Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு
எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு
எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு,சொல்லி அடித்த ஹிஸ்புல்லா ,மிக முக்கியமான செய்திகள் காணொளி உள்ளே
மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்
மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்
மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம் ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரியராஜ் சிந்துஜா என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னதாக, இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுமாக நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் இன்றைய தினமும் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா
தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா
தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா ,ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என பதிலளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில், தனது பொது பேரணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து மக்களை பேருந்துகளில் அழைத்து வரவில்லை என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு முந்தைய நாள் இரவு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
எனது பொதுக்கூட்டத்தில் ஒரு நபராக இருந்தாலும், ஐந்து, பத்து, ஐம்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொண்டாலும், எனது விசுவாசமான கட்சி ஆதரவாளர்கள் என்பதால் 1000 பேரை விட, அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள்,” என்று கூறினார்.
2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்ததன் பின்னர், அபிவிருத்திக்காக பாடுபட முயற்சித்ததாகவும், பல தடைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இந்த நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்றால், அதுவே தமது விருப்பமாகும் எனவும் தெரிவித்தார்.
எஸ்.ஜே.பி தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், பல முக்கிய அரசியல் கட்சிகளில் கைகோர்க்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக அத்தகைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் அழைப்பை நிராகரித்ததாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் தனது தேர்தல் பேரணியின் காணொளி பொதுமக்களின் அரசியல் அறிவாற்றலை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது
கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது
கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது ,இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் செவ்வாய்க்கிழமை (20) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.
கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இந்நிலையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ,மட்டக்களப்பு , காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்பிக்கள் இருவர் அடிதடி
எம்பிக்கள் இருவர் அடிதடி
எம்பிக்கள் இருவர் அடிதடி ,இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே ,தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் பொழுது அடிதடி ஏற்பட்டுள்ளது .
இந்த குத்து சண்டை தற்போது பெரும் பரபரப்பாக மற்றம் பெற்று வருகிறது.
திகாம்பரம் பாலியல் லஞ்சம் மற்றும் லஞ்ச ஊழலில் அதிகம் ஈடுபட்டு வருவதாக மக்கள் மத்தியில் குற்றம் சுமத்த பட்டுள்ளது .
அவ்வாறான கால பகுதியிலேயே இடம்பெற்ற நேரடி விவாத்தின் பொழுது இந்த குத்து சண்டை இடம்பெற்றுள்ளது .
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
முதலாவது நாமலின் கூட்டம்
முதலாவது நாமலின் கூட்டம்
முதலாவது நாமலின் கூட்டம் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அனுராதபுரத்தில் இன்று (21)நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்யும் நோக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கடபனஹா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதலாவது பிரச்சார கூட்டத்தை அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றமை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பேருந்துகளுக்கு தீ வைப்பு
பேருந்துகளுக்கு தீ வைப்பு
பேருந்துகளுக்கு தீ வைப்பு ,வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.
அருகில் இருந்த சிசிடிவி கெமராவை சோதனையிட்ட போது, சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை
அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை
அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை ,அர்ஜுன இராமநாதன் தற்பொழுது மிகப்பெரும் மக்கள் சக்தியுடன் காணப்படுவதால் அவரை பொறியியல் சிக்க வைக்கும் நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றனர்.
அவிதம் அவரது வாயினால் அவரை அவதூறு படுத்தி தனிமைப்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியை தாமதாக்கி கொள்ளும் நடவடிக்கையில் பல கட்சிகள் திறம்பட செயலாற்றி வருகின்றன.
அதனால் அர்ச்சுனா இராமநாதன் மீது வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வருகின்ற அதே குழுவுக்கு திறந்தவெளியில் பதில் அளித்து வருகின்றார் அர்ச்சுனா ராமநாதன்.
இது அவருக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது நெருக்கடியாகவும் அவரை தமது திட்டமிட்ட பொறியில் சிக்க வைக்கும் தந்திரோபாய நடவடிக்கையாக கருதப்படுகின்றது.
ஆதலால் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அர்ஜுனர் ராமநாதன் தனது வாயினால் ஊடகங்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கு போட்டிகளை அழிப்பதை தவிர்த்து வரவேண்டும்.
அத்துடன் தனது முகநூல் பக்கத்தை மட்டும் பயன்படுத்தி அதனூடாக அவர் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் .
அதன் பிறகு அர்ச்சுனா என்கின்ற இந்த புயலும் ஓய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் மிகத் திட்டமிடப்பட்டு அர்ஜுனா செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை அர்ஜுனா மறந்து விடக்கூடாது என மக்கள் மன்றம் இப்படி கருத்துரைத்து வருகின்றது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்
கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்
கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம் ,முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் மனித புதகுழி முன்பாக இன்று மக்கள் போராட்டம் ஒன்றே நடத்துவதற்கு தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறுப்புகளின் சங்கத் தலைவி மரியா சுரேஷ் ஈஸ்வரி இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கொக்கு தொடுவாய் பகுதியில் மீட்கப்பட்ட அத்தனை சடலங்களும் மக்களதும் விடுதலைப் புலிகளுடைய சடலங்கள் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
உயிரோடு சிறைபிடிக்கப்பட்டவர்கள் கொன்று படுகொலை செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரும் மனித படுகொலையை நடத்தி மக்களை அழித்த மனித ஓட்டையை நடத்திய இனப்படுகொலையாளர்கள் இன்றும் இந்த உலகில் நிம்மதியாக உலாவிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்ப்பு ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
சிங்கள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் ஆனால் அப்பாவை மக்கள் கண்ணீரோடும் கவலையோடும் உலவி வருவது ஏன் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது சர்வதேசம் இந்த படுகொலைக்கு இன்னும் தீர்ப்பு எழுதாதையர் என்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது.
நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்
நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்
நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல் ,மக்கள் முன்பாக தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக உரையாடலை மேற்கொள்வதற்கும் திறந்த வெளி விவாதத்துக்கு வருவதற்கு தாங்கள் தயார் என மஹிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை என்று பாடும் மோசமான நிலையில் செல்வதற்கு காரணமாக இருந்தது ராஜபக்ச குடும்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நாட்டை கொள்ளை அடித்து ஏப்பம் விட்டு மக்களை பட்டினி போட்டு மக்களை கொல்கின்ற அதே ராஜபக்ச குடும்பம் மூலமும் அதே மக்களை ஆண்டு கொள்ளவும் துடிக்கிறது.
அவ்வாறான காலப்பகுதியிலேயே தற்பொழுது திறந்த வெளி விவாதத்துக்கு தான் வருவதற்கு தயாராக உள்ளதாக மஹிந்தாவின் மகனான நாமல் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
ஊழல்களையும் கொள்கைகளையும் அடித்து ஊதி பெருத்து இருக்கும் இவர்கள் தாங்கள் நல்லவர்களாக இன்னும் நமது சமுதாயத்தில் காண்பிக்க முனைவதும் இதனூடாக காண்பிக்கப்படுகின்றன .
சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மறந்து விட்டு கடந்து செல்வதால் தான் மக்களுக்கு மறதி அதிகமாக இருப்பதால் தான்,
இவ்வாறான அரசியல்வாதிகள் எங்களது மண்ணில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல்
தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல்
தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல் ,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அர்ச்சனாவின் வீரம் சுமந்து புதிய பாடல் ஒன்று தற்போது வெளியிட பட்டுள்ளது.
இந்தப் பாடல் ஆனது பாசறை பாடல் செல்லப்பா அவர்கள் பாடிட அவரது புதல்வன் இளங்கோ செல்லப்பா இசையமைபில் ,வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது
இந்த பாடல் உருவாக்கத்தில் இணைந்து செயல்பட்ட முக்கியமான உறவுக்கும். இந்த வேளையில் எதிரி இணையம் ஆகிய ஆகிய நாங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மூன்று வாரங்களாக இரவு பகலாக எம்முடன் கடினப்பட்டு அந்த பாடலை எடுத்து வருவதற்காக பின்புலத்தில் இருந்து உதவிய அந்த உறவுக்கும் இந்த வேளையில் நாங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்த உறவு மட்டும் இல்லாது இருந்திருந்தால் இந்த பாடல் இப்பொழுது வெளிவருவதற்கு காரணமே இருந்திருக்காது என்பதை இந்த வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனினும் இந்த பாடல் உருவாக்கத்தின் பொழுது ஏற்பட்ட பல்வேறுபட்ட பல சம்பவங்களையும் கசப்புகளையும் நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றது .
அவை எதிர்காலத்தில் நாங்கள் பல விடயங்களை மேற்கொள்வதற்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இது உண்மையாக வழிவகுக்கும் .
விடுதலையும் அதன் தேச கனவுகளையும் சுமந்து செயல்படுகின்ற நபர்களுக்கு கிடைக்கப்பெற்ற இந்த புதிய அனுபவம் புதிய ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் காணப்படுவதுடன்,
எதிர்காலத்தில் அதிகமான தவறுகளையும் அவ்வாறு சுமக்காத இருப்பதற்கான ஒரு பலத்தையும் இது ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
எனவே இந்த பாடலை பாடிய அனைவருக்கும் இசையமைப்பாளருக்கும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த பாடலை உருவாக்கத்திலிருந்து செயல்பட்ட உங்களுக்கும் இந்த வேளையில் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பாடலை மக்களை எடுத்து நீங்கள் பகிர்ந்து உங்களது பரப்புரையை மேற்கொள்ளுமாறும் தேசிய உணர்வோடு பயணிப்போம் என்பதை கேட்டுக் கொள்கிறோம் நன்றி வணக்கம்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்
தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்
தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆடை குழுவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 631 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூலை 36 நாள் முதல் 18 வரையிலான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆடை குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் இடம்பெறுகின்ற காலங்களில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறுகின்ற சம்பவங்கள் யாவும் போலீசார் அனுமதியுடன் பதிவு செய்யப்படுகின்றன .
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விடயங்களிலேயே இவை உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளது எ,
ன்ற தேர்தலில் பலத்த வன்முறைகள் கலவரங்கள் ஈடுபட எதிர்பார்க்கப்படுகின்ற வேளையிலேயே இந்த பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பலர் சுற்றப்படுகொலை செய்யப்படும் துப்பாக்கி சூடு தாக்குதலும் இடம் பெற்றிருந்தன .
அவ்வாறான ஒரு தேர்தலை இடம் பெறலாம் எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டமும் பீதியும் காணப்படுகின்றது.
எப்படியாவது இந்த தேர்தலில் வந்து விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கின்ற காட்சிகள் வன்முறைகளை தூண்டி படுகொலைகளை நடத்தவும் தயாராகிக் கொண்டிருப்பதை அண்மைய கால சில சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்
மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்
மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன் ,புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (17) உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த பெண் கடந்த ஒன்பது வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டில்
வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து மூன்று நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தாங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை
விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வீட்டிற்கு வருகை தந்த நாள் முதல் கணவனுக்கும் – மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13 ஆம் திகதி மாலை நபர் ஒருவருடன்
தொடர்புகொண்ட குறித்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.
மனைவி வெளிநாட்டில் வசித்த வந்த போது தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறித்து வந்ததாகவும், வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியதும், கள்ளத் தொடர்பில் இருந்த நபருடன் வாழ விருப்பம் என்றால்
நான்கு பிள்ளைகளையும் பராமறித்துக் கொண்டு அந்த நபருடனேயே இருக்குமாறும் மனைவியிடம் கூறியதாகவும், பிள்ளைகளை தனது பராமறிப்பில் வைத்துக் கொள்ள மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல தயாரான போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இங்கேயே தங்கியிருக்குமாறு கணவன் தனது மனைவியிடம் கேட்டுக்கொண்டேன்.
தனது பேச்சை நிராகரித்த மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில்,
ஆத்திரமடைந்த தான் சமயலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல்மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடும் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர்களின் உதவியை நாடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப்
பெண்ணை உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பெயரில் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தனக்கு பிணை வழங்குமாறும் சந்தேக நபர் சார்பில்
கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசிலனை செய்த நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் நேற்று (17)
காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் குற்ற விசாரணை பிரிவு
பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்
மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்
மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம் ,களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழையுடனான வானிலையினால், 360 குடும்பங்களைச் சேர்ந்த 1404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் மழையுடனான வானிலையினால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது
பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது
பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது ,மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், காத்தான்குடி, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரு வாரங்களில் பாடசாலை சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம்
தொடர்பாக ஆசிரியர் ஒருவரையும், இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், 4 வயது சிறுவனை சித்திரவதை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக முறைபாடு செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்டதிலுள்ள பிரதேச பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய மாணவியை கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயம் ஒன்றில் தரிசனத்தில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுமியை அதே பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 44 வயதுடைய ஆசிரியர் சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து மட்டுநகர் பகுதிக்கு பிராயாணித்துள்ளார்
இதனை கண்டுகொண்ட இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்து நகர்பகுதியில் வைத்து பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில் அவர் அந்த அங்கிருந்து
சிறுமியுடன் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தனர்.
இதனையடுத்து குறித்த ஆசிரியரை கவியாழக்கிழமை (15)) திகதி ஏறாவூர் பொலிஸார் கைது ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தினர். அவரை 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமியை 19 வயதுடை இளைஞன் காதலித்து வந்துள்ளார். அச்சிறுமியை கூட்டிச் சென்று ஆயித்தியமலை பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து மறைத்து வைத்திருந்த நிலையில் அவரை கைது செய்து நீதின்றில் ஆஜராக்கிய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறே கஞவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 15 சிறுமியை காதலித்து வந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியின் வீட்டிற்கு இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை மறைவிடம் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு மதிலால் ஏறி வீட்டிற்கு சென்று
சிறுமியுடன் காதலில் ஈடுபட்டுபிட்டு திரும்பி வந்து சென்றுவரும் நிலையில் அதனை அவதானித்த இனம் தெரியாதோர் அவர் வழமைபோல மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு காதலியிடம் மதிலால் சென்ற திரும்பிவரும் போது மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கியுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை தொடர்பான விசாணையில் குறித்த இளைஞன் காதலியான 15 வயது சிறுமியின் வீட்டிற்கு இரவில் களவாக சென்றுவருவதாக அறிந்ததையடுத்து 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.
இந்நிலையில், ஆங்கில மொழி மூலமான தனியார் பாடசாலை ஒன்றில் ஆரம்ப பிரிவில் ல்வி கற்றுவரும் 4 வயது சிறுவன் ஒருவன் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக பாடசாலைக்கு செல்லமுடியாத மருத்துவ விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற நிலையில் அந்த மாணவனுக்கு அங்கு கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் குறித்த நேர பகுதியில் அந்த தவனைக்கான பாடதிட்டத்தை முடிக்கவேண்டும் என தெரிவித்து மாணவனை குறித்த சில நேரத்தில் அந்த பாடங்களை எழுதவைத்துள்ளார்
மாணவன் கை நோகின்றது என தெரிவித்த போதும் அவனை வற்புறுத்திய நிலையில் இருகைகளும் வேதனைக்கு மத்தியில் அதனை எழுதி வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த
கொடூரமான செயலை தெரிவித்ததையடுத்து அந்த ஆசிரியருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வெடிகுண்டு வீசினார் சாணக்கியன்
வெடிகுண்டு வீசினார் சாணக்கியன்
வெடிகுண்டு வீசினார் சாணக்கியன் .பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இம்முறை பல அபிவிருத்தி திட்டங்களை என்னால் மேற்கொள்ள முடிந்துள்ளது. வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரிக்கின்ற ஒருவர்தான் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரவேண்டும்.
அவ்வாறான சூழல் வருகின்றபோது தான் தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த விடயங்களை முன்னெடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சாயி சிறுவர் விளையாட்டு விழா களுவாஞ்சிகுடியில் சனிக்கிழமை (17) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நாம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் நாம் முன்னெடுக்க வேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை
முன்னெடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருந்தோம். எனவே வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்கு சேவை செய்பவரை நன்கு அறிந்து எமது மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
மிக விரைவாக எமது கட்சி ஒற்றுமையாக நாம் ஒரு முடிவை அறிவிப்போம். அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு எமது மக்களும் சேர்ந்து வருவார்கள் என்றால்
நிச்சயமாக இப்பிரதேசத்தில் சிறந்த எதிர்காலத்தை அமைக்க முடியும் என்றார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

நல்லூரில் வெள்ளை வேட்டிகள்
நல்லூரில் வெள்ளை வேட்டிகள்
நல்லூரில் வெள்ளை வேட்டிகள் ,ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று
இடம்பெற்றது
தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்
தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்
தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது.
முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி
அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களது தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்லம் அடைக்கலநாதன், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் யாழ். மாநர மேஜர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்,
உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களான நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரேமதாசாவுக்கு ஆச்சினார் ராமநாதன் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் அனுராதா திசநாயக்க ஆகியிருக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டவர் சாவுக்கு எதிராக இதனை தெரிவிக்காத நிலையில் மௌனம் காண்பித்துள்ளார்
மக்களுக்கு ஏதாவது நன்மையை செய்வார் என்கின்ற விடயம் அவரது மனதில் உள்ளதினாலேயே அவருக்கு தனது வாக்குகளை அளிப்பதாக மறைமுகமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரம் சிங்காவுக்கு தனது வாக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளவர் அலுவலர் இனவாதி எனவும் அவர் தமிழ் மக்களுக்கு ஏற்றவர் அல்ல என்பதை சில கூறல் பதவி விடுவதாக காண்பித்து அம்பலப்படுத்தி இருக்கின்றார்.
அதனை அடுத்து தற்பொழுது மிக நல்லவர் என்பது போலவும் அவருக்காக தனது வாக்குகளை அளிக்கும்படி தனது நேசத்திற்குரிய மக்களுக்கு அன்பு கட்டளை இட்டு இருக்கின்றார்.
கடந்த காலங்களில் நாமும் இடைவிடாது இதனை தெரிவித்து வருகின்றோம் புதிய ஒரு அரசியல் புதிய ஒரு மாறுதலையும் புதிய ஒரு புரட்சிய பெருமாள் அவதானிக்க முடியும் என்பது நமது திட்டமான நம்பிக்கையாக இருந்த
நிலையிலேயே இதனை தெரிவித்து வந்திருந்தோம் அதனை தற்பொழுது அர்ச்சினார் ராமநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு














































