உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளாவிய ரீதியில் பயண எச்சரிக்கையை அமெரிக்கா அவசர அவசரமாக வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக,

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை (22) உலகளாவிய எச்சரிக்கை பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

தனது உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

வெளியுறவுத்துறை, “இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது மற்றும் அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நலன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

“உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்துகிறது.

பயணத்தைத் திட்டமிடும்போது எங்கள் பயண ஆலோசனை, நாட்டுத் தகவல் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனமாகப் படியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய இணையதளம்:
https://travel.state.gov/content/travel/en/international-travel/International-Travel-Country-Information-Pages.html

இந்த இணையதளத்தில் உங்கள் பயண நாடு குறித்து:

பாதுகாப்பு நிலை, சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், உள்ளூர் சூழ்நிலைகள், சுகாதாரம், மருத்துவ வசதிகள், தூதரக தகவல்கள் உள்ளடங்கலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னறிவிப்பு மூலம் பயணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உலக நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் செயற்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணைகளுக்கு உங்கள் அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் எங்கு இருந்தாலும், பாதுகாப்பாக இருங்கள். இந்த எச்சரிக்கை அறிவிப்பை உங்கள் சுற்றுவட்டாரத்தவருக்கும் பகிருங்கள். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்தமுறை விட்ட தவறுகளை மீளவும் ஒரு முறை செய்திட முடிந்தால் அது மிகப்பெரும் பாதிப்பினை யூத படைகளுக்கு ஏற்படுத்தும் என ஈரான் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார் .

இராணுவ கூட்டம்

இராணுவ கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்று பொழுது இந்த மிரட்டலை அவர் பகிரங்கமாக விடுத்துள்ளார் .

ஈரானிய ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் முக்கிய இராணுவ தளபதிகள் ஆலோசர்கள் ஆய்வாளர்கள் நிபுணர்கள் என பலரை யூத படைகள் போட்டு தள்ளின.

மொசாட் முன்னெடுக்கும் , உளவு விளையாட்டில் ஈரானுடைய முக்கியமான தளபதிகள் பலியாகி இருந்தனர் .

இவ்வாறான நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால், யூத படையும் யூத அரசும் மிகப்பெரும் பாதிப்பினையும் இழப்பையும் சந்திக்க நேரிடும் என அவர் உறுமி இருக்கிறார் .

காசாவில் மீள யுத்தம்

பாலஸ்தீனம் காசாவில் மீள யுத்தத்தை இஸ்ரேல் படைகள் ஆரம்பித்ததை அடுத்து ஈரானுடைய இராணுவ தலைமையுடைய இந்த அதிரடி அறிவிப்பும் மிரட்டலும் வெளியாகி உள்ளது.

மொசாட் உளவுத்துறை அடங்குமா .இந்த மிரட்டலை ஏற்று ஒதுங்கி நிற்குமா .எதிர்காலம் இஸ்ரேல் இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து தாக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப் போவது என்ன .

இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு மூன்று நாடுகள் எச்சரிக்கை,யூத படைகள் தொடர்ந்தும் பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இன அழிப்பு தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் ,பிரான்ஸ், கனடா ,பிரித்தானியா ,என்பன, தமது கடும் எச்சரிக்கையை தெரிவித்துள்ளன.

பாலஸ்தீனம் மீது தாக்குதலுக்கு எச்சரிக்கை

தொடர்ந்தும் பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்த முற்பட்டால், நாங்கள் வர்த்தக தொடர்புகளை தூண்டித்து விடுவோம் என ,இவர்கள் எச்சரிக்கை விடுத்தது உள்ளார்கள்.


இது திட்டமிடப்பட்ட ஒரு நாடகமா அல்லது உண்மையில் நெஞ்சார்ந்த ரீதியாக சொல்கிறார்களா என்பதை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் தொடரும் யுத்தத்தினை அடுத்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

கப்பல் வழி போக்குவரத்துக்கள் தடை

கப்பல் வழி போக்குவரத்துக்கள் தடைப்படுகின்ற காரணத்தினால் .கப்பல்கள் உரிய முறையில் வந்து சேர தாமதமடைகிறது .

அதனால் இந்த நாட்டுக்கான இறக்கும் அதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.

உக்ரைன் பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம் நிறுத்தினால் மட்டுமே இந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

அவ்வாறான நிலையில் தற்போது மிகப்பெரும் பின்னடிவையும் நெருக்கடியையும் சந்தித்து வருகின்ற நிலையில் மீளவும் பலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் வெறியாட்டத்தை நடத்துகின்றது .

இந்த வழியில் கனடா ,பிரித்தானியா ,பிரான்ஸ் ,இணைந்து தமது கடும் கண்டனங்களையம் , மிரட்டலையும் விடுத்துள்ளது .

உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பேசுபொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடுத்தக்கது.

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அவசரமாக விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கொழும்பு .காலி , களுத்துற, கண்டி ,சேகால, இரத்தினபுர பகுதிகள் மற்றும் ,அதனை அறிவித்த பல பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதே பகுதிகள் மற்றும் அதனை அறிவித்து வாழும் பகுதியில் வசிக்கின்ற அடுத்த மக்களை விழிப்பாக இருக்கும்படி இலங்கை வானியல் மையம் அறிவித்தல் விடுத்துள்ளது .

மலையக பகுதியில் அதிகமான வீதிகள் இடிந்து விழுந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக பயணிக்கும் சாரதிகள் மிக எச்சரிக்கையாக பயணிக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களாக பெய்து வரும் மழையினால் நாளொன்றுக்கு, நூறு மில்லி மீட்டர் அளவு மழை கொட்டி தீர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள், அதாவது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.

எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

‘ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.

நீங்கள் கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஊடாக வீதிகளில் இருக்கும் மக்களால் உணரக்கூடிய மாற்றத்தை உருவாக்குங்கள்.

சாதாரண மக்கள் மெச்சக்கூடியவகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொதுநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள்.

காலவோட்டத்தில் மக்கள் கடந்தகாலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள்.

அவர்கள் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அன்றேல் இதுவும் வெறுமனே ‘நல்லாட்சி அரசாங்கம் – 2’ ஆக மாறிவிடும்.

இந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கையாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.

எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும்.

நாமனைவரும் தேர்தல்களில் அரசியல் செய்வோம். இருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே இத் தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை தான். ஏனெனில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட NPP அதிக வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களிலும் தமது ஆட்சி தான் நிலைநிறுத்தப்படும் என,

கொக்கரித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அநேகமான தேர்தல் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி வென்றமை, அரசுக்கு ஒரு அபாய எச்சரிக்கை என தெரிகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம், எதிர்கால அரசியல் மாற்றம் பெறுமா, இத் தேர்தல் முடிவினால் அரசுக்கு மக்கள் கூறியது என்ன என அரசு புரிந்துகொள்வார்களா..

ஆட்சியிலும், அரசின் நடவடிக்கையிலும் ஏதாவது மாற்றம் வருமா இல்லையேல் அடுத்த ஐந்தாண்டு காலத்தின் பின் மக்கள் இன்னுமொரு மாற்றத்தை எதிர்பார்த்து தேர்தலுக்காக காத்திருக்க வேண்டும்.

அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை

அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை

அமெரிக்கா செல்லும் குடிமக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை ,சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் சமீபத்திய சரிவைக் காரணம் காட்டி, அமெரிக்காவிற்கு வருகை தரத் திட்டமிடும் சீன

குடிமக்களுக்கு சீனாவின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் புதன்கிழமை ஒரு ஆபத்து எச்சரிக்கையை வெளியிட்டது.

குளோபல் டைம்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கான பயணத் திட்டங்களைச் செய்யும்போது சாத்தியமான அபாயங்களை முழுமையாக மதிப்பிடவும் எச்சரிக்கையாக இருக்கவும் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பயணிகளுக்கு அறிவுறுத்தியது.

ஏப்ரல் 10 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 34 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக உயர்த்துவதாக சீனா புதன்கிழமை அறிவித்துள்ளது.

புதன்கிழமை முதல் பெய்ஜிங்கில் “கூடுதல் 50 சதவீத வரிகள்” விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து,

அமெரிக்கா சீனா மீதான வரிகளை 104 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா அமெரிக்கா மீது 34 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து டிரம்ப் சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரியை அறிவித்தார்.

ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை

ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை

ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை ,டிரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது

பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், தெஹ்ரானில் உள்ள அமெரிக்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவிஸ் தூதரகம்

மூலம் முறையான இராஜதந்திர குறிப்பை சமர்ப்பிப்பதன் மூலம் எந்தவொரு விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக ஈரான் அமெரிக்காவை அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.

பிராந்தியத்தை சீர்குலைக்கும் நோக்கில் இஸ்ரேல் மேற்கொண்ட தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரானில் உள்ள அமெரிக்க

நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் செயல் தலைவர் – திங்கள்கிழமை காலை வெளியுறவு

அமைச்சகத்திற்கு ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் அமெரிக்கத் துறையின் இயக்குநர் ஜெனரல் இசா கமேலி வரவழைக்கப்பட்டார்.

கூட்டத்தின் போது, ​​சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை கமேலி கண்டித்தார்.

எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் நாட்டின் உறுதியான மற்றும் உடனடி பதிலை வலியுறுத்தி, ஈரானின் இராஜதந்திர எச்சரிக்கையை அவர் முறையாக வழங்கினார்.

செய்தி உடனடியாக அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்படும் என்று சுவிஸ் பிரதிநிதி ஈரானிய அதிகாரிகளுக்கு உறுதியளித்தார்.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான ‘கிரிப்டோ’ பண வணிகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மோசடி விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகள் மூலம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு மோசடியான விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, அரச அதிகாரிகள் மற்றும் பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாக பொய்யாகக் கூறும், கிரிப்டோ பண முதலீடுகளை விளம்பரப்படுத்தும் ஒன்லைன் விளம்பரங்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள பாதாள உலகினருக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள பாதாள உலகினருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளிலுள்ள பாதாள உலகினருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளிலுள்ள பாதாள உலகினருக்கு எச்சரிக்கை ,வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச

பொலிஸார் (இன்டர்போல்) இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு 199 சிவப்பு அறிவிப்புகள், 90 நீல அறிவிப்புகள் மற்றும் 4 மஞ்சள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பொலிஸாருக்கு சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும், சமீபத்திய நாட்களில் வெளிநாட்டில் இருந்த 19 குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த செயல்முறை தீவிரமடைவதால், குற்றவாளிகள் மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம் என்று பொலிஸார் கருதப்படுகின்றது.

மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை

மண்சரிவு எச்சரிக்கை

மண்சரிவு எச்சரிக்கை ,மண்சரிவு தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை காலை 8:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, ரத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, தொலுவ, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் லக்கல பல்லேகம, அம்பன்கங்கை கோரளை,

பல்லேபொல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பிரதேச செயல பிரிவுகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை,இலங்கை வாழ மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாக இருக்கின்றன.

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்ற குறும் செய்திகளுக்கு அதில் தங்களது விபரங்களை வெளியிட வேண்டாம் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபடுகின்ற கும்பல்கள் இவ்வாறு கூறும் செய்திகளை அனுப்பி அவர்களது தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல மக்கள் இவ்வாறு நம்பி ஏமாந்து தமது பணம் நகைகளை பணத்தை இழந்துள்ள நிலையில் மக்களை அவ்வாறு ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

எனவே மக்களே குறும் செய்திகள் ஊடாக வருகின்ற தகவலை பரிசீலனை செய்யாது உங்களது சுய விபரங்களை வெளியிடுவது தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அவரை நம்பி ஏமாந்து உங்களது சொத்துக்களை பணத்தை ,நகைகளை இழந்து விடாதீர்கள் என்பது இந்த செய்தியின் சாரம்சமாக சமுக காணப்பட்டுள்ளது.

புதிய வைரஸ் சீனா எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

புதிய வைரஸ் சீனா எச்சரிக்கை

புதிய வைரஸ் எச்சரிக்கை

புதிய வைரஸ் சீனா எச்சரிக்கை , புதிய வைரஸ் நோய் என்று கொரோனா நோயைவிட இரண்டு மடங்கு பீரியம் கொண்டதாக தற்பொழுது உலக நாடுகள் வேகமாக பரவி வருவதாக சீனா அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளிர் காலநிலையில் நிவாரண வைரஸ் மிக வேகமாக பரவியதாகவும் அதனால் மக்கள் மிக விழிப்புணர்வாக இருக்கும்படி சீன அவசர விடியத்தினை மேற்கோள் காட்டுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவில் பரவியது இந்த பெருகமான நோய்களை அடுத்து சீனாவுக்கு வெளிநாட்டு மக்கள் செல்ல போடாமல் பல நாடுகள் தற்போது தடை விதித்து வருகின்றனர்.

தமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக சுகாதார நிலை குறித்து உத்தரவாதம் வழங்க முடியும் எனவும் சீனா தெரிவித்துள்ளது எனினும் இதனால் செய்ய ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ளது.

வீடியோ

புதிய கொரோனா நோய் போன்ற நோய்களை உருவாக்கி அதனை இப்பொழுது பரிசாற்று நடவடிக்கை விட்டு இருக்கிறார்களா என்பது தொடர்பாகவே தெரியவில்லை .

போர் என்று ஆரம்பிக்கப்பட்டால் அப்பொழுது இவ்வாறான நோய்கள் ஊடாக பலரை கொன்று குவிக்கும் நடவடிக்கையில் ,இந்த வைரஸ்கள் தற்பொழுது உருவாக்கப்படுகிறதா என்பதுதான் விடியமாக இருக்கிறது.

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எல்ல – நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (14) மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2 கட்டங்களின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி ,கல்முனையில் அதிகாலை இரண்டு மணிக்கு புயல் பரவும் என் வெளியிடப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என மக்களுக்கு எரிச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அதிகாலை இரண்டு மணிக்கு புயல் எச்சரிக்கை என்பது திட்டப்பிடப்பட்டு பரப்ப பட்ட வதந்தி எனவும் ,அவ்வாறு ஒன்று இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .

அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கை

அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கை

அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கைக்கு மக்கள் போராட்டக் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது

முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FLSP) தலைமையிலான மக்கள் போராட்டக் கூட்டணி (PSA), கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தரும் தனது குடிமக்களுக்கு, இலங்கையில், குறிப்பாக சுற்றுலா மையமான அருகாமையில்

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கும் சமீபத்திய அமெரிக்க தூதரக அறிவிப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்தது. விரிகுடா.

செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய PSA கொழும்பு மாவட்ட வேட்பாளர் தரிந்து உடுவரகெதர, தூதரகத்தின் அறிக்கையின் நேரம் மற்றும் இலங்கை

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் இல்லாமை ஆகிய இரண்டையும் கேள்வி எழுப்பினார்.

ஒரு காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருந்த சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

2018 ஆம் ஆண்டில், தொழில்துறை 4.3 பில்லியன் டாலர்களை ஈட்டியது, இது அடுத்த ஆண்டு 5 பில்லியன் டாலராக உயர்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை இந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் இருந்து 3 பில்லியன் டாலர் வருவாயை எதிர்பார்க்கிறது,

முதன்மையாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக சீசன் மாதங்களில்.

அதற்கிணங்க, அமெரிக்காவின் சமீபத்திய எச்சரிக்கையானது இந்த முன்னறிவிக்கப்பட்ட வருமானத்தை பாதிக்கக்கூடியது, சுற்றுலாப் பயணிகளை விரட்டியடிக்கும் மற்றும் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் பல

இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. “இந்த எச்சரிக்கை கவனிக்கப்படாமல் போனால், அது இந்தத் துறையின் சரிவுக்கு வழிவகுக்கும்,

மேலும் உயிர்வாழ்வதற்காக அதைச் சார்ந்திருப்பவர்களை மேலும் வறிய நிலைக்குத் தள்ளும்” என்று அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச மோதல்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு, குறிப்பாக இஸ்ரேலிய படைவீரர்களுக்கு, இலங்கையின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைப் பயன்படுத்துவது குறித்து அவர் கேள்விகளை எழுப்பினார்.

அறுகம் குடாவில் நடந்த சமீபத்திய இஸ்ரேலிய திரைப்படத்தை மேற்கோள் காட்டி, அவர் இலங்கை நிலப்பரப்புகளைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இன மோதல்களை நியாயப்படுத்தும் முயற்சி என்று அவர் விவரித்தார்.

மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான

கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை,இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் வரித் தொகையை வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரி செலுத்தத் தவறியவர்கள்

இருந்தால், அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் என். எம். என். எஸ். பி. திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வரி வசூலிக்க வரும் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவைத் தொகையை காசோலையாகவோ,

பணமாகவோ வழங்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ,தனிநபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.

எந்தவொரு பணமும் அல்லது காசோலைகளும் தங்கள் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் போல வரும் நபர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது