வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை ,இலங்கை ஹங்கமா திசா வீதி ரன்ன பிரதேசத்தில் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்க பட்டு உள்ளார் .

மாடியில் தங்கி இருந்த இவர் மீது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலில் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

வர்த்தக நிலையம்

வர்த்தக நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வந்த பிரபல வர்த்தகரே இவ்வாறு மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

இவரது படுகொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடிக்கும் விசாரணைகளை தற்பொழுது குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையில் இவ்வாறான வர்த்தகர்கள் மர்ம வெள்ளை வான் ஊடக கடத்திச் செல்வதும் ,சுட்டுப் படுகொலை செய்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார்

இந்த கொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியிலும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துள்ளது.

வர்த்தக போட்டி காரணமாக இந்த படுகொலை இடம்பெற்று இருக்கக் கூடும் என்கின்ற புதியக் கூடுதல் தகவல் கள் வெளியாகி இருக்கின்றன.

எனினும் இறுதியான முடிவு இதுவரை தெரியவில்லை போலீஸ் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்

80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள் இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிப்பு .

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்

அரசியல் பாதுகாப்பு பெறும் அந்த பத்து வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

என கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02) நடைபெற்ற மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், “இந்த வங்கிகள் நாட்டின் மறுமுனையில் உள்ள விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள பெரிய வியாபாரிகள் வரை கடன் கொடுத்துள்ளன.

கடனை செலுத்துவது கடன் வாங்கியவரின் பொறுப்பு.

ஆனால் சிறப்பாக வர்த்தகம் செய்து அரசியல் பாதுகாப்பு பெற்று 10 பேர் தாம் ஈட்டிய பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்து இந்த இரண்டு வங்கிகளையும் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த வங்கிகளில் இலங்கை வங்கிக்கு மட்டும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை 50 பில்லியன் என்பதோடு, மக்கள் வங்கிக்கு 30 பில்லியன் கடன் செலுத்த வேண்டும்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை கொண்டு வரும் பெருமக்களே இந்த பணத்தை வசூலியுங்கள்.

இது மக்களின் பணம். முடிந்தால் அந்த 10 பேரின் பெயர்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துங்கள்.

இல்லையென்றால் இந்த நாட்டின், பொது நலனுக்காக நாம் அதனை வெளிப்படுத்துவோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்”என்றார்.

வீடியோ