சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்

Spread the love

சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் தமிழர்களை கோரமாக கொன்று குவித்தவரும் ,இன்றைய

மகிந்த கோட்டபாய அரசுகளின் நேரடி எதிரியுமாக விளங்கும்,விளங்கி வரும் சரத் பொன்சேகா கைது செய்ய படும் அபாயம் எழுந்துள்ளது .

கோட்டா ,மகிந்த சிந்தையின் நேரடி கைது வேட்டை பட்டியலில் இவரும் ஒருவராக இடம் பிடித்துள்ளாராம் .

விரைவில் இவரும் கைது செய்யப் படலாம் என கொழும்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன .

பழி வாங்கும் அரசியலை நடத்தி செல்லும் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயவின் கழுகு


பார்வை இவர் மீதும் வீழ்ந்துள்ளதாகவே அந்த உள்ளக வட்டாரங்கள் அலசுகின்றன.

இவ்வாறான தொடர் கைதுகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஆளும் அதிபர் கோத்தபாயாவுக்கு ஏற்படுததலாம் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .

அவர் அதனையும் தாண்டி சிங்கள பவுத்த மக்கள் தனக்கு தகுந்த வாக்கினை வழங்கி தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வைப்பார் என நம்புகிறார்

இது சாத்தியமா என்பதை எதிர்வரும் பங்குனி மாதம் தெரியவரும் .

Leave a Reply