மனித புதைகுழி அகழ்வில் தாமதம்
Posted in இலங்கை செய்திகள்

மனித புதைகுழி அகழ்வில் தாமதம்

மனித புதைகுழி அகழ்வில் தாமதம்

மனித புதைகுழி அகழ்வில் தாமதம் ,மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள காரணத்தால் யாழ்ப்பாணம் – செம்மணி, மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான்

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் கள விஜயத்தை மேற்கொண்டார்.

மனித புதைகுழி காணப்படும் பகுதி

இதன்போது மனித புதைகுழி காணப்படும் பகுதி சதுப்பு நிலமாக உள்ளதை நீதவான் அவதானித்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு ,மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி தொடர்பான வழக்கு

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 11-09-2025அன்று நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மேல்

நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு

நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு,நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கான கட்டளை கடந்த அமர்வில் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் குறித்த அறிக்கையானது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்;டது.


இதனடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் 164எலும்புக்கூடுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் 164எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் 164எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் 164எலும்புக்கூடுகள் மீட்பு யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று எலும்பு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழி

இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 158 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Second Phase of Excavation – Day 35
27.08.2025

During today’s excavation at the Chemmani human grave site in jaffna

During today’s excavation at the Chemmani human grave site in jaffna , three additional sets of human remains have been newly identified.
With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 169

So far, 158 sets of remains have been fully excavated.

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்

கனடிய தமிழர் பேரவை இலங்கை ஜனாதிபதி அனுராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும்

கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி கெளரவ அனுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதே வேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி

ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது.

இதுநிற்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் செம்மணி மனிதபுதைகுழியை பார்வையிடுவதற்கு தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அந்த பகுதியில் விஜயம் மேற்கொள்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும்தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்தகால மனித உரிமை மீறல்களை கையாள்வது குறித்த-நாட்டின் நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால்

மனித உரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களிற்கும் செல்வதற்கும் எந்த தடையையும் விதிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனடிய தமிழர் பேரவையால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கிணங்க அனுரா செயற்படுவாரா என்பது கேள்விக்குறியே.

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்

வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்

வடக்கில் பத்திற்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுவதாகவும் அவற்றையும் அகழ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன.

முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.

ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில்

மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.

அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ,

இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில்

கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த புதைகுழிகள், 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு பின்னர்,

இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999ம் ஆண்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே உள்ளன.

அப்போது, 15 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, இதில் சிலர் கண்ணை கட்டிய நிலையில் மற்றும் கைகளைக் கட்டிய நிலையில் இருந்தனர்,

இது அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கிறது.

இந்த புதுப்பட்ட கண்டுபிடிப்பு, கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மீண்டும் வெளிக்கொணர்கிறது.

அதே நேரத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் நீதியின் தேடலை மீண்டும் தூண்டுகிறது. மாற்றம் மற்றும் நியாயத்தை எதிர்பார்க்கும் குடும்பங்கள், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.

இந்த நிலையில், சரியான மற்றும் முழுமையான விசாரணைகள் நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம் ,முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் மனித புதகுழி முன்பாக இன்று மக்கள் போராட்டம் ஒன்றே நடத்துவதற்கு தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறுப்புகளின் சங்கத் தலைவி மரியா சுரேஷ் ஈஸ்வரி இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கொக்கு தொடுவாய் பகுதியில் மீட்கப்பட்ட அத்தனை சடலங்களும் மக்களதும் விடுதலைப் புலிகளுடைய சடலங்கள் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

உயிரோடு சிறைபிடிக்கப்பட்டவர்கள் கொன்று படுகொலை செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரும் மனித படுகொலையை நடத்தி மக்களை அழித்த மனித ஓட்டையை நடத்திய இனப்படுகொலையாளர்கள் இன்றும் இந்த உலகில் நிம்மதியாக உலாவிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்ப்பு ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

சிங்கள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் ஆனால் அப்பாவை மக்கள் கண்ணீரோடும் கவலையோடும் உலவி வருவது ஏன் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது சர்வதேசம் இந்த படுகொலைக்கு இன்னும் தீர்ப்பு எழுதாதையர் என்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்​கேன் மூலம் ஆராய்வு
Posted in இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்​கேன் மூலம் ஆராய்வு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்​கேன் மூலம் ஆராய்வு

புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படவுள்ளது

என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக, செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்று அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விசேட ஸ்​கேன் மூலம் ஆராய்வு

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இடம் பெற்றிருந்தது. இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.

இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும் . எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித

புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விஷேட ஸ்கான் சோதனை நடைபெறும்.

களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கேன் இயந்திரத்தினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் தடயப்பொருட்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்

மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்

நவம்பர் 20 மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (30) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ அவர்கள் சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுதொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன
Posted in இலங்கை செய்திகள்

மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன

மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலே கடந்த 2023.06.29 அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு

உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் அருகில் உள்ள நகரம் ஒன்றில் பெரும் குழிதோண்டி

புதைக்க பட்ட நிலையில் 1200 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

ரசியா உக்கிரேனில் பெரும் மனித பேரழிவை நடத்தியுள்ளது எனவும் இவர்கள் புரிந்த

போர்குற்றத்திற்கு தண்டனை
வழங்க வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது

    Posted in Uncategorized

    கனடாவில் பாடசாலைக்குள் மேலும் ஒரு புதைகுழி – கொதிக்கும் மக்கள்

    கனடாவில் பாடசாலைக்குள் மேலும் ஒரு புதைகுழி – கொதிக்கும் மக்கள்

    கனடா அரசின் ஆட்சியில் பாடசாலை ஒன்றுக்குள் தங்க வைக்க பட்ட சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டும் ,கொடுமை படுத்த பட்டும் படுகொலை செய்ய பட்டனர்

    அவ்விதமான புதைகுழி ஒன்று தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

    கடந்த முறை 215 சிறார்கள் சடலங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இம்முறை இந்த புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது

    மேற்படி புதைகுழி கண்டுபிடிப்பு செய்தி பரவிய நிலையில் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்