Tag: உரை
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ தனது முதல் கிறிஸ்துமஸ் உரையில் ‘தைரியம்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ தனது முதல் கிறிஸ்துமஸ் உரையில் ‘தைரியம்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர போப் லியோ தனது முதல் கிறிஸ்துமஸ் உரையில் ‘தைரியம்’ காட்டுமாறு வலியுறுத்துகிறார்.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில்
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூட்டத்தினருக்கு தனது முதல் கிறிஸ்துமஸ் உரையின் போது, போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடிப்
பேச்சுவார்த்தைகளை நடத்த உக்ரைன் மற்றும் ரஷ்யா “தைரியம்” காட்ட வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தியுள்ளார்.
வத்திக்கான் நகரில் கூடியிருந்த வழிபாட்டாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று போப்பாண்டவர் பாரம்பரியமாக ஆற்றும் உர்பி எட் ஓர்பி
உரையின் போது உலகெங்கிலும் உள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
உக்ரைனைப் பற்றிப் பேசிய போப், “ஆயுதங்களின் கூச்சல் நிறுத்தப்படட்டும், சர்வதேச சமூகத்தின் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புடன் சம்பந்தப்பட்ட
நேரடி மற்றும் மரியாதை
தரப்பினர் நேர்மையான, நேரடி மற்றும் மரியாதைக்குரிய உரையாடலில் ஈடுபட தைரியத்தைக் காணட்டும்” என்று கூறினார்.
சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் அவரது வேண்டுகோள் வந்துள்ளது.
இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா முயன்றுள்ளது, ஆனால் இந்த சமீபத்திய சுற்று இராஜதந்திர
முயற்சிகளின் போது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை.
ஜூலை மாதத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், கொடிய எல்லை மோதல்கள் வெடித்த தாய்லாந்து மற்றும் கம்போடியா உட்பட உலகின் பிற
பகுதிகளைப் பாதித்துள்ள கொந்தளிப்பு மற்றும் மோதல்களையும் போப் லியோ கண்டித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் “பண்டைய நட்பு” மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் “சமரசம் மற்றும் அமைதியை நோக்கி பாடுபட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய பிரசங்கத்தின் போது, போப் லியோ உலகெங்கிலும் உள்ள வீடற்ற மக்களின்
நிலைமைகள் மற்றும் மோதல்களால் ஏற்படும் சேதங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
இலங்கை பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை முழு வடிவம் இதோ .
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் சரமரியாக பேசிய விடயம் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது .
இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, இதுவரை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவதாக அவர தெரிவித்துள்ளார் .
தமிழர்களையும் இலங்கையினுடைய ஒரு குடிகளாக ஏற்று, அவர்களுக்கான சம உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுதுதான் ,மக்கள் ஒன்றாக வாழுகின்ற ஒரு ஒற்றை ஆட்சி நாடாக இதனை பார்க்க முடியும் என்பதாக அவரது கருத்து பதியப் பெற்றிருக்கிறது .
தமிழ் மக்களுக்கான உடனடியான உரிய தீர்வினை வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கப்பட விட்டால் , இந்த நாடு மிகப்பெரும் பேரழிவில் இருந்து மீளவும் எழுச்சி பெற முடியாது என்கின்ற ,விடயத்தினை ஆணித்தரமாக அவர் அங்கு தெரிவித்தார் .
அது தவிர அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ,அமைச்ச ஒருவர் தமிழ் கைதி ஒருவருடைய தலையில் காலை வைத்து, சப்பாத்தை நக்கும் படி கூறியதாக தெரிவித்துள்ளார் .
அவ்வாறான அமைச்சர் தற்பொழுது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் ,அவர்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் அவர் சூட்டிக் காட்டியுள்ளார் .
மேலும் சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதுபான பத்திரங்கள் வழங்கி ,அதனூடாக தமது பக்கம் இழுத்து அரசியலை நகர்த்துகின்ற நடவடிக்கையில் இலங்கையினுடைய ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்கா ஈடுபட்டு ,உள்ளதான குற்றச்சாட்டினையும் ,சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .
சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி
சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி வர வேற்பையும் அவரது திறமையையும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அவரது நல்லெண்ண வெளிப்பாட்டையும் இதனூடாக காண்பித்துள்ளது .
அதனால் பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு நிலையில் சிக்கித் தவித்த தமிழர்களும் ,இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை வரவேற்று உள்ளதாகவே பேசப்படுகின்றது .
சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விரோதியாகவும், மக்களினால் அருவருக்கப்படுகின்ற அல்லது ஒதுக்கப்படுகின்ற, சுமந்திரன் வலது கையாக செயல்படுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .
தேர்தல் வருகின்ற பொழுது பாராளுமன்றத்தில் ஏறி இவ்வாறு ,மக்களுக்கு எண்ணங்களை தூண்டிவிட .
உணர்ச்சிகரமாக பேசி தாங்கள் தமிழர்களின் ஏகப்பிரதிகள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, திருவாளர் சாணக்கியன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளதாக, ஒரு சில கருத்துக்களும் வரத்தான் செய்கின்றன.



















