எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
எம்மவர்கள் பலருழைத்து ஏற்றுவித்த வல்லாண்மை
மங்குதிங்கே
மதியற்றோர் கொண்ட மடத்தாலே!
நம் நாடென்ன நாடிதென நாவுரைக்க கூசுதிங்கே
நாடி வரும் நல்லோர் நன்கறிந்து கூடினாலும்
நாடிங்கு எழுவதெந்நாள்
நாணுதிங்கே
நாணமற்றோர் கொண்ட நடப்பாலே!
நாம் நாடுகின்ற நாடாள்வார் நாட்டிலெங்கே
நாடிய மக்கள் நலமெங்கே
நாம் நாடுகின்ற நாடொன்று
நாளாகத் தேய்வதிங்கே
நாடற்றோர் நாம் கொண்ட சாபத்தாலே!
தனித்த தமிழின் பெருமையறிந்த தமிழரங்கே
தடையை உடைத்தாலே
மனித்த பிறவி பயனறிந்த
மனிதநேய தமிழரங்கே
மடையை உடைத்தாலே
தனித்த நாடொன்று
தனியாயங்கே
அமைந்திடுமே
தன்மானத் தமிழர் கொண்ட தரணியிலே!
நாட்டிற்காய் தமையீய்ந்த நாயகர்களின் அறத்தையிங்கே
சீரான உணர்வுகளை
சீர்மிகுந்த நற்செயலையிங்கே
நேரான வழிகளிலே
ஊரறிய உலகறிய
ஊர் மக்கள் உலக மக்கள்
உளமறிய செய்வதிங்கே
நேரான வழி கொண்ட
நேர் கொண்ட விழி கொண்ட
கூரறிவுடையோர் கொண்ட
கடமையதிலே!
-நிலாதமிழ். கவிதைகள்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு







