ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் உயிர் ஆபத்து கருதி வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி
சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் வாலிபன் ஒருவர் ,துருக்கி அருகில் உள்ள கிரீஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்க பட்டுளளார் .
இதே எல்லை பகுதி ஊடாக துருக்கிக்குள் நுழைய முற்படும் நபர்கள்,அல்லது துருக்கியில் இருந்து வெளியேறி
ஐரோப்பா எல்லைக்குள் நுழைய முனைபவர்கள் மீது அந்த நாட்டு இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .
அவ்வாறே இவரும் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது .
வெளிநாடுகளுக்கு என தமது உயிரை பணயம் வைத்து வெளிக்கிளம்பி வரும் தமிழர்கள் ,ஆபத்தான பகுதியான
,போலந்து நதிக்கரையில் ,மற்றும் ரசியா,துருக்கிய பகுதியில் சடலங்களாக மீட்க பட்டமை வரலாறாக உள்ளது