்றும் பாதிக்க பட்டவர்களுக்கு ஆதரவாக பொது நல வழக்கை நடத்திட முனையவில்லை என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர் .
தேர்தல் வாக்கு அரசியலை நம்பி பிழைக்கும் இவர்கள் ஆளும் ஆட்சி அதிகாரங்களுடன் இணைந்து கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக செயல் படுகின்றனரா என மக்கள் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர் .
ஆள் இல்லாத பாராளுமன்றத்தில் காணொளியை பிடித்து வீரமாக பேசினோம் என முழங்கும் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை இனம் கண்டு மக்களே விரட்டியடியுங்க ள் .
வெள்ளை வேட்டிகளை நம்பி எமது இனம் ஏமாந்து போனதை கடந்து மறந்து போன விடயங்களே இவர்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக மாறுவதற்கு காரணம் எனவே மக்களே கொள்ளுங்கள் .
- வன்னி மைந்தன் –
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு
அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு
அர்ச்சுனா சிறை செல்ல முன் இறுதி பேச்சு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள அளவற்ற பாசம் இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .
ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக தமது நிலை பாட்டை காண்பித்து வருவது ,அர்ச்சுனா இராமநாதன் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை எடுத்து காண்ப்பிக்கிறது .
அத்துடன் அனுரா வருகை மக்களிற்கான விழிப்புணர்வு மற்றும் ,நல்லாட்சியை வழங்கும் என்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவிக்கிறார் .
கட்சி சின்னம் ,அதன் செயலணி உருவாக்கம் தொடர்பாகவும் ,இந்த காணொளியில் தெரிவித்துள்ளார் .
கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .
இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .
பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .
தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .
நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .
தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது








































