Tag: ரூபா
13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்
13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்
13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன் ,அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும் என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2023ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 31,951 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதுடன் 75 இலட்சத்து 41,282 மில்லியன் ரூபா திறைசேரி பில்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ஆம் ஆண்டு பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அளவு 67.4 சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டு தனிநபர் கடன் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும், அது 13 இலட்சத்து 22,793 ரூபாவாகும் எனவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டில், தனிநபர் கடன் தொகை 12 லட்சத்து 34,358 ஆக இருந்த நிலையில் இது ஒரு வருடத்தில் 88,435 ரூபாய் அதாவது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு வலுவாக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (06) ரிவி தெரணவில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

75 மில்லியன் ரூபாவை அபகரித்த கொள்ளையர்
75 மில்லியன் ரூபாவை அபகரித்த கொள்ளையர்
75 மில்லியன் ரூபாவை அபகரித்த கொள்ளையர் நவம்பர் 18 அன்று மினுவாங்கொடையில் பணமாற்று நிறுவனமொன்றுக்கு சொந்தமான வேனிலிருந்தவர்களை மிரட்டி சுமார் 75 மில்லியன் ரூபாவை அபகரித்து
சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொள்ளையிட்ட பணத்துடன் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்ய கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
கட்டான மற்றும் உடுகம்பொல பிரதேசங்களைச் சேர்ந்த முறையே 37 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர்களின் இருப்பிடம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை 071 – 8591608 அல்லது 071 – 8591610 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை
10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை
10 000 ரூபா பணம் கேட்டு அதனை தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பெண்ணின் வீட்டிற்கு செல்வது மற்றும் குறித்த பெண்ணிடம் இருந்து கழற்றிச் சென்ற காதணிகளை செட்டித் தெருவில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்தமை சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
இவர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை பெற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொட்டாவ மாலபே வீதியின் நான்கு வழிச் சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.
பணத்தை தராததால் கோபமுன்ற நபர், அந்த பெண்ணின் காதணிகளை கழற்ற முயன்றுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் பெண்ணை தரையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து அவர் அணிந்திருந்த காதணிகளை கழற்றி செட்டித் தெருவில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டு 5 ஆயிரம் ரூபாயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரார். அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
பாடசாலைக் காலத்திலேயே தொழில்முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது அவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்க வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர,
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து ஒரு நாடாக குறிப்பிடத்தக்களவு சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது.
ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் சுமார் 05 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், நம் நாட்டில் 2.5% ஆக இருந்த தொழில்முயற்சியாளர்களின் எண்ணிக்கையை 3% ஆக அதிகரிக்க முடிந்துள்ளது. நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகிறது.
மேலும், ஆடை மற்றும் நெசவுத் தொழில் நிறுவனம் ஏறக்குறைய 500 பிள்ளைகளுக்கு டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கியுள்ளது. IDB நிறுவனத்துடன் இணைந்து பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்களை உருவாக்கி மாணவர்களை பாராட்ட முடிந்துள்ளது.
பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சியாளர் சூழலை உருவாக்குவது மக்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கு பெரும் ஆதரவை அளிக்கிறது என்பதையும் கூற வேண்டும். இதன் மூலம் நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
குறைந்த வருமானம் பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான 17 இலட்சம் பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மதிய உணவு திட்டமும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், களிமண், பித்தளை, பிரம்பு ஆகிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், இத்தாலி, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இந்நாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆசிய அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து, சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், பிரம்புகளை எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து 500 பிரம்புகள் வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், களிமண் போக்குவரத்தில் அதிகபட்சமாக 05 கியுப்களை அனுமதிப்பதற்கு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் கலந்தாலோசித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதி 10 3 வீதத்தால் வலுவடைந்தது
ரூபாவின் பெறுமதி 10 3 வீதத்தால் வலுவடைந்தது
இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது.
யூரோ அலகுடன் ஒப்பிடும் போது, இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 வீதம் வலுவடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
உள்நாட்டு முட்டை விலை 35 ரூபா
உள்நாட்டு முட்டை விலை 35 ரூபா
சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கட்டுப்பாட்டு விலையை நீக்கும் நடவடிக்கையால் தற்போது முட்டை விற்பனை வலையமைப்பு வலுவடைந்து வருவதாக அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிடுகின்றார்.
ஒரு கிலோகிராம் பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் குணசேகர குறிப்பிடுகின்றார்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappaby நிருபர் காவலன்
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்by நிருபர் காவலன்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 332.87 முதல் ரூ. 333.49 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்குக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது.
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கியினால் மேலும்
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இவ்விதமான செயல்பாடு மேலும் நாட்டை பலவீன படுத்தி சிக்கலை ஏற்படுத்தும் என
பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு
உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது
உணவகங்களின் விற்பனையாகும் உணவு பொருட்களின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க படுகிறது
எரிபொருள் உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவையும் அதிகரிக்க படுகிறது ,
பாண் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது
விலை இவ்விதம் அதிகரித்து செல்லும் பொழுது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரான்ஸ் நாடு
இலங்கைக்கு பதின் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது
தமது நாட்டின் தற்கால நிலை கருதி பல நாடுகளிடம்
இலங்கை பிச்சை கேட்டு வருகின்ற நிலையில் இந்த உதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு
மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மாவின் விலை
கிலோவுக்கு நாப்பது ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கொந்தளிப்பில் உள்ளனர் ,நாள் தோறும் பொருட்களின் விலை
அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
தனியார் ஊழியர்க்ளுக்கும் 5000 ரூபா வழங்கும் அரசு
தனியார் ஊழியர்க்ளுக்கும் 5000 ரூபா வழங்கும் அரசு
இலங்கையில் அரச அனுசரணையுடன் இயங்கி வரும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும்
ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசு தீர்மானித்துள்ளது
இவை எதிர்வ்ரும் நாட்களில் வழங்க படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது அந்த ஊழியர்களுக்கு
மகிழ்ச்சியை தருவித்துள்ளது
தமிழகத்துக்கு உலக வங்கி.1100 கோடி ரூபாய் கடன்
தமிழகத்துக்கு உலக வங்கி.1100 கோடி ரூபாய் கடன்
சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.
தமிழகத்துக்கு உலக வங்கி சார்பில் ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி
சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.
இதனுடன் சேர்த்து, மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக 296 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.
தமிழக அரசு
இந்த வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தக் கடன் தொகை கல்வி நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள், குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதார வசதிகள் அதிகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை பலப்படுத்த உதவியாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து வரி அறவிடப்படமாட்டாது
ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து வரி அறவிடப்படமாட்டாது
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5% வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை
இது தொடர்பில் எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் வெளியிட்ட கூற்று தொடர்பில் அங்கு கேள்வி எழுப்பப்பட்டது பல்வேறு பிரதேசங்களில் நிலவும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு அடுத்த வாரத்தின் பின்னர் இல்லாமல் போகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்வதற்கு இனிவரும் காலங்களில் 5,000 ரூபாயை அறவிடப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
25ஆம் திகதி நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்விலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய 15,000 ரூபாய் நோர்வூட் பிரதேச சபையால் அறிவிடப்பட்டு வந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டதாகவும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தான் ஒரு மாத சிகிச்சையின் பின்னர், சபைக்கு திரும்பிய பின்னரே இது குறித்து அறிந்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, இனிவரும் காலங்களில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய 5,000 ரூபாயை மாத்திரமே அறவிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா
சமுர்த்தி பெறுநர்களுக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்
ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்
ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை
எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின்
விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் மேம்படுவதற்கு வழிவகுத்தது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால், இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர
தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.
இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நாட்டை முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்
நாட்டை முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்
நாட்டை முற்றாக முடக்கி அதன் மூலம் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் வேலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்த தளபாடங்களை பெற்றுக்கொள்ள பாரிய அளவிலான நிதி தேவைப்பட்டது.
அதேபோன்று தற்சமயம் கொவிட் வைரஸ் பரவும் இந்த சந்தர்ப்பத்திலும் சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
வழங்குவதற்காக பாரியளவிலான பொருளாதார வெல்லமே அரசாங்கத்திற்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் சனத்தொகையில் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அன்றாடம் வருமானம் வெட்டுபவர்கள் ஆவர். நாட்டை முற்றாக அடக்குவதன் மூலம் இவர்களின் வருமானம் முழுமையாக தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் 4 லட்சம் பேர் நாட்டின் தொழில் படையில் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். துறைமுக நகர சட்டமூலத்தின் ஊடாக
அரசாங்கத்தின் பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்
26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது
26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது
இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக 26 மில்லியன் ரூபாய்களை அமெரிக்காவில் இருந்து
பெற்று அதனை அரேபிய நாடு ஒன்றுக்கு கடத்தி செல்ல முற்பட்ட கிண்ணியாவை சேர்ந்த
ஒருவரை குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது





















