Tag: அணி
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித்
பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம் சஜித் ஆட்சியொன்றின் கீழ் மக்கள் ஊழல் இல்லாதவர்கள், மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர்கள், நேர்மையானவர்கள், அனைவரையும் உள்ளீர்க்க கூடியவர்கள், நீதி
நியாயத்தோடு நடக்கக் கூடியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதிதாக ஒன்றைச் செய்யும், நாட்டுக்கு நேர்மையையும், கூறுவதை செவிமெடுக்கும், மனித நேயம் மிக்கவர்களை எதிர்பார்க்கின்றனர்.
சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை நிராகரித்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், திறம்பட்ட சேவையை ஆற்றுவோரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு மக்கள் எதிர்பார்க்கும் இதற்கு மிகவும் பொருத்தமான நபரை ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபைக்கு முன்னுறித்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மாளிகாவத்தை Grand Zenith வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) நடந்த “மகிழ்ச்சியுடன் கூடிய கொழும்பு நகருக்கு” எனும் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் வைத்திய கலாநிதி றுவைஸ் ஹனிபாவின் கொள்கை
ஆவணத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு குறிப்பிட்ட வர்த்தகக் குழுவின் மாதிரியாக நடந்து கொள்ளும் பொம்மை அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் இயக்கம் அல்ல. எனவே நாம் எமது பலவீனங்களை சரிசெய்து பலத்தோடு
முன்னோக்கிப் பயணிப்போம். நாட்டு மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி
தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி
தமிழிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி களத்தில் இறங்கியது. தமிழீழ உதை பந்தாட்ட மகளிர் அணியினர் கடந்த தினம் போட்டியினில் கலந்துகொண்டு அபார சாதனையை படைத்து களம் திரும்பினார் .
தமிழில் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழீழ என வர்ணிக்கப்பட்ட தமிழீழ அணியினர் தற்பொழுது உருவாக்கப்பட்டு களமாட விடப்பட்டனர் .
அவ்வாறு கடந்த தினம் மைதானம் ஒன்றில் தமிழீழ பெண்கள் அணியினர் களமிறங்கி உதை பந்தாட்டத்தில் தமது வெற்றி கொடியை நாட்டி சென்றுள்ளனர் .
கோளினை டிலக்சிகா அடித்து சாதனை
முதலாவதாக களமிறங்கிய இந்த அணியினர் விளையாட்டை ஆரம்பித்தனர் .
அப்பொழுது முதலாவது கோளினை டிலக்சிகா அவர்கள் அடித்து சாதனை படைத்தார் .
மிகச் சிறந்த ஆட்டநாயகியாக தமிழீழ குழுவில் நேற்று இடம் பிடித்து சாதனை படைத்தார் .
மிகத் திறம்பட விளையாடி இந்த அணியினர் உடைய விளையாட்டினை கண்ணுற்ற உலகளாவிய தமிழ் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .
தமிழீழம் என்கின்ற பெயரை தமது ஆடையில் எழுதி அந்த தமிழ் சொல் உடனே மைதானத்தில் விளையாடினர் .
விடுதலைப் புலிகள் என்ற பெயர்
தமிழீழம் விடுதலைப் புலிகள் என்ற பெயர் இருந்தாலே உலக அரங்கில் சமூக வலைத்தளங்கள் தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது .
அவ்வாறான நிலையில் தொலைக்காட்சிகள் சமூக ஊடகங்கள் முதல் வெளிநாட்டு ஊடகங்கள் வரை தமிழ் ஈழம் என்கின்ற இந்த பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது .
தமிழீழம் அணியினர் என்ற பெயருடன் தமிழீழ மகளிர் படையணி அணிகள் தமது போட்டியில் கலந்து கொண்டனர்.
மிக இறுக்கமான சமர் ஆட்டத்தின் பொழுது இரண்டு கோள்களை போட்டு எதிரணிகள் வெற்றி பெற்றனர் .
மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்தல்
முதன் முதலாக தமது மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்திய நிலையில் இந்த வெற்றி சாதகமாக மாறியாது .
டிலக்சிகா ஆடுகள நாயகர்களாக அந்த களமுனையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது .
மேலும் ஐந்து கோள்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் ஐந்து கோள்களை தமிழீழ அணியின் கீப்பர் பிடித்து சாதனை நிகழ்த்தினார் .
ஆனாலும் அவரது இலக்கை தவறி இரண்டு கோள்கள் நெட்டுக்குள்ளே பாய்ந்து எதிரணியின் வெற்றியை தீர்மானித்தது .
இந்த தமிழீழ அணியினர் விளையாட்டு மிகவும் உச்சமானதாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் ,மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் ,அவர்களுக்கு தமது பிராத்தனையும் தெரிவித்துள்ளனர்.
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு









