பிள்ளையான் கைது
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையான் கைது

பிள்ளையான் கைது

பிள்ளையான் கைது ,கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள்

விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து வருகை தந்த கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சி​​ஐடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (08) இரவு கைதுள்ளனர்.

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக சி​ஐடி யினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிள்ளையார் கைது விரைவில் நடக்கும்
Posted in இலங்கை செய்திகள்

விரைவில் பிள்ளையான் கைது

விரைவில் பிள்ளையான் கைது

 விரைவில் பிள்ளையான் கைதுபிள்ளையான் கைது விரைவில் நடக்கும் என உள்ளக ஆளும் ஆட்சி வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றன.

 விடுதலை புலிகள் அமைப்பு உடைத்து நாசமாக்கப்பட்டு ,அந்தப் போராளிகள் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து, அந்த மக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக செயல்பட்டு, உடைவை ஏற்படுத்திய பிள்ளையான் கைது செய்த படப் போகிறார் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

 எதிர்வரும் சில தினங்களில் இந்த படுகொலைகளை புரிந்த பிள்ளையான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட யோசப் பராயசிங்கம் உள்ளிட்டவர்கள் படுகொலை குற்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிள்ளையான் தற்பொழுது கைது செய்யப்பட உள்ளார் என்கின்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 கிழக்கு மாகாணத்தின் முதல்வராக பணியாற்றிய பிள்ளையார் தமிழ் மக்களின் தேச விரோதியாக இன்றுவரை பார்க்கப்பட்டு வருகிறார் ,என மக்கள் மன்றங்களின் பேசு பொருளாக காணப்படுகின்றது.

 இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரகுமார திசை நாயக்காவின் ஆட்சியில் ,இவர் கைது செய்யப்படுவார் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் ,அனுரா குமராவுக்கு அதன் ஊடான ஆதரவு பெருகி வருகிறது.

 தற்போது தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களினால் கொண்டாடப்படுகின்ற ஒருவராக இன்றைய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க காணப்படுகின்றார்.