கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார்

கோத்தபாயா செயலாளர் சிக்கினார் நீதிமன்றத்திற்கு வருமாறு தற்பொழுது அவருக்கு சமன் விடுக்கப்பட்டுள்ளது.Gotabaya’s secretary gets caught.

ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .

அதன் தொடர்ச்சியாக அவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இப்பொழுது நீதிமன்ற சமன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவும்பேரில் சிறை வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமன் எக்க நாயக்க கோத்தபாயவின் ஆட்சியில் செயலராக விளங்கி இருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம்

அவரே இப்பொழுது ரணில் மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பின்புலத்தில் செயல்பட்டார் என்ற காரணத்தினால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.

இவரை அடுத்து முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல நாள் திருடன் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

பல நாள் திருடன் சிக்கினார்

பல நாள் திருடன் சிக்கினார்

பல நாள் திருடன் சிக்கினார் ,இலங்கையில் பல நாட்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மக்களால் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுது, இந்த 27 வயது நபர் சிக்கியுள்ளார் .

இவரிடமிருந்து ஐந்து மடிக் கணனிகள் ,2 தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

லப்டாப் மற்றும் கைபேசிகளை இலக்கு வைத்து இவரது திருட்டுச் சம்பவம் அதிகமாக காணப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த பொருட்களை இலக்கவைத்து .திருடி அவற்றை கள்ளச் சந்தை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

திருடப்பட்ட கைபேசிகளின் அலைவரிசை நகர்வுகளை அடிப்படையாக வைத்து ,இந்த திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்ட திருட்டு வாலிபர் மடக்கி பிடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான குற்றச் செயலினால் பல மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.

ஆலயங்கள் பொது இடங்களில் செல்கின்ற மக்களின் கைபேசிகள் என்பன திருடப்பட்டு வருகின்ற வேளையில் ,இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதுள்ளது , இவ்வாறான திருடர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

சிக்கினார் மிதிவண்டி திருடர்
Posted in இலங்கை செய்திகள்

சிக்கினார் மிதிவண்டி திருடர்

சிக்கினார் மிதிவண்டி திருடர்

சிக்கினார் மிதிவண்டி திருடர் . யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் மிதிவண்டிகளை திருடி திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மிதிவண்டி திருடர் ஒருவர் தற்பொழுது காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

காரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இவரே இவ்வாறு மிதிவண்டிகளை நாள்தோறும் திருடி கள்ள சந்தையில்விற்று வந்த சம்பவம் காணப்பட்டுள்ளது .

மிதிவண்டிகளை பறிகொடுத்தவர்கள் காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து தற்பொழுது இந்த இளம் வயது மிதிவண்டி திருடர் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இவர்நாள் 12 மிதிவண்டிகள் திருடப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபரையும் திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நெல்லியடி போலீசார் ஊடாக பருத்துறை நீதவான் நீதிமன்றத்தில் உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இன்று ஒரு மிதிவண்டி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையிலே தற்பொழுது மிதிவண்டி திருடர்கள் இந்த மிதிவண்டிகளை இலக்கு வைத்து இவ்வாறு திருடி கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர் .

அதனாலேயே அதிக பணம் சம்பாதித்து வருவதாக மிதிவண்டிகளை இழந்தவர்கள் தெரிவிக்கின்றனர்

வீடியோ

இதனால் தற்பொழுது துவிச்சக்கர வண்டிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது .

திருடர்களும் நாட்டில் அதிகரித்து வருகின்றமையால் இவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்கின்ற நடவடிக்கையும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைபேசி பேசியவாறு வண்டி ஓட்டினால்
Posted in இலங்கை செய்திகள்

ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் கொள்ளையடித்த நபர் – மாப்புள்ளை சிக்கினார்

கைபேசியில் பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த

குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அந்தரங்கப் படங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

பின்னர் கைபேசியில் பேசிய குறித்த பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளார்.

தொடர்ந்து மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு

லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.


விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்