குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ,மட்டக்களப்பு , காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .
குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு

- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது

- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்

- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது







