Tag: அமெரிக்கா
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,
இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன
சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது
கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன
அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .
பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,
இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன
அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,
இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்
அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன
சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது
,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது
பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –
- வன்னி மைந்தன் –
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா நியுயார்க் பகுதியில் உள்ள சூப்ப மார்க்கட் ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் திடிரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் சம்பவ இடத்தில பத்து பேர்பலியாகினர் , மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்
,ஆயுத தாரியை கைது செய்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சமீப காலங்களாக இவ்விதமான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் ,அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குள் நுழைந்து எழுபது தாங்கிகளில் ஆயில்கள் மாற்று எரிபொருளை திருடி சென்றுள்ளனர்
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்துள்ள
அமெரிக்கா இராணுவம் ,இவ்விதமான திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவதும் ,இவ்விதமாக
திருடும் எண்ணெய்களை கப்பல்கள் மூலம் கடத்தி செல்வதும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்
அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்
ஈரான் சமீபத்தில் ஏவிய செய்மதி மூலம் அமெரிகாவின் கடற்படை தளத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது
இந்த படத்தில் பகைரனில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஐந்தாவது கடற்படை
தளத்தை அது வெளியிட்டு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
இது நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை தோற்றுவித்துள்ளது
வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி
வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி
வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது
மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது
இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,
அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா
புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு
உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு
உக்கிரேன் மீது ரசியா இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
,இவ்வாறான நிலையில் மேலும் உக்கிரேனுக்கு உதவும் முகமாக 150 மில்லியன் டொலர்
ஆயுத உதவிகளை வழங்கப்படுவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
உக்கிரேன் போரை பயன் படுத்தி மேற்குலக நாடுகள் பெருமளவு
ஆயுதங்களை விற்று பணத்தை சம்பாதித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ரஷிய வீரர்களை கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை
ரஷிய வீரர்களைஉக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பொதுமக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
லைவ் அப்டேட்ஸ்: ரஷிய வீரர்களை கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்கா- உக்ரைன்
05.05.2022
9.40: போரில், ரஷிய வீரர்களை கொல்வதற்கு உக்ரைனியப் படைகளுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவின் எதிர்பார்க்கப்படும் துருப்பு நினைவுகள், இருப்பிடம், ரஷியாவின் நடமாடும் ராணுவ தலைமையகம் உள்பட பிற விவரங்கள் குறித்து உக்ரைனுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக கூறப்படுகிறது.
06.40: உக்ரைனில் உள்ள 6 ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உக்ரைன் படைகளுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை வழங்க இந்த ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றத்தை அனுமதிக்க ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
05.20: ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட தென்கிழக்கு நகரமான மரியுபோல் உள்பட நான்கு நகரங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐநா மனிதாபிமான அமைப்பின் தலைவர் ஓஸ்னாட் லுப்ரானி தெரிவித்துள்ளார்.
மரியுபோல், மன்ஹுஷ், பெர்டியன்ஸ்க், டோக்மாக் மற்றும் வாசிலிவ்காவைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறெதுவும் இல்லாமல் வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.
03.50: மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை அமைந்துள்ள பகுதியில் ரஷிய படையினருக்கும், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கும் இடையே 2வது நாளாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி டெனிஸ் புரோகோபென்கோ தெரிவித்துள்ளார்.
எதிரிகளின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்த ரத்தம் சிந்தும் இந்த சண்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமது வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
02.40: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் காயமடைந்த நிலையில் பதுங்கியிருக்கும் உக்ரைன் மக்களை காப்பாற்ற உதவுமாறு, ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
குட்டரெஸ் உடன் தொலைபேசி மூலம் பேசிய அவர், ஆபத்தில் உள்ள எங்களது மக்களின் உயிர்கள் எங்களுக்கு முக்கியம் என்றும், அவர்களை காப்பாற்ற உதவுமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் உருக்கு ஆலை பகுதியில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றதற்காக ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கும் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
01.30: உக்ரைனில் ராணுவம் அல்லாத இலக்குகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனை கைப்பற்றும் ரஷியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட ராணுவம் அல்லாத இலக்குகளை குறி வைத்து ரஷிய படைகள் வெடி குண்டு மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
12.20: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அந்த பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் அந்த பகுதியில் இதுவரை மீட்கப்பட்டுள்ள மொத்த உடல்களின் எண்ணிக்கை 1,235 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் ரஷிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும்,
இன்னும் 282 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர் கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது
இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்
என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,
எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை
ஒரு டொலர் 370 ரூபாவாக அதிகரிப்பு
ஒரு டொலர் 370 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக தற்போது ஒரு
அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 370 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது
மேலும் ஆறுமாதங்களுக்குள் இதன் விலை 500 ரூபாவை எட்டி செல்லும் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு,
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பேரணிகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் போக்குவரத்துகளில் சிக்கல் ஏற்படலாம் என்றும் பல இடங்களில் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே ,இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு பேரணி மற்றும் கூட்டங்கள் நடைபெறும் பிரதேசங்களுக்கான
சுற்றுலாப் பயணங்களை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த US Ain al-Assad இராணுவ தளம் மீது ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது.
இந்த தாக்குதலின் பொழுது அந்த முகாமில் இருந்து பலத்த வெடி சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்க படுகிறது.
இதே இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மூளை கலங்கிய நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது.
அமெரிக்கா வாயில் மண்ணை தூவிய ரசியா – செக்மேட் நடவடிக்கை
அமெரிக்கா வாயில் மண்ணை தூவிய ரசியா – செக்மேட் நடவடிக்கை
தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ரூபிளில் வர்த்தகம் செய்ய 10 ஐரோப்பிய நாடுகள் சம்மதம்- ரஷியா அறிவிப்பு
ரஷிய கேஸ்ப்ரோம் நிறுவனம்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
ரஷியா உக்ரைன் போர் 64-அது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு
எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெறப்படும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபிளில்
மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷியாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி செய்வதால் இந்த அறிவிப்பு அந்நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் பல்கேரியா மற்றும் போலாந்து ஆகிய நாடுகள் அவ்வாறு ரூபிளில் பணத்தை வழங்குவதற்கு மற்றுப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த இரு
நாடுகளுக்கும் எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இரு நாடுகளையும் பொறுத்தவரையில், போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது.
இந்நிலையில் 10 ஐரோப்பிய எரிவாயு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து ரூபிளில் எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக ரஷிய எரிவாயு நிறுவனம்
கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது. இதில் 4 நிறுவனங்கள் ஏற்கனவே ரூபிளில் கட்டணத்தை செலுத்தி விட்டன. இவர்களுக்கு விரைவில் எரிவாயு விநியோகம்
செய்யப்படும். ரூபிள் வர்த்தகத்திற்கு சம்மதிக்காத நாடுகளுக்கு விற்பனை நிறுத்தப்படும் என கூறியுள்ளது.
தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தனியார் வங்கிகள்,நிறுவனங்கள் bankruptcy அடிக்க தயார் – அமெரிக்கா கவலை
இலங்கையில் தனியார் வங்கிகள்,நிறுவனங்கள் bankruptcy அடிக்க தயார் – அமெரிக்கா கவலை
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனியா
ர் நிறுவனங்கள் ,மற்றும் தனியார் வங்கிகள் என்பன bankruptcy அடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இவ்விதமான கவலையை அமெரிக்கா காங்கிரசும் தெரிவித்துள்ளது
இலங்கையில் தனியார் வங்கிகளில் பணம் வைப்பில் செய்தவர்கள் பீதியுடன் உள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்
அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு
ஒசாமா பின்லேடன்
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில்
உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீதும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா
பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்றன. பின்லேடனை பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் நேவி சீல் படைகள் ஈடுபட்டன.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பின்லேடனை உயிருடனோ அல்லது சுட்டு பிடிப்பதற்கான பணிக்காக அமெரிக்காவின்
நேவி சீல் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவானது, பின்லேடனை கொன்ற பின்பு ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்புகளை கைப்பற்றி வகைப்படுத்தியுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த இஸ்லாமிய பெண் பண்டிதரான நெல்லி லகோத் பேட்டி ஒன்றில் கூறும்போது, செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினையாற்றினர் என்று பின்லேடன் ஆச்சரியப்பட்டு உள்ளார்.
அமெரிக்கர்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி, முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தவார்கள் என பின்லேடன் நினைத்து உள்ளார். ஆனால், அவரது கணக்கு தவறாகி விட்டது.
அமெரிக்கா அவரை தேடுகிறது என அறிந்ததும், அல்-கொய்தா அமைப்பினருடன் பின்லேடன் 3 ஆண்டுகளாக தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால், 2004ல்
மீண்டும் அந்த பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளார். அமெரிக்காவின் மீது தனது புதிய தாக்குதல் பற்றி குழு உறுப்பினர்களிடம் தெரிவித்து உள்ளார்.
9/11 தாக்குதலை மீண்டும் நடத்த பின்லேடன் ஆர்வம் காட்டினார். ஆனால், விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு விசயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனை கவனத்தில் கொண்டு பயணிகள் விமானத்திற்கு பதிலாக சார்ட்டர் விமானம் ஒன்றை
கொண்டு அமெரிக்கா மீது அடுத்த தாக்குதலை நடத்தலாம் என்று அந்த அமைப்பின் சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு பின்லேடன் கடிதம் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
விமானம் வழியே தாக்குதல் நடத்துவது மிக கடினம் என்றால், அமெரிக்க ரெயில்வே மீது குறிவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிவில் என்ஜினீயரிங் படித்த
பின்லேடன், அமெரிக்கா மீது எப்படி சரியாக தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். ரெயில் தண்டவாள பகுதியில் 12 மீட்டர் அளவுக்கு வெட்டி எடுக்கும்படி கூறியுள்ளார்.
இதனால் ரெயில் தடம் புரண்டு, நூற்றுக்கணக்கானோர் செத்து மடிவார்கள் என்பது பின்லேடனின் திட்டம். இதற்காக கம்பிரசர்களை பயன்படுத்துங்கள். இரும்பு
கருவிகளையும் பயன்படுத்துங்கள் என்று பின்லேடன் தனது சகாக்களிடம் கூறியுள்ளார்.
எனினும், அதிர்ஷ்டவசத்தில், பின்லேடனால் இந்த திட்டங்களை ஒருபோதும் நிறைவேற்ற முடியாமல் போனது என்று லகோத் கூறியுள்ளார்.
இதுதவிர, கடந்த 2010ம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில், கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பெரிய கடல்வழி பகுதிகளிலும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
இதற்காக மீனவர்களை போன்று காட்டி கொண்டு துறைமுக பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.ரேடாரில் இருந்து தப்புவதற்காக குறிப்பிட்ட படகுகளை எங்கு வாங்க
வேண்டும். வெடிபொருட்களை கடத்தி செல்ல அந்த படகுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களை தனது குழுவுக்கு பின்லேடன் விவரமுடன் தெரிவித்து உள்ளார். உண்மையில்,
அமெரிக்க பொருளாதாரம் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று பின்லேடன் விரும்பினார் என்று லகோத் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்
யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஐீலி சுங் யாழ்ப்பாணம் சென்று நல்லூரில்
தரிசனத்தை மேற்கொண்டார் ,பின்னர் மக்களை சந்தித்து கலந்து உரையாடியதாக
தெரிவிக்க படுகிறது
இவரது இந்த திடீர் பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
அமெரிக்கா வாஷிங்க்டன் பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
பாடசாலையில் சிறார்களை மீட்டு வந்தவர்களே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்
இந்த் சூட்டு சம்பாவத்தை அடுத்து மக்கள் சிதறி ஓடினார்
இது குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உளளனர்
உக்கிரேனுக்கு 800 மில்லியன் டாலரில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 800 மில்லியன் டாலரில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் போர் தொடுத்து வருகிறது இவ்வேளை
உக்கிரேன் முக்கிய நகரானமரியாபோல் பகுதி ரசியா இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்துள்ளது
இந்த பகுதி வீழ்ச்சியடைந்த பின்னர் அவசர உதவியாக சுமார் 800 மில்லியன்
டொலருக்கு அமெரிக்கா உக்கிரேனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது
தமது ஆயுத பயன் பாட்டின் ஊடாக ரசியாவுக்கு எச்சரிக்கை விடுக்க அமெரிக்கா
முயல்வதும் ,இவ்வேளை ஆயுதங்களை விற்று தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் கபட நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது ,
உதவி என்ற போர்வையில் தனது வியாபாரத்தை அது செவ்வனே செய்து வருகிறது குறிப்பிட தக்கது
அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை
அமெரிக்காவின் மிதக்கும் விமான தங்கி கப்பல்களில் பணியாற்றிய இராணுவ
சிப்பாய்கள் மூவர் அடுத்தடுத்து தற்கொலை புரிந்துள்ள சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் தற்கொலை செய்தார்களா அல்லது அதற்கு ஊந்த பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
குடும்பத்தினரோ இவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என தெருவித்துள்ளனர்
23 வயது நிரம்பிய இளம் வீரர்களே இவ்விதம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்
ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்
ரசியாவின் பத்து போர் கப்பல்கள் பால்டிக் கடல் பகுதியில் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது
இந்த போர் பயிற்சியின் ஊடாக நாடுகளை மிரள வைக்கும் நடவடிக்கையில் ரசியா
ஈடுபடும் என எதிர்பார்க்க படுகிறது
எனினும் இந்த கூற்று உக்கிரேனில் ரசியா படைகள் பலத்த இழப்பை சந்தித்து வரும் நிலையில்
இராணுவ மிரட்டல்கள் பலிக்குமா எனபதே கேள்வியாக உள்ளது
வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்
வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் வீடு ஒன்றுக்குள் பெரிய முதலை ஒன்று நுழைந்துள்ளது
இந்த முதலை நுழைவை அடுத்து அங்கு நின்ற மக்கள் பதறி ஓடினர் ,பின்னர் அந்த
முதலை விரட்ட பட்டு அருகில் உள்ள நீர் நிலைக்குள் விரட்டியடிக்க பட்டது
முதலையின் தாக்குதல் இலக்கில் இருந்து குறித்த வீட்டார் தப்பித்தது கடவுள் செயல்
என சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துரைத்து வருகின்றனர்











