Tag: பலஸ்தீன் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் இஸ்ரேலுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பலஸ்தீன் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் இஸ்ரேலுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பலஸ்தீன் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் இஸ்ரேலுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
பலஸ்தீன் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் இஸ்ரேலுக்கு பிரித்தானியா எச்சரிக்கை ,இஸ்ரேல் – காஸா போர்நிறுத்தம் தொடர்பாக பிரிட்டன் முன்வைத்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் வரும் செப்டம்பா்
பலஸ்தீனத்துக்கு தனி நாடு
மாதம் பலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து செய்தியாளா்களிடம் பிரித்தானிய பிரதமா் கெய்ர் ஸ்டாா்மா் கூறியதாவது:
காஸாவில் நிலவும் கொடுமையான நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உடனடி போா் நிறுத்தம் மற்றும் நீண்டகால அமைதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்தாகவேண்டும்.
அவ்வாறு செய்ய அந்த நாடு தவறினால், செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. கூட்டத்தில் பலஸ்தீனத்தை தனி நாடாக பிரித்தானியா அங்கீகரிக்கும்.
எங்கள் நோக்கம் ‘பாதுகாப்பான மற்றும் நிலையான’ இஸ்ரேல் மற்றும் ‘செயல்படக்கூடிய மற்றும் சுதந்திரமான’ பலஸ்தீன அரசு ஆகிய இரண்டையுமே உருவாக்குவதாகும்.
தொழிலாளா் கட்சியின் நீண்டகால கொள்கை
இது எங்கள் தொழிலாளா் கட்சியின் நீண்டகால கொள்கையாக உள்ளது. மேலும், பலஸ்தீன விவகாரத்தில் பிரித்தானிய அரசு அண்மைக்காலமாக வகுத்துவரும் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியும் இதுவே ஆகும்.
தற்போதைய நிலையில் எங்களின் முதன்மை நோக்கம் காஸாவில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதும், அந்தப் பகுதியில் உணவுப் பொருட்களை தாராளமாக விநியோகிப்பதன் மூலம் தற்போதைய நிலையை மாற்றுவதுமே
ஆகும். அதனால்தான் பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் அறிவிப்பு இஸ்ரேலுக்கான நிபந்தனைகளுடன் வெளியிடப்படுகிறது என்றாா்.
தற்போது 140 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளில், பிரான்ஸ்தான்
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக முதல்முறையாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








