Tag: இலங்கை
எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது
எண்ணெய் பவுசருக்கு தீவைத்தவர் கைது
இலங்கை ரம்புகளை பகுதியில் எண்ணெய் பவுசருக்கு தீவைத்த இருபத்தி எட்டு வயது
நபர் ஒருவர் உளவுத்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக
நாடுகளிடம் ஓடி ஓடி இலங்கை கடனை வாங்கி குவிகிறது
தற்போது ஐநூறு மில்லியன் டொலரினை இலங்கைக்கு இந்தியா மேலும் கடனாக வழங்க உள்ளது
இந்த டொலர் கடன் ஒயில் இறக்குமதிக்கு பயன் படுத்த படும் என இலங்கை
நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு
இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இயங்கி வந்த
முப்பது வீதமான உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன
மேலும் இந்த தட்டுப் பாடு தொடர்ந்தால் பேக்கரி உற்பத்தியிலும் பாதிக்க படும் நிலை
ஏற்படும் என தெரிவிக்க படுகிறது
இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
சுட்டி காட்ட பட்டுள்ளது
இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி
இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி
இலங்கைக்கு கடனை அள்ளி வழங்கி மத்திய வங்கியை இலங்கை வரலாற்றில் முதன்
முதலாக கறுப்பு பட்டியலில் சீனா இணைத்தது
தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையில் இலங்கைக்கு சீனா மேலும் உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளது
சீனாவின் இந்த உதவி திட்டம் இலங்கைக்கு மேலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை
ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும்-மனோ கணேசன்
ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது
- மனோ கணேசன்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு
மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
அரசில் இருந்து விலகி விட்டதாக கூறும் இரத்தின தேரர் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும்,
அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என, கட்சி தலைவர்கள் கூட்ட்டத்தில் கூறினார்.
அவரை இறுக்கமாக இடைமறித்து “எந்த அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைந்தபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கைவைக்க நாம் விட மாட்டோம்.” என்று நான் பதில் சொன்னேன்.
இந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகோதர பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகியவையும் உறுதியாக இருக்கின்றமையை அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பிக்கு எம்பியின் இந்நிலைப்பாடு அங்கு வேறு சிலரின் மனதுகளுக்குள்ளும் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும். கடந்த சில தினங்களாக நடைபெறும் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில், இந்த கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், பல பெரும்பான்மை கட்சி அரசியல் கட்சி தலைவர்களால், பிரதிநிதிகளால் கூறப்பட்டது.
இதுபற்றிய பேச்சு, நேற்று நடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் மீண்டும் வந்தது. நான் மீண்டும் சொன்னேன். “விகிதாசார தேர்தல் முறைமை, மாகாணசபைகளை அகற்றித்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முடியுமென்றால்,
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டாம். 20ம் திருத்தத்தை முழுமையாக அகற்றி 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவோம். அதில் ஜனாதிபதி படுபலவீனமாகி விடுவார்.”
“அதை விடுத்து, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கை வைத்தால், அதற்கு எதிராக நான் என் உயிரை கொடுத்தாவது போராடுவேன்.” என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான்
கூறியுள்ளேன். மேலும் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதை விடுத்து, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என சபாநாயகரிடம் நான் கூறினேன்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுபற்றிய தன் கருத்தை நேற்று முதல்நாள் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மிக தெளிவாக அறிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டும் என நாம் சொன்னாலும்,
விகிதாசார தேர்தல் முறைமையையும், 13ம் திருத்தத்தையும் மாற்ற நாம் உடன்பட மாட்டோம். இவை தொடர்பாக எங்கள் பங்காளி கட்சிகளுக்கு நாம்
உறுதியளித்துள்ளோம்.” என்று சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கூறினார். இது ஒரு தேசிய கட்சி/கூட்டணி ஒன்றின் தலைவரின் மிக முற்போக்கான நிலைப்பாடாகும்.
13ம் திருத்தம் தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் எம்பி என்னிடம் கூறியுள்ளார்.
ஆனால், விகிதாசார தேர்தல் முறைமையும், ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தொடர வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் கூறியுள்ளார்.
13ம் திருத்தம் மூலமான மாகாணசபைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும், குறிப்பாக மத்திய, மேல்,
சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் உள்ளன. ஆகவே அதுபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நியாயமான நிலைபாட்டை வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளும் நண்பர் சுமந்திரன் எம்பி, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எமது நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக
கூறுகிறார். ஆனால், அவரது சில கருத்துகள், “விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம்” ஆகியவற்றை தேசிய தளத்தில் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுமோ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய
தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்து கொள்ளும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது இன்றைய தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்க கோருகிறேன்.
வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம்
கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்.
இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை
இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை
இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து
விடக் கூடாது, எனவே கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின்
பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்
அதிர்ச்சியளிக்கின்றன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது நாட்டின்
வளர்ச்சியை பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
இந்தியாவுக்கு 3,000 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை
இந்தியாவுக்கு 3,000 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு
கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்வது தொடா்கிறது. இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி 40 கோடி டொலா்
கடனுதவி அளித்துள்ளது. அந்தக் கடன் தொகையை கரன்சி பரிமாற்ற முறையில் இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், இலங்கை அரசு கடன்
தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவுக்கு கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
தலைமையிலான அரசு கடந்த 12 ஆம் திகதி அறிவித்தது. IMF மூலமாக நிதியுதவி கிடைக்கும் வரை கடன் தவணை நிறுத்தி வைப்புத் தொடரும் என்றும் இலங்கை அரசு கூறியது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சா்வதேச அளவில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இந்தியா அவகாசம் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை மத்திய வங்கியுடன் ‘சாா்க்’ கரன்சி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசா்வ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசா்வ் வங்கியிடம்
அதிகபட்சமாக 40 கோடி டொலா் தொகையை, டொலா் அல்லது யூரோ அல்லது ரூபாய் மதிப்பில் பல தவணைகளில் இலங்கை மத்திய வங்கி கடனாகப் பெற முடியும்.
இதுதவிர, இந்தியாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை அரசு 100 கோடி டொலா் (ரூ.7,460 கோடி) கடன் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல்
உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்காக 50 கோடி டாலா் ரூ.3,700
கோடி இலங்கை கடன் பெற்றுள்ளது.
ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்
ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்
இலங்கை கம்மதாகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் சிக்கி
ஒருவர் குத்தி கொலை
செய்ய பட்டுள்ளார்
கொலையாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
கஞ்சா விற்ற பெண்கள் கைது
கஞ்சா விற்ற பெண்கள் கைது
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட
இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர்
மகிந்த ஆடசியின் பின்னர் இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து
சென்றமை குறிப்பிட தக்கது
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் -பொலிஸ்மா அதிபர்
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.
றம்புக்கனை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ்
அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்
கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸா
கொரனோ சோதனை செய்து கொண்ட பின்னர் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார் ,
இவரது வருகையை அடுத்து இவருக்கு எதிராக கோஷங்கள் பாரளுமன்றில்
வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரம்புகளையில் இராணுவம் குவிப்பு -தொடரும் பதட்டம்
ரம்புகளையில் இராணுவம் குவிப்பு -தொடரும் பதட்டம்
ரம்புகளையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை சிங்கள படைகள் சுட்டு கொன்றன
,அவ்வாறான அந்த பகுதியில் தற்போது சிங்கள இராணுவத்தின் விசேட இராணுவ
படைகள் குவிக்க பட்டு மக்கள் அச்சுறுத்த பட்டு வருகின்றனர்
மக்களோ அரச படைகள் மற்றும் அரசுக்கு எதிராக ஆக்கிரோஷமாக போராடி வருகின்றனர் ,
இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொண்டேனர்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பிலான வரி அறுபத்தி ஐந்து வீதம் இன்று
நடைமுறைக்கும் வரும் நிலையில் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த சேவை வரி காரணமாக பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ,
மீளவும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட
நிலையில், புதிதாக காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி
சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி
புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட
காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்
அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி
பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு
பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா பாயாவிற்கு எதிராக மக்கள்
போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகும் படி
கோரினால் தான் பதவி விலகிட தயாராக உள்ளதாக கோட்டா அறிவித்துள்ளார்
இவரது இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என எதிர்பார்க்க படுகிறது
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு உடனடியாக பதவி விலக கோரியும்
,ரம்புகளையில் வாலிபர் சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் வாலிபர் ஒருவர் மரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
மக்களின் தொடர் போராட்டங்களுக்கு செவி சாய்க்காது கோட்டா தனது ஆட்சியை
முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதற்கு
கடனடிப்படையில் உதவிட 40 மெட்ரிக் தொன்
எரிபொருளுடன் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது
இந்திய சமீப நாட்களாக தொடராக இலங்கைக்கு எரிபொருளை அனுப்பிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கை மட்டு கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
இவர் கொலை செய்ய பட்டு குறித்த குணற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
சடலம் மீட்க பட்டத்தை அடுத்து தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கோட்டா ஆட்சியில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு
போராளிகள் மீதான வன்முறை பற்றி தெரிவிப்பு: மலையக அபிலாசை ஆவணம் கையளிப்பு
மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு
இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதி (ஐஎம்எப்) இலங்கைக்கு உதவும் போது, இலங்கை அரசாங்கத்தின் மீது விதியுங்கள். இலங்கையில் வாழும்
இந்திய வம்சாவளி மலையக தமிழரின் இருப்பை பதிவு செய்துக்கொண்டு நமது மக்களை பற்றிய அமெரிக்காவின் அக்கறையை இலங்கை தொடர்பான உங்கள்
கொள்கை நிலைப்பாடுகளின் போது வெளிப்படுத்துங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று அமெரிக்க தூதுவரை சந்தித்து உரையாடியது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்
இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமெரிக்க தரப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங். அரசியல் துறை அதிகாரி ரூபி வுட்சைட் ஆகியோர்
கலந்துக்கொண்டனர். மனோ எம்பியின் செயலாளர் பிரியாணி குணரட்னவும் உதவியாளராக கலந்துக்கொண்டார்.
இது தொடர்பில் மனோ எம்பி தனது டுவீட்டர் தளத்தில்,
“ஐஎம்எப் இலங்கைக்கு உதவ நினைக்கிறது. நன்றி. ஆனால், அதை ஜனநாயக நிபந்தனையுடன் செய்க. போராளிகள் மீது வன்முறை கூடாது.
காலிமுகம் உட்பட நமது போராளிகள் உலகில் மிக கட்டுப்பாடான போராளிகள். அமெரிக்க தூதர் ஜூலி சங்கிடம், ரம்புக்கன நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்
கூறினேன். இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் சமூக பொருளாதார அபிலாசைகளுக்கு இலங்கை பரப்புக்கு உள்ளே தீர்வுகள் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, மலையக தமிழரின் அரசியல் அபிலாஷை ஆவணத்தை அமெரிக்க தூதுவரிடம் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கையளித்தார். இலங்கையில் தென்னிலங்கையில் மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா,
தென் மாகாணங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்நிலைமைகள் பற்றி அமெரிக்க தூதுவர் கேட்டு தெரிந்துக்கொண்டார்.
தான் கொரிய வம்சாவளி அமெரிக்கர் என்பதில் பெருமை அடைவதாகவும், இந்நிலையில் தமது நாட்டின் பன்மைத்தன்மை தமக்கு பலம் சேர்த்துள்ளதாகவும்
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இதுவே இலங்கையும் எதிர்பார்க்கும் எதிர்காலம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அமெரிக்க தூதுவரிடம் கூறினர்.
மத்திய மலைநாட்டுக்கு விஜயம் செய்து நேரடியாக விடயங்களை அறியுங்கள் என கூட்டணியின் பிரதிதலைவர் இராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பையும் அமெரிக்க தூதுவர் ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பில் அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது டுவீட்டர் தளத்தில்,
“மலையக தமிழர் உட்பட அநேகமான (இலங்கை) சமூகங்கள்,
எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நிலையான பொருளாதார
மீட்சிக்கு இலங்கை மக்களின் தலைவர்கள் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். (இவைபற்றி) @ManoGanesan
மனோ கணேசன் அவர்களுடன் உரையாடினேன்.” என்று கூறியுள்ளார்.







