Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நாட்டை விட்டு தப்பி ஓடிய மகிந்த மகனின் மனைவி – நாடு திரும்பினார்
நாட்டை விட்டு தப்பி ஓடிய மகிந்த மகனின் மனைவி – நாடு திரும்பினார்
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் உச்சத்தை அடுத்து நாட்டை விட்டு
மகிந்த மகனின் மனைவி தப்பி ஓடினர் .அவர் தற்போது மீள நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
Yoshitha மனைவியே இவ்விதம் நாடு திரும்பியுள்ளார் ,எனினும் நாமல் மனைவி
இதுவரை இலங்கை வரவில்லை என்பது குறிப்பிட தக்கது
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கியினால் மேலும்
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இவ்விதமான செயல்பாடு மேலும் நாட்டை பலவீன படுத்தி சிக்கலை ஏற்படுத்தும் என
பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் கொள்ளையடித்த நபர் – மாப்புள்ளை சிக்கினார்
கைபேசியில் பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த
குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அந்தரங்கப் படங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பின்னர் கைபேசியில் பேசிய குறித்த பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.
தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு
லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்
மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள்.
மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள்.
- முன்னிலை சோஷலிச கட்சியிடம் மனோ கணேசன்
இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.
குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் சிறு தோட்ட நில உடைமையாளர்களாக மாற வேண்டும். வீடு கட்டி வாழ காணியும், உழைத்து வாழ விளை நிலமும் பெற்று அவர்களை வாழ வைக்க விரும்பும் எமது நோக்கங்களை
முன்னிலை சோஷலிச கட்சி ஆதரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினரிடம், கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி தலைவர் திகாம்பரம் எம்பி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில், கூட்டணியினரை முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவின் சார்பில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் புபுது ஜாகொட, சஞ்சீவ பண்டார ஆகியோர் சந்தித்தனர்.
முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினருக்கு, மலையக அபிலாஷை ஆவணங்களை கையளித்த கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இந்நாட்டு மலையக தமிழரின் ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சம். இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இன்னமும் தோட்ட சிறைகளுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களாக
தோட்ட குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இந்த தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிருவாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்க வேண்டும்.
இதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்கு சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேச செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வேண்டும். தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள
தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை
பெருகின்ற முழுமையான குடிமக்களாக தோட்டங்களில் உழைக்கும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
அதேவேளை இந்த தோட்ட சிறைகளுக்குள் வாழும் மலையக மக்களை உள்ளடக்கிய மலையக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷகளை புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
இன்று நாட்டில் காலிமுக திடல் முதல், முழு நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே சிங்கள மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டக்காரர்கள் மத்தியில், முன்னிலை
சோஷலிச கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு என எமக்கு தெரியும். ஆகவே எமது இந்த கருத்துகளை அங்கே கொண்டு செல்லுங்கள்.
காலிமுக திடலில் போராடும் வேறு பல அணியினரும், எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சொல்லலும் “கோடா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் பத்தாண்டுகளுக்கு முன்னமே எழுப்பியவர்கள். நாம் ஒடுக்கப்பட்ட இனத்தை
பிரதிநிதித்துவம் செய்கிறோம். போராடும் சிங்கள குழுக்களிடம் இக்கருத்துகளை நாம் கூறியுள்ளோம். இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல்
அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.
உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு
உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது
உணவகங்களின் விற்பனையாகும் உணவு பொருட்களின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க படுகிறது
எரிபொருள் உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவையும் அதிகரிக்க படுகிறது ,
பாண் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது
விலை இவ்விதம் அதிகரித்து செல்லும் பொழுது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம்
இலங்கை விமான நிலையங்கள் அடித்து பூட்ட படும் அபாயம் – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இயங்கும் சர்வதேச விமான நிறுவனங்கள் முதல் உள்ளூர் விமான
சேவைகள் யாவும் இரத்து செய்ய பட்டு விமான நிலையங்கள் பூட்ட படும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
பதவியில் மாற்றம் செய்ய பட்டாலும் வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முடியா நிலைக்கு இலங்கை செல்கிறது
இவ்விதமான சம்பவங்கள் இடம்பெற்றால் நாட்டில் மேலும் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டு ,
அரச அடக்குமுறை செயல்களினால் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
40 பெட்ரோல் நிலையங்களுக்கு அடித்து பூட்டு
40 பெட்ரோல் நிலையங்களுக்கு அடித்து பூட்டு
நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட
நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார்.
அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான அதிகளவான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை
அதிகரிக்கலாம் என பெற்றோலிய
விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது
கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை
கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக்
கொலை செய்த சம்பவமொன்று நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இரு குடும்பங்களுக்கும் நீண்டகாலமாக குடும்பத் தகராறு காணப்படும்
நிலையில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 8.15 மணிக்கு இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அதில் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது கோடாரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபரை பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட
கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.
நிதி அமைச்சராக ரணில் பதவி ஏற்பு
நிதி அமைச்சராக ரணில் பதவி ஏற்பு
இலங்கையில் பிரதமராக விளங்கி வரும் ரணில் விக்கிரமசிங்க புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்
ஜனாதிபதி கோட்டா முன்பாக இவர் இந்த பதவியினை ஏற்றுள்ளார்
எதிர் வரும் ஆறு வாரத்தில் புதிய வரவு செலவு அறிக்கையை இவர் சமர்ப்பிப்பார் என எதிர் பார்க்க படுகிறது
இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை
இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை
இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
ஐம்பது ஆண்டுகள் , ஆட்சியில் அமரலாம் என்ற நப்பாசையில் அரியணையில் குந்தியை கோட்டாவுக்கு மூன்று வருடத்தில் நெத்தியடி வீழ்ந்துள்ளது
மேலும் கொட்டாவே வீட்டே போ என அதே சிங்கள மக்கள் தொடராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை தேர்தல் நடத்த பட்டால் தாம் தோற்று
விடுவோம் என்பதும் , எதிரணியினர் பலத்த வெற்றி பெற்று விடுவார்கள் என்பதுவும் , அந்த வாக்குகள் புதிய அரசுக்கு இலங்கை வரலாற்றில் அதிக வாக்கு
எண்ணைக்கையில் வென்றார்கள் என்ற விகிதத்தை தந்து விடும் ,
போரை வென்ற கீரோ என புகழ்ந்த அதே சிங்கள மக்கள் ,இன்று அதே அரசை வீட்டே செல் என்கின்றனர் ,
இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை
போரின் வலி தெரியாது ,வீதி இறங்கிய சிங்கள மக்களை அச்சுறுத்த வேண்டிய தேவை கோட்டாவுக்கு ஏற்பட்டுள்ளது ,அவருக்கு மட்டும் அல்ல ஆட்சியில் அமர போகும்
அத்தனை ஆட்சியாளர்களுக்கும் இது தேவையாக உள்ளது ,அப்படி என்றால் மீளவும் ஒரு ஆயுத போரட்டம் ,அல்லது குண்டு வெடிப்புக்கள் இடம்பெற வேண்டும்
தானே தனது இராணுவ முகாமிற்குள் குண்டு வைத்து அதனை ஆயுத குழுக்கள் தலையில் கட்டிவிட தயராகும் கோட்டா படை
அதனால் மீளவும் இலங்கையில் இல்லாத புலிகளின் பெயரால் குண்டு தாக்குதலை நடத்த சிங்கள கோட்டா அரசின் இரகசிய படை தயராகி வருகிறது
வடக்கு பகுதியில் இராணுவத்தை குறைத்து அங்கு பெரும் குண்டு தாக்குதலை ,தனது
இராணுவ முகாமில் தாமே நடத்தி பெரும் இராணுவத்தினரை கொன்று ,அதனை தனது வெற்றிக்கு காண்பிக்க கோட்டா முயல்கிறார்
கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறின ,தேவாயலயங்கள் மீது முஸ்லீம்களின்
பெயரால் நடத்த பட்ட குண்டு தாக்குதலின் பின்புல சூத்திரதாரி கோட்டா என்பதே யாவரும் அறிந்ததே
இராணுவ முகாமிற்குள் குண்டு – தயாராகும் கோட்டா படை
அதே போன்றதொரு தொடர் குண்டு தாக்குதலை சம தடவையில் தமிழர் பகுதிகள் மற்றும் தனி சிங்கள இனவெறியர்கள் வாழும் பகுதியிலும் நடத்திடும் தாக்குதலாக இவை அரங்கேற போகிறது
அதற்கான முன் நடவடிக்கைகள் உள்ளே கச்சிதமாக மேற்கொள்ள பட்டு வருகின்றன
.குண்டு மழையினால் இலங்கை மீள அதிர போகிறது ,தமது கதிரைகளை காப்பாற்றிட அப்பாவிகள் கொலை செய்ய பட போகின்றனர் ,
கோட்டா ஆரம்பிக்க போகும் இந்த குண்டு வேட்டை அவருக்கே தூக்கு கயிறாக மாற்றம் பெற போவதையும் காண போகின்றீர்கள்
இலங்கையில் தலைகீழ் புரட்சி இடம்பெற்றது போல ,மீளவும் பிரிவினைவாத போர்
என்ற வகையில் ,இன மோதல்களை உருவாக்கவும் ,அதனை வைத்து தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் வேட்டை இடம்பெற போகிறது
காத்திருந்து பாருங்கள் ,இலங்கை தேசம் குருதியில் குளிக்க போகிறது .
இராணுவதின் முகாமிற்குள் குண்டுகள் வெடிக்க தயாராகின்றன,தலைகீழ் மாற்றங்கள் இலங்கையில் வெடிக்க போகிறது
- வன்னி மைந்தன் –
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது
- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்
- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்
- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு
- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்
- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தோழமையினை தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அரசவை தீர்மானம்
இலங்கை மக்களுக்கான தமிழக அரசின் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம்
நிறைவேற்றியுள்ளதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் கனேடிய உறுப்பினர் திரு.நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண உதவிகள், ஈழத்தமிழ் மக்களை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்
என கோரியுள்ள இத்தீர்மானம், ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் தமிழக அரசிடம் இருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பதாக கோரியுள்ளது.
சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து
சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்ப்பதாக தீர்மானம் கோரியுள்ளது.
கடந்த மே21-22 ஆகிய நாட்கள் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அசரவையில் உறுப்பினர் திரு நிமால் விநாயகமூர்த்தி அவர்களால முன்மொழியபட்டு, அரசவையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுவிபரம் :
தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழர் தேசத்துக்குமான உறவு என்பது உணர்வுபூர்வமானது. அது தொப்புள்கொடி உறவு. நிலத்தால் வேறுபட்டிருந்தாலும், உணர்வால்,
கலாசாரத்தால் பிரிக்கவியலாத ஒரு இனமாகும். ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கும் அரசியல் இறைமைக்கும் செயல்வடிவம் கொடுப்பதில் இந்திய அரசின் பங்களிப்பு
முக்கியமானதொன்றாகும் தங்கியிருக்கின்றது. இதற்கான திறவுகோல் எப்போதும் தமிழ்நாடாகவே இருக்கின்றது. இது வரலாறு முழுவதும் நிருபிக்கப்பட்டுவரும் உண்மையாகும்.
ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போதும், எமக்காக குரல் கொடுக்கும், எமக்குதவும் முதல் கரமாக, தமிழ்நாடே இருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான், மாண்புமிகு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு,
இலங்கைதீவின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை, ஈழத்தமிழர்களாகிய நாம் வரவேற்று மகிழ்கின்றோம். இது தொடர்பில், ஏற்கனவே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
பிரதமர். உருத்திரகுமாரன் அவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின், மனிதபிமான நிவாரண உதவி முயற்சியை வரவேற்றிருந்ததோடு,
சிங்கள அரசாங்கங்கள் எவையும் தமிழ்மக்களை பாரபட்டசமின்றி நீதியாக நடத்தப் போவதில்லை. இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேரடி
உதவிப்பொறிமுறையொன்றினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே தலைமை தாங்கி உருவாக்குமாறும் கோரியிருந்ததர் என்பதனையும் இந்த சந்தர்பத்தில் மீ;ண்டுமொருமுறை சுட்டிக்காட்டுகின்றது.
இதேவேளை ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான அரசியல் தோழமையினையும் நாம் இவ்வேளையில் எதிர்பார்கின்றது.
தீர்மானம் :
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் வெளி முழுமையாக இல்லாத நிலையிலும், புலம்பெயர் ஈழத்தழர்களுக்கான தேசக்கட்டுமானமாகவும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை
- இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச அரசியல் வெளியில் வெளிப்படுத்தும் ஜனநாயக போராட்ட வடிவம் என்னும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும், நலிவுற்ற இலங்கை
- மக்களுக்கான, மனிதாபிமான நிவாரண உதவியை வரவேற்பதுடன், அதற்கான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் நாடுகடந்த தமிழீழ
- அரசாங்கம் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் நிதியுதவியையும் வழங்கும்.
- தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான நிவாரண உதவிகள், தமிழர் தாயகத்தின் நலிவுற்ற எமது உறவுகளை சென்றடைவதை, தமிழக அரசு நேரடியாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் வேண்டுகின்றது.
- இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 1.4ம் சரத்தில் குறிப்பிட்டவாறு, இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம்
- என்பதனை உறுதிசெய்தே, சிறிலங்காவுக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவீனங்களின் அடிப்படையில் தமிழர்
- தாயகப்பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை வெளியேற்ற தமிழ்நாடு அரசு, இந்த வேளையில் வலியுறுத்த வேண்டும் என்பதனையும் எதிர்பார்கின்றது.
- மேலும், உலகெங்கும் பரந்துவாழும் உலகத்தமிழ் உறவுகள், மாண்புமிகு,
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படும் இலங்கை மக்களுக்கான மனிதாபிமான நிவாரண திட்டத்திற்கு தாராளமாக உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் நிதி அமைச்சர் -அடுத்து என்ன ..? கயானா காலியாகும் ..!
ரணில் நிதி அமைச்சர் -அடுத்து என்ன ..? கயானா காலியாகும் ..!
இலங்கையில் ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா
எதிர் வரும் நிதி அமைச்சராக பதவி பிராமணம் செய்திட உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன
இவ்விதம் பதவி ஏற்கும் ரணிலினால் நெருக்கடியில் உள்ள நாட்டினை
முன்னிறுத்தி செல்லுமா என்பதே கேள்வியாகும் ..!
23 அமைச்சர்களுக்கு 23 செயலர்கள் தெரிவு
23 அமைச்சர்களுக்கு 23 செயலர்கள் தெரிவு
இலங்கையில் கலப்பு ஆட்சியில் அங்கம் வகிக்கும் இருபத்தி மூன்று அமைச்சர்களுக்கு
23 செயலர்கள் நியமிக்க பட்டுள்ளனர்
நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ,இந்த அமைச்சர்கள் தெரிவு என்பது
நெருக்கடியை தனிக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்
ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video
ஈழப் படு கொலை சுவடுகள் நூல் சீமானால் வெளியீடு video
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் முள்ளி வாய்க்கால் சிங்கள படு கொலையின் கோர தாண்டவம் ,தமிழ் இன
அழிப்பு தொடர்பான ஈழ படுகொலை சுவடுகள் என்ற நூல் ஒன்று முள்ளிவாய்கால் தினத்தில் தமிழகத்தில் செந்தமிழன் சீமானால் வெளியிட பட்டுள்ளது
தமிழர்களின் போரின் வலியையும் ,சிங்கள அரச பயங்கரவாததின் படுகொலை கோர
வெறி காட்சிகளை இந்த நூல் அம்பல படுத்துகிறது ,தமிழர்களே வாங்கி படியுங்கள்
,என சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக மக்கள் போராட்டம்
தமிழ் அரசியல்வாதிகளையும் ‘கர்மா விடாது’ என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டம், நேற்றையதினத்தோடு 1919 நாளை எட்டியுளளது.
இதனையொட்டி, நேற்று (23) இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள், வடக்கு- கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறுஇ சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்ததால் , இலங்கை பொருளாதாரத்தின் 15 சதவீத செலவீனம் இதுவாகும்.
இது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாகும். இதனைத்தெடர்நது மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
‘ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள்,
சிவில்அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும். இல்லாவிடில், கர்மா அனைவரையும் பாதிக்கும்.
‘சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளாக பேசுவார்கள். இதுதான்
74 வருட தமிழர்களின் வரலாறு. நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றிபேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப் படுகொலைக்கான
நீதியை பெறமுடியாது’ என்றனர்.
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்து பேரூந்து ,மற்றும் ஆட்டோ
பயண செலவுகள் அதிகரிக்க பட்டுள்ளது ,ஆட்டோ ஒன்றின் முதலாவது கிலோ மீட்டருக்கு நூறு ரூபா
அறவிட தீர்மானிக்க பட்டுள்ளது
இந்த கடுகதி விலை உயர்வினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா
இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்கும் இந்தியா
இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்க
இந்தியா தீர்மானித்துள்ளது குறித்த தொகை பணத்திற்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
நாட்டின் தற்கால நெருக்கடியை தீர்க்க இந்தியாவில் கடனை வாங்கி குவிக்கும்
இலங்கை ,அதனை மீள செலுத்திட முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை
குறிப்பிட தக்கது
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது
இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளி நாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அறுபத்தி ஏழுபேர்
கடற் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் திருகோணமலை சல்லிசம்பல் தீவு பகுதியில் குழுமியிருந்த வேளையே கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுவர் என எதிர் பார்க்க படுகிறது
நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலை 30 முதல் 50 ரூபாவினள மேலும் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த விலை உயர்வினால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
நாட்டில் நிலவி வரு பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்களின் விலை
அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது































