கப்டன் கலைமதி
Posted in இலங்கை செய்திகள் நிலா தமிழ்

கப்டன் கலைமதி

கப்டன் கலைமதி

கப்டன் கலைமதி ,அது 1995 காலப்பகுதி. வெள்ளை மேற்சட்டையும் (shirt) கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை (first in commerce) படிக்கவென யாழ் நாவலர்

வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம். எப்பொழுதும் எதற்கும் அணித்தமாக இருப்பது போல் அவருடைய எறும்பு

போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது.

கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற்பெயருடன் அக்காமார், அண்ணன்,

தங்கை, தம்பிகள் கொண்ட இயல்பான குடும்பத்தில் பிறந்தவர் தான். தந்தை ஒரு புகைப்படக்கலைஞராக அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றை

நடத்திவந்தார். மற்றவர்கள் போலவே கல்வி, வாழ்க்கை என்று அவரின் வாழ்வும் நகர்ந்தது. கணக்கியல் உயர் தேசிய கல்வியையும் (HNDA) நிறைவுசெய்து, நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

காலத்தின் தேவைகருதி 1993 காலப் பகுதியில் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர், புரட்டாதி மாதம் தனது ஆரம்பப் பயிற்சியை மகளிர் பயிற்சிப் பாசறையில் 27ஆம் அணியில் “சுகி” முகாமில் மேற்கொண்டார்.

பயிற்சியில் ஓடும் போது அவருடைய ஒரு காலில் சுழிவு ஏற்பட்டது. அப்படியிருந்தும் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டதால் கால் எலும்பு முறிந்து விட்டது. அதனால் மிகுந்த இடர்ப்பட்டதுடன் துன்பத்தையும் அனுபவித்தார்.

அதன் பின் 1994 பங்குனி மாதமளவில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கு அனுப்பப்பட்டார். சிறிது காலம் சிகிச்சையில் அவர் இருந்தாலும் கணக்காய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

அங்கு தான் அவருடைய ஆளுமை வெளிப்பாடு தெரிய வந்தது. அத்துடன் வெளிவாரி வர்த்தக பட்டப் படிப்பையும் (first in commerce) அங்கிருந்தே தொடர்ந்தார்.

நிதித்துறை வழங்கல் பிரிவின் வாணிபங்களின் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய பணி நேர்த்தி அவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். தானும் நேரத்தை வீணடிக்காமல் மற்றவர்களையும் வீணடிக்க விடாமல் வேலை செய்வது அவரின் திறமை.

வழங்கல் பகுதியில் இரும்புத் தொழிலகம், புடவை வாணிபம், கோல்சர் வாணிபம், தையல் தொழிலகம், அடுக்கணி வாணிபம் என பல வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை திறம்பட மேற்கொண்டார்.

1995 ஐப்பசி மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தை வன்கவர்வதற்காக வான் தாக்குதல்கள்,

எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதானல் அங்கிருந்து வெளியேறி, சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுப் பணிகள்

தொடர்ந்தன. மீண்டும் தரை வழியாகவும் வான் வழியாகவும்bகரையோரத் தாக்குதல்கள் மூலமும் பகுதி பகுதியாக சிறிலங்கா இராணுவத்தினர் எமது ஊர்களை வன்கவர்ந்த வண்ணமிருந்தனர்.

1996 பங்குனி மாத நடுப் பகுதியில் அங்கிருந்தும் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் சென்றபோதும் வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணி ஒழுங்கு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.

ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் மனம் சோராமல் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நீண்ட தொலைவுக்குச் சென்றும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும் பணிகள் சீராக ஒழுங்கமைக்கப்பட்டன.

அத் தருணத்தில் தான் இழந்த ஒன்றிற்காக இன்னொன்றைப் பெறுவதற்காக ஓயாத அலைகள்1 நடவடிக்கைக்காக மேலதிக தேவை கருதி நிதித்துறை மகளிர் அணியும் படையணிக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.

கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு

அதில் கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.பயிற்சியின் போது உடைந்து பொருந்திய காலுடன் மிகவும் சிரமப்பட்டார்.

இருந்தபோதும், ஒருநாளும் பயிற்சிக்குப் பின் நின்றதே இல்லை. குறிப்பிட்ட எண்ணிக்கை முழு வட்டமும் ஓடி முடித்தே ஆக வேண்டும். அவரால் ஓட முடியாத நிலையில் நடந்தேனும் ஓட்டத்தினை நிறைவுசெய்வார்.

இயலாவிட்டால் முகாமுக்குத் திரும்பச் செல்லுமாறு பணித்தாலும் போக மாட்டேன் எனக் கூறி பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வார்.

தனக்குக் கிடைத்த களமுனைக்குச் செல்லும் வாய்ப்பைத் தவறவிட அவர் விரும்பவில்லை. சாப்பாடு எடுக்கும் முறை அணிக்குழுவில் அவருக்கு வரும்போது

அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பதால் சாப்பாடு எடுக்கும் பெரிய சட்டியை (டாசர்) கீழே பிடித்துக்கொண்டு வர கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதனால் சட்டியை (டாசர்)

தலையில் சுமந்துகொண்டு தாண்டித் தாண்டி நடக்க வெளிக்கிட்டு விடுவார். ஓயாத அலைகள் 1 வெற்றியடைய சத்ஜெய 1 நடவடிக்கையும் நடந்து முடிந்தது.

மீண்டும் களமுனையிலிருந்து முகாம் திரும்பி தனது தொடர்ச்சியான பணியை மேற்கொண்டார். சிலவேளைகளில் நாங்கள் முகாமில் உணவு சமைத்தும் உண்பதுண்டு.

அக்கா முட்டைப் பொரியல் சாப்பிட்டால்

அப்போது கலைமதி அக்கா முட்டைப் பொரியல் சாப்பிட்டால் சவர்க்காரம் போட்டுக் கைகழுவ மாட்டார். ஏனென்றால் கையில் அடிக்கடி அதை மணந்து பார்த்து மகிழலாம் என்பார். அத்துடன் சமையற்கூடப் பகுதியில் சோறு கூட எடுத்து வரச் சொல்லிக்

கூறுவார். ஏனென்றால் அதில் நீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சம் புளி எல்லாம் விட்டு பழஞ் சோறு குழைத்துத் தருவதற்கு தான். அவர் அவ்வாறு தரும் பழஞ்சோற்றின் சுவையோ தனிதான்.

அவரை முகாமில் ஒரு மூத்த அக்கா போல் கருதுவார்கள். ஏனெனில் அறிவுரைகள் சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்தவர்.

சக போராளிகளாயினும் பணியாளர்களாயினும் யாரையும் இலகுவில் பகைத்துக்கொள்ள மாட்டார். கண்டிப்பாகவும் அதேநேரத்தில் உறவோடும் பழகக்கூடியவர்.

எனவே அவருக்கென்று ஒரு தனிமரியாதை எல்லோரிடத்திலும் இருந்தது. நீண்டகாலமாக வழங்கல் பகுதி வாணிபங்களின் கணக்காய்வை அவர் திறம்பட செய்து வந்தார். வழங்கல் பகுதிப் பொறுப்பாளராக அம்மா அண்ணை இருந்து வந்தார்.

இருப்பு எடுத்தல் தொடங்கி விட்டால் கலைமதி அக்காவை கேட்கவே தேவை இல்லை. “திருவெம்பாவை பாட வெளிக்கிட்டுட்டா” என எல்லோரும் கூறுவார்கள்.

இரவில் பெற்றோல் மக்ஸ் விளக்கையும் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு கொட்டிலாக பார்ப்பதற்கு கிளம்பி விடுவார்.

“இந்த மனிசியுடன் குடும்பம் நடத்த இயலாது” என இவருடன் பணி செய்பவர்கள் பகிடிக்கு கூறுவர். இதனையும் ஒரு நாள் அவர் கேட்டு விட்டார். ஆனால் கோபிக்காமல் சிரித்து சமாளித்து வேலை செய்விப்பார்.

வழங்கல் பகுதி புடவை வாணிபம் சுதந்திரபுரத்தில் தான் இருந்தது. கணக்காய்வுப் பணி நிமித்தம் அங்குள்ள முகாமில் கலைமதி அக்கா மற்றைய போராளிகளுடன் தங்கியிருந்து வந்தார்.

அதிகாலை புலர்ந்தது. அன்று புதுக்குடியிருப்புக்கு சென்று தனி நபர் வழங்கல் எடுக்கும் நாள்.

தன்னுடன் துணையாக பணி செய்த போராளியை அங்கு செல்ல அணியமாகுமாறு கூறிவிட்டு தேநீர் தயாரிக்க பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அந்தப் போராளி தயாராகி வந்து பார்த்த போது பாற் சட்டி கருகியிருந்தது. கலைமதி அக்கா அங்கு தான் நின்றவர்.

ஆனால் அவருக்கு அது தெரியவில்லை.

1998 ஆனி மாதம் பத்தாம் நாள் அன்று தான் சுதந்திரபுரத்தில் அந்தத் துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தது. திடீரென சிறிலங்கா இராணுவம் அப்பகுதி மீது வான், தரை மற்றும்கடலிலிருந்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடத்தியது.

அதில் பெருமளவு மக்கள் (33 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்), பல பணியாளர்கள் படுகாயமடைய, பலர் கொல்லப்பட்டனர்.

யார் நினைத்தார் இப்படி நடக்கும் என்று. அந்தக் கோர நிகழ்வில் எமது கலைமதி அக்காவும் (கப்டன் கலைமதி) அம்மா அண்ணாவும் (லெப்.கேணல் அன்பு/அம்மா) வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

“புடவை வாணிபம் இல்லாவிடில் தான் இல்லை” எனக் கூறும் எங்கள் கலைமதி அக்கா என்றும் எம் தேச வரலாற்றில் நீங்காமல் நிறைந்திருப்பார்.

நிலா தமிழ்

(இந் நினைவுப் பகிர்வுக்குத் தகவல் குறிப்புகள் வழங்கியவர்- விண்ணிலா)

பாலத்தில் விழுந்து பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

பாலத்தில் விழுந்து பெண் பலி

பாலத்தில் விழுந்து பெண் பலி

பாலத்தில் விழுந்து பெண் பலி ,பாலத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் மரணமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இரத்தினபுரி பிரதேசத்தில் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து மரணமாகியுள்ளார் .

பாலத்தின் மேலிருந்தபொழுது தவறி விழுந்து நீருக்குள் மூழ்கி மரணமாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வாறு இறந்தவர் 33 வயதில் இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

சடலம் மீட்பு

இறந்தவரது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது .

இந்த பெண் தவறி விழுந்தது எப்படி ஏன் அந்த பாலத்தில் அவர் தங்கி இருந்தார் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா அல்லது இயல்பாகவே தவறி விழுந்தாரா ,என்பது தொடர்பான விசாரணைகளை ,போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் நாளுக்கு நாள் நீர் ஏரிகள் , காடுகள், குளங்கள், பற்றை வெளிகள் ,பாழடைந்த வீடுகளுக்குள், மனித சடலங்கள் தொடர்ந்து கண்டெடுக்க பட்டு வருகின்றது.

மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார்

இந்த மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை .

பலர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள மர்ம நபர்கள் யார் அல்லது இது சீரியல் படுகொலையா என்பது தொடர்பாகவும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கப்படவில்லை .

இவ்வாறான நிலையில் தற்போது பாலத்திலிருந்து 33 வயதுடைய இளம் பெண் நீரில் விழுந்து மூழ்கி மரணமாகியுள்ளது ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசா ,சஜித் பிரேமதாசா ஐங்கயன் திடீர் சந்திப்பு .

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணத்திற்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார் .

அங்கு பாடசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்ற பொழுது ஐங்காயனை சந்தித்துக் கொண்டார் .

இருவரும் ஒன்றாகச் சந்தித்து அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசப்பட்டதான விடயங்கள் வெளியாக இருக்கின்றன.

பிரேமதாசாவுக்கு அங்கயன் ஆதரவு .

எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு அங்கயன் யாழ்ப்பாணத்தில் இருந்து மிகப்பெரும் ஆதரவை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ரணில் அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தை போட்டி போடுகின்றார் .

எனவே அந்த இடத்தை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் எவரும் இல்லை ,அதனால் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,ஐங்கயன் ராமநாதனை களம் இறக்க உள்ளதாக தெரிய வருகின்றது .

இந்த நிகழ்வில் பேசிய அவர்கள் எதிர் வருகின்ற தேர்தலில் தாங்கள் ஒன்று இணைந்து பயணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

தமிழ் மக்களுக்கு பாரிய நன்மை

அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு பாரிய பலன்களையும் நன்மைகளையும் தாங்கள் ஏற்படுத்தி தருவோம் என்ற விடயத்தினை அறிவித்துள்ளனர் .

ஆட்சி கட்டில் ஏறும் வரைக்கும் இவ்வாறானவர்கள் இவ்வாறு உரைப்பதும் ,ஜனாதிபதி ஆனதும் ,தமிழர்களை மறந்து அவர்களை எட்டி உதைக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் .

ஆண்டாண்டுகளாக ஆளுகின்ற ஜனாதிபதி வர்க்கமும் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களும் இவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர் .

அவ்வாறான ஒரு நிலைக்கு தற்பொழுது சஜித் பிரேமதாசாவும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசாவை அதிகம் நம்புவதற்கு,பிரேமதாசாபோன்று நல்லெண்ணெத்தை வெளியிட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வு ஐயா வழங்குவார் என்பதாக இன்றும் நம்புகின்றனர் .

மேலும் அவர்களும் ஆதரவாக காணப்படுகிறார் .

அவரது சிந்தனைகள் வேறு விதமாக இருக்க கூடும் எனும் தமிழ் மக்கள் நம்புவதே அவருக்கு ஆதரவு அளிப்பதற்காக ,தமிழர்கள் இன்றுவரை முயற்சிகளையும் முன் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது .

நகை திருடிய பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

நகை திருடிய பெண் கைது

நகைகள் திருடிய பெண் கைது

நகை திருடிய பெண் கைது, யாழ்ப்பாணம் கன்னா திட்டி காளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடத்தில் நகை திருடிய பெண் கைது .

பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் பல பவுன் நகைகளை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ்

யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ் குற்ற பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் திருட்டில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .

பெண்ணை கைது செய்து, யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுதே ,பெண்ணின் உள்ளாடைகளுக்கு இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது மேலதிக விசாரணைகள்மேற்கொள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்லும் மக்களின் நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றது .

அதே போலவே பேருந்துகளிலும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் நூதனமான முறையில் இடம்பெற்று வருகிறது .

அதனை அடுத்து தற்பொழுது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நகைகளை இழந்தவர்கள் அந்த நகைகளை காவல்துறையில் சென்று பெற்றுக்கொள்ள முடியுமா என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்
Posted in இலங்கை செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம்

சுவர் இடிந்து விழுந்து சிசுமரணம் , சுவரொன்று இடிந்து விழுந்ததில் இரண்டு மாத குழந்தை என்று மரணமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை சின்ன குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வரவேற்பறை, திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு மாத சிசு ஒன்று பலியாகி உள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக மழை காரணமாக சுவர்கள் விலகி விரிசல் காணப்பட்ட நிலையில், அந்த சுவர்கள் குழந்தையின் மேல் இடிந்து விழுந்ததில் இந்த குழந்தை பலியாகி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

சின்னகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம்

சின்னகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம், அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமது சிசுவை பறிகொடுத்து குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .

மக்களுக்கு பல் வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும், மக்கள் அதை உரிய முறையில் செவி சாய்க்கவில்லையோ என்கிற ,கேள்வியை இந்த சுவர் இடிந்த விழுந்து சிசு மரணமான சம்பவத்தின் ஊடாக தெரிய வருகின்றது.

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை ,இலங்கை ஹங்கமா திசா வீதி ரன்ன பிரதேசத்தில் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்க பட்டு உள்ளார் .

மாடியில் தங்கி இருந்த இவர் மீது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலில் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

வர்த்தக நிலையம்

வர்த்தக நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வந்த பிரபல வர்த்தகரே இவ்வாறு மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

இவரது படுகொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடிக்கும் விசாரணைகளை தற்பொழுது குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையில் இவ்வாறான வர்த்தகர்கள் மர்ம வெள்ளை வான் ஊடக கடத்திச் செல்வதும் ,சுட்டுப் படுகொலை செய்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார்

இந்த கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியிலும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துள்ளது.

வர்த்தக போட்டி காரணமாக இந்த படுகொலை இடம்பெற்று இருக்கக் கூடும் என்கின்ற புதியக் கூடுதல் தகவல் கள் வெளியாகி இருக்கின்றன.

எனினும் இறுதியான முடிவு இதுவரை தெரியவில்லை போலீஸ் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .

மாணவி சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாணவி சடலமாக மீட்பு

மாணவி சடலமாக மீட்பு

மாணவி சடலமாக மீட்பு ,காணாமல் போன மாணவி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

காணாமல் போன மாணவி ஒருவரே தற்பொழுது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மகள் காணாமல் போனதை அடுத்து காவல்துறை நிலையத்தில் பெற்றவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

காவல்துறையினர் துரித விசாரணை

அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை காவல்துறையினர் துரித விசாரணைகளை ஆரம்பித்தனர் .

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் இறுதியில் தற்பொழுது காணாமல் போன இந்த மாணவி சுடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர் .

கண்டி பகுதியில் காணாமல் போயிருந்த இந்த மாணவியே தற்பொழுது சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி தவறான முடிவை எடுத்து தன் உயிரை தானே மாய்த்துள்ளதான தகவல் தெரிவிக்கின்றன.

அவ்வாறு ஏன் இவர் செய்தார் என்பது தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ பரிசோதனை

மீட்கப் பட்ட சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

அந்த மருத்துவ பரிசோதனை முடிவில் மாணவிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விடையங்கள் தெரிய வருமென எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் இவ்வாறு காணாமல் போகின்ற பல மாணவிகள், ஆண் பெண்கள், சடலமாக மீட்க்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை
Posted in இலங்கை செய்திகள்

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை

ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை ,விசேட பேருந்து சேவை பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்பொழுது மிக முக்கியமான நகரங்களுக்கு பயணிக்க, விசேட பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ,போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது .

பண்டிகையை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை

பெசன் பண்டிகையை முன்னிட்டு , மக்கள் தமது இடங்களுக்கு ,இலகுவாக சென்று வருவதற்கான புதிய பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

அந்த வகையில் கொழும்பு மிகுந்தல ,தாந்திரிமலை ,அனுராதபுரமாகிய, பகுதிகளுக்கு இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் இலகுவாக பயணிக்கவும் திருடர்களினால் அவர்கள் காப்பாற்றப்படுவதற்குமான ,புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த விஷயத்தை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை போக்குவரத்து அமைச்சு

பண்டிகை காலங்கள் வருகின்ற பொழுது ,இலங்கையில் விசேடமான பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு மக்களது பயண போக்குவரத்து இலகுபடுத்தும் நடவடிக்கையில் இலங்கை போக்குவரத்து அமைச்சு ஈடுபட்டுள்ளது .

வரவேற்கப்படக்கூடிய விடயம் என்று என பயணிகள் தமது மகிழ்வான கருத்துக்களை தெரிவித்து போக்குவரத்து அமைச்சுக்கு தெரிவித்து வருகின்றனர் .

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது , ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்துள்ளதாக அவரது உறவுகள் தெரிவித்து கொண்டனர் .

இலங்கையில் இருந்து உயிர் ஆபத்து தஞ்சம் கோரி அஸ்ரேலியாவில் தஞ்சம் அடைந்த இவர், 30 வருடங்கள் கழித்து மீளவும் தனது தாய் நாட்டை பார்ப்பதற்காக, பல கனவுகளை சுமந்து ஆசை ஆசையுடன் சென்று இருக்கின்றார் .

கனவுகள் நினைவாகும்

அவரது அந்தக் கனவுகள் நினைவாகும் என்கின்ற கற்பனை விடயம் நினவு பெறுவதற்கு முன்னதாகவே ,அங்கே எதிர்பாராத சம்பவம் ஒன்று அவருக்கு இடம்பெற்றது.

இலங்கையினுடைய அரச புலனாய்வு துறையால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவுகள் தெரிவிக்கின்றனர் .

தனது தாய்நாடு சென்று அங்கு பாரிய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, ஒரு முன்னோட்டத்தை பார்த்து வருவதற்காக சென்ற இவருக்கு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

எமது நாட்டுக்கு வருகை தருவதற்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் எவருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இலங்கை ஆளும் அரசு தெரிவித்து வருகிறது .

இலங்கையின் விமான நிலையத்தில்

இந்த வேளையில் தனது தாய் நாடு சென்று தனது தாய் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பு நோக்குடன், பொருளாதார நடவடிக்கை கருதி இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்தவர் ,இலங்கையின் விமான நிலையத்தில் பயங்கரவாத குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்கின்ற வகையில் அந்த குற்றச்சாட்டை மையமாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .

தமிழிழ விடுதலை புலிகள்

இலங்கையில் தமிழிழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு 15 ஆண்டுகளை எட்டுகின்ற இந்த வேளையில் மீளவும் புலிகளுடைய பெயரைச்சொல்லி புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை இழக்க வைத்து இலங்கை அரச பயங்கரவாதம் கைதுகளை மேற்கொண்டு வருகின்றது .

இந்த நடவடிக்கையானது இலங்கைக்கு வருகின்ற தமிழர்கள் நாங்கள் கைது செய்வோம் என்கின்ற விடயத்தினை ரணில் அரசாட்சியில் எடுத்து கூறப்பட்டுள்ளது .

ஆதலால் இலங்கை செல்வதற்கு பல வெளிநாட்டு தமிழர்கள் வெளிநாட்டு செல்வந்தர்கள் அச்சத்தில் இருக்கின்றனர் .

முதலீடுகளுக்கு பாதுகாப்பு

தமது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அவர்கள் தற்பொழுது இந்தியா தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதற்கு காரணம் யார் என்பதை இலங்கை ஆலமரசுகள் முடிவெடுத்து செயலாற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்

பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் ,வைத்தியசாலைக்கு பயணித்த பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் இணைந்து கல்வீச்சு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான, அரச பேருந்து ஒன்றின் மீதே ,விஷமிகள் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மஹரகம அபேக்‌ஷா , வைத்தியசாலைக்கு செல்லும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு இடையில் ,இடம்பெறுகின்ற போட்டி முறுகல் காரணமாகவே, இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

புத்தளத்தில் இருந்து நாள்தோறும் பெருமளவிலான மக்கள், மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர் .

அவ்வாறு மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைக்கு சென்று வரும் மக்கள் பயன் பாட்டை தடுக்கும் நோக்குடன், இந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அந்த பேருந்தை பயன்படுத்தி ,பயண போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ,பயணிகள் கண்ணீர் மல்கத் தெரிவித்திருக்கின்றனர் .

கல்வீச்சு தாக்குதலை மேற்கண்ட 25 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளளனர் .

கைதானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் இவ்வாறு பேருந்துகள் மீது ,கல்வீச்சு தாக்குதல் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை, குறிப்பிடத்தக்கது.

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம், இலங்கையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது அந்த பேருந்தில் பயணித்த, 13 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மாணவர்கள்

மாலபே – ராஹுலபாடசாலை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உள்ளதாக ,அந்த பாடசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பயணித்த பேருந்து ,நீரோடை ஒன்றை கடக்க முற்பட்ட பொழுது, ,அதற்கு அருகில் விழுந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேருந்து விபத்து தொடர்பான, புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து சரிந்த நிலையில் காணப்படுகின்றது .

சாரதிகளின் அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை பின்பற்றாமயே, இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்து விபத்து தொடர்பான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக , இலங்கை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு குழுக்கள் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றன.

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல்

வளைகுடாவில் கப்பல்கள் மீது தாக்குதல் ,ஹவுதி படைகளின் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் பற்றி எரிகின்றன.

ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேல் உடைய ஆதரவு சரக்கு கப்பல்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் கப்பல் ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல்கள் இரண்டும் பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமும் இந்த இரண்டு கப்பல்களும் எரிவதை ஒப்புக்கொண்டுள்ளன.

கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள்

எனினும் அந்தக் கப்பல்களில் பயணித்தவர்களுக்கு ஏதும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக ஏதும் தெரிய வரவில்லை .

காசாவில் உள்ள மறைவிடம் ஒன்றில் இஸ்திரேலியா ராணுவத்தின் விசேட கமாண்டோ படையினர் நேற்று சிறை மீட்டு சென்றனர் .

அப்பொழுது அதன் அருகில் தங்கி இருந்த ,அப்பாவி மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலில் 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் .

அந்த மக்கள் படுகொலைக்கும், இன அழிப்புக்கும் எதிராகவே,செங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த ,இந்த சரக்கு கப்பல்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பல்கள் தீயில் எரிவு

மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பொழுதும் ,இரண்டு கப்பல்கள் தீயில் எரிந்து கொண்டதாக தாக இஸ்ரேலிய ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் காசாவுக்கு இடையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காசாவின் பல்வேறுபட்ட பகுதிகள் இதுவரை சுடுகாடாக காட்சி அளிக்கின்றது .

அகதிகளாக வீதிகளில் தாங்கியுள்ள மக்கள் மீது, இஸ்திரேலியா படைகளது செங்கடல் மற்றும் இடன் வளைகுடா பகுதியில் ,பயணிக்கும் சரக்கு கப்பல்கள் ராணுவ காப்பல்களை இலக்கு வைத்து ,தொடர் தாக்குதலை ஹவுதிகள் நடத்திக் கொண்டு உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி
Posted in இலங்கை செய்திகள்

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி

தமிழிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி களத்தில் இறங்கியது. தமிழீழ உதை பந்தாட்ட மகளிர் அணியினர் கடந்த தினம் போட்டியினில் கலந்துகொண்டு அபார சாதனையை படைத்து களம் திரும்பினார் .

தமிழில் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழீழ என வர்ணிக்கப்பட்ட தமிழீழ அணியினர் தற்பொழுது உருவாக்கப்பட்டு களமாட விடப்பட்டனர் .

அவ்வாறு கடந்த தினம் மைதானம் ஒன்றில் தமிழீழ பெண்கள் அணியினர் களமிறங்கி உதை பந்தாட்டத்தில் தமது வெற்றி கொடியை நாட்டி சென்றுள்ளனர் .

கோளினை டிலக்சிகா அடித்து சாதனை

முதலாவதாக களமிறங்கிய இந்த அணியினர் விளையாட்டை ஆரம்பித்தனர் .

அப்பொழுது முதலாவது கோளினை டிலக்சிகா அவர்கள் அடித்து சாதனை படைத்தார் .

மிகச் சிறந்த ஆட்டநாயகியாக தமிழீழ குழுவில் நேற்று இடம் பிடித்து சாதனை படைத்தார் .

மிகத் திறம்பட விளையாடி இந்த அணியினர் உடைய விளையாட்டினை கண்ணுற்ற உலகளாவிய தமிழ் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

தமிழீழம் என்கின்ற பெயரை தமது ஆடையில் எழுதி அந்த தமிழ் சொல் உடனே மைதானத்தில் விளையாடினர் .

விடுதலைப் புலிகள் என்ற பெயர்

தமிழீழம் விடுதலைப் புலிகள் என்ற பெயர் இருந்தாலே உலக அரங்கில் சமூக வலைத்தளங்கள் தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது .

அவ்வாறான நிலையில் தொலைக்காட்சிகள் சமூக ஊடகங்கள் முதல் வெளிநாட்டு ஊடகங்கள் வரை தமிழ் ஈழம் என்கின்ற இந்த பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது .

தமிழீழம் அணியினர் என்ற பெயருடன் தமிழீழ மகளிர் படையணி அணிகள் தமது போட்டியில் கலந்து கொண்டனர்.

மிக இறுக்கமான சமர் ஆட்டத்தின் பொழுது இரண்டு கோள்களை போட்டு எதிரணிகள் வெற்றி பெற்றனர் .

மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்தல்

முதன் முதலாக தமது மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்திய நிலையில் இந்த வெற்றி சாதகமாக மாறியாது .

டிலக்சிகா ஆடுகள நாயகர்களாக அந்த களமுனையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது .

மேலும் ஐந்து கோள்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் ஐந்து கோள்களை தமிழீழ அணியின் கீப்பர் பிடித்து சாதனை நிகழ்த்தினார் .

ஆனாலும் அவரது இலக்கை தவறி இரண்டு கோள்கள் நெட்டுக்குள்ளே பாய்ந்து எதிரணியின் வெற்றியை தீர்மானித்தது .

இந்த தமிழீழ அணியினர் விளையாட்டு மிகவும் உச்சமானதாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் ,மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் ,அவர்களுக்கு தமது பிராத்தனையும் தெரிவித்துள்ளனர்.

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி

பணி புறக்கணிப்பால் பயணிகள் அவதி

பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி ,இலங்கையில் ரயில் சாரதிகள் பணி புறக்கணிப்பு பயணிகள் அவதி .

இலங்கையில் ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிபு புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மக்கள் ரயில் போக்குவரத்து பலமாக பாதிப்படைந்துள்ளது .

சம்பள உயர்வு கோரி இந்தச் சாரதிகள் பணி புறக்கணிப்பு

சம்பள உயர்வு கோரி இந்தச் சாரதிகள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

தமது கோரிக்களுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்றால் தொழிற்சங்கர் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கடுமையாக்கப்படும் எனவும் தொடர்ந்து நீடிக்கும் இரவு அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது .

இதனை அடுத்து அரசை அதிகாரிகளுக்கு நெருக்கடிகளை வழங்கும் முகமாக நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என்பதால் தற்பொழுது பதட்டம் நிலவுகிறது .

அரசாங்கத்தை தர்ம சங்கடப்படுத்தும் நோக்கில் 21 பேரால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொழிற்சங்க நடவடிக்கை

அதனை அடுத்து அந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப்படலாம் எனவும் அவர்களுக்கு எதிரான ஒழுக்காட்டு நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எல்லாம் என்கின்ற தகவல்களும் வெளி யாகியுள்ளது .

இதுபோன்று முன்னர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டவர் அதிகாரிகள் அரச ஊழியர்கள் திடீரென அரசு அமைச்சரினால் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.

இவ்வாறு இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால் ஆளுமரசு இவர்களை அடக்கி ஒடுக்கி தமக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வோர்களுக்கு மிரட்டல் விடுவதற்கான ஒரு அடக்குமுறையாகவே பார்க்க முடியும் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

பெண்களை வைத்து நடந்த மோசடி
Posted in இலங்கை செய்திகள்

பெண்களை வைத்து நடந்த மோசடி

பெண்களை வைத்து நடந்த மோசடி

பெண்களை வைத்து நடந்த மோசடி ,வேலை பெற்று தருவதாக தெரிவித்து பெண்களை அடைத்து வைத்து பாலியல் வீடியோக்கள் எடுத்து விற்பனை செய்த தம்பதிகள் மடக்கி பிடிப்பு .

இலங்கையில் வெளிநாடு செல்வதற்கான வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக விளம்பரத்தை நடத்தி கவர்ச்சிகரப் பெண்களை தமது வீட்டுக்கு அழைத்து தம்பதிகள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .

பாலியல் தொல்லை

இவ்வாறு பாலியல் தொல்லைகளில் தொந்தரவுகளை வழங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக இந்த விளம்பரத்தை கண்ணுற்ற பெண்கள் இருவர் அந்த நிறுவனத்துக்கு சென்று தமது விண்ணப்பங்களை கோரி இருந்தனர் .

அதனை அடுத்து வீட்டுக்கு அழைத்த அந்த தம்பதியினர் அவர்களுக்கு வேலை பார்ப்பதாக வேலை பெற்று தருவதாக தெரிவித்து பாலியல் வீடியோக்களை எடுத்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து நுகோடை போலீசார் தமது விசாரணகளை ஆரம்பித்து கைது செய்திருக்கின்றனர் .

பெண்களை இவ்வாறு விற்பனை

இதுவரை இவர்கள் பல்வேறுபட்ட பெண்களை இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த நான்கு வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை ஏமாற்றி பாலியல் காணொளிகளை பிடித்து, சந்தையில் பெற்று பல கோடிகளை சம்பாதித்துள்ள தான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவத்தை அடுத்து தற்பொழுது இலங்கை போலீசார் குற்றப்பிரிவினை இணைந்து பாரிய விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர் .

விசாரணை முடிவிலேயே எத்தனை பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்ட என்பது தொடர்பாகவும், எவ்வாறு வீடியோக்கள் எடுத்து எங்கு விற்பனை செய்தது என்பது தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரும் பர பரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா, இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொண்டார் ரணில் விக்கிரமசிங்கா .

இலங்கை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கா இந்தியாவில் பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணத்தினை மேற்கொண்டுள்ளார் .

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மோடி

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மூன்றாவது முறையாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டதை எடுத்து .அவரது பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இந்தியாவிற்கு அவசர அவசரமாக தனது பயணத்தை மேற்கொண்டார் .

இன்று மாலை இந்தியாவில் இடம்பெற இருக்கின்ற இந்த பதவியேற்பு நிகழ்வில்லையே கலந்து கொள்வதற்காக இவர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த காலங்களில் இந்தியாவே இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேற்கொண்டு வழங்கி வந்தது.

அதனை அடுத்து தற்பொழுது பாரதப் பிரதமர் பதவியேற்பு விழா மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுவதால் ,அவரது நிகழ்வு கலந்து கொள்வதற்காக அவர்களது அழைப்பினை ஏற்று இலங்கையின் ஜனாதியாக விக்கிரமசிங்கா பறந்து சென்றுள்ளார்.

இந்த நிகழ்வில் மேலும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

நாடெங்கும் கனமழை
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் கனமழை

நாடெங்கும் கனமழை

நாடெங்கும் கனமழை இலங்கையில் இன்று நாடெங்கும் கனமழை பொழியும் எனவும் மக்களை இவளை எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேல் சப்பரம் முக வடமேற்கு தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிக அளவான மழை பொழிவு

நுவரெலியா சப்புர முகா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லி மீட்டருக்கு மேல் அதிக அளவான மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு மற்றும் வடமத்தியமானங்களும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பாரிய மழை வீழ்ச்சி ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இதனால் வெள்ளப்பெருக்குள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இலங்கையின் பல்வேறுபட்ட குளங்களில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிவதால் தாழ் நிலா பகுதிகளை நோக்கி வெள்ளம் அடித்துப் பாய்வதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர் .

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்

வீடுகளுக்குள் மற்றும் சொத்துக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மக்கள் செய்வதறியாத திணறி வருகின்றனர்.

இவ்வாறான காலப் பகுதியில் மேற்படி மாவட்டங்களில் மீளவும் அதிகளவிலான மழை பொழிச்சி ஏற்படும் என்கின்ற விடயம் அப்பகுதி வாழ் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா விகிதம் அரசு பண உதவி வழங்கியிருந்தது .

அவ்வாறான நிலையில் தற்போது மக்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ,அதிக மழை வீழ்ச்சி இந்த ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி ,போலீஸ் அதிகாரி மீது கணவன் மனைவி திடீர் தாக்குதல் .

இலங்கை களுத்துறை பகுதியில் நீதிமன்றம் ஒன்றுக்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த கணவன் மனைவி இணைந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கடும் தாக்குதலை நடத்தினர்.

நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக வருகை தந்த கணவன் மனைவி ஆகியோரை வழிமறித்த போலீஸ் அதிகாரி .பெண் அணிந்திருந்த உடையானது நீதிமன்றத்திற்கு பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம்

இதனை அடுத்து காவல்துறை அதிகாரிக்கும் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது .

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்து முட்டி வெடித்த நிலையில் ,கணவன் மனைவி இணைந்து காவல்துறை அதிகாரியை சரமரியாக தாக்கினர்.

இதன் பொழுது பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் அதிகாரி தரத்திலான காவல்துறை அதிகாரி தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நீதிமன்றங்களுக்கு வருகை தருகின்ற மக்கள் இந்த உடை தான் அணிந்து வருகை தர வேண்டும் என்கின்ற சட்ட ஏதும் இலங்கையில் காணப்படவில்லை .

ஆனால் போலீசார் வேண்டுமென்றே இந்த பெண் கணவன் மனைவி மீது விஷமத்தனமாக வலிந்து சீண்டும் நடவடிக்கை ஈடுபட்டு அவர்களை திசை திருப்ப நடவடிக்கை ஈடுபட்டதான தகவலாகவே இந்த சம்பவம் காணப்படுகிறது .

லஞ்சம் பெறுவதற்காக நடவடிக்கை

அல்லது இந்த அதிகாரி அவர்களும் லஞ்சம் பெறுவதற்காக இவ்வாறான ஒரு விடயத்தை கையாண்டாரா என்கின்ற விடயங்களும் தற்பொழுது விழுந்து வெடிக்கின்றன .

இலங்கையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை லஞ்சம் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் பல்வேறுபட்ட சர்ச்சைகளையும் பேசு பொருளையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை சகா காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

கழுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இலங்கை காவல்துறை அதிகாரி மீது நடத்த பட்ட இந்த தாக்குதல், சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல ,தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் என மஹிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் ,அதனுடைய பேச்சாளராகவும் விளங்கிய சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பெரமுனா தெரிவித்துள்ளது .

தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ,ரோகித அபய குணவர்த்தன தெரிவித்த இந்த விடயம் தற்பொழுது பெரும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

ஊடகங்களை சந்தித்து பேசும் பொழுது இலங்கையை ஆண்ட ஜனாதிபதியான, மஹிந்த ராஜபக்சா , தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு முன் வந்ததார் .

தீர்வினை குழப்பிய சம்பந்தன் சுமந்திரன்

ஆனால் அந்த தீர்வினை குழப்பி அடித்ததில் ,சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தீவிரமாக செய்யப்பட்டார்கள் .

தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ,இலங்கையினுடைய ஜனாதிபதிகள் தயாராகி வந்ததாகவும் ,அதனை தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இவ்வாறானவர்களே குழப்பி வருவதாக அவர் இதன் ஊடாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் ஒன்றுபட மறுத்து ,இரண்டு பட்டு நிற்பதும் ,அவர்களை சாதுரியமாக இலங்கையினுடைய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன .

அந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளை குழப்புவதாக, இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து ,அவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .

இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம்

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம் இதுவரை உள்ளது .

அவ்வாறான மன நிலையே தற்பொழுது சிங்கள அமைச்சர் ஒருவரும் உள்ளதாக தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்வரும் தேர்தலில் மொட்டுக்கட்சி வெற்றியை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட இந்த கட்சி ,எவ்வாறு இந்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறது என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் ,இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது .

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

இலங்கை பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை முழு வடிவம் இதோ .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் சரமரியாக பேசிய விடயம் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது .

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, இதுவரை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவதாக அவர தெரிவித்துள்ளார் .

தமிழர்களையும் இலங்கையினுடைய ஒரு குடிகளாக ஏற்று, அவர்களுக்கான சம உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுதுதான் ,மக்கள் ஒன்றாக வாழுகின்ற ஒரு ஒற்றை ஆட்சி நாடாக இதனை பார்க்க முடியும் என்பதாக அவரது கருத்து பதியப் பெற்றிருக்கிறது .

தமிழ் மக்களுக்கான உடனடியான உரிய தீர்வினை வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கப்பட விட்டால் , இந்த நாடு மிகப்பெரும் பேரழிவில் இருந்து மீளவும் எழுச்சி பெற முடியாது என்கின்ற ,விடயத்தினை ஆணித்தரமாக அவர் அங்கு தெரிவித்தார் .

அது தவிர அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ,அமைச்ச ஒருவர் தமிழ் கைதி ஒருவருடைய தலையில் காலை வைத்து, சப்பாத்தை நக்கும் படி கூறியதாக தெரிவித்துள்ளார் .

அவ்வாறான அமைச்சர் தற்பொழுது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் ,அவர்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் அவர் சூட்டிக் காட்டியுள்ளார் .

மேலும் சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதுபான பத்திரங்கள் வழங்கி ,அதனூடாக தமது பக்கம் இழுத்து அரசியலை நகர்த்துகின்ற நடவடிக்கையில் இலங்கையினுடைய ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்கா ஈடுபட்டு ,உள்ளதான குற்றச்சாட்டினையும் ,சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி

சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி வர வேற்பையும் அவரது திறமையையும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அவரது நல்லெண்ண வெளிப்பாட்டையும் இதனூடாக காண்பித்துள்ளது .

அதனால் பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு நிலையில் சிக்கித் தவித்த தமிழர்களும் ,இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை வரவேற்று உள்ளதாகவே பேசப்படுகின்றது .

சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விரோதியாகவும், மக்களினால் அருவருக்கப்படுகின்ற அல்லது ஒதுக்கப்படுகின்ற, சுமந்திரன் வலது கையாக செயல்படுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

தேர்தல் வருகின்ற பொழுது பாராளுமன்றத்தில் ஏறி இவ்வாறு ,மக்களுக்கு எண்ணங்களை தூண்டிவிட .

உணர்ச்சிகரமாக பேசி தாங்கள் தமிழர்களின் ஏகப்பிரதிகள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, திருவாளர் சாணக்கியன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளதாக, ஒரு சில கருத்துக்களும் வரத்தான் செய்கின்றன.