Tag: இலங்கை
கூரை இல்லாத -பஸ் நிலையாம் -அரசின் சாதனை
பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க
கட்டாயம் குடை வேண்டும்
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட குடாஒயா பிரேதேசத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள்
நிறுத்துவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அமைக்கபட்ட பஸ் நிலையமே இது.
தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் இன்றி பாதிக்கபட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும்
. இது வரைக்கும் திருத்தி அமைக்கபடவில்லை. இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்கூரை இல்லாத பஸ் நிலையாம்
இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம
மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி
அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும்.
இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கூரை இல்லாத பஸ் நிலையாம்

காணமல் போனார் பணியக்கத்திற்கு ஆப்பு
காணமல் போனார் பணியக்கத்திற்கு ஆப்பு
இலங்கையில் ஆளும் கோட்டபாயப அரசினால் பலத்த அதிரடி மாற்றங்கள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .
அந்த வகையில் காணாமல் போனோருக்கு உருவாக்க பட்ட காணமல் போனோர் சங்கம் கோட்டா அரசினால் கலைக்க படவுள்ளதாக தெரியவருகிறது .
இது தொடர்பான கலந்தாராய்வில் கோட்டபாய தீவிரமாக ஈடுபட்டுளளார் .இவ்வாறு இந்த அமைப்பு கலைக்க பட்டால்
அது கோட்டா அரசுக்கு சர்வதேச ரீதியில் பலத்த நெருக்குதலை கொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது
எனினும் இதனை செய்வதாக இருப்பினும் இவர் பாரளுமன்ற தேர்தல் முடிவின் பின்னரே அதனை புரிய கூடிய வாய்ப்புக்கள் கிட்டும் என எதிர்பார்க்கலாம்
அல்லாது விடின் தேர்தலில் இவருக்கு பின்னடைவை தமிழர்கள் மத்தியில் கொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பதவி இறக்க பட்ட – காவல்துறை அதிகாரி
பதவி இறக்க பட்ட – காவல்துறை அதிகாரி
இலங்கையில் இடம்பெற்ற தொடர் எட்டு குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்த பட்ட போலீஸ் அதியஸ்தகர் ஒருவர் ஆளும் கோத்தபாயா அரசினால்
திடிரெண்டு
பதவி இறக்கம் செய்யப் பட்டுள்ளார் .
போலீஸ் தலைமையகம் வழங்கிய உத்தரவின் பேரில் தற்காலிகமாக இவரது இந்த பதவி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்
இலங்கையில் -பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்
இலங்கை – காலி பகுதியில் பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை பிரிட்டன் பெண் ஒருவர் கடித்துள்ள சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பிரிட்டன் பெண் தங்கியிருந்த விடுதியை காவல்துறையினர் சோதனை புரிந்த போதே கணவனுடன் தங்கி இருந்த பிரிட்டன் பெண் இவ்வாறு அந்த பெண்ணின் கையை கடித்துள்ளார்
இலங்கைக்கு வருடம் தோறும் சுற்றுலா வரும் இவர்கள் விசா முடிவடைந்த நிலையில் அங்கு மேலதிகமாக தங்கி இருந்த சூழலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
பெண் காவல்துறை ஊழியரை கடித்த குற்ற சாட்டில் இப்பொழுது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்
தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம் செய்வதற்கு கூட இடமில்லை
தோட்ட தொழிலாளர்கள் இறந்தால் உடலை நல்லடக்கம்
செய்வதற்கு கூட இடமில்லை
மலையக தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவது யாபரும் அறிந்த விடயம். ஒருவர் இறந்தால் தனக்கு ஆறு அடி நிலமே
சொந்தம் என்றும் கூறுவர் ஆனால் அந்த ஆறு அடி இடம் கூட சொந்தம் இல்லாமல் பாதையில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் இடம்
அதாவது தோட்டம் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவில் காணப்படுகின்றது.
இந்த நல்லடக்க பூமி கண்டி நுவரெலியா பிரதான பாதையின் அருகிலேயே காணப்படுகின்றது.
ஆரம்ப காலத்தில் இவை முறையாக காணப்பட்ட போதும் கண்டி நுவரெலியா வீதி புணர்நிர்மானம் செய்யப்பட்ட போது பாதை அபிவிருத்திக்காக நல்லடக்க பூமி பாதைக்கு இறையானது.
இதனால் பெருபாலான கல்லரைகளும் புதை குழிகளும் மண் போட்டு மூடப்பட்டும் உள்ளன. இதற்கு ஒரு பொருத்தமான இடத்தினை பெற்றுக் கொள்வதற்கு தோட்ட
மக்களும் அரசியல் பிரமுகர்களும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்க் கொண்ட போதும் இதுவரை முயற்சிகள் கை கூடவில்லை.
இதனை பெற்றுக் கொடுப்பதில் தோட்ட நிர்வாகம் பல வருடங்களாக இலுத்தடிப்புகளை மேற் கொண்டு வருகின்றது. தற்போது காணப்படும் நல்லடக்க பூமி வீதி
அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகும். மலையக தேயிலைக்கே உழைத்து தேயிலைக்கே உரமாகி கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இறந்தும்
நல்லடக்கம் செய்வதற்கு கூட ஒரு பொருத்தமான இடம் இல்லாதது வேதனைக்குறிய விடயமாகும். இதை உணர்ந்து
சம்பந்தபட்வர்கள் இவர்களுக்கான தீர்விணை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்
இலங்கையில் -விகாரையை தாக்கிய யானைகள் – தப்பி ஓடிய பிக்குகள்
இலங்கை -வெள்ளவாய பகுதியில் காட்டு யானைகள் விகாரை ஒன்றுக்குள் புகுந்து திடீர் தாக்குதலை நடத்தின .
இந்த தாக்குதலிலும் விகாரை பலத்த சேதமடைந்துள்ளது ,யானையை கண்ணுற்ற பிக்குகள் அங்கிருந்து தப்பி
ஓடியதால் உயிர் தப்பித்தார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கோட்டா ஆட்டத்தை ஆரம்பித்தார் – சிங்களவருக்கு வீழ்ந்தது ஆப்பு
இலங்கையில் கோட்டா ஆட்டத்தை ஆரம்பித்தார் – வீழ்ந்தது ஆப்பு
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பபதவியேற்றுள்ள இலங்கை ஹிட்லர் கோட்டபாய
ராஜபக்சயா நாள் தோறும் புதிய அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார் . .
இலங்கை லஞ்சம் ,ஊழல் அற்ற நாடாக மலரவேண்டும் என்ற கோட் பாட்டை அவர் முன்வைத்துள்ளார் .
அதற்கு அமைவாக இன்றில் இருந்து இலங்கையில் ஆட்டோக்கள் இறக்குமதி செய்திட தடை விதிக்க படுகிறது ,
மேலும் சாரதி அனுமதி பத்திரங்கள் பெறுபவர்கள் மருத்துவ சான்றிதழ் கண்ணபிக்க படவேண்டும்
தொடர்ந்து ஜனாதிபதியாக போட்டியிடும் நபர் ஒருவித வாக்குகள் பெற்றால் அவர் ஒரு கோடி அபராதம் செலுத்த வேண்டும் ,
மேலும் பகிடி வதைகள் இடம்பெற்றால் எட்டு வரும் கல்வி பயிலத்தடை ,வீதி போக்குவரத்து காவல்துறையினரை புதிதாக நியமிக்க பட்ட இரகசிய காவல்துறையினர் கண் காணிப்பார்கள்
இவர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்ற சாட்டு உள்ளது .எனவே இவர்களுக்கு லஞ்சம் வழங்கும் நபர்களாக இந்த இரகசிய போலீசாரே செயல் .படலாம்
, அவ்வாறு லஞ்ச பெற்றால் போலீசாரை இரு நாட்களில் பணி நீக்கம் செய்ய படுவார் இதே போலவே
கோட்டா ஆட்டத்தை ஆரம்பிதர் – சிங்களவருக்கு வீழ்ந்தது ஆப்பு
பாட சாலைகளிலும் ஆசிரியர்கள் லஞ்சம் பெற்றால் அவர்களுக்கும் இதே நிலை
என மக்களை ஒழுங்கு படுத்தும் ,வெள்ளையர்கள் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் போல கோட்டபாய கொண்டு வந்துள்ளார் .
இது நாம் தமிழர் சீமானை காப்பி அடித்து கோட்டா வெளியிடுவதாக தெரிகிறது ,எனினும் இது வரவேற்க பட கூடிய ஒன்றாக உள்ளது .
லஞ்சத்தில் ஊதி பெருத்த சிங்களவர்கள் கோட்டபாய போடும் இந்த அதிரடி உத்தரவுகளிற்கு அடிபணிந்து செல்வார்களா …?
அல்லது இவரது ஆட்சியை கலைக்க முறைப்படுவார்களா ….?
லிபியாவின் கடாபி போல இலங்கையை மேலும் இருபது ஆண்டுகள் ஆண்டுவிட மகிந்த தரப்பு முனைவதை இந்த செயல் பாடுகள் எடுத்து காட்டுகின்றன .
எனினும் இந்த சர்வாதிகார போக்கு நாப்பது ஆண்டுகள் நோக்கி பயணிக்கும் எனின் உலக சண்டியர் அமெரிக்கா
தென் ஆசியாவிற்குள் ஊடுருவும் நாளை எதிர்பார்த்து கொண்டுள்ளது .
இந்த வேளையில் தமிழர்கள் பிரச்னை மீளவும் ஊந்தி தள்ள பட்டு இலங்கை ஒரு சுடுகாடாக மாற்றம் பெறும் நிலை உருவாகலாம் என்றே எதிர்பார்க்க படுகிறது .
நகர்ந்து செல்லும் காலங்கள் பல எதிர்மறை மாற்றங்களை இலங்கை,மற்றும் இலங்கை பிராந்தியத்தை சுற்றி வளைக்க போகிறது .
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அகல கால் ஊன்றிய நிலையில் அமெரிக்கா சீனா ,போர் இலங்கையில் இருந்து வெடிக்கும் சூழல் உள்ளது .
இதற்கு தமிழர்கள் தள்ள பட போகின்றனர் ,ஆம் அமெரிக்கா இலங்கைக்குள் காலடி வைத்தால் அவனை அகற்ற முடியாது என்பதற்கு ஈராக் ஒரு எடுத்து காட்டாக உள்ளது .
தமிழர் பிரச்சனைக்கு தீர்வை கண்டு ஆளும் இலங்கை அரசு செல்ல வேண்டும் தவறின் அமெரிக்கா சார்பு மேற்குலக
நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பதும் ,சீனா இந்தியாவுக்கும் எதிராக அவர்கள் களம் திரும்புவதும் தடுத்துவிட முடியாது
இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் இதனை சிந்திப்பார்களா …? ஈராக்,ஈரான் எதிரி நாடுகள் இன்று இவ்வாறு ஒன்றிணைந்தன .? இதற்கு காரணம் என்ன ..?
பவுத்த மத வெறியை தகர்த்தி முரண்பாடுகளை தீர்த்து வெளியில் இருந்து பெருக்கெடுக்கும் ஆபத்தை தனித்து ,
இணைந்த இலங்கைக்குள் இரு இனங்களும் நின்மதியாக வாழ வழிவகுக்க வேண்டும் .
இல்லாது விடின் மீளவும் இலங்கையில் முஸ்லீம்கள் பெயரால் பெரும் அழிவுகள் நடத்த படும் .பயங்கரவாதம் என்ற
போர்வையில் மீளவும் இலங்கையில் போர்க்களம் ஆகும் .இதனை எதிர்வரும் காலங்கள் வரலாறாக பதிய பெற போகின்றன .
அதற்குரிய ஆடுகளம் இப்பொழுது மலர்கிறது ,உஷாராகுமா …? இந்தியா ,இலங்கை ..?
பிராந்திய நலனை பாதுகாக்குமா ..? video
- வன்னி மைந்தன் –
பாட சாலைக்கு கணனி கையளிப்பு..
இலங்கையில் – பாடசாலைக்கு கணனி கையளிப்பு..
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கெட்டபுலா இலக்கம் 02 தமிழ் வித்தியாலய பாட சாலைக்கு கணனிகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .
முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிஸ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் தோட்ட பொது மக்கள் உட்பட கட்சியின் உயர் அங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.


புலியை அடித்து கொன்ற கும்பல் கைது
காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது
இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .
மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

கடல் கரையில் கரை ஒதுங்கிய குப்பைகள்
கடல் கரையில் கரை ஒதுங்கிய குப்பைகள்
இலங்கை – கடற்கரை பகுதியில் சுமார் மக்காத நான்கு லட்ஷம் பிளாஸ்டிக் ரக வகையிலான குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன .
நாட்டின் கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்கள் குப்பைகளை கடலில் கொட்டியதன் விளைவாக இவை கரை ஒதுங்கியுள்ளன
சுத்தமான நாடக இலங்கையை வைத்திருக்க வேண்டும் என ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பல்வேறு பட்ட அதிரடி
உத்தரவுகள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இந்த சம்பவங்களை கட்டு படுத்த இயலவில்லை

இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்
இலங்கையில் =-இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்
துண்டாடப்படும் பயணிகளின் பஸ் நிலையம்
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் தவலந்தன்ன நகரத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது.
இந்த பஸ் நிலையமானது பல நூறு வருடங்களாக மக்களின் போக்குவரத்துக்காக பாவிக்கபட்டு வருகின்றது.
இந்த பஸ் நிலையத்தை வீதி போக்கவரத்து அதிகாரபை நிர்வகித்து வந்த போதும் தற்போது பஸ் நிலையம் உடைந்த நிலையில் மக்களின் தேவைக்கு ஏற்ப செயற்படாமல் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த பஸ் நிலையத்தில் நுவரெலியா வெளிமடை கதிர்காமம் பண்டாரவலை பதுளை போன்ற நகரங்களுக்கு
செல்லும் அனைத்து பிரதான பஸ்களும் மேலும் அருகில் உள்ள சிரிய நகரங்களுக்கும் பல கிராமங்களுக்கும் செல்லும் பஸ்களும் நிருத்தப்படுகின்றன.
இந்த நகரத்திற்கும் அருகில் உள்ள பதிய நகரமான கொத்மலை நகரத்திற்கும் நாளாந்தம் பிரதேச மக்கள்
தங்கள் தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கும் ஆயிரம் கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்த நகரத்தில் பிரதேச செயலகம்¸ பொலிஸ் நிலையம்¸ தபால் காரியாலயம்¸ கமத்தொழில் காரியாலயம்¸ போன்ற அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் அரச மற்றும் இடிந்து விழும்
வங்கியும் பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. இவற்றின் தேவைகளுக்காக வருபவர்கள் தங்களின் ஊர்களுக்கு பஸ்சிற்காக இந்த பஸ்
நிலையத்திலேயே காத்து நிக்கின்றனர். மழை காலங்களில் நிற்க கூட முடியாது. இந் நிலையில் இதனை திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

சிக்கியது ஆறு கோடி தங்கம்
இலங்கை விமான நிலையத்தில் ஐந்து கோடியே 80, கோடி தங்கம் பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான
நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் குறித்த அதிகாரி இன்று காலை கைது
செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பிரிவின் மேலதிக பணிப்பாளருமான ஜெனரல் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
விமான நிலையத்திற்குள் பயணிகள் பொருட்களை கொண்டுச் செல்வதற்கு உதவி புரியும் போட்டர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்து 6 கிலோ 500 கிராம் நிறையுடைய 65 தங்க பிஸ்கட்டுகளை விமான
நிலையத்திற்குள் உட்செல்லும் வழியின் ஊடாக கடந்த முற்பட்ட போதே அவர் செய்யப்பட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய
விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது .
அதன் வேட்பாளர்களும் கடுமையான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இதில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது கோட்டபாய ராஜபக்ஸே தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்க படும் பொருட்களுக்கு வரி விலக்க படும் என கோட்டபாய வாக்குறுதிகளை அள்ளி விதைத்து வருகின்றார் .
விவசாயிகளுக்கு திடீர் ஐஸ் வைக்கும் கோட்டபாய ராஜபக்ஸே பிரச்சாரா பீரங்கி வேட்டு தாக்குதல் அதிக வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கம் கொண்டவை .
அதனை இலக்கு வைத்தே கோட்டபாய ராஜபக்ஸே தனது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி வருகிறார் .
ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு
ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு
இலங்கை பூண்டுலோயா பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இவர் எவ்விதம் இந்த இந்த ஆயுதங்கள் பெற்று கொண்டார் என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
காவல்துறை மேற்கொள்ளும் விசாரணையில் இருந்து இருந்தே பின்புலத்தில் செயல் படும் ஆயுத வியாபார கும்பல் தொடர்பான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .
எதிரிகளை கொலை செய்யும் நோக்குடன் இந்த ஆயுதங்கள் எதிரி குழுவால் வழங்க பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் சூளுரை விடுத்துள்ளார் .
காலி, மாபலகம பகுதியில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச இவ்விதம் கருத்து தெரிவித்தார்.
இதன் போது வௌ்ள நீரே மாபலகம பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என சஜித் பிரேமதாசா சுட்டிக்காட்டினார்.
இதனால் அரசாங்க பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவரை இப்பகுதிக்கு அனுப்பி இங்கு ஏற்படும் வௌ்ள நீர் அபாயத்தை கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றோம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
நான் நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தால் பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார் .
காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்
காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்…!
காலி – அகுரெஸ்ஸ வீதியின் இமதுவ அகுலுகங்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மின்சார சபைக்கு சொந்தமான லொறி ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும்
ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 7 பேர் காயமடைந்த நிலையில், கராபிட்டிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
நெஞ்சுக்குள் நெருக்கமாய் நின்றவரே
நெடுநாளாய் நெஞ்சுக்குரம் தந்தவரே ..
உன் ரேகை பார்த்து உளம் நொந்தேன் …
உன் வலியின் உயிர் அறிந்தேன் …
நேற்றைக்கும் இன்றைக்கும் நீ இருப்பாய்
நினைவிலே என்றும் நீ உதிப்பாய் …
பொண்ணுக்கும் பொருளுக்கும் ஆசையிலான்
பொழிவிலா உடலை ஏன் பறித்தான் …
கண்ணுக்குள் உலா வரும் உன் உடலை
கை தொழுதான் ஏன் பறித்தான் …?
என் செய்தி கேட்டு நீ வீழ்ந்தாய் …?
ஏன் இத்தனை வேகத்தில் நீ மறைந்தாய் ..?
உன்னிடம் கற்றதை சொல்லிடவா …?
உள்ளத்தில் வைத்ததை கொட்டிடவா ..?
மடியாத நம்பிக்கை நான் முகர்ந்தேன்
மணம் வீசும் காதலை யான் உணர்ந்தேன் …
கூணாத உழைப்பை நான் சுவைத்தேன்
குன்றாத வீரத்தை யான் படித்தேன் …
மன்றாட்டம் இல்லா பேச்சை கண்டேன்
மரியாதை பொழிகின்ற அகவை கண்டேன் …
விரைவாக பிடித்த மொழியை கண்டேன்
வீழாது எழுகின்ற வேகம் கண்டேன் …
முடியாது என்ற சொல்லை மறந்தேன் – உன்
முயற்சிகள் கண்டே யான் வியந்தேன் …
அகவையில் நீ வயதானாய்
அகத்திலே நீ உயர்வானாய் …
பிடித்ததை பேசும் பண்பானாய் – நூல்
பிடித்ததில் படைக்கும் படைப்பானாய் …
கண்டவை உன்னில் நூறெனலாம் – யான்
கற்றது தூசென சொல்லிடலாம் …
சொற்ப நேரத்தில் கண்ணுற்றதை
சொல்லிட நாள் ஒன்று போதாது …
ஒரு நாள் உன்னாலே நான் துடித்தேன்
ஒயாத உன் நினைவால் நான் துவண்டேன்..
உன்னரு ஓர் நாள் உட்கார்ந்து
உறவாடிய நாளது பொற்காலம் …..
பிள்ளைக்கு பிள்ளையார் பெயர் வைத்தவா
பிரியமாய் அவனை உளம் கொண்டவா ..
உன்னாலே தவிக்கிறோம் நீ காணாய்
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/07/2019
குறிப்பு –
ஐங்கரன் தந்தையார் துயர் அறிந்து ….
அவர் பாதம் இதனை நான் விரித்தேன் …
நெஞ்சுக்குள் நிற்கின்ற நினைவொன்றின்
நியமான தடத்தில் நான் படைத்தேன் …!









