Tag: காங்கேசன்துறை
கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது
கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது
கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது ,இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் செவ்வாய்க்கிழமை (20) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.
கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இந்நிலையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்
நாட்டின் துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக துறைமுகங்கள் , கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அலைதாங்கி உட்பட பல்வேறு தேவைகளை உருவாக்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கொழும்பு துறைமுகம், கொள்கலன் முனையங்கள் மட்டுமன்றி பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
=
இந்த வருடத்தில் துறைமுகத்தறையில் சுமார் 39 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.கடந்தவருடத்தில் இத்தொகை 15.5 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் .எதிர்காலத்தில் மேலும் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒடுக்கீடு தொடர்பில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில்,சமகால அரசாங்கம்
துறைமுகத்தின் அபிவிருத்திக்காக பாரிய தொகை நிதியை செலவிட வேண்டியுள்ளது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 480 அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.
இதனை அரசாங்கமே வைத்திருக்க வேண்டுமென துறைமுக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கிழக்கு முனையத்தை அரசாங்கமே மேம்படுத்த வேண்டும்.
இந்த நோகத்துடனேயே அரசாங்கம் செயல்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.
Featured
காங்கேசன்துறையில் ரயிலுக்குள் பாய்ந்து வாலிபர் தற்கொலை
காங்கேசன்துறையில் ரயிலுக்குள் பாய்ந்து வாலிபர் தற்கொலை
கொழும்பில் இருந்து காங்கேசன் துறை நோக்கி பயணித்த அஞ்சல் ரயிலுக்குள் முப்பது வயதுடைய வாலிபர் பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் .
இவ்வாறு தற்கொலை புரிந்து கொண்டவர், அடையாளம் காணப்படாத நிலையில்விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .
அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை
யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை
யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் , தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய பெண்மணி கற்பழிக்க பட்டு பின்னர் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார் .
மருத்துவர்கள் மேற்கொண்ட மரண விசாரணை சோதனையில் மூதாட்டி கோரமாக கற்பழித்து பின்னர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .
கற்பழிப்பு குற்றம் புரிந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன





















