விமான விபத்து 8பேர் பலி
Posted in உலக செய்திகள்

விமான விபத்து 8பேர் பலி

விமான விபத்து 8பேர் பலி

விமான விபத்து 8பேர் பலி ,மைனேயின் பாங்கூரில் 8 பேரை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விபத்துக்குள்ளானது: FAA

ஞாயிற்றுக்கிழமை இரவு மைனே

ஞாயிற்றுக்கிழமை இரவு மைனேயில் உள்ள பாங்கூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது எட்டு பேரை ஏற்றிச் சென்ற தனியார்

ஜெட் விபத்துக்குள்ளானது என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 7:45 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இது பாம்பார்டியர் சேலஞ்சர் 600 என்று நிறுவனம் கூறியது.

பயணிகளின் அடையாளங்கள்

பயணிகளின் அடையாளங்கள் மற்றும் நிலைமைகள் வெளியிடப்படவில்லை. FAA மற்றும் NTSB விசாரித்து வருகின்றன.

வடகிழக்கு உட்பட நாட்டின் பரந்த பகுதியை ஒரு பெரிய குளிர்கால புயல் தொடர்ந்து மூழ்கடித்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவிற்குள், உள்ளே அல்லது வெளியே 11,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை இந்த நாட்களில் பிரபலமாக இருக்கும் பட்டம் விடும் செயற்பாட்டால் ஏற்படக்கூடிய விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பும் பட்டம் விடும் இக்காலப்பகுதியில், ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம்

ஆபத்தான செயலாகும் என விமானப்படை அறிக்கை

விடுவது மிகவும் ஆபத்தான செயலாகும் என விமானப்படை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

உலகளவில் விமான விபத்துகளுக்கு ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் பறப்பது முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

விமானங்கள் பறப்பதற்கு நேரடித் தடை

விமானங்கள் பறப்பதற்கு நேரடித் தடையாக பட்டம் பறப்பது இருப்பதாகவும், கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராக்கொட, சீனகுடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள போன்ற பகுதிகளில்

ஓடுபாதைகளுக்கு அருகில் அடிக்கடி பட்டங்கள் பறப்பது மிகவும் ஆபத்தான பிரச்சினை என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் விமான விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பங்களாதேஷில் விமான விபத்து

பங்களாதேஷில் விமான விபத்து

பங்களாதேஷில் விமான விபத்து ,பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உத்தரா-டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதி விமானம் மோதி வெடித்து தீப்பிடித்துள்ளது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எயார் இந்திய விமான விபத்து
Posted in உலக செய்திகள்

எயார் இந்திய விமான விபத்து

எயார் இந்திய விமான விபத்து

எயார் இந்திய விமான விபத்து ,கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட எயார் இந்திய விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.

விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் 2 இயந்திரங்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. ஒரு விமானி, தனது சக விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு நான் அந்த வால்வை அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்த நிலையில், RAT (Ram Air Turbine) என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது.

அப்போது எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி ஒரு இயந்திரம் மட்டுமே செயற்பட்டுள்ளது. இதனால் விமானம் மேல் செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முழுவதுமாக சேதமடைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியான நிலையில் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

வீட்டின் மேல் விழுந்த விமானம்
Posted in உலக செய்திகள்

வீட்டின் மேல் விழுந்த விமானம்

வீட்டின் மேல் விழுந்த விமானம்

வீட்டின் மேல் விழுந்த விமானம் ,வீட்டின் மேல் விழுந்த விமான விபத்து சம்பவம் ஒன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இடம் பெற்றுள்ளது.

இன்று அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீட்டின் மீது விழுந்து நொறுங்கி உள்ளது.

இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமான ஓட்டி உள்ளிட்ட இருவர் ,சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக ,அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

வீட்டின் ஓட்டின் மேல் விழுந்து விமானம் நொறுங்கியது .இதன் பொழுது வீட்டுக்குள்ளே விமானத்தின் பாகங்கள் விழுந்து சிதைந்து காணப்படுகின்றன.

சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு படைகள் விமானத்தின் உடைய ,பாகங்களை அங்கிருந்து அகற்றியதுடன் ,வீட்டினை துப்புரவு செய்யும் நடவடிக்கையிலும் அதனுடைய ,துப்பு துலாக்கும் நடவடிக்கைகளும் ஈடுபட்டனர்.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் ,விமானம் இயந்திரக் கோளாறு காரணமாகவே, விழுந்து நொறுங்கி இருக்க கூடும் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் தொடராக இவ்வாறான இலகுரக விமான விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதும் ,அதனால் அமெரிக்கா திணறி வருவதையும், மீளவும் ஒரு முறை இந்த விமான விபத்து ஏற்படுத்தி காட்டியுள்ளது.

விமான விபத்து 179பேர் பலி
Posted in உலக செய்திகள்

விமான விபத்து 179பேர் பலி

விமான விபத்து 179பேர் பலி

விமான விபத்து 179பேர் பலி , தென் கொரியா விமானம் விபத்து சிக்கியதில் இதுவரை 129 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமான விபத்தில் 120 பேர் மட்டுமே பலியானதாகவும் 40 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,

அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகி இருக்கின்றது .

வீடியோ

காலநிலை காரணமாக விமானம் தரையிறக்க முற்பட்ட பொழுது, உரிய முறையில் தரையிறங்காத காரணத்தினால் விமான விபத்தில் சிக்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்பொழுது இறந்தவர்கள் சடலங்களை கையளிக்கும் நடவடிக்கையில் தென் கொரிய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கொரியாவுக்கு பயணம் செய்தவர்களில் இந்த விமானத்தில் அதிகளவிலாக வெளிநாட்டவர்களும் காணப்பட்டதாக பட்டதாகவும் அவர்கள் யார் யாரிடம் அடையாள கண்டுள்ள கையாளிக்கும் நடவடிக்கையில் ,

அரசு ஈடுபட்டுள்ளது இந்த விமான விபத்து விமான பயணிகள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்து
Posted in உலக செய்திகள்

விமான விபத்து

விமான விபத்து

விமான விபத்து ,போர்த்துக்கல்லில் நாட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் .

போர்த்துக்கல் நாட்டில் இலகுரக விமானம் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த விமான விபத்தில் விமானிகள் உள்ளிட்ட இருவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக போர்த்துக்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விழுந்து நொறுங்கிய இந்த விமானத்திலிருந்து காயமடைந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்த விமானி உள்ளிட்ட இருவரும் மீட்கப்பட்டு ,தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானங்கள் விபத்து

இந்த விமானதின் விபத்து தொடர்பான சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீப காலங்களாக இவ்வாறான விமானதின் விபத்துக்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

விழுந்து நொறுங்கிய விமானத்தின் இறக்கைகள் என்பன உடைந்து காணப்படுகின்றன .

தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில், மீட்பு குழுக்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணமுள்ளனர் .

சாலை போக்குவரத்துக்கள்

இதனால் இந்த சாலை போக்குவரத்துக்கள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த விமானதின் விபத்து இன்றைய உலகச் செய்திகளில், தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
Posted in பிரித்தானிய செய்தி

கவிழ்ந்த விமானம் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

கவிழ்ந்த விமானம் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் ; பிரிட்டனின் ஐயர்லாந்து பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று Portaferry Road, Newtownards பகுதியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது .

அயர்லாந்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்தில் சிக்கி இருவர் பலியாகினர். .
இதே போன்ற விமனம ஒன்று சோமாலியாவில் கடந்த தினம் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் பயணிகள் தப்பித்தனர் .

ஆனால் இன்று பிரிட்டன் ஐயர்லாந்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்தில் , இருவர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் கவிழ்ந்தது நடந்த பயங்கரம் மக்கள் கதறல்

பிரிட்டனில் நடந்த இந்த விமானம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

சிதறிய இந்தியா விமானம் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

இந்த விமான விபத்தினால் அந்த பகுதி போக்குவரத்துக்கு சிலமணி நேரம் தடை பட்டது .

குறித்த விமான விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .