Posted in உலக செய்திகள்

ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

உக்கிரேன் கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த எதிரி விமனங்கள் நான்கை தமது வான் எதிர்ப்பு படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் அறிவித்துள்ளது

இந்த எதிரி விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த பொழுது ,தமது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

உக்கிரேன் மீது எதிரி படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இந்த தாக்குதல்களில் எதிரிகளின் போர் விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

இவர்களின் துல்லியமான தாக்குதல் ஊடாகவே உக்கிரேன் அரச இராணுவத்தினருக்கு ரசியா போர் விமானங்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த பட்டு வருகிறது

இதுவரை முப்பத்தி ஓராயிரத்து ஐநூறு ரசியா எதிரிகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

நூறு நாட்களை கடந்து தொடரும் போரில் இரு தரப்புக்கும் பலத்த ஆளணி மற்றும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் இரு நாடுகளின் பொருளா தாரத்திலும் பலத்த அடி வீழ்ந்துள்ளது ,ஆனால் அதனை கருத்தில் கொள்ளாது போரில் மட்டும் நாட்டம் காட்டிய வண்ணம் போரை நடத்திய வண்ணம் உள்ளனர்

ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

இந்த கொடிய போரினை தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற் கொள்ள பட்டு வருகிறது பொழுதும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் தொடர் ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் பெரும் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

உக்கிரேனில் எதிரியாக விளங்கும் ரசியா இராணுவம் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே போரை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளன

அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகள் மூலம் ரசியா விமானம் சுட்டு வீழ்த்த படுதல் தொடர்நது வருகிறது ,இது எதிரி இராணுவத்தினருக்கு பெரும் படைக்கல இழப்பை ஏற்படுத்தியுள்ளது

இது மேற்குலக வல்லரசுகளின் பழி வாங்கும் தாக்குதல் என உளவுத்துறை ஊடகங்கள் சாடி வருகிறது ,

அமெரிக்கா அதன் நேச நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் உக்கிரேன் இந்த போரில் தோல்வியை தழுவும் என்பதே நமது அவதானிப்பாக உள்ளது

எதிர் வரும் நாட்களில் எதிரி இராணுவம் கெமிக்கல் தாக்குதல்களை நடத்த கூடும் என அச்சம் மேலோங்கி காணப்படுகிறது

  • வன்னி மைந்தன் –
    Posted in உலக செய்திகள்

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ ,ரசியா நாட்டு இராணுவம் உக்கிரேன் நாட்டின் மீது பெரும் போரை தொடுத்துள்ளது
    உக்கிரேன் எதிரி அல்ல என கூறி வந்த ரசியா தொடுத்துள்ள இந்த போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

    ரசியா, எதிரி அழியும் வரை தமது போர் தொடரும் என்ற ,கோட்பாட்டின் கீழ் உக்கிரேன் மீது,தொடர்ந்து இராணுவ தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

    கொடிய போரில் இருந்து உக்கிரனை காப்பாற்றி விட

    ரசியாவின் இந்த கொடிய போரில் இருந்து உக்கிரனை காப்பாற்றி விட அமெரிக்கா,நேச நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

    இதற்காக ரசியா தமது பரம எதிரி என தெரிவித்து அந்த நடடின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன

    இந்த தடைகளை கருத்தில் கொள்ளாது பிளாடிமீர் புட்டீன் தனது இராணுவ தாக்குதல்களை தீவிர படுத்தி வருகிறார்

    இதுவரை முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட எதிரி நாட்டு இராணுவத்தை கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் தெரிவித்து வருகிறது

    தொடர்ந்து தாம் தமது இழந்த நில பரப்புக்களை மீட்டவாறு முன்னேறிய வண்ணம் உள்ளோம் எனவும், எதிரி நாட்டு இராணும் இருபது வீத பகுதிகளை மட்டும் ஆக்கிரமித்துள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்து வருகிறார்

    ரசியாவோ தாம் எதிர் வரும் கோடைகாலம் முடிவதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம் என மார் தட்டடி சொல்கிறது

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

    எதிரி என்று ரசியாவை உக்கிரேன் கூறினாலும், அவர்களுடன் பேசுவதற்கு தயார் என்ற அறிவித்தலையும் விடுத்தது வருகிறது

    ஆனால் , எதிரியாக விளங்கும் ரசியா நாடானாது தாம் விதிக்கும் நிபந்தனைக்கு உக்கிரேன் ஏற்க மறுத்து வருவதாக குற்றம் சுமத்தி வருகிறது

    தொடரும் இந்த கொடிய போரை தடுக்க துருக்கி தலைமையில் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ரசியாவின் மனங்களில் மாற்றத்தை காண முடியவில்லை

    எதிரி யார் என தெரியாது கூட்டு வைத்தது அவர்கள் முதுகின் மேல் ஏறி ஆட்டம் போடும் உக்கிரேன்


    ,அதே எதிரி நண்பர்கள் மூலம் அழிக்க படும் அபாயகர ஆட்டத்தை ஆடிய வண்ணம் உள்ளது

    எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தியலை ஏற்று உக்கிரேன் சென்றிருந்தால்
    இந்த நாடு இவ்விதமான பாரிய இழப்பை சந்தித்து இருக்காது என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது ,

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ


    எதிரி யார் என்பதை எதிரியின் நண்பன் தீர்மானிக்கும் போராக உக்கிரேன் களம் மாற்றம் பெற்றுள்ளது

    ரசியா எங்கள் எதிரி என்று கோட்பாட்டு ரீதியில் கருதிய நேட்டோ தனது கூட்டமைப்பு நாடுகளில் எதிரியை எதிர்த்து தாக்கும் அணைத்து இராணுவ முன் நகர்வை மேற்கொண்டுள்ளது

    வரும் முன் தடுத்திட வேண்டும் என்ற போரியல் விதிக்கு ஏற்ப முன் ஏற்பாட்டு மக்காவில் நேட்டோ ஈடுபட்டுள்ளது

    நேட்டோவின் இந்த முன் ஏற்பாடு அவரகளை எதிரி நாட்டு இராணுவ தாக்குதலில் இருந்து பாதுகாத்து
    கொள்ளுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      Posted in உலக செய்திகள்

      உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

      உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் கொலை

      உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போருக்கு

      எதிராக உக்கிரேனிய இராணுவம் கடும் சமராடி வருகிறது

      முன்னேறி வரும் எதிரி படைகளை திணறடித்த வண்ணம் உக்கிரேனிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளது ,உக்கிரேன் மீதான எதிரிகளின் படையெடுப்பு

      மேற்கொள்ள பட்டு நூறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை முப்பத்தி ஓராயிரம் எதிரி படைகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

      மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வல்லரசாக வலம் வரும் ரஷியா இராணுவத்திற்கு எதிராக நூறு நாட்கள் உக்கிரேன் இராணுவம் கடும் எதிர் சமர் புரிந்துள்ளது

      இதுவரையில் உக்கிரேன் பகுதியில் எதிரி இராணுவத்தால் ஐந்தாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

      மேலும் எட்டாயிரம் பேர் வரை படு காயமடைந்துள்ளனர் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளது ,
      இழப்புக்களை எதிர் கொண்டவாறு ரசியா இராணுவம் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளது

      ,தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமது தாய் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம் என உக்கிரேன் இராணுவம் எதிரி படைகளுடன் சமராடி வருகிறது

      உக்கிரேனில் இடம்பெறுவது இனப்படுகொலை என உக்கிரேன் உரத்து கூறி வருகிறது ,சர்வதேச நீதிமன்றில் ரசியா நிறுத்த பட்டு தண்டிக்க படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது

      உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

      உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படும் நாடுகளுக்கு ரசியா எச்சரித்திருந்தது

      ,ஆனால் அத்தனையும் மீறி பிரிட்டன்,அமெரிக்கா எண்பது கிலோ மீட்டர் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பல மில்லியன் டொலருக்கு வழங்கியுள்ளது

      மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் வல்லரசாக விளங்கி வரும் எதிரி இராணுவத்தை வீழ்த்தி உக்கிரேன் இராணுவம் வெற்றி கொள்ளுமா என்பது சந்தேகமே

      அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை நம்பிய இராணுவ குழுக்கள் ,அதே

      இராணுவத்தால் கைவிட பட்டு அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதை மத்திய கிழக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கான போர் பாடம் புகட்டுகிறது

      அவ்விதம் உக்கிரேனும் சம காலத்தில் கைவிட பட்டு ,எதிரியிடம் மண்டியிடும் நிலைக்கு உக்கிரேன் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்

      தனது பலத்தில் உள்ளவன் மட்டுமே, எதிரி முன்னேற்றம் குறித்தும்,அவன் பலம் குறித்தும் ஆழ்ந்து யோசித்து
      போராடுவான் என்பது போரியல் நிலையாக உள்ளது ,

      உக்கிரேன் ரசியா போர் கோடை காலத்தில் முடிவுக்கு வரும் என கூறும் எதிரியாக உள்ள ரசியாவின் கூற்று சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்தது பார்க்கலாம்

      உக்கிரேன் கூறும் எதிரி இராணுவத்தின் ஆயுத தளபாட மற்றும் ஆளணி அழிப்பு என்பது ரசியாவுக்கு நெருக்கடி தரும் ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது ,

      வரும் எதிர்ப்புக்களை உடைத்து எதிரி நாட்டை தம் வசப்படுத்துவோம் என்கின்ற ரசியாவின் கனவு பலிக்குமா ..?

      உக்கிரேன் ரசியா போர் எது வரை நீளும் ..?
      அது சொல்ல போகும் செய்தி என்ன ..?

      • வன்னி மைந்தன் –
        Posted in உலக செய்திகள்

        ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

        ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

        கிரேக்கத்துக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்

        ஒன்றை அமெரிக்கா இராணுவத்தினர் ரஷியா நாட்டு மாலுமிகளுடன் இணைத்து கப்பலை கடத்தியுள்ளனர்

        இந்த கப்பலில் பத்தொன்பது ரஷியா நாட்டு மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்

        ,அவர்களுடன் இந்த கப்பல் அமெரிக்காவுக்கு கடத்தில் செல்ல படுகிறது

        அமெரிக்காவினது இந்த திடீர் கப்பல் கடத்தல் நடவடிக்கையால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

        ,அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ,இஸ்ரேல், கப்பல்களை ஈரான் வரும் நாட்களில் கடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

        இவ்விதமான சம்பவங்கள் மூன்றாம் உலக போருக்கு அடித்தளம் இடுவதாக பார்க்க படுகிறது

        ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்காவின் செயல் பாடு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

        இஸ்ரேல் வாழங்கிய உளவு தக்வாலின் அடைப்படையில் கிரேக்க நாட்டு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் ரைஸியா மாலுமிகளுடன் சிறை பிடிக்க பட்டுள்ளது

        அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலும் அதில் பணியாற்றிய ரசியா மாலுமிகளும் அமெரிக்காவினால் விடுவிக்க படுவார்களா என்ற அச்சம் நிலவுகிறது

        இவ்வாறு சிறை பிடிக்க பட்ட ரசியா மாலுமிகளிடம் அமெரிக்கா உளவுத்துறையினர் கடுமையான விசாரணைகளை மேற் கொண்டு இருப்பார்கள் ,அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்க பட்டு இருக்கலாம்

        ரசிய நாட்டவருடன் அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட இந்த கப்பலை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் பெற்றுள்ளதுடன் கிரேக்க நாட்டு கப்பல்களை ஈரான் விரைவில் சிறை பிடிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        பிரிட்டன் கப்பல்களை ஈரான் சிறை பிடித்த நிலையில் ஈரானின் கப்பல்களை பிரிட்டனும் மறுதினம் சிறை பிடித்தது அது போன்ற நிகழ்வுகளும் இங்கே இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

        அமெரிக்கா மேற்கொண்ட கப்பல் சிறை பிடிப்பால் உலக சந்தையில் மாசாகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது ,அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம் பெறும் இந்த நேரடி மிரட்டும் போர் விரைவில் உலக சண்டையாக உருமாற்றம் பெறும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ நிலைகள்மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் நூற்றி இருபது இராணுவம் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தமை இங்கே நினைவ கூற தக்கது – வன்னி மைந்தன் –

          Posted in இலங்கை செய்திகள்

          முல்லையில் மீனவர்கள் போராட்டம் – இராணுவம் குவிப்பு

          மண்ணெண்ணெய் இல்லாமையால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய்யை பெற்றுத் தரக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள், இன்று (26) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

          முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து காலை 10.30க்கு பேரணியை ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகம் உடாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை அவர்கள் சென்றனர்.

          அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்க்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

          இதன்போது மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், போராட்டக்காரர்களை உள்ளே அழைத்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்றுக்கொண்டார்.

          “சாலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான எமது மீனவர்கள் மற்றும் தென்னிலைங்கையில் இருந்து வருகை தந்து தொழில் புரியும் மீனவர்களுக்கும்

          முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.

          “இருந்த போதிலும் இவ் எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருளானது எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை. கடந்த 08.05.2022 தொடக்கம் குறித்த

          எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வரவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “அத்துடன், விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

          “எனவே, தயவுசெய்து எமது மீனவ மக்களின் இந்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு, மீனவர்கள்

          சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

          இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்துத் தொரிவித்த மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற

          கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.

          “எரிபொருள் விநியோகத்துக்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் கதைத்துள்ளோம். இன்று இரண்டு லோட் மண்ணெண்ணெய் அனுப்புவதாக உறுதிமொழி தந்துள்ளார்கள்.

          “மாவட்ட மீனவர்களின் கோரிக்கைறை கடற்றொழில் அமைச்சுக்கும் எரி சத்தி அமைச்சுக்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம்” என்றார்.

          குறித்த போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்த போது, சம்பவ இடத்துக்கு வருகைதந்த இராணுவத்தினர் மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாக மீனவர்களுடன்

          கலந்துரையாடி போராட்டத்தை நிறுத்த முயற்சித்திருந்தனர். இருப்பினும்,
          மீனவர்கள் அதற்கு உடன்படாமல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

            Posted in உலக செய்திகள்

            அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் சிதறிய கவச வண்டிகள்

            அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் சிதறிய கவச வண்டிகள்

            அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணி ஒன்று ஈராக்கின் Babylon.பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொழுது தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டுள்ளது

            இதில் இரண்டு கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன ,இந்த வாகன தொடரணி

            எண்ணெய் திருடி செல்லும் டாங்கிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அணியினர் என தெரிவிக்க படுகிறது

            அவ்விதமான இந்த அணியினர் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் கடனுதவி

              இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் கடனுதவி

              இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தொடர்ந்து இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் அமெரிக்கா டொலர் கடனுதவி வழங்கியுள்ளது,

              இந்த நிதி உதவி தற்கால நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கும் முகமாக வழங்கி வைக்க பட்டுள்ளது .

              தற்கால நிலையை கருத்தில் கொண்டு கடனை உலக வாங்கி மற்றும் நாடுகளிடம் இலங்கை வாங்கி குவித்து வருகிறது .

              எதிர்காலத்தில் இந்த கடனை மீள செலுத்த
              முடியா நிலையில் இலங்கை சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் பேராபத்து காத்து கிடக்கிறது .

              இலங்கை உலக வங்கியிடம் பெற்றுக்கொண்ட பணம் எதுவரைக்கும் போதுமானது என்ற கேள்வியும் அதனை மீள இலங்கை உலக வங்கிக்கு எவ்வாறு செலுத்த போகிறது என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .

                Posted in உலக செய்திகள்

                சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

                சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

                சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் ,அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குள் நுழைந்து எழுபது தாங்கிகளில் ஆயில்கள் மாற்று எரிபொருளை திருடி சென்றுள்ளனர்

                பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்துள்ள

                அமெரிக்கா இராணுவம் ,இவ்விதமான திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவதும் ,இவ்விதமாக


                திருடும் எண்ணெய்களை கப்பல்கள் மூலம் கடத்தி செல்வதும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in உலக செய்திகள்

                  130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு

                  130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு

                  உக்கிரேன் கிழக்கு பகுதி ஊடாக முன்னேறிய ரசியா படைகளின் முக்கிய படைப் பிரிவு மீது


                  தாம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 130 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்

                  மேலும் இரு டாங்கிகள் ,கவச வண்டிகள்,வாகனங்கள் ,தாங்கிய ஆயுத தொகுதி அழிக்க
                  பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிதுள்ளது

                  ஆனால் ரசியா படைகளோ எதிர் தரப்பிற்கு இழப்பு அதிகம் என பரப்புரை புரிந்து வருகின்றனர்


                  தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                    Posted in உலக செய்திகள்

                    ரசியா டாங்கிகளை துடைத்தழித்த உக்கிரேன் இராணுவம்

                    ரசியா டாங்கிகளை துடைத்தழித்த உக்கிரேன் இராணுவம்

                    உக்கிரேன் Donetsk and Luhansk பகுதியில் ரசிய அப்படைகள் நுளைந்து தாக்குதல்களை

                    மேற்கொள்ள முனைந்த பொழுது அவர்கள் மீது தாம் எதிர் தாக்குதல் நடத்தியாகாத உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

                    இந்த திடீர் தாக்குதலில் ரசியா இராணுவத்தின் ஐந்து டாங்கிகள் மற்றும் five artillery systems, six armored vehicles and seven motor vehicles.தகர்க்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத தளபாடங்கள் மூலம் உக்கிரேன் இராணுவம் எதிர் தாக்குதலை
                    நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      கருங் கடலில் இருந்து பாயும் ஏவுகணைகள் -தகரும் உக்கிரேன்

                      கருங் கடலில் இருந்து பாயும் ஏவுகணைகள் -தகரும் உக்கிரேன்

                      உக்கிரன் கட்டு பாட்டில் உள்ள முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரசியா தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                      கருங்கடல் பகுதியில் தரித்துள்ள ரசியாவின் போர்க் கப்பல்கள் மூலமாக இந்த

                      ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                      மூன்று மாதங்களாக தொடர்ந்து இடம்பெற்று


                      வரும் மோதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                        Posted in Uncategorized

                        கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்

                        கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்

                        ஈரான் கடல் வழியாக எதிரிகள் நுழைந்து விடலாம் என்பதால ஈரான் கடல் படையின்

                        பறக்கும் சுற்று காவலில் ஈடுபட்டுள்ளனர்

                        திடீரென அதிகரிக்க பட்டுள்ள இந்த பாதுகாப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in Uncategorized

                          வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை

                          வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை

                          கொழும்பு பகுதி எங்கும் இராணுவம் கவச வாகனங்களுடன் குவிக்க பட்டு

                          போர்க்காலத்தில் இடம்பெற்றது போன்று சோதனைகள் அதிகரிக்க பட்டுள்ளன.

                          இவை இலங்கையில்இராணுவ ஆட்சி நிலவுகின்ற நிலையை காண்பிக்கிறது ,கோட்டா விரைவில் பதவி விலக கூடும் என எதிர்
                          பார்க்க படுவதால் ,இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என்ற பதட்டம் நிலவுகிறது.

                            Posted in Uncategorized

                            அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்

                            அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்

                            ஈரான் சமீபத்தில் ஏவிய செய்மதி மூலம் அமெரிகாவின் கடற்படை தளத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது

                            இந்த படத்தில் பகைரனில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஐந்தாவது கடற்படை

                            தளத்தை அது வெளியிட்டு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
                            இது நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை தோற்றுவித்துள்ளது

                              Posted in Uncategorized

                              திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

                              திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்

                              இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இந்தியா இராணுவம் தரித்துள்ளதான புதிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                              மகிந்த குடும்பம் அந்த முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட நிலையில் மக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை காண்பித்தனர்.

                              அப்போது அங்கே சச்சின் என பெயரிட பட்ட இந்தியா சிப்பாய் ஒருவர் இலங்கை இராணுவ சீருடையில் காணப்பட்டார்.


                              இவர் இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவர் என சமூக வலைத்தளங்களில் குறித்த காணொளி பரவி வருகின்றமை
                              குறிப்பிட தக்கது.

                                Posted in Uncategorized

                                தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

                                தாய்வான் கடல் அருகே சீனா போர் ஒத்திகை – போர் பதட்டம் அதிகரிப்பு

                                சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக தாய்லாந்தை கூறி வருகிறது ,இதனால் இரு

                                நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                இவ்வேளை சீனா அதிரடியாக தாய்வான் கடல் அருகே போர் ஒத்திகையில்

                                ஈடுபட்டுள்ளது ,இந்த போர் ஒத்திகை காரணமாக நாடுகளுக்கு இடையில் மீளவும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                                சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                                  Posted in Uncategorized

                                  வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

                                  வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

                                  வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது


                                  மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது

                                  இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,


                                  அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா


                                  புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in சினிமா

                                    சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

                                    சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

                                    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

                                    சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
                                    சூர்யா – ஜோதிகா


                                    நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின்

                                    வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

                                    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. இருந்தும் படத்திற்கு பல எதிர்ப்புகள்

                                    எழுந்திருந்து. இப்படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

                                    அதன்பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இருவரும், குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை என்று விளக்கமளித்தனர்.

                                    சூர்யா – ஜோதிகா
                                    சூர்யா – ஜோதிகா

                                    இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்

                                    நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த புகாரில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்

                                    வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம்,

                                    படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல்,
                                    கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்

                                      இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்

                                      இலங்கை பாரளுமன்றத்தை சுற்றி புது காவலரண்கள் அமைக்க பட்டு பாதுகாப்பு பல

                                      படுத்த பட்டுள்ளது

                                      மக்கள் நுழைய கூடும் என்பதால் இந்த பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

                                        Posted in Uncategorized

                                        ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்

                                        ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்

                                        ரசியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த உக்கிரேன் விமானங்கள் அங்கு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன ,


                                        இந்த தாக்குதலின் பொழுது ரசியாவின் Bryansk பகுதியில் பலத்த சேதமடைந்துள்ளது

                                        ரசியா உக்கிரேன் பல பகுதிகளை ஆக்கிரமித்து தற்போது தலைநகர் கீவ் வீழ்ச்சியுற உள்ள நிலையில் இந்த


                                        அதிரடி தாக்குதலில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது