Author: தமிழரசி
தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை
தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை
தேர்தல் முடிவுகள், அதாவது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.
எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
‘ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.
நீங்கள் கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஊடாக வீதிகளில் இருக்கும் மக்களால் உணரக்கூடிய மாற்றத்தை உருவாக்குங்கள்.
சாதாரண மக்கள் மெச்சக்கூடியவகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொதுநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள்.
காலவோட்டத்தில் மக்கள் கடந்தகாலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள்.
அவர்கள் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அன்றேல் இதுவும் வெறுமனே ‘நல்லாட்சி அரசாங்கம் – 2’ ஆக மாறிவிடும்.
இந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கையாகும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.
எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும்.
நாமனைவரும் தேர்தல்களில் அரசியல் செய்வோம். இருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே இத் தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை தான். ஏனெனில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட NPP அதிக வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களிலும் தமது ஆட்சி தான் நிலைநிறுத்தப்படும் என,
கொக்கரித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அநேகமான தேர்தல் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி வென்றமை, அரசுக்கு ஒரு அபாய எச்சரிக்கை என தெரிகின்றது.
பொறுத்திருந்து பார்க்கலாம், எதிர்கால அரசியல் மாற்றம் பெறுமா, இத் தேர்தல் முடிவினால் அரசுக்கு மக்கள் கூறியது என்ன என அரசு புரிந்துகொள்வார்களா..
ஆட்சியிலும், அரசின் நடவடிக்கையிலும் ஏதாவது மாற்றம் வருமா இல்லையேல் அடுத்த ஐந்தாண்டு காலத்தின் பின் மக்கள் இன்னுமொரு மாற்றத்தை எதிர்பார்த்து தேர்தலுக்காக காத்திருக்க வேண்டும்.
யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி
யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி
யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை,
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை,
பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு இலக்கம் 1 – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சுயேட்சைக்குழு இலக்கம் 2 – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்.
அதிக எதிர்பார்ப்போடு மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தவண்ணம் இருந்தாலும், அநேகமானவர்கள் போட்டியிட்டதால் எந்தக் கட்சியினர் யாழை கைப்பாற்றுவார்கள் என்ற கேள்விதான் மேலோங்கியிருந்தது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சி 135 ஆசனங்களைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தை தன்வசப்படுத்தியது மாபெரும் வெற்றி என்பதை விட வேறெதுவும் இல்லை.
எட்டப்ப கூட்டங்களால் தேர்தல் காலங்களில் மக்களின் எண்ணக்கருக்களை திசை திருப்பி ஏனைய கட்சிகள் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை தம் வசமாக்க பொய்யுரைகளை பரப்பி வந்தனர்.
இருப்பினும், மக்கள் தமக்கான உரிமையை தம் இனத்தினைக் காப்பாற்ற இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து வென்று காட்டியுள்ளமை பெருமைக்குரிய விடயமே.
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,
பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் தேர்தல் நிலவரம்
இதுவரையில் தேர்தல் நிலவரம்
இதுவரையிலான தேர்தல் நிலவரங்கள் தற்போது தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்,
உள்ளூராட்சித் தேர்தலில் இன்று காலை10 மணிவரையிலான இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்,
நுவரெலியா 22 %, பதுளை 22 %, மொனராகலை 15 %, அனுராதபுரம் – 20 %, யாழ்ப்பாணம் 18 %, மன்னார் 23 %, வவுனியா 31.5 %, திகாமடுல்ல 24%
கம்பஹா 20 %, மாத்தறை 20 %, களுத்துறை 20 %, பொலனறுவை 21 %, கொழும்பு 18 %, புத்தளம் 20 %, காலி 19 %, இரத்தினபுரி 20 %
அம்பாந்தோட்டை 19 %, கிளிநொச்சி 22 %, மாத்தளை 25 %, கேகாலை 20 %, கண்டி 21 %
அனைத்து பிரதேசங்களிலும் சுமூகமாக வாக்களிப்புக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே 17 மாநகர சபைகளுக்கு மூவாயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1 மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.
மலையகத்தில் மக்கள் ஆர்வமாக சென்று தத்தம் வாக்குப்பதிவினை மேற்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் தொகுதியில் மக்கள் மந்தகதியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்ற போதிலும், அதிக எண்ணைக்கையானோர் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.
இத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் அதேநேரம் ஒவ்வோர் நிலையத்திலும் அதிகூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும்,
நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.
சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.
வாக்களிப்பு நிலையத்தினுள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தல், படம் எடுத்தல், காணொளிகளைப் பதிவு செய்தல், ஆயுதங்களை வைத்திருத்தல், புகைப் பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் உபயோகித்தல்,
மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்கள் பாவனையுடன் வாக்கெடுப்பு நிலையத்துக்குச் செல்லுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.
இந்நிலையில், கண்டி – பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர்
திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

பிரதமரின் சர்ச்சை கருத்து
பிரதமரின் சர்ச்சை கருத்து
இலங்கை பிரதமர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் என கூறி செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக் காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம்,
ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்போம் என தெரிவித்துள்ள ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க எனினும் முதலில் அந்த கூற்றினை சட்ட திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் என்ன தெரிவித்தார் என்பதை அறிவது முதலில் அவசியம். இதன் காரணமாக அதனை சட்ட பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதமரின் கூற்று எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளது என்பதை ஆராயவேண்டும்.
பிரதமரின் அறிக்கையில் தேர்தல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே இலங்கைப் பிரதமர் அவ்வாறு கூறினாரா இல்லையா? அவர் கூறியதற்கான சான்று நிரூபிக்கக் கூடிய வகையில் இருக்கின்றதா?
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது தேர்தல் ஆணையகத்திற்கு சமர்ப்பிக்கப்படுமா? சமர்ப்பிக்கப்படுமாயின் சட்டத்தின் முன் பிரதமர் நிறுத்தப்படுவாரா என அரசியல் மட்டத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றும்வரும் இன்றைய நாளில் அதற்கான முடிவுகளும் வெளியாகும். இந்நிலையில் பிரதமர் மீது இவ்வாறான சர்ச்சை கருத்து தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளமை,
அரச தரப்பில் மேலும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளதோடு இதனை யார் தெரிவித்திருப்பார்கள் என்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இரகசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
உறங்கிய காதல்
உறங்கிய காதல்
பார்த்ததும் உன்மேல்
பூத்தது காதல் என்னில்
பழகாமலே ருசித்தேன்
விலகியே நடந்தேன்
விண்ணில் இருந்தே
மண்ணில் இருக்குமுனை
தொட நினைத்து
நீட்டினேன் கைகளை
முடியாமல் தவித்தேன்
சிட்டாக மாறியுனை
கட்டியணைக்க எண்ணி
சட்டென வந்தேன் மண்மீது
அருகிருந்தே உனை நான்
அளந்தேன் பார்வைகளால்
இதமாக இருந்த போதிலும்
இமைகள் படபடத்தன பயத்தில்
பூவான நான்.. காதலை இயம்ப
புயலாக நீ மாறி… எனை காயமாக்கி
அனலான பார்வையால் எனை
தகனம் செய்துவிடுவாய் என்று
சொல்ல நினைத்த காதலை
சொல்லாமலே புதைத்தேன்
இன்றுதான் தெரிந்துகொண்டேன்
அன்று நீயும் எனைபோலவே…..
உன்மீதான என் காதலும்
என்மீதான உன் காதலும்
உச்சரிக்கப்படாமல் உரசாமல்
உறங்கியது மனக்கல்லறைகளில்…!
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள் நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது வாக்களிக்கையில் மக்களே இப்படி செய்யாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,
வாக்காளப் பெருமக்களே வாக்களிக்க வரும்போது, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை,
தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும்,
அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில், உரையாற்றி உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,
வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.
நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தபோதிலும்,
தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மும்மரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்பொருட்டு அநேகமான பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்ற, அதேநேரம்
ஒரு வாக்குகூட செல்லுபடியற்றதாகி விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணைக்குழு முழுக் கவனத்தை செலுத்தி , வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குச் சீட்டில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ,காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,
மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.
சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.
இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.
மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இந்த மருந்துகள் அனைத்து வகையான காய்ச்சலுக்கும் பாதுகாப்பானதாக இருக்காது.
உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல், குறிப்பாக சோர்வு, தோல் வெடிப்புகள் அல்லது மூட்டு வலி இருந்தால்,
முறையான பரிசோதனைக்காக மருத்துவமனை அல்லது மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.
மேலும், இந்த நாட்களில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
முக்கிய அறிகுறிகளில் திடீர் அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவை அடங்கும்.
பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்தாலும், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக வயதானவர்களிடையே, மூட்டு வலி மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும்.
எனவே, காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஜனவரி முதல் இலங்கையில் 17,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகளும் 16,600 சிக்குன்குனியா வழக்குகளும் பதிவாகியுள்ளன.
மொத்த டெங்கு வழக்குகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் மேற்கு மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு சிறப்பு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக,
மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எல்.ஏ.கலு ஆராட்சி
(Dr. L.A.Kaluarachchi) தெரிவித்துள்ளார்.
யோசி… நேசி…
யோசி… நேசி…
அந்திசாயும் இதமான நேரம்
மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ்
உன் தோளில் என் தலைசாய்த்து
பன்னாட்டு கதை பல பேசி….
இனிமையான அப்பொழுதில்
இணைந்த நம் இதழ்களோடு
நாசிகள் உரசியவேளையில்
நங்கையிவள் சட்டென கூசி…
இன்னும் எத்தனையோ சில்மிசங்கள்
இவையனைத்தயும் ஒருநொடியில்
மறந்ததுமேனோ மன்னவனே
மனம் திறந்து நீ யோசி….
என் உடல் உருக உருக
உன்னையே தினமும் சுற்றி சுற்றி
கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த
பெண்ணிவளை ஒருகணம் யாசி…
பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்
விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து
தன்னந் தனிமையில் அல்லாடும்
கன்னியவளை வா வந்து நேசி…!
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

கொஞ்சி விளையாட
கொஞ்சி விளையாட
புலர்ந்தது பொழுது
மலர்ந்தது என் வதனம்
எழுந்தேன் படுக்கைவிட்டு
தொழுதேன் உன்கால்களை
ஏன் என்று நீ கேட்கிறாயா?
எப்போதேனும் உன் கால்களை
வார நான் குனியும் போது
உனக்கு ஐயம் வராதல்லவா?
சரியன்பே கொஞ்சம்
சிரி உன்னிதழ்விரித்து…
குளிர்த்து நீராடிவிட்டு
குளிர்போக சுடுநீரில்
அன்பைக் கலந்து
அணங்கு நான்
தேநீர் தயாரிக்க
போகணும் அன்பே…
சிரி ஒருமுறை சிரி
குவி உன்னிதழைக் குவி
கவி நீயானாலும்
பல கவி நான்
எழுதுவேன் உன்னிதழ் மேல்..!
மங்கை நான் அருகிருக்க
அங்கை அள்ளத் துடிக்கையில்
அன்பே…
கொங்கைகள் ஏங்குமடா!
சங்குக் கழுத்தும்
உன்னிதழ் முத்தத்திற்காக
காத்திருக்குதடா!
பொங்குகின்ற இன்பம் கோடி
மங்கை எனக்குள்ளே…
ஏங்குகின்ற என்னை ஏனடா
அலட்சியம் செய்கிறாய்?
தூங்குகின்ற சிறு பிள்ளை போல
பாசாங்கு செய்யாதே
நடிக்காதே எழுந்திரு
துடிக்கின்றேன் காளையே
உன் அணைப்புக்குள்
நான் அடங்கணும்
சத்தமின்றி நீ இடும்
முத்தத்தில் நான் உருகணும்
மஞ்சத்தில் தோகை விரித்து
நெஞ்சில் தலைசாய்த்து
கெஞ்சலோடு நான் சிணுங்கணும்
தொட்டிலில் கொஞ்சி விளையாட
சிறு முல்லைப் பூவொன்று
நீ தருவாயா..!
பிஞ்சு விரல்கள்
என் தேகம் தொடுகின்ற
இன்பம் அதுவும் தருவாயா..!!
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் மக்களின் காணிகளைப் பிடுங்கும் செயற்பாடு வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கும். வர்த்தமானியைக் கைவாங்கக் கோரி ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி ‘காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்
என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு:
“மேற்சொன்ன வர்த்தமானி இல: 2,420 சம்பந்தமாக தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன்.
இந்த அறிவித்தலின் பிரகாரம் தங்களது உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்குள் முற்படுத்த வேண்டும்.
இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படும்.
இச் சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
எது, எப்படியாக இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள் குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.
கீழே கூறப்படும் காரணங்களுக்காகவும் வேறும் காரணங்களுக்காகவும் இந்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்படக் கூடாது.
பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.
கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.
இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.
பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் ஐ. நா. அகதிகளுக்கான உயர்ந்த ஸ்தானிகரின் அனுமதியோடு ஒரு இலட்சமளவிலானவர்கள் வாழ்கின்றார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்த வர்த்தமானியில் கேட்கப்பட்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பதென்பது இந்த மக்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.
இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள்,
சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றைத் தாமாக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள்.
இது வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத செயலாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கப் பண்ணுவதாகவும் அமையும்.
ஆகையால் காலதாமதமின்றி இந்த வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு அவசரமாகக் கோருகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும்.
2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிப்பதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடன் புதன்கிழமை (30) சந்தித்த பின்னரே கலாநிதி ஹஷ்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
‘இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரி சலுகை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாம் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
நான் இருமுறை சரிபார்த்தேன். அதிகரிப்பு கோர எந்த ஒதுக்கீடும் இல்லை.
எனவே நாம் செய்ய வேண்டியது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.’ என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்புவதை வரையறுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற நிலையில்,
அமைச்சரவை பேச்சாளரின் இந்த கூற்று எதனை வெளிப்படுத்துகிறது நாம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவோம் என்றார்.






























