பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு ,யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவத்தால், பெண்
தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று(10) கையளிக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் பி.ஆர். பத்திரவிதான, இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பெயர்
பலகையை திரைநீக்கம் செய்து பயனாளிகளிடம் வீட்டை உத்தியோக பூர்வமாகக் கையளித்தார்.
“இமேசன் கொம்பேசன்” என்ற அவுஸ்ரேலியா நிறுவனத்தின் சுமார் 35 இலட்சம் ரூபா நிதி உதவியில், இராணுவத்தின் மனித வலுவுடன் இந்த வீடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் யாழ்.கொடிகாமம் தெற்கில் இன்று இடம்பெற்றது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன







