எரிகிறது விமானப் படை தளம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எரிகிறது விமானப் படை தளம்

எரிகிறது விமானப் படை தளம்


எரிகிறது விமானப் படை தளம் ஹிஸ்புல்லா இஸ்ரேலிய ரமாத் டேவிட் விமானப்படை தளத்தை ஏவுகணை மூலம் தாக்கியது.


லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லா இஸ்ரேலிய ஆட்சியின் ரமட் டேவிட் விமானப்படை தளத்தை சனிக்கிழமை தாக்கியதாக அறிவித்தது.

சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட லெபனானின் ஹிஸ்புல்லா, ஆக்கிரமிக்கப்பட்ட

பாலஸ்தீனத்தின் வடக்கே அமைந்துள்ள ஹைஃபா நகருக்கு அருகிலுள்ள ராமத் டேவிட் தளத்தையும் விமான நிலையத்தையும் குறிவைத்ததாக அறிவித்தது.

Fadi 3 ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலிய தளத்தை குறிவைத்ததாக Lebanese Islamic Resistance அறிவித்தது.

தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும், காஸாவில் எதிர்ப்பாகவும் இந்த பதிலடி தாக்குதல்கள் நடந்ததாக ஹிஸ்புல்லா வலியுறுத்தியுள்ளது .

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை

இலங்கையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவருக்கு நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டதால் இந்திய விமானப் படையின் ஹெலி அவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளது.

இலங்கையில் இருந்து புறப்பட்ட நீண்ட நாள் படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடன் சென்றவர்கள் நடுக்கடலில் உதவி கோரினர். இதனால் அதன் அருகே சென்ற இந்தியக் கடற்படையினர் தகவலை இந்திய விமானப் படையினருக்கு வழங்கினர்.

இதையடுத்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி சம்பவ இடத்துக்கு வந்தது. அதில் இருந்த விமானப் படையினர் மேற்படி இலங்கை மீனவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரின் விபரம் உடனடியாகச் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது