Tag: கடிதம்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம் ,இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் .
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி

நிகழாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்
படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக
உரிய நடவடிக்கை எடுக்கவும்
மேற்கொள்ளவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதல்-அமைச்சர்
மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 09.10.2025 அன்று அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய
வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்-அமைச்சர், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர
கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும் என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும்
நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான
மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக்
கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும்
வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப்
படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய
அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுபோன்ற கைது
சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு
வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்
கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்
கனடிய தமிழர் பேரவை இலங்கை ஜனாதிபதி அனுராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும்
கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி கெளரவ அனுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதே வேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி
ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது.
இதுநிற்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் செம்மணி மனிதபுதைகுழியை பார்வையிடுவதற்கு தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அந்த பகுதியில் விஜயம் மேற்கொள்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும்தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்தகால மனித உரிமை மீறல்களை கையாள்வது குறித்த-நாட்டின் நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால்
மனித உரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களிற்கும் செல்வதற்கும் எந்த தடையையும் விதிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கனடிய தமிழர் பேரவையால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கிணங்க அனுரா செயற்படுவாரா என்பது கேள்விக்குறியே.
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் மக்களின் காணிகளைப் பிடுங்கும் செயற்பாடு வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கும். வர்த்தமானியைக் கைவாங்கக் கோரி ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி ‘காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்
என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு:
“மேற்சொன்ன வர்த்தமானி இல: 2,420 சம்பந்தமாக தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன்.
இந்த அறிவித்தலின் பிரகாரம் தங்களது உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்குள் முற்படுத்த வேண்டும்.
இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படும்.
இச் சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
எது, எப்படியாக இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள் குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.
கீழே கூறப்படும் காரணங்களுக்காகவும் வேறும் காரணங்களுக்காகவும் இந்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்படக் கூடாது.
பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.
கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.
இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.
பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் ஐ. நா. அகதிகளுக்கான உயர்ந்த ஸ்தானிகரின் அனுமதியோடு ஒரு இலட்சமளவிலானவர்கள் வாழ்கின்றார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்த வர்த்தமானியில் கேட்கப்பட்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பதென்பது இந்த மக்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.
இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள்,
சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றைத் தாமாக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள்.
இது வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத செயலாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கப் பண்ணுவதாகவும் அமையும்.
ஆகையால் காலதாமதமின்றி இந்த வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு அவசரமாகக் கோருகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

இராஜினாமா கடிதம் கையளிப்பு
இராஜினாமா கடிதம் கையளிப்பு
இராஜினாமா கடிதம் கையளிப்பு ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் நளீம், நேற்று (14), சபையில் பிரியாவிடை உரை நிகழ்த்திய பின்னர், செயலாளர் நாயகம் குஷானி
ரோஹனதீரவிடம், அவரது அலுவலகத்தில் வைத்து தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்தார்.
அதன் போது, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம் ,இப்போது தான் மனம் இரண்டாய் பிளந்து கிடக்கிறது..
11 வழக்குகளையும் தாண்டி 118 வது நாளாக தெளிவாக ஓடிக் கொண்டிருக்கிறேன்..
ஒவ்வொரு துரோகங்களையும் முதுகிலிருந்து கத்திகளாக கழட்டும் போது நெஞ்சம் வலிக்கிறது..
செலஸ்தீன் அண்ணாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துரோகத்திற்கான வரலாறு..
செலஸ்டின் அண்ணாவுக்கு நான் என்ன செய்தேன்?
மீண்டும் தம்பி ராசா?தம்பி லோக்கல் அரவிந்த்?அஜித்?கிஷோர்?
மது பிளாக்?இவர்களில் யாராவது சொல்லட்டும் நான் இவர்களுக்கு தீங்கிழைத்து இருக்கிறேன் என்று?
எல்லா தடைகளையும் தனியாக ஒருவன் தாங்கிக் கொண்டு 117 ஆவது நாளாக இன்றுவரை உங்கள் மத்தியில் நிற்கும் போது ஒன்றாக படித்த மருத்துவ சமூகமே நீதித்துறையுடன் சேர்ந்து முதுகில் குத்தும் போது?
பக்கத்தில் நிற்க வேண்டியவர்கள் முதுகில் குத்தி விட்டு தள்ளி நிற்கிறார்கள்?
அரசாங்கம் வஞ்சிக்கிறது என்று நினைத்தேன் சாவகச்சேரியில் இருந்து வெளியேறும் போது!
ஒன்றாக படித்த மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் எனக்கு எதிராக நிற்கிறது என்னை ஃபெயில் ஆக்கி கைதட்டி சிரித்துக்கொள்கிறது..
அப்போது கூட வலிக்கவில்லை..
ஆனால் ஒன்றாக நிற்கிறேன் ஒன்றாக சாப்பிடுவோம் ஒன்றாக தோளோடு போவோம் என்று சொன்னவர்கள் இப்போது தனித்தனி வீடியோக்கள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
இதனையும் தாண்டி ஒருவன் நிற்கிறான் என்றால் ..
அதற்குப் பின்னாலும் எனக்காக சில பேர் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..
அது எனக்காக வந்த எனக்காக நீதிமன்றத்தில் என் சார்பில் நின்ற தங்கை கௌசல்யாவில் தொடங்கி மயூரன் வினோ பாரதி சஞ்சு விக்கி அண்ணா வன்னி மைந்தன் தளபதி சபே சோதி அக்கா நேசன் அண்ணா உதயா அண்ணன் எனது சொந்த சகோதரர்கள் மற்றும் தமிழ் என்ற உணர்வில் நிற்கும் தமிழனாய் பிறந்த ஒவ்வொரு மானிடனும் எனக்காக நிற்கிறான்..
அந்த ஒரு அரவணைப்பே போதும்..
ஜெயில் என்ன மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்..
வைத்தியர்கள் அநீதி செய்கின்றார்கள் என நான் சொல்லவில்லை..
தாங்களாகவே ஓடிப்போய் வழக்குகளை போட்டு கொண்டார்கள்..
நீதிமன்றமும் சட்டவாளர்களும் வைத்தியர்களும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி ஒன்றாக உணவருந்தி விட்டு ஒரே ஒருவனை குரல்வளையை போட்டு நசுக்கும் போது அது நீதிமன்ற அவமதிப்பு என்று சொன்னால் கூட எத்தனை வருடங்கள் எழுத முடியுமோ அத்தனை வருடங்கள் எழுதிக் கொள்ளுங்கள்..
தூக்கு தண்டனை எழுத முடியுமோ அதை கூட எழுதிக் கொள்ளுங்கள்..
எழுதிய பேனைகளை உடைக்கும் போது நீங்கள் உடைப்பது பேனையல்ல..
தமிழனின் குரல்வளைகளை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
துரோகிகள் ஆகவே வாழ்ந்து பழகிப்போன தமிழினம் ஒருபோதும் நீதிக்கு தோள் கொடுக்காது..
அதற்காக அது அநீதி என தெரிகின்றபோது நீதிமன்றம் மட்டும் அல்ல தூக்கு மேடையிலும் சொல்லிக் கொள்வேன் அது அநீதி என்று!
சாகத் துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பதை மறுமுறை ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்..
மருத்துவ துறையாக இருக்கட்டும் நீதித்துறையாக இருக்கட்டும்..
அநீதி என்பதை அநீதி என்று சொல்லுவதற்கு எதற்காக நான் பயப்பட வேண்டும்?
ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய அவர்களும் ஒன்றாக உணவு உண்டவர்களும் வழக்கு போட்டவர்களும் அவர்கள் தான் வழக்கை விசாரிப்பவரும் அவர்கள்தான்..
ஆனால் தன்னந்தனியாக நிக்கிறேன்..
கனம் நீதிபதியிடம் ஒரே ஒரு கேள்வி..
அன்று வெள்ளிக்கிழமை..
எல்லா வைத்தியர்களும் வைத்தியசாலையை விட்டு வெளிநடப்பு செய்த போது டிப்பரில் அடிபட்டு ஒரு தந்தையும் மகளும் கைகால் சிதைந்து ஏழு மணி அளவில் கிளிநொச்சி அம்புலன்ஸில் சாவகச்சேரிக்கு கொண்டு வந்த போது…
தாங்கள் நியாயமான வழக்குகள் என சொல்லிக் கொள்கின்ற அதே வழக்குதாரிகள் தான் யாழ்ப்பாணம் சுகாதார பிராந்திய பணிமனையில் ஒலிவாங்கிகளுக்கு முன்னாள் நின்று அவர்களுடைய உரிமைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் பக்கம் பக்கமாக எழுதி வாசித்துக் கொண்டிருந்தார்கள்..
ஐயா..
நீங்கள் அதைப் பார்க்கவில்லையா..
உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது..
உங்களுக்கும் ஒரு அழகான மனைவி இருக்கிறார்..
அவர்கள் அன்று கால் சிதைந்து வந்திருந்தால்..
நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு கேட்டு இருப்பீர்களா?? எல்லா வைத்தியர்களும் போனபோது நீர் ட்ரீட் பண்ண வேண்டியது உமது கடமை என்று..
கணம் நீதிபதி அவர்களே நான் ஒரு வைத்திய நிர்வாகி..
அன்று நான் எனக்கென்ன என்று நின்று இருக்கலாம்..
அப்போது அவர்கள் குருதிப்போக்காலே செத்து இருப்பார்கள்..
எனக்கு வழக்கு வந்திருக்காது..
அந்த 25 வைத்தியர்கள் தான் வழக்கில் அடைபட்டு இருப்பார்கள்.
அன்று நானும் எஞ்சி இருந்த மருத்துவ தாதியார்களும்தான் அந்த உயிரை காப்பாற்றினோம்..
அந்த உயிர் அன்று போயிருந்தால் எல்லாருக்கும் ஒரு செத்த வீடு.
அந்தக் குடும்பத்தை சற்று நினைத்துப் பாருங்கள்..
அங்கே ஒரு 18 வயது பெண் பிள்ளையை இழந்திருப்பார்கள்..
ஒரு தந்தையை ஒரு மனைவி இழந்து இருப்பார்…
இப்போது சொல்லுங்கள் அந்த உயிர்களை மட்டுமல்ல அந்த 25 வைத்தியர்களையும் காப்பாற்றியது யார்?
தொழிற்சங்க போராட்டம் என்று கொலை செய்யும் துணிந்தவர்களை நியாயமான வழக்குகள் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்?
ஆம் என்னை அச்சுறுத்தினீர்கள்? அதில் என்ன சந்தேகம் இருக்கிறது..
வழக்கினை விசாரிக்காமலே வைத்தியசாலையை விட்டு வெளியே போகுமாறு நீங்களே சொல்கிறீர்கள்..
முதலில் ஒரு வழக்கினை விசாரிக்க வேண்டும்..
வைத்தியசாலை அத்தியாசகர் யார் என்பதை சுகாதார அமைச்சு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்..
அதன் பின்பு தானே ஐயா நீங்கள் முடிவெடுக்க முடியும் நான் வைத்தியசாலை வைத்திய அர்ச்சகர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளேன் என்று?
லண்டனில் இருந்து படித்து விட்டு வந்து யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சேர்ந்து ஒரு துடுப்பாட்ட மாட்டை கூட பிடிக்கத் தெரியாதவர்கள் இன்று லோயர்களாக நிற்கிறார்கள்.
உங்கள் கணம் நீதிமன்றத்தின் முன் அவர்கள் என்னை அவமானப்படுத்தும் போது திருப்பி ஒரு வசனம் கதைப்பதற்கு கூட தாங்கள் என்னை அனுமதிக்கவில்லை..
குற்றத்தை விசாரிக்காமலே குற்றம் ஆனவன் என நீங்கள் நினைத்து விட்டீர்கள் ஏனெனில் அவர்கள் உங்களுடைய கிரிக்கெட் ஆட்டத்தின் நண்பர்கள் அல்லவா…
நல்ல காலம் நான் வைத்தியர்களுக்காக விளையாடவில்லை..
நானும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சோப் போல் ஹார்ட் போல் இரண்டும் விளையாடினேன்..
நீதிபதி என்று பார்க்காமல் கூட பவுன்சர் அடித்திருப்பேன்…
முடியாவிட்டால் ஒரு புல் டோஸ்ட் ஆவது போட்டு இருப்பேன்…
எங்களுக்கு முதுகின் பின் கதைக்க தெரியாது..
ஆனால் இலகு தமிழில் நன்றாக கதைக்க தெரியும் தங்கள் மேல் நீதிமன்றம் என்னை கதைக்க கூட அனுமதிப்பதில்லை…
ஒரு குற்றவாளியை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலே சட்டம் தெரிந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் ஒரு கரையில் கத்தும் போது நான் கை உயர்த்தினால் உமக்கு கை உயர்த்த கூட அனுமதி இல்லை அடைப்பேன் என்று சொல்லும் உங்கள் நீதி…
வாழ்க நீதிமன்றம்..
கனம் நீதிபதி அவர்களே..
உங்கள் மகன் உந்துருளியில் விழுந்து காதலும் மூக்காலும் இரத்தம் ஒழுக அன்று வெள்ளிக்கிழமை வந்திருந்த குழந்தையாக இருந்தால்..
அப்போது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..
25 வைத்தியர்களுக்கும் எதிராக தாங்கள் அப்போதே ஒழுக்காளற்று நடவடிக்கை எடுத்திருக்க மாட்டீர்களா?
எனக்குத்தானே வருகின்றபோது எல்லாரும் நினைத்துக் கொள்வார்கள் அது இரத்தம் என்று..
அடுத்தவனுக்கு வரும்போது அது தக்காளி தொக்கு தானே ஐயா..
இதே நீதிமன்ற நீதிபதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் நெஞ்சு வலி என்று ஒரு மாலை நேரம் 5 மணி அளவில் வந்திருந்த போது ETU வில் பார்க்க வேண்டிய வைத்தியர்கள் இருக்கவில்லை..
அன்றைய நாள்..
நான் ஈ டி உவிலும் வேலை இல்லை..
நான் ஒரு குழந்தை மருத்துவனாக முதலாம் ஓட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன்..
அன்று வந்த நீதிபதி எந்த வைத்தியரும் பார்க்காமல் 30 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சு வலியுடன் துடித்துக் கொண்டிருந்தார்..
அப்போது நான் பெர்மனெண்டாகவே குவாட்டர்ஸில் இருந்ததால் என்னிடம் உடனடியாக ஓடி வந்து சொன்னார்கள் ஒருவர் நெஞ்சுவலிகள் இருக்கிறார் வந்து பார்க்க இயலுமா என்று..
ஐயா சட்டம் கதைப்பதாக இருந்தால்..
நான் அன்று சொல்லி இருக்கலாம்..
நான் முதலாம் வோட்டில் வேலை..
ஆதலால் பார்க்க முடியாது என்று..
எனக்கு அன்று சென்று அவருடைய ஷர்ட் கழட்டுமாறு கூறியபோது தாதிகள் ஒரு மாதிரி நெளிந்தார்கள்..
நான் அவரை சொன்னேன் தயவுசெய்து சேட்டை கழட்டுங்கள் அப்போதுதான் இசிஜி போட முடியும் என்று..
அவர் ஷூட்டை கழட்டிய போது நான் ஸ்க்ரீன்களை போட்டு மறைத்து கொண்டேன்..
மற்றக்கட்டிலில் பெண்மணிகள் இருந்தார்கள்..
அன்று நான் அவருக்கு மருத்துவம் செய்யாது விட்டிருந்தால்..
அன்று நான் யாரோ ஒருவர் தானே என எனது வேலையை பார்த்துக் கொண்டிருந்திருந்தால்..
அந்த நீதிபதி இழக்கப்பட்டிருப்பார்..
சட்டமும் நீதியும் வெளியே கதைக்கலாம்..
நான் அங்கு வேலை இல்லை என சொல்லிவிட்டு நடந்து போய்விட்டிருக்கலாம்..
ஆனால் ஒரு நீதிபதியின் வீட்டில் சாவு விழுந்திருக்கும்..
ஒரு நீதிமன்றமே கலங்கி போயிருக்கும்..
இது பொய் என்றால்..
தயவுசெய்து 2019 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக இருந்த நீதிபதியிடமே போய்க் கேளுங்கள்..
அவர்தான் என்னுடைய விவாகரத்து வழக்கையும் தன்னுடைய தனிப்பட்ட அறையில் கூப்பிட்டு விசாரித்தார்..
அவர்களும் நீதிபதிகள் தான்..
அவர்களும் கடவுள்கள்தான்..
இதை நான் எழுதுகிறேன் என்பதற்காக 26 ஆம் தேதி நான் வராமல் விடப்போவதில்லை..
எப்படியும் உங்களோடு தோல் நின்று படமெடுத்த சட்டத்தரணிகள் இவற்றையும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொண்டு வருவார்கள்.
அப்போது நீங்கள் சொல்லுவீர்கள்..
நீங்கள் மனத்தியாலகணக்காக எழுதுவதை நான் வாசிக்க வேண்டுமா என்று.
ஆம்..
தீர்ப்பு வழங்குவதாக இருந்தால் ஒரு விடயத்தை தீர விசாரிக்க வேண்டும் என்பது நீதி என்பது பொதுமக்களுக்கு தெரியும்..
ஒருவன் வழக்கினை இடும் போது அவனைப் பார்த்து பொய் வழக்கு இடுவே ஆனால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என தாங்கள் கூறும் போது எனது நெஞ்சம் சில்லிட்டு போனது..
ஒரு வழக்கை விசாரிக்காமலே பொய் வழக்கு என தீர்மானிக்கும் தங்களுடைய மேலான திறமையை நான் எங்கே சென்று வஞ்சுவது..
வைத்திய சாலையில் உள்ள நோயாளர்களை உள்ள தாதியர்களை உள்ள ஊழியர்களை ஒரு தரப்பு விருத்தி கடிதம் கொண்டு வந்து தங்களிடம் தரும் போது அதையும் வேண்டிப் பார்க்கிறீர்கள்..
மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நான் அதற்குரிய கடிதத்தை கொண்டுவந்து நீட்டும் போது அதை எதிர் தரப்பு சட்டத்தரணிகள் சொல்லுகிறார்கள் அவற்றை கதைக்கின்ற அடிப்படை உரிமை கூட குற்றம் சாட்டப்பட்டவருக்கு இல்லை என்று.
அப்படி என்றால் ஐயா..
நாங்கள் வைத்தியம் பார்க்கும்போது..
நோயாளிகளிடம் சொல்ல வேண்டும் நீங்கள் கதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்று..
எனது மருத்துவம் சொல்லிக் கொள்கிறது..
மீண்டும் சொல்கிறேன் எனது மருத்துவம்..
நோயாளிகளை மாத்திரமே சிகிச்சை அளிக்க வேண்டுமே ஒழிய நோயாளிகளின் ரிப்போர்ட்களை அல்ல என்று..
ஏனோ தெரியவில்லை..
இன்று வரை மனம் சொல்கிறது..
நீதி கிடைக்கும் என்று..
இல்லை அந்த நீதி மறுக்கப்பட்டால் அதற்கு உயரிய உயரிய நீதிமன்றங்களை நாடவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது..
எனக்கு வந்த லோயரே என்னைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதும் போது..
அவரை நான் விலக்கி இருக்கிறேன்..
எனது மருத்துவ தர்மத்தில் ஒரு நோயாளி தனது உடம்பை கொண்டு வந்து எனது கைகளில் எடுக்கும்போது அவனை முட்டு முழுதாக ஏற்றுக் கொள்கிறேன்..
நீதி மருத்துவத்திற்கு மேலானது..
ஆனால் நீதியே குரல்வலையை நசுக்க கூடாது அல்லவா..
எனக்கு நீதிமன்றத்தில் கதைக்கின்ற உரிமை இல்லாதபோது..
எனது நியாயத்தை சொல்ல முடியாத போது..
நான் எங்கே சென்று சொல்லுவேன்..
பொதுமக்கள் இதைக் கேட்கட்டும் வாசிக்கட்டும்..
எனக்குத் தண்டனை தூக்கும்படியாக இருந்தால் கூட ராமநாதன் அர்ச்சுனா சிரித்துக்கொண்டே செல்வான்..
முடிந்தால் எழுதிவிட்டு உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள்..
உங்களுக்கு என்ன ஐயா..
யாழ் போதனா வைத்தியசாலை சென்றால் வைத்தியசாலை நிர்வாகி சத்தியமூர்த்தியே வந்து உங்களை உள்ளே அழைத்துச் செல்வர்.
ஆனால்..
இதை வாசிக்கின்ற ஒரு தமிழன் வாயிலில் லைனில் தான் நிற்க வேண்டும்..
அவன் ஒப்பிடியில் இருந்து மருந்து எடுத்து வரும்போது வீட்டில் உலை வைத்திருக்க மாட்டார்கள்..
இதை வாசிக்கின்ற ஒவ்வொருவனும் நிலத்திலே தான் படுக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் செல்லும்போது பஞ்சு மெத்தை தருவார்கள்..
முதலாவது கட்டிலில் விடுவார்கள்..
நீங்கள் இருமு முன்னரே உங்களுக்கு ஆவி பிடிப்பார்கள்..
வயிறு நோகின்றது என மெல்லமாக சொன்னாலே 12 மருத்துவர்கள் உங்களை சுற்றி நிற்பார்கள்.
ஆனால் பாமர தமிழனுக்கு..
அது கொலையே நடந்தால் கூட..
ஒவ்வொரு சிந்துஜாவாக மட்டுமே மாறிக்கொள்ளலாம்..
சிந்துஜாவின் கணவன் கூட இப்போது சிந்துஜாவுடன் சேர்ந்திருக்கிறான்..
அதற்கான நீதி எங்கே?
அந்தக் குழந்தைக்கான அம்மா அப்பா எங்கே?
அதை என்ன நடந்தது என்று பார்க்க சென்ற என்னை வைத்தியரிடம் கேட்டுவிட்டு உள்ளே சென்ற என்னை உங்கள் மீது ஐந்து நாள் சிறைச்சாலைகள் அடைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டது..
ஆனால்..
எனது வைத்திய சாலையில்.
நான் நிர்வகிக்கின்ற வைத்திய சாலையில் உங்களுடைய நண்பன் கிரிக்கெட் கேப்டன் மன்னிக்கவும் வைத்தியர்களுடைய கிரிக்கெட் கேப்டன் உள்ளே வந்து அடித்து விழுத்தி என்னுடைய மொபைல் போனை பார்த்து என்னுடைய காசைப் பறித்து எனக்கு எதிராகவே வழக்கு போட்டு தங்களிடம் வந்த போது..
தாங்கள் ஜெயிலுக்கு அனுப்பவில்லை…
ஏன் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு கூட வரவில்லை..
ஏனெனில் உங்கள் நண்பன் ஆயிற்றே..
அவரை நீங்கள் அரெஸ்ட் பண்ணுமாறு ஒருநாளும் சொல்லப்போவதில்லை..
இதே உங்களுடைய நீதிமன்றத்தில் இன்னொருவர் வந்து உங்களை அடித்து விழித்தியிருந்தால்..
உங்கள் தொலைபேசியைப் பறித்து அதை போலீஸ் நிலையத்தில் நிலத்தில் கிடந்ததாக கொடுத்திருந்தால் தங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும்?
அப்போது கூட நீங்கள் நீதிமன்றத்தில் வைத்து என்னை கேட்கிறீர்கள் ஒருவரை படம் எடுக்க செல்லும்போது போனை பார்த்து அடிப்பதில் இன்னொரு பிழை இருக்கின்றது என்று?
நான் தமிழன் என்று சொல்லவே வெட்கி தலைகுனிகிறேன்..
2021 ஆம் ஆண்டு சாவகச்சேரி வைத்திய சாலையை விட்டு நான் வெளியேறும் போது எல்லாரிடமே சொன்னேன் நான் இறந்தால் கூட எனது உடலை ஆணை இரவு தாண்டி இங்கால் கொண்டு வர வேண்டாம் என்று…
ஆனால் இந்த முறை மருத்துவ நிர்வாகியாக மாறிய போது ஒவ்வொரு நண்பனும் அடித்து கேட்டான். மச்சான் சாவத்திரி ஹாஸ்பிடல் மாற்ற முடியாதா?
நீயும் வராவிட்டால் யார் மச்சான் இதை மாற்றுவது என்று?
சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன்..
கௌரிசன்..
இப்போது சித்தருடன் சேர்ந்து நிற்கிறான்..
வாழ்க்கை..
ஒரு வட்டம்..
இன்னும் 20 வருடம் தான் வாழ்வேன்..
ஆனால்..
அவை சிறைச்சாலையில் என்றால் கூட உண்மையை சொல்லிவிட்டு உள்ளே போனவன் என்ற பெயருடனே வாழுவேனே தவிர கை கால்களில் விழுந்து கெஞ்சி அழுது மானமற்ற தமிழனாக வாழ மாட்டேன்
நான் மேதகு எனப்படுகின்ற ஒரு தெய்வத்தை பார்த்து வளர்ந்தவன்..
நாங்களும் அங்கே வளர்ந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்..
நல்ல காலம் மேதாகு உயிருடன் இல்லை.. என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
அவரின் நீதிமன்றத்தில் இவ்வாறு நடந்ததில்லை..
எனது தந்தை அவரின் நீதி கட்டமைப்பில் ஒரு பெரிய பங்கு வகித்தவர்..
ஒரு இளம் ஆசிரியையை முள்ளியவளையில் பாலியல் வன்முறை கொலை செய்ததற்காக நான் நினைக்கிறேன் விசுவா நடுவில் வைத்து மின்கம்பத்தில் இணைக்கப்பட்டு அந்தப் பெரிய போராளி சுடப்பட்டர்..
அப்போது கூட நீங்கள் அங்கே தான் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
எழுதலாம் எழுதிக் கொண்டே போகலாம்..
என்ன..
நீங்கள் மறுபடியும் சொல்வீர்கள் இவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பதால் எனக்கு வேலை என்று..
வைத்தியர்கள் போட்ட வழக்குக்கு மேலாக வழக்கை போடும்படி உபதேசிக்கும் தாங்கள்..
வைத்தியசாலையில் வந்து அடிக்கும்போது கூட உங்களுடைய கிரிக்கெட் மேட்சின் நண்பனை இன்றுவரை அரெஸ்ட் பண்ணவில்லை..
அது ராஜகாரிய வதகிரிமை இல்லையா ஐயா..
அன்னார் நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
வாழ்க தமிழினம்..
சமூகத்தின் முன்னோடிகளாக வாழ வேண்டியவர்களே சமூகத்தின் குரல்வளையை நெறுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
எனக்கு இப்போது நம்பிக்கை இருக்கிறது…
நான் என்றாவது ஒருநாள் சிறையில் இருந்து வெளியால் வந்தால்..
அப்போது என்னுடன் தமிழினமே நிற்கும்..
இப்போது கூட நிற்கிறது..
புரியவில்லை என்றால் அயல் வீட்டில் உள்ள குழந்தை இடம் கேட்டுக் கொள்ளுங்கள்..
சில வேளைகளில் உங்களுடைய மனைவியும் உங்களுடைய குழந்தைகளும் என்னுடைய லைவை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..
அவர்களிடம் கேளுங்கள்..யார் குற்றம் இழைத்தவன்..யார் நிரபராதி..
நீதிக்கான தேடலில் என்னை இழந்தாலும்.
எனது தமிழினத்தை அழிக்க விடமாட்டேன்..
உங்கள் முன்னாலே உங்களுடைய சட்டவாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் வடிவேல் போல் இருக்கிறார் என்று..
ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என நிரூபிக்க முடியாத ஒருவரை ஒரு சட்டவாளர் வந்து அவ்வாறு கதைக்கும் போது உங்களுடைய கனமான நீதிமன்றம் சிரித்துக் கொண்டது…
இவையெல்லாம் வெளியே தெரிய வாய்ப்பில்லை..
நான் இதுவரை இவ்வாறான ஒரு நீதிமன்றத்தை பார்க்கவில்லை..
யாழ் நீதிமன்றத்திற்கு கூட சென்றேன்..
நீதிபதி மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.
ரெட்ட தெளிவாக சம்பந்தப்பட்ட சட்டவாளரிடம் சொன்னார் நீங்கள் கதைக்க வேண்டாம் என்று..
நீதி சாகவில்லை..
மேல் நீதிமன்ற நீதி அரசர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவரே தமிழினத்தை அழித்து இதுவரை அரசியல் செய்து கொண்டிருக்கும்போது.
தங்களுக்கு மிகவும் நீண்ட பாதை இருக்கிறது..
தாங்களும் ஒரு அரசியல்வாதியாக வந்தால் எமது இனம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
அரசியல் மேடையில் நானும் நிற்பேன்..
மன விரக்த்தியுடன் எழுதவில்லை..
மனமுடைந்து எழுதுகிறேன்.
எனது கொழும்பில் உள்ள சட்டவாளர் சொல்லி இருக்கிறார், தங்களுக்கும் முறைப்பாட்டாளருக்கும் சமூக தொடர்பு இருப்பதால் தாங்கள் ஏதோ ஒரு செக்ஷனின் படி நீதிபதியாக இருக்க முடியாது என்று..
அந்த செக்ஸன் எல்லாம் எனக்கு தெரியாது ஐயா..
அவரே வந்து சொல்லுவார்..
அல்லது மேலும் மேலும் நீதிமன்றங்களை நாங்கள் நாடுவோம்..
மறுபடியும் சொல்கிறேன்..
சாகத் துணிந்தவனுக்கு தூக்குமடையும் பஞ்சு மெத்தையே.
நீங்கள் தூக்குமடையையே எழுதி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..
ஆனால் உங்களுடைய குடும்பத்திடம் ஒருமுறை ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்..
உங்களுடைய அழகான மனைவியும் அழகான குழந்தைகளும் நன்றாக வாழ்வார்கள்.
ஆனால் ஏனைய வீதியிலும் பூநகரி வீதியிலும் வாழைப்பழம் வீக்கம் எனது தமிழினம் எப்போது நிமிர்ந்து வாழ்வது?
தாங்கள் என்னை உயிருடன் விடும் பட்சத்தில்..
என்னும் ஒரு 20 வருடங்கள் தமிழனுக்காகவே வாழ்ந்து போவேன்…
முடிந்தால் நான் கூட்டமானவன் என எபரையாவது நிரூபிக்க சொல்லுங்கள்..
தமிழனுக்கு ஆக சாக துணிந்தவன்.
மாறாக வீழ்த்தவே முடியும். எனவே பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது.” என்றார்.
இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் தந்து முகநூலில் பதிவிட்டுள்ளார் ,இந்த பதிவில் வன்னி மைந்தன் ஆகிய என்னையும் சுட்டி காட்டியுள்ளார் ,அதற்கு மிக்க நன்றி அர்ச்சுனா ,என்றும் உங்களோடு நிற்போம் கவலை விடுங்கள் .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
வைத்திய அத்தியட்ச்சகர்
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
திரு சீமான் அவர்கள்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
இந்தியா
அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கும் எமது தொப்புள்கொடி உலக வாழ்த்தமிழ் மக்களுக்கும் இலங்கையிலிருந்து உங்கள் தம்பி தமிழுள்ள தாயத்தில் இருந்து எமது மக்கள் சார்பாக ஒரு அன்பு கடிதம்…
அண்ணா.
நாங்கள் இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம். நீங்களும் எமது புலம்பெயர் ஈழ மைந்தர்களின் கிருபையால் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.
எல்லாம் வல்ல எனது இனத் தலைவனின் இறைவனின் பாதத்திற்கும் சிரம் தாழ்த்தி தாயகனவிலே தங்கள் உயிரையும் உடலையும் வித்திட்டு விதியாகிப்போன எனது அக்கா அண்ணா தம்பி தங்கைகளுக்காக இந்த மடலை உங்களின் கவனத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். .
தமிழனாய் பிறந்ததற்காகவும் தமிழனுக்காய் பிறந்ததுக்காகவும் பெருமையாய் தங்களுக்கு ஒரு கடிதம்.
1983 இல் தொடங்கிய தமிழின வேட்கை கடந்த 40 வருடங்கள ஆகியும் எங்கே செல்கின்றோம் இதனை தேடுகின்றோம் எனத் தெரியாமலே பிறந்ததிலிருந்து இன்றுவரை நாடோடியாய் அலையும் ஒரு இனத்தின் ஆண் மகன் இதயத்தில் இருந்து இடத்தினை பிழிந்து எடுத்து கடைசியாய் கண்ணீருடன் எழுதிக் கொண்டிருக்கும் மடல் இது..
உலகமே திரண்டு 2009ல் எனது தலைவணையும் எனது தனயன் களையும் எனது தமிழினத்தையும் கந்தக காட்டில் புதைத்துக் கொண்ட ஒரு இனத்தின் தந்தையை இழந்த ஒரு குழந்தையின் ஏக்க மடல் இது….
நாடினை இழந்தோம் வீடினை இழந்தோம் தாயினை இழந்தோம்..
தந்தையினை இழந்தோம் சுமக்காய் போராடிய 44,000 உறவினை இதே மண்ணில் விட்டுடலாய் புதைத்தோம்..
கடைசியில் எமது தலைவணையும் இழந்து இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவனின் தேடிக் கொண்டிருக்கிறோம்..
உங்களுக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் எமது கூக்குரல் கேட்காது..
ஏனெனில் நாம் தமிழர் ஆயிற்றே..
எனது இனம் அணுவணுமாய் பிளக்கப்பட்டு ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிய பேரினம் உங்களை ஆதரவாக பற்றிக் கொண்டிருப்பதை அறிந்தும் உங்களை நம்பிய எனது புலம்பெயர் இரத்தங்கள் உங்களுக்கு பணம் சேர்த்து அனுப்புவதை தெரிந்தும் தெரியாமல் இங்கும் ஒரு பானை
சோற்றிற்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்…
ஏனெனில் நாம் தமிழராயிற்றே..
மூன்று தசாப்தங்களாக பேரினம் எம்மை அணு அணுவாய் சிதைத்தது..
இருந்தும் உயிர்ப்புடன் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஏனெனில் நாமும் தமிழர் ஆயிற்றே…
என் தனையன்..
எம் இன தலைவன் மேதகு..
மற்றும் மறவன் துணை சென்ற என் அண்ணாவும் அக்காவும் என் கொடியும் என் தேசியக் கொள்கையும் உனக்கு..
உன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேசுபொருள் தான்..
நீ உண்ட ஆமை கறியும் தலைவனை பாசறையும் உனக்கு அரசியல் ஆணிகள்..
ஏனெனில் நீயும் தமிழன் ஆயிற்றே..
அண்ணனின் காலத்தில்..
ஈழத்தில் பிறந்த இந்த மருத்துவனின் குரல் உனக்கு கேட்கின்றதோ இல்லையோ..
என் தமிழ் இனத்திற்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
என் தமையன் உன்னடி வந்தது..
என் உறவுகள் உன் பால் சிரம் தாழ்த்தியது..
என் தலைவனில் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே அன்றி..
தமிழினத்தையும் தலைவனையும் மண் கொண்ட வித்துடல்களையும் மரணித்த வேங்கைகளையும் உனக்கு அடைமானம் வைக்க அல்ல..
உன் அரசியலுக்காய் பாவிக்க அல்ல..
தமிழில் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாசித்துக் கொள்..
என்னிடம் என் தேசம் என் தேசியத் தலைவன் என் மாவீரர் வரலாறுகளின் உலகத் தமிழர் இனத்திற்குரியது…
என் கொடி அது என் தலைவனுடையது..
என் உயிரிலும் மேலானது..
அதை உன் அரசியலில் இருந்து மீண்டும் எனது மூச்சுக்காற்றுகளுக்கு மீட்கும் ஓர் நன்னாளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழினதும் நெறிக்கப்பட்ட குரல்வலைகளில் இருந்து அன்புடன் கேட்கிறேன்..
என் இனத்தை எங்களை நாங்களாகவே ஆளவும் வாழவும் இடம் கொடு..
இப்படிக்கு அன்புடன்..
இராமநாதன் அர்ச்சுனா
தலைவனின் பாசறையில் இருந்து.
இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் சீமான் அண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம்
செந்தூரா உனக்கு செந்தமிழன் பதில் கடிதம் ,மருத்துவ மாபியாக்கள் வலையமைப்பில் வீதி உலா வரும் விருந்தகமே செந்தூரா உனக்கொரு செந்தமிழின் பதில் மடல் .
கற்றவனாக காட்டி கொள்ளும் செத்தவனே உனக்கொரு செந்தமிழன் ஏற்ற மடல் .
கோமாளிகள் இந்த மன்றில் இப்படியும் உலவி கொண்டுள்ளார்கள் என்பதற்கு உந்தன் பித்தலாட்டங்கள் ஒரு உதாரணம் என்பதை இப்பொழுது கண்டு கொள் ,
உனக்காக எழுதப்பட்ட ஒரு மடல் காதில் போட்டு வாயைஆட்டு வா .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்
ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்
தம்மை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்
ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை.
அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்.
ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்
தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை
பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன்.
இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
















