Posted in உலக செய்திகள்

மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது .இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்திய நால்வரை அந்த நாட்டு இராணுவம் தூக்கில் மாட்டி படுகொலை செய்துள்ளது .

இந்த அப்பாவி ஜனநாயக போராட்ட வாதிகள் நால்வர் படுகொலை மியான்மாரில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நால்வர் படுகொலையை கண்டித்து ஆளும் இராணுவதத்திற்கு எதிராக போராட்டங்களை வெடித்துள்ளன .

விரைவில் மியன்மாரும் இலங்கையை போல மக்கள் புரட்சி வெடித்து இராணுவ தலைமைகள் விரட்டியடிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

    இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

    பெல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்த்தின் பொழுது இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட டி-56 ரபில்,

    மற்றும் அதற்குரிய குண்டுகள் என்பன பாலத்திற்கு கீழ் இருந்து மீட்க பட்டுள்ளதா பொலிஸ் தெரிவித்துள்ளது.

    இந்த பாலத்திற்கு கீழ் குறித்த ஆயுதங்கள் வைக்க பட்டுள்ளது என்பதை இராணுவம் எவ்வாறு கண்டுபிடித்தது என்பது தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுளளது.

      Posted in உலக செய்திகள்

      இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்

      இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்

      இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .

      இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் சிதறடிக்க பட்டது .


      ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த பகுதியில் நிலை கொண்டிருந்த சிரியா இராணுவத்தினர் மூவர் பலியாகியும் ஏழுபேர் காயமடைந்துள்ளனர் என சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது .

      எனினும் சிரியா இராணுவம் கூறுவதை விட சிரியா இராணுவத்தினருக்கு இழப்புக்கள் அதிகம் என நம்ப படுகிறது.

      சிரியா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல் நடத்தி வருகிறது .

      இவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரல்
      இராணுவம் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்துவதில்லை என்பது குறிப்பிட தக்கது.

      எனினும் இதுவரை இந்த சிரியா இராணுவ முகாமில் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை .

        Posted in உலக செய்திகள்

        துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு

        துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு

        ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துரிக்குக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுலாளர்

        உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .

        துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல் பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

        இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,ரஷ்ய பாதுகாப்பபு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

        துருக்கி ரஷ்ய நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்கள் கைச்சித்திட படும் என எதிர் பார்க்க படுகிறது .

        துருக்கியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் முக்கிய சந்திப்பு


        அதில் இந்த ஆயுத விற்பனை மற்றும் ஆயுத பரவலாக்கல் என்பான் ஆதிக்கம் பெறுகிறது .

        ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் துருக்கிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்ள்ளார்

        உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய போரினை தொடுத்து வருகின்ற பொழுது துருக்கிய உளவு விமானங்கள் உக்கிரேனுக்கு பெரும் ஆதரவாக உள்ளது .

        துருக்கிய உளவு விமானங்களின் துல்லிய செயல்பாட்டின் காரணமாக ரஷ்ய இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

        இவ்வாறான இறுக்கமான தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்ச தனது முக்கிய இராணுவ தளபதிகளுடன் துருக்கிக்கு பயணித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.

          Posted in உலக செய்திகள்

          துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

          துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

          துருக்கி இராணுவத்தின் அதிமுக்கிய விமான தளம் அடங்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Zelikan இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

          இந்த ரொக்கட் தாக்குதலில் சிக்கி துருக்கிய இராணுவ முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

          குறித்த துருக்கி இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

          வடக்கு ஈராக்கில் உள்ள குருதிஸ் பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி பல டசின் மக்கள் பலியாகிய நிலையில் இந்த பதிலடி தாக்குதலாக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது.

          குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை துருக்கிய இராணுவம் ஆக்கிரமித்து அந்த மக்களை மிரட்டி அடிமைகளாக்கி வருகிறது.

          இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பாக தமது தேசிய விடுதலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி
          வருகின்ற அமைப்புகளில் குருதீஸ் போராளிகள் அமைப்பும் ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            போராட்ட கார்கள் மீது இராணுவம் தாக்குதல்

            போராட்ட கார்கள் மீது இராணுவம் தாக்குதல்

            இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் கோட்டா கோ காம போராட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

            கோட்டா கோ காம போராட்டக்காரர்கள் பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் இந்த திடீர் வன்முறை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .

            மக்கள் மீது நடத்த பட்ட தாக்குதல் சம்பவம் மக்களை மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

            போராட்டக்கார்கள் மேலும் ஒன்று கூடி ஆளும் ஜனாதிபதி ரணில்,விக்கிரமசிங்கேவிற்கு எதிராக போராட்டம் நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

              இலங்கை பாராளுமன்றை சுற்றி கடும் பாதுகாப்பு

              இலங்கை பாராளுமன்றில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

              யார் இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற பர பரப்பான நிலை தோற்றம் பெற்று வரும் நிலையில் முன்னால் ஜனாதிபதி மகிந் ராஜபக்ச பதட்டத்தில் உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

              இவ்வேளை பாரளுமன்றை சுற்றி இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் ,

              தமது ஆதரவு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் மகிந்த அணியினர் தீவிரமாக உள்ளனர்.

                Posted in உலக செய்திகள்

                ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                ரசியா இராணுவத்தின் முக்கிய படை தளபதிகளாக விளங்கிய மூன்று கேணல் தர இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளனர்.

                இவர்களே முக்கிய தாக்குதல்களை உக்கிரேன் மீது திட்டமிட்டு வழிநடத்தி வந்தவர்கள் .

                அவ்விதமான மூவரும் இந்த போர் முனையில் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

                ரசியாவின் இராணுவ முக்கிய கேணல் தர நபர்கள் நடமாட்டங்களை அமெரிக்கா உளவுத்துறை கண்காணித்து தகவல் வழங்க அந்த செய்மதி தகவலுடன் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் தாக்குதலை நடத்தி வருகிறது

                .ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை

                இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வழங்கிய உளவு விமானங்களை பயன் படுத்தி ரசியா உக்கிரேன் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

                ஈரானின் இந்த உளவு விமானங்களின் செயல் பாடுகள் மிக முக்கியமான பலத்தை ரசியா இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.

                உக்கிரேன் கிழக்கு பகுதிகள் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

                இதுவரை இன்றைய நாளில் அறுபதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவிக்கிறது .

                Posted in உலக செய்திகள்

                ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

                ஆர்மேனியாவில் புதிய இராணுவ தளம் 2000 ரசியா இராணுவம் குவிப்பு

                ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைக்கிறது .

                இந்த புதிய இராணுவ முகாமில் சுமார் இரண்டாயிரம் ரசியா இராணுவம் தங்க வைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன .


                விமான தளத்துடன் கூடிய நவீன வசதிகளுடன் இந்த இராணுவத் தளத்தை ரசியா இராணுவம் அமைத்து வருகிறது.

                ஆர்மேனியாவில் ரசியா இராணுவம் நிறுவ படுவதால் அமெரிக்கா நேட்டோ இராணுவம் கொதிப்பில் உறைந்துள்ளது .


                மேலும் இந்த ரசியா இராணுவ முகாம் அமைத்தல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக்கு இந்தியா இராணுவம் அனுப்ப படமாட்டாது

                இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊகங்களின் அடிப்படையில் பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும்

                வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றுமுழுதாக மறுக்கின்றது.

                இச்செய்திகளும் இவ்வாறான நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

                1. ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான
                2. கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக இந்திய வெளியுறவு

                3. அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நேற்றையதினம் மிகவும் தெளிவாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                  Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                  இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

                  இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

                  இலங்கைக்கு இந்தியா இராணுவம் இம்முறை வந்திறங்கினால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவிக்கும்.


                  சுருங்க சொல்ல போனால் இலங்கை பொல்லு கொடுத்து அடிவாங்க தயாராகிறது .

                  மக்கள் தமது அதிகார வர்க்கங்கள் புரிந்த இழிவு கெட்ட செயலினால் ராஜா பாக்ஸ அரசுக்கு எதிராக வீதி இறங்கினர் .

                  இதுவே தவறு என கருதி லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை காப்பாற்ற இந்தியா இராணுவ வரவு முனைந்தால் அதுவே இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் நாடாக இலங்கை மாற்றம் பெறும் .

                  சீனா தமிழர்களுக்கு உதவும் நிலையை ஏற்படுத்தும் .அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையும் தோன்றலாம் .

                  தவிர இந்தியா இராணுவத்தை வலிந்து சீண்டும் நகர்வில் சீனா கண்டிப்பாக செயல் படும் .

                  சீனாவின் ஆதிக்கம் கொழும்பை அண்மித்து அகல கால் பாதித்துள்ளது .சீனத்தவர்களும் சிங்களவர்களும் கலப்பு திருமணம் புரிந்துள்ளதுடன் பிள்ளைகளையும் பெற்றுள்ளனர் .

                  சீனாவின் உளவுத்துறையால் மேற்கொள்ள பட்ட நீண்ட கால தந்திர திட்டமாக இவை காணப்படுகிறது .

                  இவ்வேளை இந்தியா இராணுவத்தை இலங்கை அழைத்தால் ., இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்தால், இம்முறை சுலபமாக இந்தியா இராணுவத்தை இலங்கையில் இருந்து மீள் பெற முடியா நிலையில் இலங்கை சிக்கும்.

                  இவ்வேளை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவுடன் தீர்வினை வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் .

                  மேலும் இம்முறை இலங்கைக்கு இந்தியா இராணுவம் பெரும் நெருக்கடியை வழங்கும்.

                  அது புதிய ஆயுத குழுக்களை உருவாக்கும் நிலைக்கு செல்லும் .இலங்கை புதிய போர் களமாக மாற்றம் பெறும் .

                  கோட்டபாயா ஆடுகளத்தில் இலங்கையில் நடக்க போகும் எதிர்மறை ஆயுத மோதலை தமிழர்கள் மட்டும் அல்ல சிங்களவர்களும் காண தயாராகுங்கள் .

                  இந்தியா துல்லியமாக சிந்தித்து தொலைதூர பார்வையுடன் செயல் பட்டால் தமிழர்கள் ஆதரவுடன் இந்தியாவை காப்பாற்றி கொள்ள முடியும் .

                  தொடர்ந்து தமிழர் அரசியல் நிலை தொடர்பில் இந்தியா தவறான கோணத்தில் அதன் வெளியுறவு கொள்கை காணப்படுகிறது .

                  இந்தியா வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படாது விடின் அது இந்தியா இலங்கையில் பெரும் அவமானத்துடன் வெளியேறும் நிலை ஏற்படும் .

                  இலங்கை ஆடு களம் மாற்றமடைகிறது .தமிழருக்கு புதிய நாடுகளின் ஆதரவு தானாக தேடி வரும் நிலையை இந்தியாவே உருவாக்க போகிறது என்பதே வெளிப்படை .

                  • வன்னி மைந்தன் –
                  Posted in உளவு செய்திகள்

                  உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

                  உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

                  ரஷ்ய ; உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் துடித்த வண்ணம் உள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

                  தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு உக்கிரேன் நாடு எதிராக திரும்பிய நிலையில் ,இராணுவ தாக்குதல் மூலம் அந்த நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் திட்டத்தை தடுக்கும் நகர்வில் நேட்டோ முன்னேறிய வண்ணம் உள்ளது.

                  நேட்டோ நாடுகளுக்கு உக்கிரேன் மீதன ரஷ்ய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு அச்சறுத்தலாக விளங்கி வருகிறது .

                  இந்த நிலையில் நேட்டோ நாடுகள் புதிய கூட்டு முயற்சி தாக்குதல்களை தொடுத்திட உக்கிரேன் நாட்டுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .

                  உக்கிரேன் மீதான ரஷ்ய போர் என்று முடியும் ..?

                  எதிர்வரும் கோடைகாலத்திற்கு உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் தெரிவித்து இருந்தார் .

                  ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் இந்த செயல் திட்ட நகர்வுகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா,பிரித்தானிய மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து எதிர் திட்டங்களை வகுத்து ரஷ்ய இராணுவ நகர்வுகளை தோற்கடிக்கும் இராணுவ அரசியல் தந்திரோபாய நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

                  ஆனால் இணைந்த பிரித்தானிய அமெரிக்கா நேட்டோ நாடுகள் கூட்டு முயற்சி தாக்குதல் ரஷ்ய மேற்கொள்ளும் இராணுவ நகர்வினை முழுமையாக தடுத்து விடுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .

                  உலக முதல் சோவியத் வல்லரசாக விளங்கிய ரஷ்ய உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாது 127 வது நாளில் திணறிய வண்ணம் உள்ளதாக எதிரி நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன .

                  உக்கிரேன் நாட்டை முழுமையாக ரஷ்ய இராணுவம் வாசம் வீழ்வது தடுக்க படும் என நேட்டோ கூட்டமைப்பு நாடுகளை முழங்கிய வண்ணம் உள்ளன .

                  உக்கிரேன் நகரங்கள் ரஷ்யா இராணுத்திடம் வீழ்ந்தது

                  ஆனால் ரஷ்ய இராணுவம் உக்கிரேனின் மரியபோல் ,டொன்பஸ், உள்ளிட்ட முக்கிய நகரங்களை தமது முழுமையாந கட்டு பாட்டுக்குள் வைத்திருக்கும் அதேவேளை தமது தாக்குதல்களை தீவிரமாக தொடுத்த வண்ணம் உள்ளன .

                  உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

                  ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் தலைக்குள் என்ன இருக்கிறது அவர் என்ன சிந்திக்கிறார் அவர் செயல் படுத்த போவது என்ன என்பதை கண்டறிய

                  முடியாது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாட்டு உளவுத்துறையினர் மண்டையை போட்டு பிய்த்த வண்ணம் உள்ளனர்.

                  உலக நாடுகளை ரஷ்ய மீது தொடர் பொருளாதார தடைகளை விதித்து மேலும் ரஷ்ய நாட்டுக்கு நெருக்கடிகளை தருவித்தால் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர்

                  புட்டீன் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுப்பார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது .

                  உக்கிரேன் மீதான ரஷ்யா போரினால் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் அபாயம்

                  அவ்வாறு ரஷ்ய ஐரோப்பா மீது தாக்குதல் தொடுக்க முற்பட்டால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெறுவதுடன் பெரும் மனித மற்றும் சொத்து அழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.


                  மூன்றாம் உலக யுத்தம் மூண்டால் முப்பது மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாவர்கள் என்ற புள்ளிவிபர தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

                  மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் இங்கு அணுகுண்டு பாவனைகள் ஆதிக்கம் பலமாக இருக்கும் என்வும், மீளவும் ஜப்பானை போன்று பல

                  நாடுகளில் பல நகரங்கள் உருவாகும் அபாயம் ஏற்படும் என்கிறது அந்த உளவு நிறுவன எச்சரிக்கை தகவல் .

                  உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமித்து ஆண்டிட ரஷ்ய இராணுவத்தை தடுக்காது அமெரிக்கா பிரித்தானியா நேட்டோ நாடுகள் வழிவிட்டால் மூன்றாம் உலக யுத்தம் தடுக்க படும் .

                  அவ்வாறு இல்லாது கிளித்தட்டு விளையாட முனைந்தால் ரஷ்ய இராணுவ தாக்குதல் நிலவரம் மேலும் மோசமாகும் என்பதே சமகால அரசியல் நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

                  • வன்னி மைந்தன்
                    Posted in உலக செய்திகள்

                    துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்

                    துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்

                    ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய நாட்டின் Zelikan Base இராணுவ முகாம் மீது ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .

                    இந்த தாக்குதலில் துருக்கி இராணுவ முகமாக பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                    குறித்த முகாம் பத்து நாட்களுக்கு இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

                    குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

                    அதற்கு பதிலடி தாக்குதலாக குருதீஸ் போராளிகள் துருக்கிய முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                      Posted in உளவு செய்திகள்

                      ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

                      ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

                      ரசியா எல்லையில் பாராசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம் நடத்திய அதிரடி நகர்வு நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

                      ரசியாவின் எல்லையை அண்மித்து காணப்படும் Estoniaபகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக ரசியா விமானங்கள் அத்துமீறி நுழைந்தது மிரட்டலை விடுத்தன ,

                      ரசியா போர் விமானங்கள் இந்த அத்துமீறல் மிரட்டல் சம்பவம் நடந்து இரு நாட்களில் அதே பகுதியில் பிரான்ஸ் இராணுவத்தினர் நூறு பேர் பாராசூட்டில் குதித்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர் .

                      பிரான்ஸ் இராணுவம் நடத்திய இந்த திடீர் போர் ஒத்திகை நடவடிக்கை ரசியாவுக்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கியாக பார்க்க படுகிறது .

                      Estonia நாட்டின் மீது இராணுவ தாக்குதல்களை ரசியா இராணுவம் மேற்கொண்டால் அதற்கு பதிலடி வழங்கும் தாக்குதல் முன் கள தயாரிப்பு நகர்வாக.

                      இந்த பிராஸ்ன இராணுவம் நடத்திய பரசூட்டில் குதித்த போர் ஒத்திகை காணப்படுகிறது .

                      உக்கிரேன் போரில் பலத்த தோல்விகளை சந்தித்த வண்ணம் உள்ள ரசியா இராணுவம் ,நாடுகள் மீது பெரும் படையெடுப்பை நாடத்தினால் அதில் வெற்றி கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

                      ரசியா எல்லையில் பரசூட்டில் குதித்த பிரான்ஸ் இராணுவம்

                      ரசியா எல்லையில் பாராசூட்டில் குதித்து அசத்திய பிரான்ஸ் இராணுவத்தின் வீர தீர செயல் பாடுகள் உலக போருக்கான முன்கள தயாரிப்பாக பார்க்க படுகிறது .

                      உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக நடத்தி வரும் ஆக்கிரமிப்பு தாக்குதலை அடுத்து உலக நாடுகளில் எரிபொருள்,மற்றும் எரிவாயு ,மின்சார விலை உயர்வுகள் அதிகரித்தன .

                      பொருளதிகார ரீதியில் பெரும் நெருக்கடிகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்டவை சந்தித்த வண்ணம் உள்ளன ,

                      இவ்வாறான நெருக்கடியான காலத்தில் ரசியா எல்லை அருகே பிரான்ஸ் இராணுவம் நடத்திய போர் ஒத்திகை .

                      இராணுவ நடவடிக்கை மேலும் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை நாடுகளுக்கு இடையில் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிது .

                      போரில் கவனம் தீவிர கவனம் செலுத்தி வரும் வல்லாதிக்க நாடுகள் வளர்ந்து வரும் ,அல்லது ஏழை நாடுகள் தொடர்பில் எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை என்பதே மேற்படி விடயங்கள் எடுத்துரைக்கின்றன .

                        Posted in உலக செய்திகள்

                        ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

                        ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

                        உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதலுக்கு எதிராக உக்கிரேனும் தாக்குதல் நடத்தி வருகிறது இந்த தாக்குதலில் ரசியா இராணுவத்தின் 1390 முதல் தர தாக்குதல் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன

                        முன்னேறி வரும் ரசிய இராணுவதின் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,ஆனாலும் மேற்குலக நாடுகள் வழங்கி வரும் போராயுதங்கள் துணையுடன் தொடர்நது போராடி வருகிறது

                        பிரிட்டன் அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்கள் மூலம் தனது தலை நகரை உக்கிரேனது இராணுவம் தக்க வைத்துள்ளது

                        நூற்றி மூன்று நாட்கள் கடந்து நடைபெறும் உக்கிர சமரில் ரசியா படைகளில் 31 600 பேர் பலியாகியும் ,இருபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்

                        பல நூறு முக்கிய ஆயுத தளபாடங்கள் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது

                        இன்று வரை தொடர்ந்து வரும் ரஷியா இராணுவத்தினரது மோதல்களில் உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,முக்கிய பகுதிகள் சூடு காடாக காட்சி அளிக்கிறது

                        ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

                        ரசியா படை முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக மார் தட்டும் உக்கிரேன் நாடு சந்தித்துள்ள பேரழிவில் இருந்து அந்த நாட்டை மீள கட்டியெழுப்ப பல்லாண்டுகள் செல்லும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது

                        எதிர் வரும் கோடை காலத்திற்குள் தமது எதிரிகளது நாட்டின் மீதான போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷியா இராணுவம் தெரிவித்து வருகிறது

                        இவர்களின் இந்த கூற்று மெய்ப்பிக்கும் வகையில் சமீப நாட்களில் ரசியா இராணுவம் பாரிய படையெடுப்பை மேற் கொள்வதுடன் அதிக எறிகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                        ரசியா, டாங்கிகள், அழிப்பு,

                        ரசியாவின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா ,பிரிட்டன் படைகள் நீண்ட தூர பல் குழல் ரொக்கட் ஏவுகணைகளை வழங்கினர்

                        இதன் ஊடாக மேற்கொள்ள பட்ட தாக்குதலில் ரசியா நாட்டு இராணுவத்தின் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை செய்ய பட்டுளளார் இவரது இளப்பு பேரிழப்பாக பார்க்க படுகிறது

                        தமது தாய் மண்ணை மீட்க இறு திவரை போராடுவோம் என உக்கிரேன் மக்கள் சபதம் எடுத்து களத்தில் நிற்கின்றனர்
                        இது வரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டைய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்

                        ரசியா இராணுவம் அதிகம் முன்னேற்ற நட வடிக்கைக்கு பயன் படுத்த படும் டாங்கிகள் அழிப்பு ,ரசியா இராணுவத்திற்கு பெரும் பின்னடைவு என உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

                        ரசியா இராணுவ டாங்கிகள் அழித்துள்ள காட்சிகளை உக்கிரேன் இராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது ,தாமே வென்றவர்கள் என உலகில் காட்டி மகிழ்கிறது

                        இது உக்கிரேனுக்கு கிடைத்துள்ள தற்கால மகிழ்ச்சி என்பது ரசியா நாட்டின் பதிலாக வீழ்ந்துள்ளது , உக்கிரேன் போரில் வெல்ல போவது ரசியாவா உக்கிறேனா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

                        • வன்னி மைந்தன் –
                          Posted in உலக செய்திகள்

                          நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்

                          நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்

                          இலங்கை தழுவிய நிலையில் நாடெங்கும் திடீரென சிங்கள இராணுவத்தினர் குவிக்க பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பதட்ட நிலை ஏறட்டுள்ளது

                          ஆயுதம் தங்கிய இராணுவத்தினர் இவ்வாறு குவிக்க படுவது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது

                          நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பொருட்கள் நெருக்கடி காரணமாக
                          மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்


                          இவ்வாறான கால பகுதியில் இந்த இராணுவ குவிப்பு இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                          தொடரும் இந்த பதட்ட நிலைக்கு மத்தியில் மக்களை பாதுகாத்து கொள்வதற்கு தமது படைகள் காவலுக்கு வைக்க பட்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்

                          இலங்கை ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் வாயிலாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மக்கள் பாதுகாப்புக்கு நிலை நிறுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

                          இலங்கை தேசத்தில் மீளவும் ஒரு போர் ஆரம்பிக்க பட்டு விட்டதா என்ற சந்தேகத்தை இந்த திடீர் இராணுவ ரோந்துகளும் சோதனைகளும் மக்களுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது

                          நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்

                          மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பொருட்களை உரிய முறையில் விநியோகிக்க மறக்கும் அரசு தமது அரசாட்சியை நிலை நிறுத்தி கொள்ள மேற்கொள்ளும் இந்த விடயங்கள் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                          எதிர் வரும் சில மாதங்களில் நாடு பெரும் மோசமான நிலைக்கு செல்லும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்

                          அவ்வேளை மக்கள் புரட்சியை அடக்கவும் ஒடுக்கவும் இந்த ஆயுத படைகள் உதவிகள் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது

                          அதற்கு அமைவாக இந்த சிங்கள இராணுவ படை குவிப்பை மேற்கொள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே கட்டளை பிறப்பித்துள்ளதாக நம்ப படுகிறது

                          பதட்டமாகும் இலங்கையின் பொருளாதர நெருக்கடியும் அதானல் கோபம் கொண்டு பொங்கி வெடிக்கும் மக்களின் நீதியான போராட்டங்கள் முன்பாக

                          அதிகாரம் தமக்கு உள்ளதாக நினைத்து தம்மை அரியணை ஏற்றிய மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அடக்கி ஒடுக்க முனையு ராஜபக்சே குடும்பம்

                          இலங்கையில் மீளவும் அதிகாரத்தை நிலை நாட்டை முடிய நிலைக்கு செல்ல கூடும் என்பது தற்போது நிகழும் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

                          • வன்னி மைந்தன் –
                            Posted in உலக செய்திகள்

                            ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                            ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                            ரசியா நட்டு இராணுவத்தினர் உக்கிரேன் மீது பெரும் போர் ஒன்றை தொடுத்து வருகின்றனர்


                            இவர்களின் இந்த இராணுவ நகர்விற்கு தலைமை வகித்து வந்த முக்கிய மேயர் ஜெனரல் தரத்தை
                            சேர்ந்த Russian Major General Roman Kutuzov iதளபதி Popasna பகுதியில் மேற்கொள்ள பட்ட உக்கிரேனின் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார்

                            இவருடன் மிக பெரும் மூன்றாவது முக்கிய இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் இராணுவத்தால் படு கொலை செய்ய பட்டுள்ளனர்

                            ரசியா இராணுவத்தின் மிக முக்கிய தாக்குதல் மூளையாக செயல் பட்டு வந்த Russian Major General Roman Kutuzov படுகொலை ரசியா இராணுவத்தில் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

                            எனினும் இதற்கு பதிலடியாக ரசியா இராணுவத்தினர் உக்கிர தாக்குதல்களை உக்கிரேன் மீது மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                            பரம எதிரியாக விளங்கும் உக்கிரேன் தனது முதல் நிலை எதிரிகளிடம் இருந்து ஏவுகணைகளை பெற்று தாக்குதல் நடத்தி வருகிறது

                            ரசியாவை வீழ்த்தும் நோக்குடன் ரசியா எதிரிகளான அமெரிக்கா பிரிட்டன் தொடராக ஏவுகணைகளை வழங்கிய வண்ணம் உள்ளன

                            பல் குழல் ஏவுகனை செலுத்திகள் முன்னேறி வரும் ரசியா இராணுவத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

                            ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                            உலகில் முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரசியா உக்கிரேனில் இடம்பெற்று வரும் இந்த நூறு நாள் போரில் , ரசியாவின் ஆயுத பாலத்தின் மீதும் அந்த நாட்டு இராணுவத்தின் பலத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது

                            ராசியா அதிபருக்கு மிக நெருக்கமான நம்பிக்கை தரும் ஒருவராக விளங்கி வந்த Russian Major General Roman Kutuzov மரணம்
                            ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            உக்கிரேன் நாட்டின் இராணுவ தலைமையகம் ரசியா நாட்டின் இராணுவ தளபதியின் மரணத்தை உறுதி செய்துள்ளதுடன் அவர் இறந்து கிடக்கு காட்சிகளையும் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தி வருகிறது

                            அமெரிக்கா உளவுத்துறையினர் வழங்கிய துல்லியமான உளவு தகவலின் அடிப்படையில் ரசியாவின் முக்கிய தாக்குதல் மூளையாக செயல் பட்டு வரும் இவ்வாறான இராணுவ உயர் அதிகாரிகள் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

                            ரசியாவின் இராணுவ நகர்வுகள் அவர்களின் முக்கிய ஆயுத தளபாட நகர்வுகளை செய்மதி ஊடாக கண்காணிக்கும் அமெரிக்க்கா இராணுவம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கியா பின்னர் இராணுவம் இந்த தேடி அழிக்கும் தாக்குதலில் நடத்தியுள்ளது

                            பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய குறும் தூர ஏவுகணை செலுத்திகள் ஊடான இந்த தாக்குதல்கள் ரசியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது ,அப்படி என்றால் ரசியா

                            இராணுவம் முக்கிய தாக்குதல் நிலைகளுக்குள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்குமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

                            அதற்கான வலிந்து தாக்குதல்களை தீவிரமாக பிரிட்டன் அமெரிக்கா திட்டம் போட்டு நகர்த்தி செல்கின்றன

                            இவ்வகையான தாக்குதல் போர் மூன்றாம் உலக போர்

                            ஒன்றை நேரடியாக விரைந்து உருவாக்கும் சாத்தியங்களை அதிகரித்து செல்வதாக எதிர் பார்க்க படுகிறது

                            • வன்னி மைந்தன் –
                              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                              வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                              வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                              வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது


                              தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது

                              தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

                              வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது


                              எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை

                              வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை

                              அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,

                              தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது

                              வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                              உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்

                              மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,

                              வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                              வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .

                              • வன்னி மைந்தன் –
                                Posted in உலக செய்திகள்

                                உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                                உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                                உக்கிரேன் நாட்டின் மீது ரசியா நூற்றி இரண்டாவது நாளாக இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளது

                                கடந்த தினம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகர் மீது முதன் முதலாக ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது


                                இந்த ஏவுகணைகள் யாவும் மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது

                                கார் திருத்தும் இடம் என தெரிவித்து அங்கு வைத்து சேதமாக்க பட்ட டாங்கிகள் திருத்த

                                பட்டு வந்துள்ளது, அவ்விதமான ஆயுத கிடங்கு மீதே ரசியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன

                                இவ்வாறு ரசியா இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை தமது வான் காப்பு

                                படைகள் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது

                                கருங்கடல் பகுதியில் ஐந்து ரசியா போர்க் கப்பல்கள் திடீரென குவிக்க பட்டுள்ளது என நாம் தெரிவித்தோம் அல்லவா


                                இந்த கப்பல்கள் திடீர் குவிப்பின் பின்னால் ரசியா பெரும் தாக்குதலுக்கு தயராகும் என தெரிவித்தோம் அல்லவா தற்போது அவை இடம் பெற்றுள்ளது

                                கோடை காலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரசியா தெரிவித்ததன் நோக்கம் இது தான் போலும்

                                மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வருகின்றன ,அவர்களின் ஆயுத தொகுதிகள் யாவும் உக்கிரேனில் வைத்து அழிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

                                மேலும் மேற்குலக நாடுகள் வலிந்து போருக்கு தம்மை இழுத்து வருகிறது எனவும் அது அவர்களுக்கு சிறந்தது அல்ல எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளது

                                உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                                எதிரிகள் தம்மை வம்புக்குக்கு இழுத்தால் எதிரி கோட்டைகள் தகரும் என ரசியா காட்டமாக தெரிவித்துள்ளது

                                எதிரி நாடான உக்கிரேன் தலை நகர் தற்போது ரசியாவின் நேரடி தாக்குதல் எல்லைக்குள் உள்ளாக்க பட்டுள்ளது ,வரும் நாட்களில் அகோர தாக்குதல்

                                உக்கிரேன் தலை நகர் கீவ் மீது மேற்கொள்ள பட போகிறது என்பதற்கு இந்த திடீர் ஏவுகணை நேரடி தாக்குதல்கள் கட்டியம் இடுகின்றன

                                அப்படி என்றால் உக்கிரேன் முழுவதுமாக உக்கிர தாக்குதலை ரசியா இராணுவம் நடத்த போகிறது ,இங்கு இதுவரை பாவிக்க படாத ,புதிய வகை ஆயுதங்களை ரசியா

                                பாவனைக்கு உட்படுத்த பட போகிறது, அப்படி என்றால் பெரும் பேரழிவை உக்கிரேன் சந்திக்க போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.

                                • வன்னி மைந்தன் –
                                  Posted in உலக செய்திகள்

                                  டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் கொலை

                                  டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

                                  உக்கிரேன் மீது பாரிய இராணுவ படையெடுப்பை மேற்கொண்டு வரும் எதிரி படைகள் மீது உக்கிரேன் அரச இராணுவம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மேற்கொண்ட தாக்குதல்களில் மட்டும்

                                  ஐந்து டாங்கிகள் 13 armoured combat vehicles, 8 UAVs, and 23 pieces of automotive equipment

                                  மற்றும் எரிபொருள் பவுசர்கள் இவற்றுடன் 100 ரசியா இராணுவத்தினரும் படு கொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது

                                  நூற்றி ஒரு நாட்களை கடந்து பயணிக்கும் இந்த கொடிய போரில் தாம் வெற்றியை தம தாக்கி வருவதாக உக்கிரேன் அரச இராணுவத்தினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்

                                  முன்னேறி வரும் ரசியா டாங்கிகள் பலமாக அழிக்க பட்டு வருகிறது ,அந்த போர் ஆயுத

                                  வண்டிகளில் பயணிக்கும் இளம் வயதுடைய ரசியா எதிரி படைகளும் பலியாகி சிதறி கிடக்கும் காட்சிகள் வெளியிட பட்டு வருகின்றன

                                  துருக்கிய இராணுவத்தின் உளவு விமானங்களின் துல்லியமான களமுனை காட்சிகள் ஊடாகவே உக்கிரேனிய அரச இராணுவத்தினர் ரசியா டாங்கிகள் மற்றும் அதன் இராணுவம் மீது துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

                                  உக்கிரேன் போர்க் களத்தில் ரசியா எதிரி படைகள் பலமான இழப்புக்களை சந்திக்க துருக்கிய தயாரிப்பான ஆள் இல்லாத உளவு விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

                                  டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

                                  இதனால் என்னவோ உக்கிரேனுக்கு குறித்த உளவு விமானங்களை வழங்க வேண்டாம் என துருக்கியை ரசியா அரசு வேண்டி நின்றது

                                  இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசியா டாங்கிகளை தாம் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபாரங்களுடன் அதன் வகைகளை குறிப்பிட்டுள்ளது

                                  இந்த டாங்கிகள் யாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் அழிக்க பட்டுள்ளமையும் ,அதன் திறம்பட்ட தாக்கும் திறன் இந்த படைக்கல இழப்பின் ஊடாக உலகத்திற்கு காண்பிக்க பட்டுள்ளது

                                  உக்கிரேன் கள முனையில் ரசியாவின் டாங்கி படையின் முன்நகர்வு அளப்பரிய ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

                                  • வன்னி மைந்தன் –