Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல்
கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல்
கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல் ,முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவுக்கு இந்தியாவின் 600 கொமாண்டோ பணிகள் சிறப்பு காவல் அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பங்களுக்கு இடையில் முதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரை தமது சகாக்களே படுகொலை செய்யக் கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது.
நாட்டை கொள்ளையடித்து ஏப்பமிட்ட கோத்தபாய ராஜபக்ச ராஜபக்ச குடும்பத்தினுடைய அரசியல் ஆசைகளுக்கு ,
முற்றுப்புள்ளி வைத்தார் அவரது நடவடிக்கை காரணமாகவே தற்பொழுது இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச குடும்பம் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது,
அதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சபை அதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சவை படுகொலை தமது அனுதாபா அலைகள் ஊடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலையில் ராஜபக்சபை படுகொலை செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையுடைய வரலாற்றில் தனிப்பெரும் சிங்கள மக்களுடைய வாக்களியினால் வெற்றி பெற்றவரும் அதே வழியில் இரண்டு இரண்டரை வருடங்களுக்குள்ளாக மக்களினால் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவராகவும் கோத்தபாயர் ஐயப்ப காணப்படுகின்றார்.
அவ்வாறான வரலாற்று சாதனைகளுக்கு உரியவராக காணப்படும் இவர் தற்பொழுது மிகப்பெரும் உயிர் அச்சுறுத்தல் நெருக்கடியில் சிக்கி உள்ளதாக கொழும்பு செய்திகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு
மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு
மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு ,என்ற மு என்ற முன்னாள் அமைச்சரும் பலியிரவு அமைச்சராகவும் பணிபுரிந்து வந்த மங்கள சமர வீரனின் குடும்பம் தனக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
எமது நாட்டில் மக்களுக்கான நல்ல அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் முகமாக ஆதரவு பெருகி பெறுவதாக குடும்பத்தினர் சாதித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்
இவரது குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் இவரது கட்சியினுடைய மிக முக்கியமான பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கின்றார் அதில் எடுத்து நேரில் சந்தித்தார் இவர்கள் தமது ஆதரவை முதல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பெட்டிகளுக்காக தனது கட்சிகளை மாற்றி அமைக்கின்ற மங்கள சமரவீர ஒரு சிறந்த ஒரு ராஜதந்திரியாகவும் அரசியல்வாதியாகும் காணப்பட்டார் விடுதலைப் புலிகள் ஆளுகின்ற பக்கத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டவர் இவர் அவர்
ஒரு சுத்தமான இனவாதியாக காணப்பட்ட ஒருவராக குடும்பமே மேலும் தனக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கே கவனிக்கத்தக்கது
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மெதிரிகிரியவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமைக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் துண்டிக்கப்பட்ட நரம்பு காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ குத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெதிரிகிரியவில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ, விபத்திற்குள்ளானார்.
இதில் இடது கையில் நசுங்கியதால், அது உணர்ச்சியற்று போனதால் அவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்று மருத்துவர் ஒருவரை சந்தித்த போது நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தால் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அரசு மருத்துவமனையில் செய்தால் நீண்ட நாள் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டிருந்தார்.
நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி உரிய சத்திரசிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதியானார்.
பின்னர் கண்டி தனியார் வைத்தியசாலையில் சஞ்சனவாவை பரிசோதித்த வைத்தியரால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் சுயநினைவை இழந்ததால், அவரது மனைவி இது குறித்து மருத்துவரிடம் கேட்டுள்ளார்.
சஞ்சனவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து மூளை இறக்கத் தொடங்கியதால், நோயாளியைக் காப்பாற்ற முடியாததால், சுவாசக் கருவியை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வைத்தியரின் அலட்சியத்தால் தனது கணவர் உயிரிழந்துள்ளதாக சஞ்சனவின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சஞ்சனவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், அவரது உடலை அடக்கம் செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.
இது குறித்து விசாரிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது தோல்வியில் முடிந்தது.
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது
யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர்கைது ,யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் மூன்று இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் விசாரணையின் போது துபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படையாக குறித்த வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா
யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா
யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா ,பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்தார் அத்தோடு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் .
உடனடியாக அரச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தின் ஊடாக அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது அதில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனை நரம்பு சார்ந்த dr அசுரஆதி பகவனுக்கு காட்டுமாறு கூறப்பட்டது .
ஆனாலும் அவர் தனது விடுமுறைக்குச் சென்றதால் இரண்டு கிழமைகள் அவர் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை வேறு தெரிவுகளும் அந்த ஆசிரியருக்கு கூறப்படவில்லை மூன்று பிள்ளை கொண்ட அந்த தாய் இன்று மூளை நரம்பு வெடித்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா?????
மீண்டும் ஒரு மருத்துவத்தவறால் அவரின் உயிர் போனது??????? பாடசாலை தொடங்கும் போது பாடசாலையில் கால் பதித்தவர் அவருக்கு சென்ற வருடம் 2023 உடன் எமது பாடசாலையின் பணிக்காலம் முடிவடைந்துவிட்டது
அவர் விரும்பி இருந்தால் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கலாம் நான் கேட்டபோது அவர் கூறிய ஒரே பதில் Sir நான் நீங்கள் இருக்கும் மட்டும் இருந்து விட்டுப் போகின்றேன் என்றார்.
பாடசாலைக்கு முதல் ஆசிரியராக எப்போதும் பிள்ளைகளை வழி நடத்திக் கொண்டிருப்பார் வந்துகற்பித்தலில் பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர்.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்த ஒரு தாய் இன்று மூச்சடங்கி கிடக்கின்றாள்.
ஒரு மாதத்துக்கு முன்னர் தனது உடல் உபாதையும் கருத்தெடுக்காமல் பாடசாலைக்கு வந்து காலை கூட்டத்தில் நற்சிந்தனை கூறிக் கொண்டிருந்தபோது மயக்கமுற்து கீழே விழுந்தார் எந்தப் பாடசாலைக்கு அயராது உழைத்தாரோ அதே பாடசாலையின் மண்ணில் தலை சாய்ந்து விழுந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசி ஊடாகவே பிள்ளைகளுக்கு என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை சக ஆசிரியர்களுக்கு கூறிவழிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இறுதியாக என்னிடம் பேசிய போது தான் பாடசாலைக்கு திங்கள் வரப்போவதாகவும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்றும் கூறினார் அவருக்கு விருப்பமான சக ஆசிரியை செல்வா வீட்டுக்குச் சென்று அவர்களின் கையால் டீ குடித்துவிட்டு சாரி ஒன்றையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார்.
பிள்ளைகளின் உணவு விடயத்திலும் அதீத ஈடுபாடு கொண்டவர் என்ன வேலை சொன்னாலும் முடியாது என்று சொல்லாமல் எனக்கு வலதுகரமாக தோளோடு நின்ற அன்பு தாயே சகோதரியே உமது பணி பலாலி வடக்கு பாடசாலையில் எ ப்போதும் நினைவு கூரப்படும்
சென்று வா தாயே உமது ஆத்மா சாந்திக்காக நாங்கள் எல்லோரும் தலை சாய்த்து வணங்குகின்றோம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
அதிபர்
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல்
அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல்
அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல் ,அடங்க மறுக்கும் சத்தியமூர்த்தி,மருத்துவர் நாகநாதன் பரபரப்பு பேட்டி .
கீழே இதில் அழுத்தி பார்க்கவும்
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு ,வவுனியா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
முகமூடி அணிந்த நிலையில் வாள்களுடன் சென்று நபர்கள் அங்கிருந்த ஐயர் உள்ளிட்ட கணவன் மனைவி மற்றும் இருவர் மீது கடும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
மர்ம நபர்கள் நடத்திய திடீர் வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
இது திட்டமிடப்பட்டு கூலி குழுக்களினால் வரவழைக்கப்பட்டஅந்த நபர்களூடாக இந்த தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது ..
தாக்குதலை நடத்தியவர்கள் தமது பால் பட்டு தாக்குதல் வெற்றி பெற்றதை அடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தற்பொழுது குற்றத்தை தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
வவுனியா பகுதியில் இடம்பெற்ற இந்த வாள் வெட்டுச் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

தீயில் எரிந்த வீடுகள்
தீயில் எரிந்த வீடுகள் ,பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் பழைய தோட்டம் என அழைக்கப்படும் சீன் லோவர் பூண்டுலோயா தோட்டத்தில், வெள்ளிக்கிழமை (16) இரவு 08 மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 28 வீடுகள் கொண்ட
இலக்கம் (01) தொடர் குடியிருப்பு லயத்தில் 25 வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக பகுதிக்கு பொறுப்பான கிராம அபிவிருத்தி அதிகாரியின் அறிக்கை படி பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 25 வீடுகளை சேர்ந்த 86 பேர் நிர்கதிக்குள்ளான நிலையில் அத் தோட்ட ஆலய மண்டபம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த திடீர் தீ பிடிப்பு சம்பவத்தினால் அதிர்ச்சிக்கு உள்ளான இரு வயோதிபர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் வீடுகளை இழந்து உள்ள மூன்று கர்ப்பிணி தாய்மார்கள் உறவினர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ சம்பவத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
அதேநேரம் இந்த தீ பிடித்த சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் சீன் தோட்டத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இளைஞர்கள் போராடி உள்ள போதிலும் பலனளிக்கவில்லை எனவும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கபட்டதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த தீ பிடிப்பு சம்பவத்தை உணர்ந்த குடியிருப்பாளர்கள் முடிந்தவரை போராடி தமது உடைமைகளை காப்பாற்றியும் உள்ளனர் பலர் தமது உடைமைகளை இழந்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்,இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் உடன் தேவைகளுக்கான வசதிகளும்,நிதி உதவியும் செய்து சென்றதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
அவசர எச்சரிக்கை
அவசர எச்சரிக்கை
அவசர எச்சரிக்கை ,மக்களுக்கு அவசர எச்சரிக்கை மாநிலம் அறிவித்திருக்கின்றது அதன்படி களுகங்கையின் கிளை கங்கையான குடாகங்கையின் மேற்பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிக மழைநீர் தேங்கியுள்ளதால் வல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் அவ்வளையும் இங்கு இந்த குளம் உடைக்கப்பட்டு நீர் வெளியேறலாம் என்பதால் மக்களை 48 மணி எச்சரிக்கை இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதன் பொழுது மக்கள் எவ்வாறு தப்பிப்பது என்பது ஒரு பக்கமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக அளவு மழை நீர் வீழ்ச்சி இடம் பெற்று வருவதால் அதிக வருட பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதாலேயே மக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அஞ்சுகின்ற மக்கள் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்
பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்
பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள் ,சிலாபம் காவல்துறைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
அவர் ஒருவர் குறித்த பெண்ணை தூக்கிச் செல்கின்ற காட்சி காணப்பட்டதாகவும் அதனை அடுத்து மேற்படி பிகண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொண்டனர்.
இதன்போது காணாமல் போனவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க மீட்க கப்பட்டுள்ளதுடன் அவரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படும் 34 வயதுடைய நபர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த பெண்ணை கடத்திச் சென்றார் எதற்காக இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் பழிவாங்கல் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டதா அல்லது கூலிக்கு மாற்றப்பட்ட செயலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது தற்பொழுது விசாரணங்களை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இவ்வாறான கொலைகள் நாள்தோறும் இடப்பட்டு வருவதும் அதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டை வளப்படுத்துவேன் சஜித்
இந்த நாட்டை வளப்படுத்துவேன் சஜித்
இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப் பயணத்தின் தலைவர்களாக மாறி செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களை நடத்தியுள்ளதோடு, ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஏனைய கட்சித் தலைவர்களை போன்று மேடைகளில் ஏறி நாடகங்களை அரங்கேற்றாது வெற்றுப் பைல்களை காண்பித்து மக்களை ஏமாற்றுகின்ற நாடகங்களில் நடிக்காது, செயற்பட்டுள்ளோம். நாட்டை வங்கரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ராஜபக்ஸக்களை சட்டத்தின் முன் நிறுத்தி ராஜபக்ஸக்கள் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திருடப்பட்ட நாட்டின் வளங்களையும் திருடப்பட்ட நாட்டின் பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தனிநபர் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முதல் முதலில் சமர்ப்பித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கோ அல்லது தமது கட்சி உறுப்பினர்களுக்கோ திருடர்களுடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. திருடர்களை பாதுகாக்கின்றவர்களோடும் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை. கைவாறு அரசியலை நிறுத்துவதோடு இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற வெற்றியின் முதல் பொதுக் கூட்டம் நேற்று (16) குருநாகல் சத்தியவாதி மைதானத்தில் பெரும் சனத் திரளுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியினையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெரும் திரளான மக்கள் இந்த வெற்றிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் வைன் ஸ்டோர்களுக்காக அனுமதிப்பத்திரங்களுக்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்படுகின்ற யுகத்தை நிறைவு செய்வோம். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள ஒவ்வொருவரும் வரங்களையும் வரப்பிரசாதங்களையும் எதிர்பார்க்காது கொள்கையை அடிப்படையாகக் கொண்டே எம்மோடு இணைந்தனர். எமது கட்சியின் நிதி பிரபஞ்சம் மற்றும் மூச்சு ஆகிய வேலைத்திட்டங்களுக்காகவே ஒதுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
கட்சி மாறுகின்றவர்களுக்கும் கட்சி மாறுவதற்கும் இடமளிப்பதோடு செப்டெம்பர் 21 ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது தொடர்கதைகளாகவே அன்றி மக்களின் வாக்குரிமை மூலமே தெரிவு செய்யப்பட்டு, பொதுமக்களின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவேதாடு ஐக்கிய மக்கள் சக்தி சொல்வதை செய்கின்ற செய்வதைச் சொல்கின்ற கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இனவாதத்தையும் மதவாதத்தையும் குரோதத்தையும் வைராக்கியத்தையும் அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்கள் உருவாகினார்கள். அந்த குரோதத்திற்கு மத்தியில் ஐக்கியத்திற்கான விதையை முளைக்கச் செய்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தாளுகின்ற இந்த புற்று நோய்க்குப் பதிலாக அன்பையும் கருணையையும் உணர்வுபூர்வமான தன்மையையும் வெளிப்படுத்துகின்ற அரச நிர்வாகத்தை உருவாக்கி காயப்பட்டுள்ள இந்நாட்டை சுகப்படுத்த தான் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
குரோதத்தை வெளிப்படுத்துகின்றவர்களை மக்கள் வெறுப்பதோடு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒதுக்கி இலங்கைக்கேயான தன்மையுடன் கூடிய யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மக்ளோடு மாத்திரமே ஒப்பந்தம் செய்திருக்கின்றது.
நாட்டின் ஜனாதிபதிக்கு இலகுத்தன்மை காணப்பட்டாலும் ஜனாதிபதி உலக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருவதோடு நாட்டின் ஜனாதிபதி என்பவர் நாட்டின் தற்காலிக பாதுகாவலரே அன்றி நாட்டின் சொந்தக்காரர் அல்லர் என்று இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனினும் நாட்டில் காணப்படுகின்ற பிரச்சினைகளை இனவாத மற்றும் சோசலிச சிந்தனையுள்ளவர்களால் தீர்க்க முடியாது. ஊழலையும் மோசடியையும் இல்லாது செய்து திருடப்பட்டுள்ள நாட்டின் சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான சக்தியை பெற்றுத் தாருங்கள். மருந்துப் பொருள் ஊழல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தான் கொண்டு வந்தது. அந்த மருந்து ஊழலில் ஈடுபட்டவர்களிடமே நாட்டை மீண்டும் கையளிக்காமல் சரியான தீர்க்கமான முடிவை எடுக்கமாறு எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி
அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி
அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி,பொல்லு கொடுத்து அடிவாங்கிய அடாவடி மன்னன் சத்தியமூர்த்தி .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

ரணில் விக்ரமசிங்கே சாதனை
ரணில் விக்ரமசிங்கே சாதனை ,கடந்த 15 ஆண்டுகளில் திரு ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.
திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான்,
நாவற்குழி சிங்கள குடியேற்றம்சட்டபூர்வமாக்கப்பட்டது
வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள் சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன
திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன
வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன
மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது
கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது
ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன.
குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன
முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன
கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது
கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்
கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது .
கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது
நாயாறு கொக்கிளாய் – முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன .
கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது
ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது
கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் – முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர்
சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது
மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க காணி வழங்கப்பட்டது
மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள், விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன
இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர் மீட்பராக சித்தரிக்கின்றார்கள்
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

60 கோடி வாங்கினார் சாணக்கியன்
60 கோடி வாங்கினார் சாணக்கியன்
60 கோடி வாங்கினார் சாணக்கியன் ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தனிப்பட்ட முறையில் 60 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ரெலோ அமைப்பின்
செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,
மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியே தமக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தம்மால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொண்டு, வழங்கப்பட்ட அந்த நிதியில் தற்போது மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசியல் நோக்கத்திற்காகக் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

ஆசிரியை அடித்த உபஅதிபர் உட்பட நால்வர் கைது
ஆசிரியை அடித்த உபஅதிபர் உட்பட நால்வர் கைது
ஆசிரியை அடித்த உபஅதிபர் உட்பட நால்வர் கைது ,பதுளை, வெலிமடை கல்வி பணிமனைக்குட்பட்ட உடபுஸ்ஸல்லாவ அலக்கொலை தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் டெல்மார் தோட்டத்தை சேர்ந்த ஆசிரியை
ஒருவர் கடமை நேரத்தில் தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பாக அதே பாடசாலையில் கடமையாற்றும் உப அதிபர் உட்பட நால்வர் ஊவா பரணகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் (15) இடம்பெற்றதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியை மீதான இந்த தாக்குதலில் தான் பணியாற்றும் வித்தியாலயத்தின் அதிபர் உள்ளிட்ட அவருக்கு தேவையான ஆசிரியர்கள் ஈடுப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை ஊவா பரணகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் (13.08.2024) செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உடப்புசல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தன்னை தாக்கியவர்கள் தொடர்பில் தன்னால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
கடந்த ஐந்து வருடங்களாக குறித்த பாடசாலையில் கடமையாற்றி வரும் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியைக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு கற்பிக்க பாட நேரசூசி வழங்கப்படாது பாடசாலை அதிபரால் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.
அதே நேரத்தில் பாடசாலையில் ஆசிரியராக புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ள அதிபரின் மகனுக்கு கூடுதலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பாடசாலையின் கற்றல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பாடசாலையில் மேலதிக ஆசிரியர்கள் சேவைக்கு உள்ளதாக கூறி பாடசாலை அதிபர் பாதிக்கப்பட்ட ஆசிரியையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதே சந்தர்ப்பத்தில் அத்துமீறிய இடமாற்றத்தை கண்டித்து குறித்த ஆசிரியை கல்வி திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளதுடன் தனக்கு நேர்ந்ததால் தெரிவித்துள்ளார்.
ஆனால் நாளுக்கு நாள் பாடசாலை அதிபரின் செயற்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாத ஆசிரியை அத்துமீறிய இடமாற்றத்தை தடுக்க சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் வழக்கு தொடர்ந்து இடமாற்றத்தை தடை உத்தரவையும் பெற்றுள்ளார்.
இவ்வாறான செயற்பாட்டினால் ஆத்திரம் கொண்ட அதிபர்,உப அதிபர் உள்ளடங்களாக ஆசிரியர்கள் என நால்வர் ஆசிரியையை பழிவாங்கும் விதத்தில் ஆசிரியைக்கு பாடங்கள் கற்பிக்க இடம் கொடுக்காது பாடசாலை வகுப்பறையில் அமர்வதற்கும் கூட இடம் கொடுக்காது தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இது விடயமாக குறித்த ஆசிரியை பாடசாலை அதிபரிடம் வினவியபோது ஆத்திரம் கொண்ட அதிபர் ஆசிரியையை அவருக்கு தேவையான ஆசிரியர்களை வரவழைத்து தாக்கியுள்ளதுடன்,பாடசாலை அறை ஒன்றில் சிறை வைக்கப்பட்டதாகவும் ஆசிரியையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்திய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் உள்ளதாக தெரிவித்தனர்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்
மைத்திரி ரணில் தேர்தலில் மோதல்
மைத்திரி ரணில் தேர்தலில் மோதல் ,ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தூது அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி, நம்ப முடியாத ஒருவரின் ஆதரவை தமக்கு வேண்டாம் என தெரிவித்ததாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
“எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் இப்போது போக வழியில்லாத நிலையில் இருக்கிறார், எந்தக் கட்சியும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, அவர் நம்பிக்கையை சிதைக்கும்போது,
, இப்போது அவர் எங்காவது குப்பைகளை நிறைய தேடுகிறார். ஆனால், ஒரு முன்னாள் ஜனாதிபதி, “இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குச் சென்றமைக்காக
நாங்கள் வருந்துகிறோம்” என்று பெலியத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகையில் அமைச்சர் கூறினார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்
மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்
மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாதம் பெற்றனர்.
பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி
துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி
துப்பாக்கிச் சூடு இளைஞன் பலி ,அநுராதபுரம் – ஸ்ரீபுர, கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரி – 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன்
யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன்
யானையை பொலிஸார் சுட்டு கொன்றது ஏன் ,வீதியில் பயணித்த காட்டு யானை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயாய தம்புர பிரதேசத்தில் இந்த காட்டு யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பக்கமூன வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தது 35 வயதான ‘ராஜா’ என அழைக்கப்படும் காட்டு யானையாகும்.
குறித்த யானைக்கு ஒரு கண் பார்வை தெரியாது எனவும் கூறப்படுகிறது.
இந்த காட்டு யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்களை காட்டு யானையை தாக்க முற்பட்டதாகவும், இதனால் ரி56 ரக துப்பாக்கியால் காட்டு யானையை சுட்டுக்கொன்றதாகவும் பகமூன பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காரணமாக நேற்று இரவு அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹபரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல தெரிவித்துள்ளார்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

சிந்துஜா அவருடைய பிள்ளை
சிந்துஜா அவருடைய பிள்ளை
சிந்துஜா அவருடைய பிள்ளை ,பெரும்பாலும் சில விடயங்களை நான் கண்டும் காணாதுபோன்று கடந்து போவது வழக்கம்.
கீழ்த்தரப்பட்ட இணையத்தளமானது தமிழ் முஸ்லிம் பேசும் மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு கிழக்கிலே ஒரு அரசியல் கட்சியை சார்ந்தது என்பதை இந்த இணையதளத்தினது கடந்த பகுதிகளை நீங்கள் பார்க்கும் போது தெளிவாக தெரிந்திருக்கும்.
வைத்தியர் செந்தூரன் அவர்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் ஜனாதிபதியின் ஊட்டலின் அடிப்படையில் முக்கியமாக வடக்கு மாகாணத்திலே நாங்கள் யாரை பிழை விட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோமோ அந்த
வைத்தியர்கள் சார்ந்த மற்றும் வைத்தியர் செந்தூரன் தனக்கென ஒரு பரப்புரை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் திட்டமிட்ட
ரீதியில் முதலே வகையாக திட்டமிட்டு பனர்கள் பிரிண்ட் பண்ணப்பட்டு வைத்திய செந்தூரன் அவர்கள் பச்சை கலர் உடுப்புடன் அழைக்கப்பட்டு அங்கே ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
அதற்கு முக்கியமான சூத்திரதாரி வடக்கு மாகாணத்தில் தற்போது வடக்கு மாகாண சுகாதார துறையில் முக்கிய பதவி வைக்கும் ஒரு சிங்கள வைத்தியரும் மற்றும் சம்பந்தப்பட்ட சிந்துஜா இறந்த வைத்தியசாலையில் வேலை செய்கின்ற அதற்கு
சார்பாக இருந்த சில பல ஊழியர்கள் மற்றும் முதலில் வைத்தியசாலை பக்கம் என்று இருந்து மறுபடியும் கழுதை போன்று குத்துக்கரணம் அடித்த பொது அமைப்புகளின் தலைவர் சிவகரன் ஆகியோர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் தாங்கள்தான் இந்த
போராட்டத்தை செய்கிறோம் என்றும் அதற்குரிய கிரெடிட் அல்லது பலன்களை தங்களது பேரில் மாற்றிக் கொள்ள முனைகின்ற சம்பந்தப்பட்ட ஒரு சில அரசியல் சார்ந்த புள்ளிகளும் அவர்களுடைய அடியாட்களும் விசிறிகளுமே இந்த திட்டத்தை
நன்கு திட்டமிடாமல் (திட்டமிட்டதென நினைத்துக் கொண்டு) செய்திருந்தார்கள்.
பொதுமக்களுக்கு இது சம்பந்தமான நன்கு தெளிவான அடிப்படை அறிவு உண்டு என்பதை இவர்கள் ஒரு முட்டாள்கள் சமூகம் போதிக்கின்றது போன்று ஒரு மன்னார்
என்ற ஒரு படித்த சமூகத்தை ஒரு காலத்திலேயே வடக்கு கிழக்கிலே மன்னார் என்று சொன்னால் நடுங்கும் அளவுக்கு கல்விமான்களை கொண்டிருந்த ஒரு சமூகத்தை திட்டமிட்ட ரீதியில் இனரீதியில் அடக்கி ஒடுக்கி அவர்கள் செய்கின்ற இந்த கூத்தானது
தமிழ் மக்களினுடைய இனத்தை இருப்பை கேள்விக்குறியாக்குவதும் மேலும் தமிழ் மக்களுடைய குரலை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்குமே இவர்கள் இந்த திட்டமிட்ட செயலை செய்கிறார்கள்.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்றால் இதில் நாங்கள் சம்பந்தப்படாத ஒரு சில சக்திகள் கூட்டாக வேலை செய்கின்றன.
ஆகவே பொதுமக்கள் வைத்திய செந்தூரனோ அல்லது சிவகரனோ செய்கின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக எதையுமே செய்ய மாட்டார்கள் என்பது எனது கணிப்பு.
ஆனாலும் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறான போராட்டங்களில் இணையும் போது நன்மதிப்பு மிக்க நீதிமன்றத்தை நாங்கள் அவமதிப்பதாகவும் அதுமட்டுமல்ல இந்தப் போராட்டத்தை பல திசைக்கு இழுத்து போராட்டத்தை மழுங்கடிக்கின்ற அரசியல்
லாபம் தேடுகின்ற செய்திகளை பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதை இந்த கழுதைகள் அறிந்து கொள்ளாவிட்டால் அதற்கு பொதுமக்களாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நான் பொறுப்பு அல்ல.
பொறுப்புத் திறப்பு.
முட்டாள்களுக்கானது.
சம்பந்தப்பட்ட சிந்துஜா அவருடைய பிள்ளை சம்பந்தமான முழு பொறுப்பும் இதுவரை இவர்களுக்கு இருந்தும் நான் வைத்தியசாலையை நோக்கி வரும் வரை இவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்
இவர்களுடைய தெருக்கூத்துகளை தெருக்கூத்துகளாக வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு நன்றாக அனுபவிப்போம் இப்படிக்கு உங்கள் அன்பு மகன் மன்னாரின் மைந்தன் இராமநாதன் அர்ச்சுனா.
இவ்வாறு அர்ச்சுனா அதனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு










































