நாடெங்கும் கனமழை
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் கனமழை

நாடெங்கும் கனமழை

நாடெங்கும் கனமழை இலங்கையில் இன்று நாடெங்கும் கனமழை பொழியும் எனவும் மக்களை இவளை எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேல் சப்பரம் முக வடமேற்கு தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிக அளவான மழை பொழிவு

நுவரெலியா சப்புர முகா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லி மீட்டருக்கு மேல் அதிக அளவான மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு மற்றும் வடமத்தியமானங்களும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பாரிய மழை வீழ்ச்சி ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இதனால் வெள்ளப்பெருக்குள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இலங்கையின் பல்வேறுபட்ட குளங்களில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிவதால் தாழ் நிலா பகுதிகளை நோக்கி வெள்ளம் அடித்துப் பாய்வதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர் .

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்

வீடுகளுக்குள் மற்றும் சொத்துக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மக்கள் செய்வதறியாத திணறி வருகின்றனர்.

இவ்வாறான காலப் பகுதியில் மேற்படி மாவட்டங்களில் மீளவும் அதிகளவிலான மழை பொழிச்சி ஏற்படும் என்கின்ற விடயம் அப்பகுதி வாழ் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா விகிதம் அரசு பண உதவி வழங்கியிருந்தது .

அவ்வாறான நிலையில் தற்போது மக்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ,அதிக மழை வீழ்ச்சி இந்த ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை

நாடெங்கும் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ

அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,மன்னார்மற்றும்முல்லைத்தீவுமாவட்டங்களிலும் சில

இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை

குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின்

அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (06ஆம் திகதி) பெந்தோட்டை, மீகம, தொடம்பபிட்டிய, பெலவத்தை,

போதகம மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..