இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்

இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்
Spread the love

இரு தம்பிகளை வெட்டிய அண்ணன்

இரு தம்பிகளை வெட்டிய அண்ணன், செயற்பாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதுளை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் தம்பியை அரிவாளால் வெட்டிய சகோதரன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த தினம் இந்தச் சாம்பவம் இடம்பெற்றுள்ளது .

கத்தி வெட்டு தாக்குதல்

குடும்பப் பகை காரணமாக இரு சகோதரர்கள் மீது திடீரென, அண்ணா சரமரி கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இரு சகோதரர்களும், தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும், அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்கள் மீது உடன் பிறந்த சகோதரன் திடீர் கத்தி வெட்டு

சகோதரர்கள் மீது உடன் பிறந்த சகோதரன். திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு,கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இலங்கை காவல்துறையினர், கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட

சகோதரன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் தற்பொழுது நீதவான் நீதிமன்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.

பதுளை நீதவான் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று, இருசகோதரர்களை பார்வையிட்டு ,குறித்த சந்தேக நபரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெருகிவரும் இவ்வாறான வன்முறைகள் .ஆசைகள் வன்ம செயல்பாடுகளினால் குடும்ப உறவுகளை இந்த வீதிக்கு வருகின்ற நிலை காணப்படுவது வேதனைதான்.