கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார் நீதிமன்றத்திற்கு வருமாறு தற்பொழுது அவருக்கு சமன் விடுக்கப்பட்டுள்ளது.Gotabaya’s secretary gets caught.

ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .

அதன் தொடர்ச்சியாக அவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இப்பொழுது நீதிமன்ற சமன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவும்பேரில் சிறை வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமன் எக்க நாயக்க கோத்தபாயவின் ஆட்சியில் செயலராக விளங்கி இருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம்

அவரே இப்பொழுது ரணில் மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பின்புலத்தில் செயல்பட்டார் என்ற காரணத்தினால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.

இவரை அடுத்து முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்

மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதால் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் .

எம்பி பதவியை ரணில் விக்கிரமசிங்க இழந்து தவித்த நிலையில் இலங்கையின் ஜனாதியாக மாற்றம் பெற்றுள்ள ரணில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயா மற்றும் ராஜபாக்ஸ குடும்பத்தை பாதுகாப்பதில் குறியாக உளளார்.

இவர்களது சொத்துக்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு ரணில் தொடர்ந்து உதவி வருகிறார்.

உலக நாடுகளில் எங்கும் தங்க முடியாத நிலையில் கோட்டபாய சிக்கி தவித்து வருகிறார் .

இவரை போர்க் குற்ற சாட்டில் கைது செய்து விடுவார்கள் என்கின்ற பீதியில் கோட்டபாய இலங்கை திரும்புகிறார்.

அவ்வாறு இலங்கை வரும் இவர்களை ஒட்டு மொத்தமாக காப்பாற்றுவதில் ரணில் விக்ரமசிங்க உதவி புரிந்து வருவதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

மகிந்தா குடும்பத்தினை பாதுகாக்க தவறினால் இரண்டு வருடஙக்ளுக்கு உள்ளாகவே ரணில் ஆட்சி கவிழ்க்க பட்டு அவர் ஜனாதிபதி பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் ரணில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளார்

    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

    கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

    கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

    ,

    இலங்கையில் மக்களினால் துரத்த பட்ட ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியான வரலாறு இடம்பெற்றுள்ளது .


    ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பு அங்கத்துவத்தை இழந்த நிலையில் இன்று இலங்கையின் ஜனாதிபதியானார் .

    யாரும் சற்றும் எதிர் பார்த்திராத அரசியல் சித்து விளையாட்டில் ரணில் வென்று முடி சூடினார் .


    பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் வாக்குகள் சிதறடிக்க பட்டு அரியணையில் அமர்ந்தார் .

    இந்த அரியணை ஏற்றத்திற்காக பல கோடிகள் பேரம் பேச்சில் மாற்ற பட்டுள்ளன .

    தனது ஜனாதிபதி ஆசையையும் வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி என்கின்ற கீரீடத்தையும் ரணில் தட்டி சென்றுள்ளார் . எனினும் இவரது ஆட்சி 18 மாதங்களில் கவிழ்க்க படும் நிலையே உள்ளது.

    அதன் பின்னர் பொது தேர்தலை சந்திக்க வேண்டும்.

    இதற்குள்ளாக கொந்தளித்த மக்களை குஷி படுத்த வேண்டும் மீளவும் இயல்பு நிலைக்கு நாட்டை அழைத்து செல்ல வேண்டும் .

    அவ்விதம் வென்றால் மட்டுமே தனது கட்சியை காப்பாற்றி கொள்வதுடன் மேலும் மக்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

    ஆனால் மக்கள் விதிக்கும் கோரிக்கை என்னவென்றால் ராஜபக்ச அரசின் லஞ்ச ஊழல் மோசடி விசாரிக்க பட வேண்டும் .

    மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மீள நாட்டுக்கு கொண்டுவரப் படவேண்டும் ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்க படவேண்டும்

    இவ்வாறான பலத்த சவாலுக்கு மத்தியில் ரணில் போராட்டம் இடம்பெறுகிறது.

    தான் ஜனாதிபதியானேன் என்ற மமதையை ரணில் விக்கிரமசிங்காவில் காண முடியவில்லை .மேலும் எதிர்கால நெருக்கடியை எவ்வாறு கையாள போகிறார் என்பதே ரணில் உடல் அசைவில் அவதானிக்க முடிகிறது .

    தனக்கு எதிராக கொதித்துள்ள மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ன செய்ய போகிறார் …?


    கோட்டாவை போல ரணிலும் விரட்டியடிக்க படுவாரா..? அல்லது மக்கள் போராட்டத்தை நீர்த்து போக வைப்பாரா ..?

    மக்கள் கொதிப்பு இவ்விதம் எழுந்தால் ரணில்விக்கிரமசிங்கா கோட்டாவை போல விரட்டியடிக்க படுவார் என்பதே களநிலவரம் .

    மக்கள் கோரிக்கைக்கு கட்டு பட்டு பதவி விலகும் நிலையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும் என்பதை இப்பொழுதே இங்கே பதிந்து வைக்கிறோம் .

    மக்களை கட்டாய படுத்த பல இலவச அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் ,அதில் மயங்கி மக்கள் ரணிலை மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே சந்தேகமாக உள்ளது .

    கடன் தள்ளுபடி என்பன இதனை காண்பிக்கிறது .ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான மறு மணித்தியாலம் சர்வதேச நாணய நிதியம் பேசிட அழைக்கிறது .

    அவ்வாறு எனின் ரணில் விக்கிரமசிங்காவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் யாவும் நடக்கிறது என்பதை இதன் மூலம் கணிக்க முடிகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்

      இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்

      இலங்கையில் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயா அரசு நாள்தோறும் அதிரடி அறிவிப்புக்களை ,புதிய

      நடைமுறைகளையும் புதிதாக அமூல் படுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது .

      இதன் அடிப்படையில் சமீப நாட்களில் இலங்கையில் சொத்துக்கள் வாங்குபவர்கள் அதனை ஐந்து வருடத்திற்கு

      முன்னர் விற்பனை புரிந்தால் ,ஐம்பது வீதம் வரிசெலுத்த வேண்டும் என


      கோட்டா அரசு அறிவித்துள்ள நிலையில் புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கையில் அசையா

      சொத்துக்களை வாங்கி குவிப்பதில் பின் நகரத்து செல்கின்றனர் .

      இங்கிருந்து வந்து இலங்கையில் பல வணிக வளாகங்கள் ,மற்றும் கல்யாண மண்டபங்கள் ,விவசாய காணிகள்

      இலங்கையில் சொத்து வாங்க அஞ்சும் -வெளிநாட்டு தமிழர்

      ,பண்ணைகள் என பல் துறை சார் விடயங்களை மேற்கொண்ட தமிழர்கள்

      அச்சத்தின் பிரதி காரணமாக பின்வாங்கி செல்வதுடன் ,அவர் தாம் வாழும் வெளிநாடுகளில் அசையாத

      சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தீவிர கவனம் செலுத்து வருகின்றனர் .

      கோட்டபாய அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்கள் ,மற்றும் கட்சிகளுக்கு பேரம்பேசி லஞ்சம் வாங்கி கொடுக்கும் முகவர்கள்,தரகர்கள் ,ஐடியா மணிக்கல் கூட இந்த

      விடயத்தை அவருக்கு எடுத்து விளக்கி அதனை மாற்றம் செய்திட முனைய வில்லை என்பது கவனிக்க தக்கது .

      இலங்கையின் வடக்கு ப்குதியில் அசையாத சொத்துக்கள் வாங்கிய தமிழர்களில் சிலர் நம்முடன் உரையாடும் பொழுதே மேற்படி விடயத்தினை தெரிவித்தனர் .

      செல்வந்தர்களாக விளங்கும் இவர்களது எண்ணங்களில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளவர் , ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மாற்றம் பிடித்துள்ளார்

      புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை இலங்கையில் முதலீடு புரியுமாறு அழைப்பு விடுத்துள்ள கோட்டா அரசு ,இவ்விதம் திடீர் சட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதால் இவர்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது .

      தொலை நோக்கு சிந்தனை அற்ற நிலையிலும் ,தமிழர் ,அல்லது இலங்கையர் மன நிலைகளை அறிந்து கொள்ள மறந்து இயல் படும் கொள்கை அற்ற

      இனவாத சிந்தனை செயல் திட்டத்தின் செயல் வழி கதாநாயகனாக ஆளும் அதிபர் கோட்டபாய விளங்கி வருவதை, இவர்கள் என்ன மாற்றத்தின் புரிதல் ஊடாக அவதானிக்க முடிகிறது

      • வன்னி மைந்தன் –