சிரியாவின் போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா வரவேற்கிறது.
Posted in உலக செய்திகள்

சிரியாவின் போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா வரவேற்கிறது.

சிரியாவின் போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா வரவேற்கிறது.

பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை’: சிரியாவின் போர் நிறுத்தத்தை சவுதி அரேபியா வரவேற்கிறது.

சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம்


சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் போர் நிறுத்தத்தையும், சிரிய ஜனநாயகப் படைகளை சிரிய அரசில்

எதிர்காலத்தில் ஒருங்கிணைப்பதையும் வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், அரசு நிறுவனங்களை உருவாக்குவதற்கும், சிரிய மக்களின் வளர்ச்சி மற்றும்

செழிப்புக்கான அபிலாஷைகளை பூர்த்தி செய்ய சட்டத்தைப் பயன்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று ராஜ்ஜியம் நம்புகிறது” என்று அது கூறியது.

சிரியாவின் இறையாண்மை

“சிவில் அமைதியை மேம்படுத்துவதற்கும், சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும்” சிரிய அரசாங்கத்தின்

முயற்சிகளுக்கு அதன் முழு ஆதரவையும் அது மீண்டும் உறுதிப்படுத்தியது, அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 2024 இல் சிரியாவின் ஜனாதிபதி அகமது அல்-ஷரா ஆட்சிக்கு வந்த பிறகு சவுதி அரேபியா அவருக்கு ஆதரவளித்துள்ளது.

சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா F-35 விமானத்தை விற்பனை இஸ்ரேலுக்கு ஆப்பு
Posted in உலக செய்திகள்

சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா F-35 விமானத்தை விற்பனை இஸ்ரேலுக்கு ஆப்பு

சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா F-35 விமானத்தை விற்பனை இஸ்ரேலுக்கு ஆப்பு

சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா F-35 விமானத்தை விற்பனை இஸ்ரேலுக்கு ஆப்பு ,சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா F-35 விமானத்தை விற்பனை செய்வதற்கான இழப்பீடாக இஸ்ரேல் கோர வேண்டியது இதுதான்.

சவுதி அரேபியாவின் முன்மொழியப்பட்ட F-35

பகுப்பாய்வு: சவுதி அரேபியாவின் முன்மொழியப்பட்ட F-35 கொள்முதல், இஸ்ரேலின் ஜெட் விமானத்திற்கான பிரத்தியேக பிராந்திய அணுகலை

முடிவுக்குக் கொண்டுவரும், மேலும் ரியாத் இஸ்ரேலின் மேம்படுத்தப்பட்ட சென்சார்கள், மின்னணு போர் அமைப்புகள் இல்லாமல் நிலையான

மாதிரியைப் பெறும் என்றாலும், ஒரு முக்கிய பாதுகாப்பு நன்மையை பலவீனப்படுத்தும்.

அமெரிக்க திருட்டுத் திட்டம்

அமெரிக்க திருட்டுத் திட்டம் தொடங்கியதிலிருந்து, சவுதி அரேபியாவிற்கு F-35 போர் விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்வது மத்திய கிழக்கில்

மிகவும் உணர்திறன் வாய்ந்த மூலோபாய முடிவுகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

இந்த ஒப்பந்தம், ரியாத் விமானத்தை ஒரு தாக்குதல் தளமாக மட்டுமல்லாமல், வான், நிலம் மற்றும் கடல் முழுவதும் உளவுத்துறை, கட்டளை மற்றும் நிகழ்நேர

போர்க்களத் தரவை இணைக்கும் ஒரு அமைப்பாகவும் செயல்படும் ஒரு விமானத்தை அணுக அனுமதிக்கும். இதுவரை, இஸ்ரேல் மட்டுமே ஜெட்

விமானத்தை இயக்கும் பிராந்தியத்தில் ஒரே நாடாக இருந்து வருகிறது, மேலும் அது இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட சென்சார்கள், மின்னணு போர் அமைப்புகள்

மற்றும் செயலாக்க திறன்களைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பை பறக்கிறது.

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது
Posted in இலங்கை செய்திகள்

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது

சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது ,கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நோக்கி, வியாழக்கிழமை (10)

இரவு புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 01 மணித்தியாலங்கள் 35 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-265 215 பயணிகளுடன் 10/10 மாலை 06.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10/10 இரவு 07.50 மணிக்கு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

இங்கு சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்குச் செல்ல வேண்டிய விமானப் பயணிகளை வேறு, மாற்று விமானங்கள் மூலம் அனுப்ப ஸ்ரீலங்கன்

ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்ததுடன், மீதமுள்ள விமானப் பயணிகளை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிய ஏ.330 விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை

பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை

பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை ,பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளம் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன். ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.

நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது.

போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.

தோட்டம் வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். நான் சிரமப்பட்டேன். என்னை துன்பப்படுத்தினார்கள்.

காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன்.

ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.

எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன்.

அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது.

அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.

சவுதி அரேபியா ஹவுதி மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சவுதி அரேபியா ஹவுதி மோதல்

சவுதி அரேபியா ஹவுதி மோதல்

சவுதி அரேபியா ஹவுதி மோதல் ,சவுதி அரேபியாவுக்கும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகளுக்கும் இடையில் மீளவும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன.

அந்த படைகள் எல்லையோரமாக உள்ள இரண்டு, கிராம பகுதிகளை இலக்கு வைத்து ,சவுதி அரேபியாவின் தாக்குதல் விமானங்கள்,நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நமது எல்லைக்குள் அத்துமறி ஆக்கிரமித்து தாக்குதலை நடத்தியதற்கு பதிலடியாக கடுமையான தாக்குதலை நடத்தினர்

இதன் பொழுது சவுதியப்படைகளுக்கும் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவங்கள் தற்பொழுது மீளவும் ஆரம்பித்துள்ளதால், இருநாட்டு மக்களுக்கும் இடையில் ஒருவித பதட்டம் ஆரம்பித்துள்ளது .

செங்கடல் மத்திய தரை கடல் ஏடன் வளைகுடா

செங்கடல் மத்திய தரை கடல் ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கின்ற சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியாவின் போர்க்கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

இது தாக்குதலால் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது .

இஸ்ரேலிய பணிகள் அதிலிருந்து மீள முடியாதவாறு மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர் .

சவுதி அரேபியா கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது ,ஒரு திசை திருப்பும் தாக்குதல் திட்டமாக இருக்கக்கூடிய அச்சத் திணையும் அபாயத்தையும் இருநாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .

இடர்களையும் தோல்விகளையும் இஸ்ரேல் சந்தித்து வருகின்றன .

அதற்கு எதிராக போர் ஒன்றை ஆரம்பித்தால் மட்டுமே, ஈரானைஅதிலிருந்து விழுந்து போரை திசை திருப்பினால் மட்டுமே ,இஸ்லாம் மீது நடத்த ஆரம்பித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

வீடியோ


சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு

சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு

சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை அவர் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொத்தடுவ புதிய நகரில் வசித்து வந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

சுமார் 7 மாதங்களுக்கு முன்பு இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் சவுதி பொலிசாரின் தலையீட்டில் தான் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடும் சிரமங்களுக்கு மத்தியில் சுமார் ஒன்றரை மாதங்களாக தடுப்பு முகாமில் வாழ்ந்து வருவதால், தம்மை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாடியுள்ளார்.

சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு

நயனா தில்ருக்ஷி கடந்த பெப்ரவரி மாதம் மாதம் 8ஆம் திகதி குருநாகலில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் சவூதி அரேபியாவிற்கு வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளார்.

அவர் அந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு மற்றொரு பெண் மூலம் பரிந்துரைக்கப்பட்டார்.

நயனா தில்ருக்ஷி சவுதி அரேபியாவில் 3 மாடிகள் கொண்ட வீட்டில் பணிபுரிந்துள்ளார்.

வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவர் செய்திருந்ததுடன், வீட்டில் உள்ள சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வேலை செய்து கொண்டிருந்த போது, ​​கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும், குழந்தைக்கு சரியாகச் சாப்பாடு கொடுக்கவில்லை எனக் கூறி தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அந்த பெண்ணின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அவர் அதிலிருந்து தப்பிக்க அலறியும் பலனில்லை.

பின்னர், வீட்டின் உரிமையாளர் தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

எனினும், நயனா தில்ருக்ஷியே அவரது உடலுக்கு தீ வைத்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அப்படி ஒன்றும் செய்யவில்லை என்றும், அம்மாவை பராமரிக்கவும், வீடு கட்ட வேண்டும் என்பதற்காக தான் வெளிநாட்டு வேலைக்கு சென்றாகவும் அவர் கூறியுள்ளார்.

சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு

இது தொடர்பாக, நயனா தில்ருக்ஷியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பரிந்துரைத்த சம்பந்தப்பட்ட தரகர் பெண்ணிடம் சம்பவம்

குறித்து கேட்டபோது, ​​அந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன பெண்களை பரிந்துரைப்பதற்கு மட்டுமே அவர் நியமிக்கப்பட்டதாகவும், அதற்கான பணம் தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் குறித்த பெண்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் தமக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என நயனா தில்ருக்ஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் அந்நாட்டு தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சில மாதங்களுக்கான சம்பளம் கூட தனக்கு கிடைக்கவில்லை என்றும் நயனா தில்ருக்ஷி குறிப்பிட்டுள்ளார்.