Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஒருவர் விமான நிலையத்தில் கைது
ஒருவர் விமான நிலையத்தில் கைது
ஒருவர் விமான நிலையத்தில் கைது ,விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனமொன்றின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி 108 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்
வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்
வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் ,இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம்
மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பமானது.
யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை
சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை
சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை ,எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும்
நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஆகையால், அத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைதள கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை
தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை
தேர்தலுக்காக விசேட பேருந்து சேவை ,இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (20) கூடுதல் தொலைதூர சேவை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தனியார் பேருந்து ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கவுள்ளதால் தனியார் பேருந்து சேவைகள் குறையாளம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

உணவு ஒவ்வாமையால் 500 பேர் பாதிப்பு
உணவு ஒவ்வாமையால் 500 பேர் பாதிப்பு
உணவு ஒவ்வாமையால் 500 பேர் பாதிப்பு ,பொலன்னறுவை, பகமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு
ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த பகமூனை மற்றும் அத்தனகடலை கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பஸ்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் மூலம் பக்கமூன பிராந்திய வைத்தியசாலை மற்றும் அத்தனகடவல கிராமிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பகமூன பிரதேச வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக அதிகளவானோர் பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் அத்தனகடவல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தனகடவல மற்றும் பகமூன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் பணிப்பெண்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் பக்கமூன மற்றும் அத்தனகடவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வாகன விபத்தில் இருவர் மரணம்
வாகன விபத்தில் இருவர் மரணம்
வாகன விபத்தில் இருவர் மரணம் ,வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகராஜா யோகராசா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் மற்றும் துவிச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து பிரதேசவாசிகளால் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு
வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு
வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு தனது ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வன்னி மக்கள் மனப்பாங்கை அறிந்த நிலையிலே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்த அவர், வன்னி மக்களின் பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முழுநாட்டு மக்களினதும் விருப்பத்திற்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற இருக்கிறார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் விருப்பத்தையும் இங்கு வெளியிட வேண்டும்.
மூன்று பிரதான வேட்பாளர்களில் அதி கூடிய தகைமைகளையும் ஆளுமையையும் அனுபவத்தையும் கொண்டவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான். அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு அரசியல் பொருளாதார ஸ்தீரத்தன்மை அவசியம். ரணில் விக்ரமசிங்க தான் நாட்டுக்கு விடிவைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்த ஸ்தீர நிலைமை தொடர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூட அறிவித்துள்ளது. இப்போதுள்ள சமூக நிலை தொடர வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
மரதனோட்டப் பந்தயத்தில் பாதியை கடந்து வந்துள்ள நிலையில் ஓட்டத்தை மாற்றினால் புதிதாக வரும் தலைவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஓட நேரிடும். எனவே, எஞ்சிய தூரத்தை ஜனாதிபதியினால் தான் இலகுவாக ஓடி முடிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்
சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் முடிவு தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடல்ல. அது எம்.ஏ. சுமந்திரனின் தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமே. கட்சியிலுள்ள பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் முடிவிலே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அண்மையில் மன்னாருக்கு வருகை தந்த போது சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்தார்.
இதன் போது மன்னார் மக்களின் ஆதரவும் ஜனாதிபதிக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், யதார்த்த அரசியலை விளங்கிய அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் கைகோர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) காலை நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களிடம் 05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 49, 50 மற்றும் 65 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவராவர்.
நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

குருநாகலையில் துப்பாக்கிச் சூடு
குருநாகலையில் துப்பாக்கிச் சூடு
குருநாகலையில் துப்பாக்கிச் சூடு ,குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
மற்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கொஹுவல, தங்காலை மற்றும் மிதிகம பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளன.
இதில் 3 பேர் உயிரிழள்ள நிலையில், இருவர் காயமடைந்தனர்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

எல்லோரிடமும் குறைகள் உண்டு நாங்கள் அதை சரிசெய்வோம்
எல்லோரிடமும் குறைகள் உண்டு நாங்கள் அதை சரிசெய்வோம்
எல்லோரிடமும் குறைகள் உண்டு நாங்கள் அதை சரிசெய்வோம் ,ராஜபக்ச குடும்பம் பொது மக்களின் பணத்தை திருடவில்லை என்பதை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நல்லாட்சி அரசாங்கம் நெல் சேமிப்பதற்காக மத்தளை கட்டப்பட்டதாக நினைத்தது.
சூரியவெவ மைதானத்தை மூடினார்கள்.
எம்மை சிறையில் அடைத்த போதும் நாங்கள் திருடவில்லை.
முடிந்தால், எங்கள் மீது வழக்குத் தொடருங்கள்.
குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தயார். எல்லோரிடமும் குறைகள் உண்டு. நாங்கள் அதை சரிசெய்வோம்
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வாக்கு சீட்டுக்கள் இறந்தவர்கள் பெயரில்
வாக்கு சீட்டுக்கள் இறந்தவர்கள் பெயரில்
வாக்கு சீட்டுக்கள் இறந்தவர்கள் பெயரில் வழங்க படுவதாகா நாத வாக்கு சீட்டுக்களை பெற்ற மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
தேர்தல் பரப்புரைகள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் ,இவ்வாறான செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
நேரடியாக எமது டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட மக்கள் இதனை நமக்கு தெரிவித்துள்ளனர் .
இவ்வாறான இறப்பு விடயம் முறையான முறையில் பதிவாகத நிலையில் இறந்தவர்கள் பெயர் விபரங்கள் பதிவிட படவில்லை எனவும் ,ஆதலால் இந்த விடயம் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
இவை கள்ள வாக்குகளாக பதிவு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபடுகிறத என்ற ஐயத்தை மக்கள் வெளியிட்டுள்ளனர் .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

துப்பாக்கியுடன் நபர் கைது
துப்பாக்கியுடன் நபர் கைது
துப்பாக்கியுடன் நபர் கைது ,மாங்குளம் பகுதியில் துப்பாக்கி வைகுத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
உளநாட்டில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,கைதானவர் உரிய முறி விசாரணைக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தேர்தல் இடம்பெறும் இந்த கால பகுதியில் இவ்வாறான விடயங்கள் வெளியாகி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

விடுதலை சிறையில் இருக்கும் புலிகள்
விடுதலை சிறையில் இருக்கும் புலிகள்
விடுதலை சிறையில் இருக்கும் புலிகள் ,புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க
உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த 21 ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் நகரப் பகுதியில் இன்றைய தினம் (17) செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன். மன்னாரில் பாரிய வளமுள்ளது. அதில் ஒன்று சூரிய
சக்தி. அதை நாம் முழுமையாக பயண்படுத்துவோம். மன்னாரை சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்’
மன்னார் கடலில் இருந்து நல்ல காற்று வீசுகிறது. அதையும் பயண்படுத்துவோம். அந்த சக்தி இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது. ‘இங்கு வாழும் தமிழ்,சிங்கள முஸ்லிம் மக்கள் நன்கு வாழ வழி செய்வோம்.
மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதுவித அச்சமுமின்றி வாழ முடியும். சிங்கள கிராமங்களில் 5 பன்சலைகள் உள்ளன. அவற்றையும் நாம் பொறுப்பேற்போம்.
புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம்.
மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம். கமத் தொழிலை
ஊக்குவிப்போம்.இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும். 21 ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என்றார்.
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கே. திலீபன், முஷராப்,
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டதோடு சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் அனுரவின் திட்டம்
IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் அனுரவின் திட்டம்
IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் அனுரவின் திட்டம் ,தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐந்து லட்சம் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும், அதை பெரிதாக்க சிறிது காலம் எடுக்கும்.
ஆனால் உடனடியாக சுற்றுலாத்துறையில் புத்துயிர் அடைய செய்யலாம்.
08 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்க 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதாகும்.
அடுத்தது தகவல் தொழில்நுட்ப துறை
இப்போது 1.2 பில்லியன் டொலராக இருக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை 05 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க நாட்டில் 02 இலட்சம் மென்பொருள் பொறியியலாளர்களை உருவாக்க உள்ளோம். பெண்கள், பணி பெண்களாக வௌிநாடு செல்வதை நிறுத்த வேண்டும்.
மேம்பட்ட மனித வளத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
நாட்டை விட எட்டு மடங்கு கடல் உள்ளது. இன்று, 50 சதவீத நெடுநாள் படகுகள் கரையில் குவிந்துள்ளன.
அதிகளவு எரிபொருளுடன் 40 நாட்கள் கடலில் இருந்து அந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு மீன் பிடித்தால் 05 முதல் 10 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.
எனவே, மீனவர்களுக்கு மானியம் வழங்கி, அந்த படகுகளை கடலுக்கு அனுப்ப திட்டம் வகுக்க வேண்டும்.
இந்த நாட்டு விவசாயிகள் நம் நாட்டுக்குத் தேவையான வெங்காயத்தை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளனர். எனவே வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் என உறுதியளிக்கிறேன்.
சுற்றுலாத் தொழிலுக்குத் தேவையான அரிசி மட்டுமே வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும். வெளிநாட்டில் இருந்து வேறு எந்த அரிசியையும் கொண்டு வர மாட்டோம்” என்றார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை
இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை
இன்று நள்ளிரவுடன் நிறைவு பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
“பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது.
எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர்.
இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி
Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி
Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி,
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்
அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்
அர்ச்சுனாவுக்கு அழுத பெண்கள்,அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவக தமிழ் பெண்கள் கண்ணீர் மல்க தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
மருத்துவர் அர்ச்சுனா அரசியல் போராட்டம் ,அது குறித்து மக்கள் தெரிவிக்கும்
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள் ,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆங்காங்கே குண்டுகள் ஒடிக்கலாம் என்கின்ற பதட்டம் நிலவுகிறது .
இலங்கையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் கடும் பிரேயோதனத்தை மேற்கொண்டு வருவதால் தற்பொழுது குண்டுகள் வெடிக்கலாம் என்பதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .
முக்கியமான அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் ஊடாக அந்த வெற்றியை தாம் இலகுவாக சூட்டிக்கொள்ள மென்கின்ற நிலை காணப்படுகின்றது.
இந்த குண்டு வெடிப்பின் ஊடாக முக்கிய தலைவரை படுகொலை செய்து அதன் ஊடாக அனுதாப அலைகளை தேடி, தேர்தலில் தாங்கள் வெற்றி பெறலாம் என்கின்ற விடயத்தில் சில கட்சியினுடைய முக்கிய தலைகள் சிந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கொண்டு தாக்குதல் அதனுடைய எதிரொலியாகவும் அது போன்ற ஒரு தாக்குதலை சிவப்பு சான்றுகள் உள்ளிட்டவர்கள் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது நாடக பதற்றம் இடம்பெறுகிறது .
தாம் ஆள்வதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதால் இவர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவங்களோ அல்லது ராணுவ புரட்சி ராணுவ புரட்சி ஊடாக ,
நாட்டினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் அல்லது குண்டு வெடிப்புகள் ஊடாக அனுதாப அலைகளை தேடிக் கொள்ளும் என்ற நிலை பரவி பெறுவதால் பதற்றம் நிலவுகின்றது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

சங்கு சங்கை ஊதுமா
சங்கு சங்கை ஊதுமா
சங்கு சங்கை ஊதுமா ,இலங்கையில் இடமிருந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விளங்கி வரும் அரியேந்திரன் கட்சி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றார் ,
இதனால் இந்த சங்குக்கு சங்கு மக்கள்ஊதுவார்களா என்கின்ற விடயம் தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது.
வைத்திய கலாநிதி அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் சங்கிற்கு பலத்த ஆதரவினை வழங்கி வந்தார்.
ஆனால் அவரது வழங்கியதற்கு நன்றி கூட தெரிவிக்காமல் பதுங்கி இருந்த பொது வேட்பாளர் தற்பொழுது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த தினம் சங்கிற்கு சங்கை ஊதிவிட்டார் அர்ஜுனர் இராமநாதன் தற்பொழுது சமூக ஊடகங்களில்
சங்கிற்கு தனது ஆதரவு என தெரிவித்து பாட்டு எழுதி பாடுங்கள் என அர்ச்சனா ராமநாதன் புலம்பேதேசம் மக்களுக்கு தெரிவித்திருந்தார் .
அதனை அடுத்து அவருக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து மூன்றுக்கு மேற்பட்ட சங்கு பாட்டுகளும் வழியாக இருந்தன.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது சங்குக்கான தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அர்ஜுனன் ராமநாதன் தெரிவித்ததை அடுத்து ,தற்பொழுது சங்கு கட்சிகள் பதட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுகமாக நேரடியாகவும் அர்ச்சனா ராமனார் மீது கட்சிகள் சார்பில் தாக்குதலை நடத்த முற்பட்ட வேளையிலேயே ,அவர் இந்த கட்சிக்கான தனது ஆதரவினை விலக்கிக் கொண்டதாக தற்பொழுது பேசப்படுகின்றது.
சங்கு கட்சிக்கான அர்ஜுன இராமநாதனின் வழங்கிய நடவடிக்கை என்பது பொது வேட்பாளருக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்கின்ற விடயம் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்
நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்
நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம் ,நாட்டை விட்டு சிறப்பு விமானம் ஒன்று நுடாக தப்பியோட தயாராக மஹிந்த குடும்பம் என்கின்ற செய்தி ஒன்று தற்போது பரவலாக பரவி வருகின்றது.
இலங்கையில் விடுதலை புலிகளை முற்றாக ஒழித்து அதன் பின்னர் இலங்கைய அசைக்க முடியாத 50 ஆண்டுகால ஜனாதிபதிகள் தம் என கற்பனைகள் கண்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் இலங்கையை கொள்ளை அடித்து வேட்டையாடியது.
அதனை அடுத்து மகிந்த ராஜபக்சாவின் தம்பியான கோட்டபாய ராஜபக்ச சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டார் ,நாட்டை விட்டு ஓட்டமும் பிடித்தார்.
இன்றைய காலப்பகுதியில் இலங்கை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார சுமைகளுக்கும், வாழ்வாதார நெருக்கடிகளுக்கும் ,காரணமானது சிவப்பு சால்வைகளும் என மஹிந்த ராஜபக்ச குடும்பம் என்பது உறுதியானது.
அதனை அடுத்து தற்பொழுது இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரா திசாநாயக்க சிங்கள மக்களினால் பெற்றுக் கொள்வார் என்கின்ற கருத்து பரவி வருகின்றது.
அவ்வாறான காலப்பகுதியில் அனுராதா திசைநாயக்க மகத்தான வெற்றியை பெற்று விட்டால் ,
அது மஹிந்த ராஜபக்ச குடும்பம் அல்லது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ,
தற்பொழுது நாட்டை விட்டு சிறப்பு விமானங்கள் தப்பியோட மகிந்த உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதர படுகொலைகளை நடத்தி ஜேவிபி கட்சியை உடைத்து அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது .
கடந்த கால ஆண்டும் ஆண்டு வந்த அரசாட்சிகளை அனுரா திசாநாயக்க பழி வாங்குவார் என்பதாலேயே இந்த சிறப்பு விமானம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்






























