பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
Posted in சமையல் சமையல் cook

பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை கொழுக்கொட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்
வறுத்த அரிசிமா 1 கப்,அவிக்காத கோதுமை மா 1/2 கப்,வறுத்து குற்றிய பயறு

சுவையான அழகான கொழுக்கட்டை

200 g, வெல்லம் 100g, தேங்காய்ப்பூ1கப்,ஏலக்காய்த்தூள்(6ஏலம்)
பருத்தித் துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை செய்யும் முறை

  1. ப யறை வறுத்து குற்றி கோது நீக்கி எடுத்து 1/2 தண்ணி விட்டு அவித்தல்.
    2 பதமாக அவித்த பயறுக்குள் தேங்காய் பூ,தூளாக்கிய வெல்லம்,ஏலக்காய் தூள் சீனி போட்டு கிளறுதல்.

  2. 3.ஒரு கப் வறுத்த அரிசி மாவுக்கு அரை தேக்கரண்டி உப்பு தூள் போட்டு நல்ல கொதி தண்ணி விட்டு கிண்டி 1/2 cup அவிக்காத கோதுமை மாவு போட்டு பதமாக குழைத்து எடுத்தல்.
  3. சிறு உருண்டைகள் ஆக்கி கிண்ணம் செய்து அதற்குள் உள்ளுடன் வைத்து அழகாக பல்லு வைத்து அவித்தல்.
  4. கொழுக்கட்டைரெடி

இப்போ சுவையான பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைரெடி இதுபோல நலம் செய்து சாப்பிடுங்க உறவுகளே

பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்

பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்

பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம் ,யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய. இடத்திற்கு

மாற்றக்கோரி பருத்தித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை வெள்ளிக்கிழமை (24) காலை 9:00. மணியளவில் முன்னெடுத்தனர்.

பருத்தித்துறை நவீன சந்தையில் இருந்து

பருத்தித்துறை நவீன சந்தையில் இருந்து பருத்தித்துறை நகரசபை வரை சென்று அங்கு தவிசாளர் மற்றும் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

பருத்தித்துறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் சில மணி நேரம் மூடப்பட்டே குறித்த பேரணி. இடம்பெற்றது.

சுமார் 200 வரையானோர் கலந்து கொண்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட மரக்கறி சந்தையை மீண்டும், நவீன சந்தை தொகுதிக்கு மாற்றித்தருமாறு கோஷம் எழுப்பினர்

சந்தையை பழைய இடத்திற்கு மாற்றி தருமாறு

இதேவேளை குறித்த சந்தையை பழைய இடத்திற்கு மாற்றி தருமாறு மகஜரை வழங்குவதற்கு செயலாளரையும், தவிசாளரையும் நகரசபைக்கு வெளியே

வருமாறு வர்த்தகர்களால் கோரப்பட்ட நிலையில் சுமார் நாற்பது நிமிடம் வரை செயலாளர் வெளியே வந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக்கொள்ள மறுத்திருந்தார்.

வர்த்தகர்கள் விடாப்பிடியாக செயலாளர் வெளியே வரவில்லை எனில் தாம் நகரசபை வாயிலை விட்டு எழுந்திருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை ​பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க நகர சபை செயலாளர் வெளியே

வந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக் கொள்ள வருமாறு சமரசத்திம் ஈடுபட்ட நிலையில் இணங்கிய செயலாளர் தவிசாளருடன் இணைந்து மகஜரை பெற்றுக்கொண்டார்.

மகஜரை பெற்றுக்கொண்ட பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வர்த்தகர்களின் கோரிக்கையை மதித்து தாம் விரைவில் சந்தையை பழைய

இடத்திற்கு மாற்றுவதற்குரிய ஆய்வுக்குழு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நிறைவு பெற்றது.

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன் பருத்தித்துறையில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவரே காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.

நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று புதன்கிழமை உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த வாரமே காய்ச்சல் தொடர்பாக சுகாதார பிரிவினரால் மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,

மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.

சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.

இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை

பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை

பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை ,யாழ். பருத்தித்துறை – தும்பளையில் மூதாட்டி ஒருவர் பொல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாம்பிரம்பற்றை வீதி, தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது 69) என்ற மூதாட்டியே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் திருடும் நோக்குடன் சென்ற இளைஞரே மூதாட்டியைத் தாக்கி படுகொலை செய்துள்ளார். மேற்படி இளைஞன் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் சகோதரிகளான இரண்டு மூதாட்டிகள் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (20) காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். மற்றையவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அந்நிலையில் இரண்டு மூதாட்டிகளும் தேவாலயத்துக்குச் சென்றுள்ளார்கள் என நினைத்து, அயல்வீட்டு இளைஞர் வீட்டினுள் களவுக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளை வீட்டில் இருந்த மூதாட்டி இளைஞர் களவில் ஈடுபடுவதை அவதானித்ததை அடுத்து இளைஞர் பொல்லால் மூதாட்டியைத் தலையில் பலமாகத் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.

தேவாலயத்துக்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டுக்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த துடன், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அயல் வீட்டு இளைஞரை தும்பளை, மணல் ஒழுங்கையில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர், கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், பருத்தித்துறை பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு ம்,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய ரக லொறி ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.

விபத்தில் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.