Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா
வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா
வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா ,,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகின்றார் என தெரிவித்துள்ளார்.
மும்முனை ஜனாதிபதி வேட்பாளர் போட்டி பலத்த போட்டிகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரா திசநாயக்கா வெற்றி பெறுவார் என்கின்ற கருத்து நிலவுகிறது.
அவ்வாறாக காலப்பகுதியில் தற்பொழுது அனுர வரிக்குறைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
தேர்தல் முடிவு பெற்றதும் சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை அமல்படுத்த வேண்டிய நிலை, இலங்கை வாழ் அரசியல் ஆளுகின்ற ஜனாதிபதிகளுக்கு ஏற்படும் நிர்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை அடுத்து தற்பொழுது வரி கொள்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களுக்கான சலுகைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதென அனுரா திசைநாயக்க தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வருகின்ற பொழுது மக்களை குஷி படுத்தவும் வாக்குகளை கொள்ளையடிக்கவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமது சொற்களை அடித்து விளையாடுவது வளமையாகும்.
அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தான் அனுரா திசநாயக்காவும் இப்படி தனது கொள்கை விரிப்பை அடித்துள்ளாரா என்பதும் ,தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரான வெற்றி பெறுவாரா என்பதும் இங்கே கேள்விக்குறியாக உள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,சம்மாந்துறை போலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள துப்பாக்கிச் சம்பவம் இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாக உள்ளதாக சம்மாந்துறை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொருநர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதர்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்கத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 21 வயதுடையவர் அழைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியரான இவர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
இது சகோதரருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாத மூர்த்தி துப்பாக்கி பிரயோகத்தில் முடிவுற்றுள்ளதாகவும் தனது சகோதரனை சகோதரனை சுட்டு படுகொலை செய்துள்ளனர் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தேர்தல் முடிவுகள் இடம்பெறுகின்ற வேளையில் தற்பொழுது இறுக்கமான தேர்தல் காணப்படுகின்ற வகையில் ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதியில் தொடராக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் குண்டு வெடிப்புகள் அதிகம் இடம்பெறப் போவதாக இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .
வரும் நாட்களில் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற பயம் காணப்படுகிறது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

நிற கட்சி பேதங்கள் இன்றி அனைவரையும் பாதுகாப்போம்
நிற கட்சி பேதங்கள் இன்றி அனைவரையும் பாதுகாப்போம்
நிற கட்சி பேதங்கள் இன்றி அனைவரையும் பாதுகாப்போம் ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளை சாராத
குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 65 ஆவது வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்
செப்டம்பர் 16 ஆம் திகதி ஹெட்டிபொல நகரில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
- நிரந்தர வறுமைக்கு முற்றுப்புள்ளி.
வறுமையை ஒழிக்கும் முகமாக அனைத்து வரிய குடும்பங்களுக்கும் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20000 ரூபா வீதம் முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளுக்குள்ளடக்கி
நிவாரணங்களை வழங்குவோம். எவரும் தொடர்ந்தும் வரியவர்களாக இருப்பதற்கு விருப்பமில்லாதமயால் நாம் வறுமையே ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- வீட்டில்லாதவர்களுக்கும் காணி இல்லாதவர்களுக்கும் வீடும் காணியும்.
தமக்கென்று வீடும் காணியுமில்லாதவர்களுக்கு வீட்டையும் காணிக்கான உரிமையும் பெற்றுக் கொடுப்போம். கம் உதாவ செயற்த்திட்டத்தை மீண்டும் உருவாக்குவோம். பிரதேச செயலாளர் பிரிவில் சர்வதேச தரத்திலான
இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பம், கணிணி விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் சர்வதேச மொழிகள் போன்ற துறையை இளைஞர்களுக்கு கற்பித்து அறிவை மேம்படுத்தும் வேலை திட்டங்களை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- விவசாயிகளுக்கு பல சலுகைகள்.
50 கிலோ கிராம் உள்ள உர மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும். பெரிய வெங்காய உற்பத்தியாளர்களையும் பாதுகாப்போம். பெரிய வெங்காயம், சோளம், உருளைக்கிழங்கு என்பன அறுவடை
செய்யப்படுகின்ற போது ரணில் விக்கிரமசிங்க அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றார்.
விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கின்ற நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
- பொதுமக்களுக்கே நிவாரணங்கள்.
விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரம் வழங்குகின்ற அதேவேளை விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பஸ்
உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம். இந்த எரிபொருள் நிவாரணம் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. எரிபொருள் நிவாரணத்தை
தொழிலாளர் வர்க்கத்திற்கே வழங்குவோம். செல்வந்தர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டிய தேவை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- 25 நிர்வாக மாவட்டங்களுக்கும் ஜனாதிபதி செயலணி.
இந்த நாட்டில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களை மையப்படுத்தி ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி ஒன்றை உருவாக்குவோம். அதன் ஊடாக அனைத்து நிர்வாக மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிப்போம். அத்தோடு ஜனாதிபதியை மக்கள் தொடர்பு கொள்வதற்கு
தனியான அலகொன்றையும் நிறுவுவோம். மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முறையான தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு
கிராமங்களையும் நகரங்களையும் அபிவிருத்தியடையச் செய்யும் கம் உதாவ நகர உதாவ வேலை திட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு
அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு
அச்சுறுத்தல் அரியேந்திரனுக்கு ,தமிழ் பொதுவேட்பாளர் அரியேந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது .
ஜனாதிபதிக்கு தேர்தல் பலத்த போட்டியை கட்சிகளுக்கு இடையில் ஏற்படுத்தி வரும் நிலையில் ,அதனை எதிர்கொண்டு பொது வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் அரியேந்திரனுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் எனும் விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும் என்கின்ற நிலையில் தற்பொழுது அரியேந்திரன் மீது முக்கிய கட்சிகளின் பார்வை திரும்பியுள்ள வேளையில் இவ்வாறான விடயம் வெளியிட பட்டுள்ளது ,பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு ,இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அனுரா திசாநாயக்க வெற்றி பெற்றால் தமிழருக்கு தீர்வு தருவாரா ..?
இலங்கையில் மீளவும் ஒரு இனவாத அரசியலை மையப்படுத்தும் ஒருவராக அனுரா திசாநாயக்க மாறியுள்ளார் .
அடிப்படை சிங்கள இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வெற்றி பெற போகிறார் அனுரா திஸாநாயக்க என்கிறது சிங்கள மக்கள் கருத்து .
தனி பெரும் பான்மை சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அனுராதிசாநாயகக் வெற்றி பெறுவாரா என்கின்ற விடயம் கேள்வியாக எழுந்துள்ளது .
எனினும் இந்த தேர்தலில் சிறுபாண்மை தமிழர் வாக்குகளே இந்த தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலை காணப்படுகிறது .
ஆனால் இதில் தமிழர் தரப்பு சங்கு கட்சி பேரம் பேசும் காட்சியாகி மாற்றம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறான சந்தர்ப்பம் தமிழர் தரப்புக்கு கிடைக்க பெற்றால் தமிழர் அடிப்படை விடயம் தீர்வு காணப்படுமா என்கின்ற கேள்வியே மக்கள் மத்தியில் பற்றி எரிகிறது .
கேள்வியோடே வேகம் பிடிக்கும் இந்த தேர்தல் களம் ,இலங்கை வரலாற்றில் புதிய மாற்றத்தையும் எதிர்மறை தலை கேள் அரசியல் சுழற்சியையும் ஏற்படுத்தும் எனலாம்
எதிர் வரும் ஆறு நாட்களில் இந்த விடயத்திற்கான பதில் முற்றாக கிடைக்க பெறும் ,அதுவரை காத்திருப்போம் எம் தமிழ் உறவுகளே
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

அர்ச்சுனா சங்கு மோதல்
அர்ச்சுனா சங்கு மோதல்
அர்ச்சுனா சங்கு மோதல், இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியேந்திரன் அவர்களுக்கு சங்கு சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் .
இவ்வாறான கால பகுதியில் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அதனது ஆதரவை வழங்கினார் .
அதனை அடுத்து சர்வதேசம் தழுவிய மக்கள் சங்கிற்கு மிக பெரும் ஆதரவை வாழங்கியுள்ளனர் .
இவ்வாறான வேளையில் தற்போது அர்ச்சுனா இராமநாதன் என்ன தான் பேசினார் ,
காணொளியில் உள்ளே விடயம் இதில் பார்க்கவும் .
காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார்
காதல் கவிதை அர்ச்சுனா எழுதினார் ,2020.05.14
காலம் என் மகனையும் என்னையும் தனித்து விட்ட போது..
இனம் மொழி கடந்த நீ செய்த உதவிகள்..
இன்று வரை என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டவை..
எல்லாம் மறக்க..
நான் ஒன்றும் நன்றி கடந்தவன் அல்ல..
நீ சொன்ன வரிகளுக்காய்..
நான் தந்த வார்த்தைகளுக்காய்..
நான் சொன்னதை செய்தேன்..
உன் அர்ப்பணிப்புகள்..
நீ வயிற்றில் சுமக்காத ஒரு பிள்ளையை..
இன்று வரை உன் தோளில் சுமக்கிறாய் என்பதை..
கடைசி வரை நான் மறவேன்..
சமூகத்திற்கு இது ஒரு பிழையாக போகலாம்..
என் பிள்ளையின் தாயும் நானும் பிரிந்த போது..
நீதிமன்றம் என் பிள்ளையை தந்ததற்குரிய காரணம்..
நீதான் என்பதை உலகறிய வேண்டும்..
இன்று வரை அவனை ஒரு வசனம் கூட உருக்கி பேசாத உன் இதயம்..
நீ செய்த உதவிகளை மறக்காத என் பிள்ளையின் அன்பு..
நான் தமிழ்..
நீ சிங்களத்தி என்பதை தாண்டி..
என்னோடு என் வாழ்க்கையில் இதுவரை இணைந்திருந்ததை..
சமூகத்திற்கு சொல்லியாகவே வேண்டும்..
சாவகச்சேரியில் எனது குவாட்டர்ஸ்க்கு நீ வந்தபோது
கேதீஸ்வரன் மற்றும் தயாளினி எழுதிய கடிதங்கள்..
பொல்லாத உறவு என்று சொன்னார்கள்..
ஒருவனை தனியே வைத்து வளர்க்கிறேன்…
தயாளினியும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய்..
அவள் எழுதிய கடிதங்கள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன..
நீ அப்போது ஒரு மருத்துவ பீட மாணவி..
உன் படிப்பையும் தாண்டி நீ செய்த அர்பணிப்புகள்..
கோவிட் வந்தபோது நான் உன்னையும் மகனையும்
ஒன்றாக வீட்டில் விட்டு
நாள் கணக்காக மருத்துவமனையே தவம் என கிடப்பேன்..
அன்று எனக்கு நீ வரம்..
என் பிள்ளைக்கு நீ ஒரு பெற்றெடுக்காத தாய்..
அவனுக்கு சிங்களம் தெரியாது..
உனக்கோ தமிழ் தெரியாது..
இடையில் மாட்டிக் கொண்ட நான்..
மும்மொழி ஆகிய காரணம் இதுதான்..
கோபத்தில் கத்தி இருக்கிறேன்..
மனம் உடைந்து அழுது இருக்கிறேன்..
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவள்..
இரவு பகலாக மகனைப் பார்த்தாய்..
அவன் என் அரவணைப்பை தாண்டி..
உனக்குள்ளே ஒரு குழந்தையாகினான்..
ராத்தி என பெயர் வைத்தது கூட அவன் தான்..
இன்றுவரை..
அம்மாவா நானா நீயா என..
உன் வாழ்க்கை போராடிக் கொண்டிருக்கிறது..
பெற்றெடுக்காத பிள்ளையை நீ தத்தெடுத்த போது..
உன் அன்பிற்கு..
அவன் அடைக்கலமான அந்த நாட்களை..
இன்னாளில் அன்றோ அன்னாள் தொடங்கியது..
நன்றி அம்மா..
வார்த்தைகள் இல்லை..
இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை
இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை
இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை ,இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப்
பாதுகாப்பது முக்கியம் என்றும் குறிப்பிடும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack), அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு மீள்வதற்கான வாய்ப்பை வழங்க இந்த வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவது மிகவும் முக்கியமானது என்றும் ஜூலி கொசெக் (Julie Kozack) கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த ஜூன் 12 ஆம் திகதி, எங்களின் நிர்வாகக் குழுவினால் 2024 இலக்கம் IV உறுப்புரையின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆலோசனை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் (EFF) தொடர்பான வேலைத்திட்டத்தின் இரண்டாவது
மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. அதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.
வேலைத்திட்டத்தின் செயல்திறன் வலுவாக உள்ளது. மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் பிரதிபலன்கள் காட்டப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது.
அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் அரச வருமானம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் உள்ளது. எனவே, மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும்”
தனியார் கடன் வழங்குநர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த
அவர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகளை நிறைவு செய்தல் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தங்களை எட்டுவது முக்கிய மைல்கற்களாக அமையும் என்றார்.
மேலும், IMF பணிக்குழாமினால் ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து, அதன் மதிப்பீட்டை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக இலங்கை அதிகாரிகளின்
வேண்டுகோளுக்கு இணங்க, IMF பணிக்குழாமினால் இந்த மதிப்பீட்டை இலங்கை பிணைமுறி உரிமையாளர்களின் நிதி ஆலோசகர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், “இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் எங்களின் பணி அதிலிருந்து முடிவடைகிறது. கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் பங்கேற்பதில்லை என்பதை நான் இங்கு வலியுறுத்த வேண்டும்.
அந்த பேச்சுவார்த்தைகள் கடன் பெற்ற நாட்டிற்கும் அதன் கடன் வழங்குநர்கள் இடையில் நடைபெறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் கடன்
நிலைபேற்றுத்தன்மையின் பொதுவான மதிப்பீட்டை மாத்திரமே செய்கிறது. மேலதிக விபரங்களுக்கு, இலங்கை அதிகாரிகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையைப் ஆராயுமாறு பரிந்துரைக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் கடன் நிலைபேற்றுத்தன்மை மதிப்பீடு (DSA) தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஜூலி கொசெக் (Julie Kozack),
“இதற்கான எனது பதில் எனது முந்தைய பதில்களைப் போலவே உள்ளது. முதலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில்,
இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருப்பதைக் காணலாம். ஆனால் இலங்கை தனது
வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு, இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடைந்த சாதனைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
மூன்றாவது மீளாய்வுக்கான காலம் குறித்து தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படும். எனவே, ஜனாதிபதித் தேர்தல்
நிறைவடைந்த பின்னர், புதிய அரசாங்கம் அல்லது இலங்கை மக்கள் செய்யும் தெரிவின் அடிப்படையில், வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர எதிர்பார்க்கிறோம். அதன்படி செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடுக்கு நபர் உயிரிழப்பு .கல்கிஸ்ஸ-படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கல்கிஸ்ஸ – படோவிட்ட பகுதியைச் சேர்ந்த மதுஷான் சுவாரிஸ் என்ற 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை என்பதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்
வட கிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்
வட கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு வேறெந்த தலைவரும் செய்யாத விடயத்தை நாம் செய்வோம்.
தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு வடகிழக்கு மக்களை மையப்படுத்தியதாக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தை பாரிய அபிவிருத்தியின் பால் இட்டு செல்வோம்.
இதன் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த தற்போதைய பதில் ஜனாதிபதி வடகிழக்கு மக்களை சந்திக்க சென்றார். அவரினால் வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்ட முடியுமாக இருந்தாலும், அதற்கான
இயலுமை அவரிடம் இல்லாத காரணத்தினால் அந்த மாநாட்டை கூட்டவில்லை.
ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த இயலுமை இருக்கின்றது. எனவே அதிகாரத்திற்கு வந்த உடனே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 57 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 15 ஆம் திகதி கிளிநொச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அனைத்து பாடசாலைகளையும் மாற்றி தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம், மற்றும் ஆங்கில மொழிக் கல்வி என்பனவற்றை
பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, புதிய கல்வி முறை ஒன்றின் ஊடாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.
சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக அனைத்து வைத்தியசாலைகளையும் மாற்றி உயர்தரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்கிற்கு மீண்டும் 15 வீத வட்டி
அத்தோடு ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்த்து சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டியை மீண்டும் பெற்றுக் கொடுப்போம்.
வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் வீடமைப்பு திட்டத்தை நிறுத்தினாலும் தாம் அதிகாரத்திற்கு வந்த
உடனே உதா கம்மான திட்டத்தை நிறைவு செய்து அதனை மக்களிடம் கையளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் பல சலுகைகள்
விவசாயிகளுக்கு 5,000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம்.
விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் தொடர்ந்து இந்த நிவாரணங்களை வழங்குவோம்.
செல்வந்தர்களுக்கு இந்த நிவாரணங்கள் தேவைப்படுவதில்லை. மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்குமே இந்த நிவாரணம் பெறுமதியாக அமைகின்றது.
- இளைஞர்களுக்கான புதிய வேலை திட்டங்கள்
இளைஞர் சமூகத்துக்காக இளைஞர் தொழில்நுட்ப மத்திய நிலையங்களை உருவாக்கி, அதன் ஊடாக தகவல் தொழில்நுட்பம், கணிணி விஞ்ஞானம் ஆங்கில மொழி கல்வி,
தொழில் உருவாக்கம் போன்றவற்றை சர்வதேச தரத்தில் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். தொழில் வாய்ப்பில்லாத இளம் தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- வறுமை ஒழிக்கும் புதிய வேலை திட்டங்கள்
வறுமையை ஒழிக்கின்ற நோக்கில் 24 மாதங்களுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து திட்டங்களின் கீழ் மாதமொன்றுக்கு 20,000 ரூபா வீதம் வழங்கி வறுமையை ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை வெயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுரவ விகாரைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வத்துபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 49 வயதுடைய வதுரவ-வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக வெயங்கொட பொலிஸார் குறிப்பிடத்தக்கது
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு
பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு
பாடசாலை சிறுவர்களை பிரச்சாத்தில் ஈடுபடுவதாக முறைப்பாடு
நாடளாவிய ரீதியில் கடந்த 14 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுள் கிடைத்துள்ளதுடன் 8 ஆம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில்
அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில்
ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுதந்திரமானதும நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் காண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட நிறைவேற்று பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது.
இதுவரை கபே அமைப்புக்கு 934 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றது தொடர்பாக அவதானிக்க கூடியதாக உள்ளது.
2015, 2019 நடைபெற்ற தேர்தல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சுமுமான களநிலவரம் காணப்பட்டாலும் கடந்த 8 ம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் அரச சொத்து துஸ்பிரயோகம்,
போன்ற முறைபாடுகள் அதிகரித்திருந்ததுடன் அந்த காலப்பகுதியில் வன்முறைகள் குறைவாக இருந்தன 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்துள்ளது.
அத்துடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரச்சாரங்களை வீடியோ பதிவுகள் போலி
முகநூல் மற்றும் வட்சாப் ஊடாகவும் பதிவுகள் இடப்பட்டுள்ளது இவ்வாறான செயற்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது.
தேர்தல் ஒன்று வரும் போது சமாதானமான தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டும் என்பதற்காக தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் மாவட்ட இணைப்பாளர்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்பு
கொண்டு சமாதான தேர்தலை செய்ய முடியாது பிரதேசங்கள் மற்றும் எந்த எந்த இடங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என பதிவுகளை செய்வது வழமை இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர்,
ஒட்டுமாவடி பிரதேசங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்தபோதிலும் இதுவரை எந்தவொரு பாரிய வன்முறைகள் இடம்பெறவில்லை.
சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் எல்லா பிரதேசங்களிலும் சிவில் அமைப்புக்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்து தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை பெற்றுவருகின்றனர்.
அதேவேளை கபே அமைப்பு தேர்தல் தினத்தில் 3 ஆயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடவுள்ளனர்.
இருந்தபோதும் அரசியல்கட்சியின் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் வேண்டிக்கொள்ளுவது இதுவரை
காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை எவ்வாறு ஈடுபட்டுவந்தீர்களே, அதே
போன்று தேர்தல் தினத்திலும் அதனை தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்கு பின்னரான காலப்பகுதிக்குள் சமாதானமான தேர்தலுக்காக ஒன்றுபடவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ் ,மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் ஆட்டோ ஒன்று எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது .
இந்த ஆட்டோ எப்படி எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்ததா அல்லது விஷமிகளினால் தீயிட்டு கொழுத்த பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்
சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்
சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம் ,ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவர் கைது தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தததை அவதானித்ததுடன், மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் நடத்திய விசாரணையில் காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என்பது தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, காணி தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பதுரலிய, ஹீன்பல்வில பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்வெல்தொட்ட, மொரபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ,அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக்
கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கேகாலையில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ரணிலால் இயலும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதிக்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து, மக்கள் வாழக்கூடிய நாட்டை தானே உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மக்களின் எதிர்காலத்தை ஒன்று வழங்குமாறு கோரும் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பம் இதுவல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அன்று மக்கள் கஷ்டப்பட்ட போது இவர்களில் யாரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி மக்கள் படும் துன்பத்தையும், மாணவர்களை பாடசாலை அனுப்ப முடியாமல் தவித்ததையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் வந்து நீலிக் கண்ணீர் வடித்தாலும் அன்று ஒளிந்து கொண்டனர். நாடு கஷ்டத்தில் இருக்கும் போது மக்களை கைவிட்ட சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் அளித்து வாழ்வதற்கான நம்பிக்கையை நான் ஏற்படுத்தினேன். இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை படிப்படியாக குறைத்து வருகிறோம்.
அதற்காக கடந்த தடவை நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினோம். உர நிவாரணம் வழங்கப்பட்டது.
ஓய்வூதியம் மற்றும் முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. ஒரு பக்கம் பொருட்களின் விலையைக் குறைக்கும் அதேவேளை, மறுபுறம் பணத்தைக் கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் பணியை செய்து வருகிறோம்.
அடுத்த ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை குறையும். நான் மேடையில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் நபரல்ல. பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் அதனை மக்களுக்கு அறிவிக்கிறேன்.
எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் யாருக்காவது கொடுப்பதா அல்லது நிரந்தர எதிர்காலத்திற்கு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று திசைகாட்டி கோருகிறது. அவர்களின் பட்ஜெட் ஊடாக அனைத்து IMF நிபந்தனைகளும் மீறப்படுகிறது.
நிபந்தனைகளை உடைத்து, IMF ஆதரவை இழந்த பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையும். அதேபோல், பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று நான் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
அவர்களிடம் திட்டம் எதுவும் இல்லாததால் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. திட்டுவதை மட்டுமே செய்கின்றனர். ஆனால் மக்களின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும்.
எனவே மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தாமல் உண்மையைப் பேசுமாறு சஜித்திடமும்அநுரவிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காட்டியுள்ளோம். அந்த பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டை வெற்றிபெற செய்ய அனைவரும் செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா
நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா
நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா ,இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.
நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில் அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா? இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சி பீடமேற்றும் பொது மக்களின் யுகத்திற்கு மக்கள் வரத்தை வழங்குவதா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்திற்கு செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலை முடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்திற்கு ரணில் அநுர கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.
ரணில்-அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
இந்த சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருக்கிறோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 52 ஆவது மக்கள் வெற்றிப்பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (14) திகதி இரத்தினபுரியில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்டுக்கட்டாக பைல்களை தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த
ராஜபக்ஷக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என
வெளிக்கொணர்ந்தது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுகின்ற வேலையாட்கள், முதல் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில்துறை ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வர்த்தக
இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து தரப்பினர்களுக்காகவும் இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தேசிய கொள்கை திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அத்தோடு 50 கிலோ உரம் ஒரு மூடையை 5000 ரூபாவுக்கு வழங்கி, விவசாயிகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையில் இரத்தினக் கல் காணப்படுகின்ற இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததது.
அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி அதனை நிறுத்தினோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்ய முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மிகப் பெருமளவில் செய்து, தொழில் வாய்ப்பில்லாத
இளைஞர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி சமூகத்தில் அபிமானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வீடில்லாதவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதோடு இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வேலை திட்டத்தை செயற்படுத்தி, 24
மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து
3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து
3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து,பிரிட்டனில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்பதும் தயாபரன் எனப்படும் இயற்பெயர் கொண்ட சங்கீதன் குழுவிடம் 3000 கோடி சொத்துக்கள் உள்ளதாக அம்பலமாகியுள்ளது .
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் அணியொன்று பிரிட்டனில் தோன்றியது .
புதிதாக ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பினரால் ,தாமே விடுதலை புலிகளின் மூத்த தளபதிகள் என தெரிவித்து சங்கீதன் எனப்படும் குழு இயங்கி வந்தது .
இந்த அமைப்பில் இயங்கி வரும் சங்கீதன் ,இன்பன் ,புலவர் ,என புனை பெயர் கொண்டவர்கள் எனப்படுபவர்கள் முக்கிய தூண்களாக காணப்படுகின்றனர் .
இவர்களே இறுதி முள்ளி வாய்க்கால் யுத்த களத்தில் இருந்து தப்பித்து வந்ததாக தெரிவித்து ,மக்களை நம்ப வைத்து அதன் ஊடக விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் கட்டமைப்பே நிறுவினர் .
மக்களிடத்தில் புலிகள் அமைப்பு என கோரி கொள்ளும் இவர்கள் ,இங்கிலாந்து சட்டத்தின் அடிப்படையில் தமிழர்களின் பொது அமைப்பு என்றே நிறுவங்களின் பெயர்களை நிறுவி அதன் ஊடக செயல் பட்டு வருகின்றனர் .
அதன் அடிப்படையில் தயாபரன் என்பதும் சங்கீதன் குடும்ப பெயரில் ,அவர்களது உறவினர்கள் பெயரில் ஒன்பதுக்கு மேற்பட்ட ஆடம்பர பங்களா வீடுகள் காணப்படுகின்றன .
இதன் சொத்து மதிப்பு இலங்கை ரூபாயில் ,மூவாயிரம் கோடி ரூபாய்களாக காணப்படும் என கணக்கிட படுகிறது .
இந்த விபரங்கள் பொது வெளியில் காணக்கிடப்பதாக தெரிவிக்க படுகிறது .
.அப்படி என்றால் பிரிட்டன் வருமானத்துறையினர் ,ஒருவரது பெயரில் எவ்வாறு எட்டு நிறுவனம் இயக்க படுகிறது ..??
எப்படி இவர்களுக்கு இந்த பணம் கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தினால் மிக பெரும் விடயங்கள் அம்பலமாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம் என்கின்ற இந்த அணியினரால் மக்களிடத்தில் மில்லியன் கணக்காக பணம் சேகரிக்க பட்டுள்ளது மக்கள் தெருவிக்கும் கருத்துக்கள் ஊடக காணமுடிகிறது .
ஆதலால் வீரச்சாவு அடைந்த போராளி ஒருவரது பெயரில் நடமாடி வரும் ,சங்கீதன் குடும்பத்தின் பெயரில் வாங்கி குவிக்க பட்டுள்ள ஆயிரக்கணக்காண சொத்துக்கள் மக்கள் சொத்துக்கள் என மக்கள் பேசி கொள்கின்றனர் .
ஆதலால் பிரிட்டன் உளவுத்துறை மற்றும் வருமானவரித்துறை என்பன இணைந்து விசாரணை நடத்த வேண்டும் .
அப்பொழுது தான் மிக பெரும் மாபியா கும்பல் வலையமைப்பு அம்பல படுத்த படும் என நம்ப படுகிறது .
போரால் பாதிக்க பட்ட மக்களிற்கு உதவிட மறுத்து தமது சுயநல ஆடம்பர வாழ்வில் ஈடுபட்ட இந்த கும்பலை மக்கள் ஓட ஓட விரட்டும் நாள் உங்கள் வாசல் வந்துள்ளது .
குறிப்பிட தக்கது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது
தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது
தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது,பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் பெயரில் இயங்கி வரும் தயாபரன் எனப்படும் சங்கீதன் குழு வசமாக சிக்கியுள்ளது .
இலங்கை புலனாய்வு குழுவினரால் நன்கு மூளைச சலவை செய்யப்பட்டு ,இலங்கை அரச இராணுவத்தின் செயல் திட்டங்களுக்கு நன்கு கட்டமைக்க பட்ட நிலையில் பயிற்றுவிக்க பட்டு பிரிட்டனுக்கு இவர்கள் அனுப்பி வைக்க பட்டனர் .

அவ்விதம் 34 பேர் சிவப்பு நடவடிக்கை எனும் பெயரில் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்க பட்டதக தெரிவிக்க படுகிறது .
இறுதி யுத்தம் இடம்பெற்ற 2009 ஆண்டு கால பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்த விடுதலை புலிகள் உறுப்பினர்கள் ,14000 பெயரில் சங்கீதன் உள்ளிட்ட இந்த குழுக்கள் உள்ளடக்கம் பெருகின்றனர் .
இவ்வாறு இவர்கள் இலங்கை இராணுவத்தின் உளவாளிகளாக மாற்றம் பெற்று ,தமிழீழ விடுதலை புலிகள் என்கின்ற பெயரில் சங்கீதன் எனப்படும் தயாபரன் எனும் நபர் தலைமையில் ,பிரிட்டன் வருகை தந்த குழுவே ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் அணியை உருவாக்கியுள்ளது .
இந்த குழுவினர் விடுதலை புலிகளினால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறுவ பட்டு இயங்கி வந்த அனைத்துலகும் எனப்படும் ,டி சி,சி எனும் அமைப்பே முற்றாக உடைக்கும் நோக்கில் இயங்க வைக்க பட்டனர் .
இந்த அமைப்பினர் இலங்கை அரச புலனாய்வு பிறிவினரால் நன்கு கட்டமைக்க பட்ட நிலையில் இயங்கி ,பெரும் உடைவை ஏற்படுத்தி ,அனைத்துலகும் என்கின்ற தாய் கட்டமைப்பை உடைத்து சிதைத்தது .
அதன் பின்னர் பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்களாக விளங்கி வீரமரணம் அடைந்த மாவீரர் நிகழ்வுகளை மூன்று பிரிவுகளாக நடத்தினர் .
அவ்விதம் அன்று முதல் இன்றுவரை இந்த மாவீரர் நிகழ்வுகள் மூன்றாக மூன்று அமைப்புகள் நடத்தி வருகின்றனர் .
லண்டன் புறநகர் பகுதியான ஆக்ஸ்போர்ட் மற்றும் பிறிதொரு கவுன்சிலில் உள்ளடக்க பட்ட மாடு மேய்க்க பயன்படுத்த படும்
மேய்ச்சல் நிலம் 137 ஏக்கர் காணி வாங்க பட்டு அதில் மாவீரர் மயானம் அமைக்க பட போவதாக தெரிவித்து இந்த விடுதலை புலிகளின் தலைமைச்செயலாம் எனும் அணி மக்களிடம் பணம் சேகரித்து வந்தததாக தெரிவிக்க படுகிறது .
ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர்கள் பல லட்சக்கணக்கான பணசேகரிப்பை நடத்தி வந்துள்ளனர் .
விவசாய பண்ணை காணியில் பச்சை நில பகுதியில் கட்டடங்கள் நிரமணிக்க அனுமதி வாழங்கப்படாத போதும் ,அதே பகுதி கவுன்சில் அனுமதி
வழங்கியதாக பொய் கூறி ,இந்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைச்செயலகம் எனும் வரலாற்று மையமாக இயங்கி வரும் சங்கீதன் எனப்படும் ,
தயாபரன் என பெயர் கொண்ட குழு தலைமையில் இயங்கி வந்துள்ளது .
அந்த முக்கிய விடையத்தை மோப்பம் பிடித்த, விடயம் அறிந்த தமிழர்கள் சேகரித்த தகவலின் அடிப்படையில் ,
இவர்கள் மிக பெரும் சர்வதேச மாபியா வலையமைப்பை கொண்டவர்கள் என கண்டறிய படுகிறது .
அதன் அடிப்படையில் இந்த சங்கீதன் எனப்படும் தயாபரன் தலைமையில் 34 தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்களாக

விளங்குய இவர்கள் ,இலங்கை நுவரெலியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ,
பின்னர் பிரிட்டன் வருகை தந்துள்ள விடயம் காட்சி ஆதாரரங்களுடனும் சில செய்தி குறிப்பிகளுடன் வெளியாகியுள்ளது .
இதோ அந்த படம் ,இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் அனுப்பி வைக்க பட்டவர்கள் என்றார் விடயம் இதன் மூலம் அம்பல பட்டுள்ளது .
வெள்ளை வேட்டி வெள்ளை சேர்ட் அணிந்தவாறு காணப்படும் இவர்கள் தான் பிரிட்டன் இணைந்த ஐரோப்பிய நாடுகளில் அகல கால் ஊன்றி இலங்கை
அரச இராணுவ புலனாய்வு காட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவது அம்பல பட்டுள்ளது எனப்படுகிறது .
தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் பெயரில் இயங்கி மக்களிடம் பணம் சேகரித்து அந்த பணத்தில்
ஆடம்பர வாழ்வு வாழ்ந்து வரும் இந்த சங்கீதன் தலைமை செயலகம் எனும் குழுவை மக்களே கவனித்து கொள்க ,
நீங்களே கேள்விகளை எழுப்புங்கள் ,இவர்கள் தொடர்ப்பன விடயங்கள் தொடராக நாம் வெளியிடுவோம் .
புதையல் நிறையவே உள்ளன இணைந்திருங்கள் ,இதனை மக்களிடத்தில் வேகமாக பரப்புங்கள் ….தொடரும் ….
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்
பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்
பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன். லண்டன் ஹரோ பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை கடைக்குள் வைத்து தமிழர் பூட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவம் நடந்த நவம்பர் ஆகஸ்ட் மாதம் இரவு ஒன்பது மணியளவில் குறித்த பலசரக்கு கடைக்கு பயணித்த 14 வயதுடைய சிறுமியை ,அந்த கடையில் பணி புரிந்த தமிழர் கடைக்குள் வைத்து பூட்டியுள்ளாராம் .
இரவு வேளையில் குறித்த மளிகை கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை பத்து நிமிடங்கள் கடைக்குள் பூட்டியதாக கருதப்படும் பூவேனேதிரன் எனப்படும் 59 வயதுடைய தமிழர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வந்துள்ளார் .
குறித்த சிறுமியை கடைக்குள் பத்து நிமிடங்கள் தான் அடைத்து வைத்தது தவறு என்ற நிலையிலேயே தற்போது அதே பகுதி நீதிமன்றினால் சிறை தண்டனைக்கு உள்ளாக்க பட்டுள்ளாராம் .
குறித்த பகுதியில் அதிக மக்கள் வருகை தரும் பலசரக்கு கடையாக இது காணப்படுகிறது .குறித்த சிறுமியை ஏன் கடைக்குள் பூட்டி வைத்தாரு என்கின்ற விடயம் தெளிவாக தெரியவரவில்லை .
தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியாக லண்டன் ,ஹரோ பகுதி காணப்படுகிறது .
அவ்வாறான அந்த பகுதியில் பலசரக்கு கடைக்குள் 14வயது சிறுமியை 10 நிமிடம் பூட்டி வைத்ததான குற்ற செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேற்படி விடயத்தை அதே பகுதி உள்ளூர் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்






































