Tag: பொன்சேகா
மரண தண்டனை மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா வேண்டுதல்
மரண தண்டனை மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா வேண்டுதல்
மரண தண்டனை மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா வேண்டுதல் ,அமரகீர்த்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில்
கொழும்பில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இந்த மாநாட்டின் போது, அத்தகைய நபர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பது ஜனாதிபதியால் ஒரு பேனாவைத் தட்டுவதன் மூலம் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
“அமரகீர்த்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள்.
அத்தகைய நபர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பது என்பது ஜனாதிபதி ஒரு பேனாவைத் தட்டுவதன் மூலம் செய்ய வேண்டிய ஒன்று” என்று அவர் கூறினார்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை
செய்யப்பட்ட வழக்கில் 12 பேருக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி, கம்பஹா உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு, மரண தண்டனை விதித்தது.
பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் ,2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய
மேலதிக விசாரணை
முயன்றதாகக் கூறி மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சியாளர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்ய மற்றொரு
திகதியை வழங்குமாறு முறைப்பாட்டு தரப்பு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தை கோரினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறித்த வழக்கில் மேலதிக சாட்சி விசாரணையை ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய சதி
செய்தமை உட்பட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு அமைய 27 குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று
பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா
தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா
தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா ,ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என பதிலளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில், தனது பொது பேரணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து மக்களை பேருந்துகளில் அழைத்து வரவில்லை என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு முந்தைய நாள் இரவு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
எனது பொதுக்கூட்டத்தில் ஒரு நபராக இருந்தாலும், ஐந்து, பத்து, ஐம்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொண்டாலும், எனது விசுவாசமான கட்சி ஆதரவாளர்கள் என்பதால் 1000 பேரை விட, அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள்,” என்று கூறினார்.
2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்ததன் பின்னர், அபிவிருத்திக்காக பாடுபட முயற்சித்ததாகவும், பல தடைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இந்த நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்றால், அதுவே தமது விருப்பமாகும் எனவும் தெரிவித்தார்.
எஸ்.ஜே.பி தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், பல முக்கிய அரசியல் கட்சிகளில் கைகோர்க்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக அத்தகைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் அழைப்பை நிராகரித்ததாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் தனது தேர்தல் பேரணியின் காணொளி பொதுமக்களின் அரசியல் அறிவாற்றலை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம் ,ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதவியில் இருந்து ராணுவ தளபதி சரத் போன்ற பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக செயலாற்றுகின்ற நடவடிக்கையில். ஒரு அங்கமாகவே இந்த பதவியை விலகி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆளுகின்ற சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு மகத்தான வரவேற்பு உள்ளதாக நம்பி ,குதிக்கும் ரணில் விக்கிரமசிங்காவும் சரத் பொன் ஜெயகாவும் இந்த தேர்தலில் தோற்கடிப்பதற்கான வகையில் ஒன்றாகவே இந்த களத்தை பார்க்க முடிகின்றது.
புலிகளையும் அதனுடைய தமிழ் மக்களையும் இறுதி யுத்தத்தின் போது தானே கொன்று குவித்தது தான் என்கின்ற இனவாதத்தை கக்கி , மக்களுடைய வாக்குகளை சூறையாடி வந்த சரத் பொன்சேகா இப்பொழுது ஜனாதிபதியாகி விடுவேன் என்ற இறுமாப்பில் இந்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
தமிழர்கள் முன் குரல் முன்னெடுக்கின்ற பொழுது ஒற்றுமையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விடுவேன் என்ற வரிசையில் இடைவிடாது பேசி வருகின்ற, சரத் பொன்சேகா தற்பொழுது இனவாதத்தைக் காக்கி தேர்தலில் வெல்வதற்காக சிங்கள மக்கள் வாக்குகளை சேகரிக்க நடவடிக்கை ஈடுபட்டு இருக்கின்றார்.
சுகபோகங்களுக்காக கட்சிகளை மாறி தமது சுயநலத்துக்காக விலை போகின்ற அரசியல் வியாபாரிகளாக ஒருவராக தற்பொழுது பொன்சேகா மாற்றம் பெற்றுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
நல்லிணக்கம் நல்லாட்சி என கூவி பெறுகின்ற ஆண்டு ஆளுகின்ற கட்சிகள் யாவும் அதனை மறந்து விட்டு தமது கட்சிகளை பாதுகாத்து ,தமது குடும்ப வியாபாரங்களை உயர்த்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு செயல் அணியின் ஒன்றாகவே இந்த பொன் செய்காவினுடைய இந்த விழாக்களும் அறிவிப்பும் காணப்படுகின்றது.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா
ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேகா ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகோ அறிவித்துள்ளார்.
இறுதி யுத்தப் பகுதியில் தமிழர்களை அழித்து மிகப்பெரும் நயவஞ்சகத் தாக்குதலையும் மேற்கொண்ட ஒரு இனவாதியாகவும் இராணுவ தளபதியாகவும் சரத் பொன்சேகா விளங்குகின்றார் .
அவ்வாறான நிலையில் அவர் தற்பொழுது ஜனாதிபதியாக வேட்பாளராக போவதற்கான தேர்தல் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் இவர் மக்களுக்கான வாக்குகளை சிதைக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபட உள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
சஜித் அணியில் இணைந்து செயல்பட்ட இவர் அதிலிருந்து விலகி தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போகிறார் என்கின்ற விடயமே தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
சஜித்துக்கு எதிராக பல்வேறுபட்ட கருத்துக்களை இவர் முன்வைத்து வந்தார்.
அவ்வாறான நிலையில் தற்போது இவரை அந்த கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கட்சியினுடைய ஸ்தாபித்து அதனுடன் பயணித்து வருகின்றார் அவ்வாறு ஜனாதிபதி தேர்தல் இவர் போட்டியிட்டால் இவருக்கு வேகமான வாக்குகள் கிடைக்கப்பெறுமா என்கின்ற தகவலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் தமிழர்களையும் புலிகளையும் தானே அழித்தேன் என தேர்தல் பிரச்சாரங்களில் இவர் சிங்கள மக்கள் மத்தியில் பேசி வந்தார்.
அவ்வாறு இனவாதத்தை கக்கியும் தமிழின படுகொலை யை நியாயப்படுத்தியும் அவ்வாறு செய்தது சரிதான் என்பதை கூறிவந்த இவரை ,தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் இன்றைய கேள்வியாகவும் இருக்கின்றது.
பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில் ,இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது மண்ணின் மைந்தர்களையும் அழித்து சாதனை படைத்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .
போரில் வெற்றி கொண்டதன் ஊடாக ,அடுத்த தலைமுறையினர் இந்த யுத்தத்தை நோக்கி செல்லக்கூடாது என்பதாக ,தான் இந்த நூலில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
போரை ஒருபோதும் எமது மக்கள் விரும்பவில்லை ,அதனை மீளவும் நாங்கள் ஏற்படுத்தக் கூடாது, மக்கள் சமரசமான முறையில் செல்வதன் ஊடாகவே ,நாட்டை கட்டிக் காக்க முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
ஆனால் அவரது நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை, அந்த நூலை படிக்கின்ற பொழுது தெரியும் .
இலங்கையினுடைய மிக முக்கியமான இனவாதியாக சரத்பொன்சேகா காணப்படுகின்றார்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான ,பல்வேறுப்பட்ட நாசகார தாக்குதலை முன்னின்று நடத்தி ,அந்த அமைப்பை அழித்தவர்களில் ,இவர் முதல்நிலை வகித்தார் .
மஹிந்த ராஜபக்சவன் ஆட்சி காலத்தில், இலங்கையினுடைய ராணுவ தளபதியாக விளங்கிய ,பொன்சேகாவை விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் .
மஹிந்த ராஜபக்சுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதை அடுத்து, அது மகிந்த ராஜபக்ச, மற்றும் எதிராக போட்டி இட்ட நிலையில் ,கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் பழிவாங்கப்பட்டார் .
அவ்வாறான நிலையில் இன்றைய ஆளும் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ,பொன்சேகாவின் நூலை பெற்றுக்கொண்டு ,அதனை வெளியீடு செய்து வைத்தார் .
இதனூடாக சிங்கள மக்கள் மத்தியில், இந்த நூல் வேகமாக விற்பனை செய்ய தயாராகி வருகின்றது .
வரும் நாட்களில் இந்த நூலில் உள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழர்களை அவர் தம் மண்ணுக்காக போராடியவர்களை அழித்த இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ,அரசியல் புயலை கிளப்ப இந்த நூலை வெளியிட்டுளளார் என தெரிவிக்க படுகிறது .
கோட்டாவுக்கு ஆதரவாக நூலை எழுதிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சராய்க்கு இந்த நூல் சாட்டையடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

பழைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக் கூடாது பொன்சேகா
பழைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக் கூடாது பொன்சேகா
புதிதாக ஐக்கிய மக்கள் சக்தியில் பிறர் இணையும் போது, ஏற்கனவே கட்சியில் தற்போதைய இருந்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“புதியவர்களுக்கு இடமளிக்கும் போது 2020 இல் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட SJB இன் தற்போதைய உறுப்பினர்கள் பாதிக்கப்படக்கூடாது” என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“கட்சி மாறி வந்தவர்கள் கட்சியின் ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கட்சித் தலைவரைக் காட்டிலும் கட்சியின் சாதாரண உறுப்பினர்களுடன் பழக வேண்டும் என்பதால் இது அவசியம்,” என்று அவர் மேலும் கூறினார்.
நான் அவரின் காலில் விழவில்லை பொன்சேகா
நான் அவரின் காலில் விழவில்லை பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவம் தொடர்பில் அடிப்படை அறிவு கூட இல்லை. அதன் காரணமாகவே அவர் எனக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் நிலையை விமர்சிக்கின்றார்.
எனக்கு என்றாவது ஒரு நாள் அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாடம் புகட்டுவேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் எனக்கும், சிறானி பண்டாரநாயக்கவுக்கும் எவ்வாறு நியாயம் வழங்குவது என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்ற முன்மொழிவு காணப்பட்டது.
இவற்றுக்கு இணக்கம் தெரிவித்த பின்னரே பொது வேட்பாளராக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்காக 100 தேர்தல் பிரசார கூட்டங்களை நான் நடத்தியிருக்கின்றேன்.
நான் அவரின் காலில் விழவில்லை பொன்சேகா
தேர்தல் கூட்டங்களில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட் ஐக்கிய தேசிய கட்சியின் அனைவரும் பாரிய அர்ப்பணிப்புக்களை செய்தனர்.
ஆனால் பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் அவர்கள் அனைவருக்கு எதிராகவும் செயற்படத் தொடங்கியவரே மைத்திரிபால சிறிசேன. இராணுவத்தைப் பற்றி அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை.
இங்கிலாந்தில் இராணுவத்தளபதியாக பதவி வகிப்பவர்கள் பீல்ட் மார்ஷல் ஆவர். ஆனால் அந்நாட்டு இராணுவத்தில் 80000 சிப்பாய்கள் மாத்திரமே இருப்பர். பீல்ட் மார்ஷல் பதவிக்கும் சிப்பாய்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பில்லை.
மஹிந்த ராஜபக்ஷ எனது கேர்ணல் நிலையை நீக்கிய போது, எனக்கு பீல்ட் மார்ஷல் நிலையை வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்தது.
அந்த வாக்குறுதியையே மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றினார். மாறாக அவரது கால்களில் விழுந்து நான் பீல்ட் மார்ஷல் நிலையைப் பெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான சூழலை மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் எவ்வாறு உருவாக்கினர் என்பதை நான் பாராளுமன்றத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன்.
என்றாவது ஒரு நாள் எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு நான் பாடம் புகட்டுவேன். சட்டம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன என்பதை அவருக்கு கற்றுக் கொடுப்பேன் என்றார்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்புby நிருபர் காவலன்
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைதுby நிருபர் காவலன்
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைதுby நிருபர் காவலன்
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்ததுby நிருபர் காவலன்
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்க்களின் பாதுகாவலன் அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் சுத்தப்படுத்துபவர் என்றும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது
என்றும் தெரிவித்த முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அது குறித்து விசேட கவனம் செலுத்தி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலனாய்வுப் பிரிவின் பிரதானியான சுரேஷ் சலே தொடர்பில் சனல் 4 காணொளியில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது புலனாய்வு பிரிவில் இருந்து கொண்ட, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வு பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
சனல் 4 வெளியிட்டுள்ள ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது .
தெரிவுக்குழுக்கள் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிவோம். ஆகவே சனல் 4 வெளியிட்ட விடயங்களை பாராளுமன்ற தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது.எனவே சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்புby நிருபர் காவலன்
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைதுby நிருபர் காவலன்
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைதுby நிருபர் காவலன்
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்ததுby நிருபர் காவலன்
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று என்னிடம் தொடர்ந்து கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உள்ளாக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
”இங்கிருக்கும் யாரைக் கேட்டாலும் அவர்கள் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக தான் கூறுவார்கள்.
அதனால் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்டு என்னை சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்” என அவர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் தம்மீது நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி வாக்காளர்களுக்கு கட்சியில் இருந்து பிரிந்து சென்று துரோகம் செய்ய மாட்டேன் என பொன்சேகா வலியுறுத்தினா
ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செலியூட்” அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே “செலியூட்” அடிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அர்ப்பணிப்புகளை முன்னெடுப்பேன் என தெரிவித்த பொன்சேகா,
தான் நாட்டை நேசிக்கும் நபர் எனவும் குறிப்பிட்டார்.
கோட்டா பொன்சேகா திடீர் சந்திப்பு – பிரதமராகும் பொன்சேகா
கோட்டா பொன்சேகா திடீர் சந்திப்பு – பிரதமராகும் பொன்சேகா
எதிரிகளாக விளங்கிய அக்கோட்டை அபய அபொன்சேக திடிரென சந்தித்துள்ளனர் ,பொன்சேகாவை
பிரதமராக பதவி ஏற்கும் படி கோட்டபாய கோரியுளளார்
இதனை அடுத்து அவர் விரைவில் பிரதமராக பதவி ஏற்கலாமா என எதிர் பறக்க பாடுகிறது ,இருவருக்கும்
இடையில் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது ,குறிப்பிட தக்கது
பணத்தை திருடும் ஆளும் ஆட்சியாளர்கள் – பொன்சேகா முழக்கம்
பணத்தை திருடும் ஆளும் ஆட்சியாளர்கள் – பொன்சேகா முழக்கம்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் வயிற்றில் அடித்து பணத்தை திருடி
வருவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
தமிழர்கள் மீது படையெடுப்பை நடத்தி அந்த மக்களை கொன்று குவித்த மகிந்தவின்
நம்பிகையாளராக விளங்கியவர் பொன்சேகா என்பது குறிப்பிட தக்கது
இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது – சரத்பொன்சேகா பேச்சு
இராணுவத்தை அரசு காட்டிகொடுக்காது – சரத்பொன்சேகா பேச்சு
காட்டிக்கொடுக்காத அரசு
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் , தமிழ் இனப்
படுகொலையாழியுமான சரத் பொன்சேகா எந்த ஒரு நாடும் தமது இராணுவத்தை காட்டி கொடுக்காது என சூளுரைத்துள்ளார்
லண்டனில் இயங்கிய கஞ்சா கபே -புகுந்த போலீஸ்
ஐக்கியநாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான
போர்குற்ற விசாரணைகள் சூடு பிடித்துள்ள நிலையில் மேற்படி
விடயத்தை பொன்சேகா தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
எதிரி
எதிரி,எப்பொழுதும் எதிர் சதி வேலைகளை செய்து கொண்டிருப்பான் என்பது ,இவர்களின் இந்த நகர்வுகள் ஊடாக தமிழர் தரப்பு செய்திகளாக கூர்ந்து கவனிக்க முடிகிறது
சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்
சரத் பொன்சேகா கைது செய்யப் படும் அபாயம்
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் தமிழர்களை கோரமாக கொன்று குவித்தவரும் ,இன்றைய
மகிந்த கோட்டபாய அரசுகளின் நேரடி எதிரியுமாக விளங்கும்,விளங்கி வரும் சரத் பொன்சேகா கைது செய்ய படும் அபாயம் எழுந்துள்ளது .
கோட்டா ,மகிந்த சிந்தையின் நேரடி கைது வேட்டை பட்டியலில் இவரும் ஒருவராக இடம் பிடித்துள்ளாராம் .
விரைவில் இவரும் கைது செய்யப் படலாம் என கொழும்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன .
பழி வாங்கும் அரசியலை நடத்தி செல்லும் ஆளும் இனவாத அதிபர் கோத்தபாயவின் கழுகு
பார்வை இவர் மீதும் வீழ்ந்துள்ளதாகவே அந்த உள்ளக வட்டாரங்கள் அலசுகின்றன.
இவ்வாறான தொடர் கைதுகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஆளும் அதிபர் கோத்தபாயாவுக்கு ஏற்படுததலாம் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .
அவர் அதனையும் தாண்டி சிங்கள பவுத்த மக்கள் தனக்கு தகுந்த வாக்கினை வழங்கி தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர வைப்பார் என நம்புகிறார்
இது சாத்தியமா என்பதை எதிர்வரும் பங்குனி மாதம் தெரியவரும் .


























